tag:blogger.com,1999:blog-287716232024-03-13T11:00:19.602-07:00இம்சைரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger281125tag:blogger.com,1999:blog-28771623.post-19524264465420604132015-12-14T02:05:00.000-08:002015-12-14T02:05:10.069-08:00விளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
யூடியூப் பார்க்கும்போது வீடியோ விளம்பரங்கள் (சில சமயம் Skip பட்டனுடன், சில சமயம் ஸ்கிப் பட்டன் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வினாடிகள் வரை) தொல்லை தருகிறதா ?<br />
<br />
விளம்பரங்கள் இல்லாமல் யூ-டியூப் வீடியோக்களை பார்க்க ஒரு நுணுக்கம் இருக்கிறது. இது கூகிள் நிறுவனமே வழங்கும் ஒரு பரிசோதனை, அதனால் கூகிள் இந்த வசதியை தரும் வரை பயன்படுத்தி மகிழ்க.<br />
<br />
இந்த வசதியை கொண்டுவர நீங்கள் உங்கள் டெவலப்பர் கன்ஸோலில் ஒரு சிறிய நிரலை உள்ளிட்டு எண்டர் தட்டவேண்டும். வெயிட், வெயிட், ரொம்ப கஷ்டமில்லை, ஈஸி தான்..<br />
<br />
ஸ்டெப் 1 : முதலில் உங்கள் ப்ரவுசரை (க்ரோம், பயர்பாக்ஸ், ஓபரா) ஒப்பன் செய்து, ஏதாவது ஒரு யூ.டியூப் வீடியோவை ஓப்பன் செய்க..(பீப் சாங் வேண்டாம் பாஸ்)<br />
<br />
ஓப்பன் செய்தாச்சா ? பாட்டு ஓடுதா ? அப்படியே ஓடட்டும் விடுங்க..<br />
<br />
ஸ்டெப் 2: இந்த குறிப்பிட்ட ஷார்ட் கட் கீயை உங்க ப்ரவுசரில் அழுத்தவும்..<br />
<br />
க்ரோம், ஓபரா : Control + Shift + J<br />
பயபாக்ஸ் : Control + Shirt + K<br />
<br />
இப்ப ஒரு கன்ஸோல் விண்டோ வருதா ?<br />
<br />
ஸ்டெப் 3 : இந்த குறிப்பிட்ட நிரலை உள்ளீடு செய்து எண்டர் தட்டவும்..<br />
<br />
<pre style="background-color: whitesmoke; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 5px 0px inset; box-sizing: inherit; color: #222222; font-family: Courier, monospace; font-size: 0.9375rem; line-height: 24px; margin-bottom: 1.5rem; overflow: auto; padding: 1.125rem; width: auto; word-break: break-all;"><code style="background-color: transparent; box-sizing: inherit; color: #333333; display: inline-block; padding: 0px 7px;">document.cookie="VISITOR_INFO1_LIVE=oKckVSqvaGw; path=/; domain=.youtube.com";window.location.reload();</code></pre>
அஷ்டே !!<br />
<br />
இனி உங்கள் உலாவியில் யூடியூப் பயன்படுத்தும்போது எந்த விளம்பரமும் வராது !!!<br />
<br />
படம் - கூகிள் க்ரோம்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSe503DHtkJhqnPmc1RR_C2Qpi26-jwudwJW7RxZ156gX2_r335LhGZtTNYsg0Po-belAY0-1OJgkfYxdPyHG9bM89LrpO-ULT7p5AgcWCplQe66Un2g6MoHw4PH-8kttepIyr/s1600/g1.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSe503DHtkJhqnPmc1RR_C2Qpi26-jwudwJW7RxZ156gX2_r335LhGZtTNYsg0Po-belAY0-1OJgkfYxdPyHG9bM89LrpO-ULT7p5AgcWCplQe66Un2g6MoHw4PH-8kttepIyr/s640/g1.PNG" width="571" /></a></div>
<br />
<br />
படம் - ஓபரா ப்ரவுசர்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFwM300X8PECjJBK3kCfrAEJ6aFgmthMyXL5S1_oERQETM_B_Qby-c21DIHT5nvSGsDG_nzEVeVG2VwSYMwi1G79HjMIW3bs3UU-dc7GXqwrBaQiVQj1Bb9aDokuoXWxkWbiDI/s1600/o1.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFwM300X8PECjJBK3kCfrAEJ6aFgmthMyXL5S1_oERQETM_B_Qby-c21DIHT5nvSGsDG_nzEVeVG2VwSYMwi1G79HjMIW3bs3UU-dc7GXqwrBaQiVQj1Bb9aDokuoXWxkWbiDI/s640/o1.PNG" width="552" /></a></div>
<br />
நெருப்பு நரி நான் பயன்படுத்துவதில்லை, அதனால் ஸ்கிரீன்ஷாட் போடமுடியவில்லை.<br />
<br />
சோர்ஸ் பதிவு : http://lifehacker.com/disable-ads-on-youtube-by-enabling-a-youtube-experiment-1171802208<br />
<br />
டேய் டேய் தம்பி, காப்பி அடிக்க்காதடா, அப்படி அடிச்சா என்னோட பதிவு அல்லது மூல பதிவை சுட்டி கொடுத்து காப்பி அடிடா !!!<br />
<br />
ஸாரி மக்கள்ஸ், ஒரு சின்ன கான்வர்ஸேஷன் நம்ப காப்பிமனோஹரோட..<br />
<br />
வாழ்த்துக்கள் இணைய உலாவியில் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க !!<br />
<br /></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28771623.post-84759009581446808702013-02-25T02:26:00.003-08:002013-02-25T02:26:46.383-08:00அமீரின் ஆதி பகவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அமீரின் ஆதி பகவன் படத்தை நேன்று பார்க்கும் பாக்கியம் கிட்டியது. பி.வி.ஆர் குர்கான், டிக்கெட் விலை 835 (பாப்கார்ன், மோமோஸ், கார்ன் 550). திரைப்பட விமர்சனம் எழுதி கனநாளாச்சு, ஏன் வலைப்பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு. எப்படி வருதுன்னு தெரியல, இருந்தாலும் எனக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான (டேய் டேய்) வாசகர்களை நம்பி எழுத உக்காந்துட்டேன் !! நீங்க கண்டுக்காதீங்க.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-EBB-ihDGADM/UMQtyAyAltI/AAAAAAAAI8M/SxrPvEl7MC4/s1600/Aadhi_Bhagavan_Movie.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-EBB-ihDGADM/UMQtyAyAltI/AAAAAAAAI8M/SxrPvEl7MC4/s320/Aadhi_Bhagavan_Movie.jpg" width="234" /></a></div>
<br />
இந்த விமர்சனத்தை அமீரோ, அவரோட தயாரிப்பாளர் அன்பழகன் எம்.எல்.ஏவோ படிச்சுட்டு, தூக்குடா அந்த செந்தழல் ரவியன்னு என்னை சென்னைக்கு ப்ளைட் டிக்கெட் போட்டு கூட்டிக்கிட்டு போயி ரூம போட்டு குமுற குமுற கும்ம வாய்ப்பு இருக்கு. இல்லைன்னா அமீர் கமிஷனர் அலுவலக வாசல்ல டி.வி பேட்டி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கு ( டெல்லியை சேர்ந்த மென்பொருள் வல்லுனர் என்னுடைய படத்தை பற்றி தவறான தகவல் பரப்புகிறார், அவரை உடனே கைது செய்யனும் அப்படீன்னு). இருந்தாலும் டம்மி பீஸான என்னை ஏன் கைது எல்லாம் செய்யப்போறாங்க ? (ஒரு வேளை படத்துக்கு விளம்பரமா போவுதுன்னு போனாலும் போவார், டேய் ரவி உனக்கு வாயில வாஸ்து சரியில்ல, உனக்கு நீயே ஆப்பு வெச்சுக்கற பாரு?)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.gulte.com/content/2012/04/news/Neetu-Chandra-Hot-Photo-Shoot-Photos-1532.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://www.gulte.com/content/2012/04/news/Neetu-Chandra-Hot-Photo-Shoot-Photos-1532.jpg" width="229" /></a></div>
<br />
<br />
புகை பழக்கத்தை பற்றி கொலைவெறியான ஒரு நீயூஸ் ரீலுக்கு அப்புறம் படம் ஆரம்பிச்சது. யாழினிக்கிட்ட சொல்லியிருந்தேன். சவுண்டு விடக்கூடாது, மெனி பீப்புள் படத்த பாத்துக்கிட்டிருப்பாங்க, டிஸ்டர்ப் ஆகும்னு. மோமோஸும், கார்னும் வாங்கித்தந்தா கம்முனு இருக்கேன்னு சொல்லி ஒத்துக்கிட்டா. படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துல மோமோஸ் எங்க, கார்ன் எங்கன்னு கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை வெளியே போய் வாங்கி வந்த வகையில 5 நிமிஷம் வேஸ்ட் ( படம் பாத்த மொத்த ரெண்டரை மணி நேரமும் மரண வேஸ்டுங்கறா என் பொண்டாட்டி, அதை நீங்க கண்டுக்கிடாதீங்க)..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://cdn2.supergoodmovies.com/FilesFive/aadhi-bhagavan-31d199ba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://cdn2.supergoodmovies.com/FilesFive/aadhi-bhagavan-31d199ba.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஈஸ் திஸ் தெலுங்கு மூவி ன்னு கேட்டா பொண்ணு. நோ நோ டமில் மூவின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே படத்துல ஆந்திரா, ஹைதராபாத், படபடன்னு தெலுங்கு வசனம்னு பேச ஆரம்பிச்சானுங்க. அடடா, தெலுங்கு படம்னே சொல்லியிருக்கலாமேன்னு நினைச்சேன் !<br />
<br />
ஆரம்பத்துல இரண்டு மெகா லஞ்ச ஊழல் அண்ணன் தம்பிகளை சி.பி.ஐ புடிக்க போவுதுன்னு டிவியில நியூஸ் காட்டறாங்க. சி.பி.ஐ அதிகாரிகள் மின்னல் வேகத்துல வந்து (அதுல ஒரு ஆபீஸர் தான் ஜெயம் ரவி) தங்கம், வைரம், பணம்னு அள்ளுறாங்க. பெட்டை கிழிக்கறார், அதுல நோட்டு நோட்டா பணம். (டேய் இன்னுமா பெட்டுக்குள்ள பணம் வெக்கறீங்க, சுவிஸ்ல அக்கவுண்ட் இல்லையா ? )<br />
<br />
ஜெயம் ரவி மாடியில இருந்து கீழ பாக்குறார். கீழே நாய் கொலைக்குது. தரையை சுரண்டி சுரண்டி காட்டுது. அங்க நோண்டி பாத்தா கட்டி கட்டியா தங்கம். அந்த நாய்க்கு பிஸ்கெட் எதுவும் போடலியா ? அட்லீஸ்ட் ரெண்டு சிக்கன் பீஸ் ? அந்த ஆந்திரா குடும்பத்துல இருக்கவங்க எல்லாம் ரெண்டு எடுப்பு சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்காங்க, நாய்க்கு கூடவா சோறு வைக்கமாட்டாங்க ? கரெக்டா சிபிஐ அதிகாரிங்க வரும்போது கொலைச்சு தங்கத்த காட்டி கொடுக்குது பாரு டாபரு..<br />
<br />
அப்புறம் வாட்டர் டேங்ல தங்கம், ரூம்ல வைரம்னு எல்லாத்தையும் அள்ளி மூட்டையா கட்டி கொண்டு போறார். இங்கிலீஷ் சானல் நியூஸ் அளவுக்கு வர பெரிய கிரிமினெல்ஸ ரொம்ப சப்பையா காமிக்கறாங்க (ரெட்டி சகோதரர்களை மனசுல வெச்சு அவங்க கேரக்டரை பின்னியிருக்கார் ஏதோ ஒரு உதவி இயக்குனர்)..<br />
<br />
இந்த நேரத்துல தான் நான் பாப் கார்ன் வாங்க போறேன். வந்து பாத்தா, ஜெயம் ரவி உண்மையிலேயே போலீஸ் இல்லையாம். (சிபிஐயும் இல்லையாம்). தொங்கனா கொடுக்காவாம். கூட வந்த சப் இன்ஸ்பெக்டர்ஸ் கூட வெறும் யூனிபார்மும், ஹைதராபாத் பிரியாணியும் கொடுத்து கூட்டி வரப்பட்ட டம்மி பீசுகளாம். (ரைடின் போது ரெட்டி பிரதர் அண்ணைய்யா ஒரு இன்ஸை பார்த்து கேப்பார். டேய் உன்னை இந்த ஏரியாவுல பார்த்ததே இல்லைன்னு. அவர் சொல்வார், நான் இந்த ஏரியாவுக்கு புதுசா வந்து ஜாயின் பண்ணியிருக்கேன்னு. லாஜிக்கு ? அடப்போங்கய்யா)...<br />
<br />
கட் பண்ணா தாய்லாந்து. அங்க அம்மா தங்கச்சியோட பஞ்சம் பொழைக்க போறார் ஜெயம் ரவி. ஏன்யா பஞ்ச பரதேசி எப்படி தாய்லாந்துல / அதுவும் கரெக்டா பட்டாயாவுல பஞ்சம் பொழைக்க போறான் ? பாஸ்போட்டு விசா ஒர்க் பர்மிட் இதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமேய்யா ? அன்பழகன் எம்.எல்.ஏ காசு போடுறார் அப்படீங்கறதுக்கா அங்க சாண்ட்விச் மசாஜை எஞ்சாய் பண்ணிட்டீங்க. வாழ்வு தான் போங்க. அங்க பொட்டலம் விக்கறதை பார்த்து அந்த தொழில் செய்ய முடிவெடுக்கிறார் ஜெயம் ரவி. பக்கிகளா, படங்கள்ல குடிக்கறதையோ, புகைபுடிக்கறதையோ செய்யமாட்டேன்னு கடைசி வரை நின்ன எம்.ஜி.யார் எங்க, அன்புமணி ஏதோ கோச்சுக்கிட்டார்னு படங்கள்ல புகைபுடிக்கறதை விட்ட ரசினிகாந்து எங்க ? ஹீரோ பொட்டலம் விக்கிற மாதிரியான கேவலமான ஒரு தொழிலை வலிந்து செய்யுறமாதிரி ஏன் காட்டனும் ? ஹீரோவை ஒர்ஷிப் பண்ணுற தேசம்யா இது. அட ஹீரோ பணம் சம்பாதிங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டார், அதன் பிறகு தான் இந்த முடிவு எடுத்தார்னு காட்டினீங்களா ? இல்லையே ? (ஒருவேளை நான் பாப்கார்ன் வாங்க போன சைக்கிள் கேப்ல காட்டினீங்களா ? என் மகள்கிட்ட கேக்கலாம்னா அவளுக்கு நாலு வயசு. டோரோமான்ல சிசூக்கா என்ன செஞ்சான்னு கேட்டாலாவது சொல்வா, இதெல்லாம் எப்படி கேக்க முடியும்)...<br />
<br />
ரைட்டு. அப்படியே தாய்லாந்துல கேங்ஸ்டர் ஆகிடுறார் ஜெயம் ரவி. ஒரு கேங்ஸ்டர் அப்படீங்கறீங்க, ஒரு நாலு பேரையாவது கோட்டு போட்டு சுத்தி நிக்க வெக்கலாம்ல ? மொக்கையா தன்னந்தனியா ஜிம்பாடியோட ஒரு ப்ரண்டோட ஒரு கேங்ஸ்டர் இருக்க முடியுமாய்யா ? இதையெல்லாமா நாங்க சொல்ல முடியும ? மும்பையில கேங்ஸ்டர் ஆவுறார்னு காமிச்சிருந்தா அந்த ப்ளைட் டிக்கெட் / தாய் மசாஜ்ஜுக்கு ஆன செலவுல பத்து டாட்டா சுமோவ வாடகை எடுத்து அதகளம் பண்ணியிருக்கலாமே. கோபி கோட்டை போட்டு குறுக்கால நெடுக்கால எதுத்தாப்ல பின்னாலன்னு பதினைஞ்சு ஷாட் எடுத்திருக்கலாமேடா ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-aadhi-bhagavan-movie-stills-/images/tamil-cinema-aadhi-bhagavan-movie-stills-01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="185" src="http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-aadhi-bhagavan-movie-stills-/images/tamil-cinema-aadhi-bhagavan-movie-stills-01.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அங்க ஹீரோயினை (நீத்து சந்திரா) சந்திக்கிறார் ஆதி (படத்தில் ஜெயம் ரவி ஒரு கேரக்டர் பெயர்). ஹீரோயின் பார் கேளா வேலை செய்யுறா. டம்ளரை கீழ போட்டு பார் ஓனர் கிட்ட பளார்னு அறை வாங்குறா. அதை கண்டு மனம் பொறுக்காம காப்பாத்துறார் ஹீரோ. ஹீரோயின் நீத்து சந்திரா ரெட்டை நாடி சரீரம். ஒரு காட்சியில குண்டா தெரியுறாங்க, ஒரு காட்சியில ஒல்லியா தெரியுறாங்க (சும்மாவா, படம் நாலஞ்சு வருசமா எடுக்கறாங்களாமே). இதை விட மரண மொக்கையான ஒரு ஹீரோயினை நான் சமீபத்துல பாக்கல. ஆனா அவங்களுக்கு பர்பார்ம் பண்ணக்கூடிய / ஸ்கோப் உள்ள ஒரு ரோல். க்ளைமாக்ஸ் வரைக்கும் அடிக்கடி வராங்க. (இது தமிழ்படத்துல அபூர்வம்). மேற்கொண்டு அவங்களை பத்தி பின்னால / கீழ பாக்கலாம்...விமர்சனத்துல..<br />
<br />
படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ரகுமானும் வருகிறார். ஆனால் பெரிய ஸ்கோப் இல்லாத ரோல். இதில் நடிச்சதுக்கு (???) நடிக்காம இருந்திருக்கலாம். ஜெயம் ரவியின் அம்மா கேரக்டரில் வரும் நடிகையை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா பெயர் தான் நியாபகம் வரலை. அவங்களுக்கும் எந்த ஸ்கோப்பும் இல்லை...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.cinegoer.com/navigation/tamil-cinema/movies/aadhi-bhagavan/aadhi-bhagavan-tamil-movie-stills-1-9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="228" src="http://www.cinegoer.com/navigation/tamil-cinema/movies/aadhi-bhagavan/aadhi-bhagavan-tamil-movie-stills-1-9.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஹீரோவை ஏமாத்தி, மும்பைக்கு கூட்டிட்டு வராங்க நீத்து சந்திரா. தன்னந்தனியா ஏர்போர்ட்ல கோட்டை மாட்டிக்கிட்டு, அவரோட சொந்த லக்கேஜை உருட்டிக்கிட்டு (தாய்லாந்துல பெரிய கேங்க்ஸ்டர்) வரார் ஹீரோ ஆதி. வந்தவுடன் இங்கே மும்பையில் கால் டாக்சியில் உட்கார்ந்த ஹீரோவை மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் மூலம் மயக்கி (வேற ஐடியா எதுவும் தோணலியா) முடக்குகிறார் நீத்து சந்திரா...மும்பை கேங்ஸ்டராக இருக்கும் ஆதியை போன்ற உருவத்தில் இருக்கும் பகவான் என்பவன் காதலியான நீத்து, ஆதியை காவு கொடுத்து பகவானை காப்பாற்ற இப்படி நடித்தாராம்...<br />
<br />
தமிழ் பேசும் பெரிய மூக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் அவரை தூக்கி சிறையில் அடைக்கிறார். மராட்டியர்களுக்கே உரிய முகவெட்டு. சீரியஸான நடிப்பு. கொஞ்சம் குள்ளம், சின்ன உருவம். ஆனால் ஷார்ப்பான நடிப்பு. இவரை நிறைய படங்களில் எதிர்பார்க்கிறேன் !<br />
<br />
மும்பை பகவான் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி, பெரிய கேங்ஸ்டர். லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் எல்லாம் போட்டுக்கொண்டு... (இவர் ஒரு திருநங்கையா என்றால் அதுவும் இல்லை. நீத்து சந்திரா எதிரில் பார்கேளை தள்ளிக்கொண்டு போவதுபோல காட்டுவது). என் மகள் யாழினி விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது இந்த காட்சியைத்தான். காட்சியின் சீரியஸ்நெஸ் தெரியாமல் சீ, ஒன் பாய் ஈஸ் புட்டிங் நெய்ல் பாலீஷ் என்று காமெடி செய்தாள்...அந்த பகவான் கேரக்டருக்கும் நீத்து சந்திராவுக்கும் ஏன் இவ்வளவு காதல் என்று அழுத்தமான காட்சிகளை வைக்காததால் மனதில் ஒட்டவேயில்லை. இவனும் கேங்ஸ்டர், அவனும் கேங்ஸ்டர். நீயும் கெட்டவ. தாய்லாந்துல செட்டில் ஆகவேண்டியது தானே என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை...(பார் கேளா இருந்தவளை வீட்டுக்கு வரியான்னு கூப்பிட்டாராம் பகவான் ஜெயம் ரவி. அது தான் இந்த காதலுக்கு காரணம் என்ற எக்ஸ்ப்ளனேஷனும் வெக்குறான்)..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://gallery.southdreamz.com/cache/celebrities-real-life-pictures/ameer/tamil-actor-ameer-sultan-in-annakodiyum-kodiveeranum-movie-launch-stills-1_720_southdreamz.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://gallery.southdreamz.com/cache/celebrities-real-life-pictures/ameer/tamil-actor-ameer-sultan-in-annakodiyum-kodiveeranum-movie-launch-stills-1_720_southdreamz.jpg" width="212" /></a></div>
<br />
இன்னொரு சக்கத்த காமெடி, தாய்லாந்தில் குண்டடி பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆதி (இந்த கட்டு போடும்போது மேல ரெண்டு சொட்டு ரத்தம் வெச்சு கட்டுறதை எந்த டாக்டர் டா சொல்லி கொடுத்தான் ? எல்லா படத்திலும் சொல்லி வெச்ச மாதிரி கட்டு மேல ரத்தம். ஒழுங்கா ட்ரெஸ்ஸிங் கூட பண்ணத்தெரியாதா இந்த சினிமா டாக்டேர்ஸுக்கு) ஜெயம்ரவி, நீத்து சந்திரா வரைந்த படம் ஒன்றை பார்ப்பார். நீ ஸ்கெட்ச் எல்லாம் பண்ணுவியா என்று கேட்பார். அந்த படத்தை ஆடியன்ஸிடம் காமிக்கும்போது, மீசை இல்லாத சூர்யா மாதிரி இருக்கும். ஏன் சூர்யா படத்தை நீத்து சந்திரா வரைந்தார் (அல்லது வரையவே தெரியாத உதவி இயக்குனர்) என்பது புரியாத புதிர்...ஹி ஹி !!!<br />
<br />
கடைசியில் ரெட்டி பிரதர்சிடமும் (எங்கடா எங்க காசு என்று கேட்டு உதைக்கிறார்கள்), மும்பை காவல்துறையிடமும் மரண அடி வாங்கி (மினிஸ்டர் தம்பியை பகவான் கொன்றது, ஆனால் பழியை ஆதி மேல் போட்டு என்கவுண்டர் செய்ய ப்ளான்), பகவானிடம் வேலை செய்த ஒரு அடியாளுடன் கோவா தப்புகிறார் ஆதி ஜெயம் ரவி. தாய்லாந்து, அப்புறம் கோவா, நல்லா எஞ்சாய் பண்ணிட்டீங்க உதவி இயக்குனர்ஸ்...ஏன் கம்மியா காசு செலவாகுற ஒரு சிட்டியில எடுக்கறது ? ஏன் பாண்டியிச்சேரியில எடுக்கிறது ? நீங்களே இப்படி செலவை இழுத்து விடுறது அப்புறம் தயாரிப்பாளர் சரியா காசு கொடுக்கலைன்னு வருசக்கணக்கா படத்தை எடுக்கறது ? போங்க சார் !!!<br />
<br />
மும்பை பகவான் அடியாளாக வந்து ஆதி ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் தோழர், ஹேர் ஸ்டைல், உடல் மொழி, உடைந்த தமிழ் வசன உச்சரிப்பு என்று பல இடங்களில் இம்ப்ரஸ் செய்கிறார். இயக்குனர்கள் கவனித்து இந்த தங்கத்தை மண்ணில் இருந்து பிரித்து எடுக்கவேண்டும் :) - பல படங்களில் இவரை பார்க்க விரும்புகிறேன் !!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/10/aadhi-bhagavan-movie-stills-59.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/10/aadhi-bhagavan-movie-stills-59.jpg" width="320" /></a></div>
<br />
<br />
கடைசியில் நீத்து சந்திராவோடு ஒரு க்ளைமாக்ஸ் பைட், அதன் பிறகு அவரை கொல்லுதல், பிறகு பகவானோடு பைட், அவரை கத்தியால் குத்துதல் (பகவான் தப்பிச்சுடறானாம், செக்கண்ட் பார்ட் வெக்குறாங்க போலிருக்கு) போன்ற இம்சைகளுக்கு பிறகு படம் முடிகிறது.<br />
<br />
இவ்வளவு அழுத்தமான கேங்ஸ்டர் கதையில் கடைசியில் நீத்து சந்திராவின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாக முயற்சி செய்து (ஹும், யாரோட இன்புளூயன்ஸ், தயாரிப்பாளரா இயக்குனரா ? ) லேடீசுக்கு பைட் வெச்சு, அவரை ஹீரோ கத்தியால் குத்தி கொல்வதாக காட்டுவது படு மொக்கை. தமிழ் கூறும் நல்லுலகில் (குறைந்தபட்சம் திரைப்படங்களிலாவது) பெண்களை தெய்வமாக மதித்து காட்டுங்கப்பா. அது இல்லை என்றால் பெண்களின் ஆதரவு கிடைக்காது. திருமதி செல்வம் இயக்குனர் கிட்ட டியூஷன் போங்க !!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://i0.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2013/02/Aadhi-Bhagavan-Jayam-Ravi-New-Look-Photo-5.jpg?resize=640%2C965" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://i0.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2013/02/Aadhi-Bhagavan-Jayam-Ravi-New-Look-Photo-5.jpg?resize=640%2C965" width="212" /></a></div>
<br />
<br />
மேக்கப் பற்றி - தாய்லாந்து காட்சிகளில் நீத்து சந்திரா பாதி தூக்கத்தில் எழுந்தது போல ஒரு மொக்கை மேக்கப். பகவான் கேரக்டர் புருவத்தை மொக்கையாக்கி ஒரு மேக்கப். இந்த துறை கம்ப்ளீட் பெயிலியர் என்று தான் நான் சொல்வேன் ! (அமவுண்ட் செட்டில் பண்ணலியா)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://mimg.sulekha.com/tamil/aadhi-bhagavan/stills/aadhi-bhagavan-cinema-036.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://mimg.sulekha.com/tamil/aadhi-bhagavan/stills/aadhi-bhagavan-cinema-036.jpg" width="320" /></a></div>
<br />
<br />
நீத்து சந்திரா எப்போதும் புகை பிடிப்பது போல காட்டுவது சகிக்கலை. ஏன்யா கெட்டவன் என்றால் புகை பிடித்துக்கொண்டிருப்பது போல காட்டினா போதுமா ? புகை பிடிக்கறவன் எல்லாம் கெட்டவன், மீதி பேர் எல்லாம் நல்லவனா ? ஏற்கனவே ஒரு சூர்யா படத்துல அவர் முக்காவாசி நேரம் புகை புடிச்சுக்கிட்டே இருக்கறது பார்த்து நொந்தவன் நான். அப்பவே உங்களை யாரும் கேக்கலை, அதனால இன்னும் நீங்க மாத்தலை !!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/07_2012/aadhi-bhagavan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="210" src="http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/07_2012/aadhi-bhagavan.jpg" width="320" /></a></div>
<br />
<br />
கேமரா மரண மொக்கை. மேலே இருந்து கீழே காட்டுவது ஒன்னுதான் நீங்க கண்டுபிடிச்ச டெக்கினிக்கா ? (SOB Network கார்க்கி / ராஜன் வீடியோ விமர்சனத்தில் கார்க்கி இதை சரியாக பாயிண்ட் செய்தார்...). மும்பையில் ஜட்கா வண்டிகளோடு குதிரைகள் நிற்கும் ஒரு ஷார், மொபைல் காமிராவில் எடுத்தது போல இருக்கே ? (எப்புடி சரியா கண்டுபுடிச்சேனா ? )<br />
<br />
இரட்டை ஜெயம் ரவிகளை க்ளைமாக்ஸ் பைட்டில் கொண்டுவரும் காட்சி - படத்தின் உயிர்நாடியான காட்சி - அரதப்பழசான கேமரா டெக்னிக்குகளால் மரண மொக்கையாகிறது. ஒரு ஆள் நடந்துவரும்போது இன்னொரு ஆளை ஷோல்டரை காட்டுவது / காலை காட்டுவது என்பது எல்லாம் ஒரு டெக்னிக்கா ? பழைய எம்ஜியார் படங்களில் வரும் இரட்டையர் காட்சிகளின் போஸ்ட் ப்ரொடக்சன் ஒர்க்கில் 10 சதவீதம் கூட இல்லை. இதில் சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டியது கேமராமேன் மட்டுமல்ல எடிட்டரும்தான். ஒரு காட்சியில் ஒரு லாங் ஷாட் அப்புறம் திடீரென ஒரு க்ளோசப் என எடிட்டரும் மரண மொக்கையாகிறார். பொதுவாக நான் இது போல திரைக்காட்சிகளை நுணுக்கமாக பார்ப்பவன் அல்ல. ஓவராலாக / பொத்தாம்பொதுவாக திரையின் மையத்தை பார்ப்பவன். எனக்கே எடிட்டரின் மொக்கைத்தனம் விசிபிளாக தெரிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !!!<br />
<br />
ஆரோ திரிடி தொழில்நுட்பத்தை விஸ்வரூபத்துக்கு பிறகு பயன்படுத்தும் படம் என்று சொன்னார்கள். எதிர்பார்ப்போடு போனேன். ஆனால் மகள் அதிக சத்தம் வருகிறது என்று பயந்ததால் அவளது காதுகளை என் கையால் மூடிக்கொண்டு படம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஆரோ திரிடி அட்டு திரிடியானது இங்கே ! விஸ்வரூபம் பார்க்கும்போது எந்த கம்ப்ளைண்ட்டும் செய்யவில்லையே அவள். தவறு எங்கே என்பது வெள்ளிடைமலை !!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.chakpak.com/sites/default/files/styles/photoessay/public/AP--13655.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://www.chakpak.com/sites/default/files/styles/photoessay/public/AP--13655.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இசை - கோவாவில் நடக்கும் ஒரு பாட்டு ரசிக்கும்படியாக இருந்தது. வேறு பாடல்கள் எதுவும் இருந்ததா ? எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது தான் நிஜம் !! யுவன் சங்கர் ராஜாவா இசை ? வாரிசு நடிகர்கள் போல வாரிசு இசையமைப்பாளர்கள், வாரிசு கவிஞர்கள், வாரிசு எடிட்டர்கள் அடாடா ! போதும்யா. க்ரியேட்டிவ் பிஸினஸிலாவது நல்ல கலைஞர்களை வரவிடுங்கள். வாரிசுகள் தொல்லை தாங்கலை !!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/07/Yuvan-Shankar-Raja-Aadhi-Bhagavan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/07/Yuvan-Shankar-Raja-Aadhi-Bhagavan.jpg" /></a></div>
<br />
<br />
படம் முடிந்தவுடன் கொலைவெறியோடு முறைக்கும் மனைவியை - நீதான தமிழ் படத்துக்கு கூட்டிட்டு போன்னு சொன்ன என்று சமாளித்து, மேலெங்கும் இறைந்திருந்த பாப்கார்னை தட்டிவிட்டுக்கொண்டு யாழினியை தூக்கிக்கொண்டு எழுந்தால், அமீர் படம் எப்படி எல்லாம் எடுக்கிறார் (ஜாக்கி சான் படத்துல கடைசியில வருமே) என்று காட்டுகிறார்கள். பருத்தி வீரன் எடுத்த அமீரா இது என்று கடைசியில் ஒரு லுக் விட்டுவிட்டு, தப்பித்தால் போதும் என்று கார் பார்க்கிங் நோக்கி ஓடி, வீட்டுக்கு வந்து வரட்டு ரொட்டியை தின்ற (தோசை கூட ஊத்தி தரமாட்டேன்னுட்டாய்யா) ஒரு அப்பாவியின் விமர்சனம் தான் இது. உங்களுக்கு குமுறனும் என்றால் கமெண்ட் செக்சனில் குமுறுக. ப்ளைட் டிக்கெட் போட்டால் நானே வந்துவிடுகிறேன். இழுத்து வெச்சு குமுறுங்க...அதை விட்டுட்டு போலீசுக்கு எல்லாம் போகாதீங்க !!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.chakpak.com/sites/default/files/styles/photoessay/public/AP--16277.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://www.chakpak.com/sites/default/files/styles/photoessay/public/AP--16277.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இந்த படத்தை இந்து அமைப்புகள் எதிர்த்தன. எதிர்த்தவங்களுக்கு எல்லாம் போட்டு காட்டியிருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் :)) - இப்ப பட்டது நாங்க மட்டும் தானே ?<br />
<br />
<br />
படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் ! ஏன்ன படம் வந்து ரொம்ப நாளாச்சு. நீங்களே கேள்விப்பட்டிருப்பீங்க !! கடைசியா ஒரு விஷயத்தோட விமர்சனத்தை முடிச்சுக்கறேன்... !!! (தாய்லாந்து காட்சிகள்ல ஹோட்டல் ரூம்ஸ்லாம் நல்லா இருக்கு. எந்த ஓட்டல் சார் ? குடும்பத்தோட போனா தங்கலாம்)<br />
<div>
<br /></div>
<br />
க்ளைமாக்ஸில் ஆதி ஜெயம் ரவி, பகவான் ஜெயம் ரவியை சந்திக்கும்போது, டேய் பகவான், உன்னால நான் ரொம்ப பட்டுட்டேண்டா என்பார். த்யேட்டரில் ஒரு குரல் - நாங்களும்தாண்டா !! என்று. இது ஒரு சாம்பிள் தான் !!! உங்க கருத்துக்களை ஆர்.டி ஆக / லைக் ஆக / பின்னூட்டமாக எழுதுங்க !!! படங்கள் உதவி இண்டர்நெட். யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் பதிவில் உள்ள படங்களை (ஏன் பதிவையே) நீக்க தயங்கமாட்டேன் !!<br />
<br />
<br />
<br />
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-28771623.post-18931819038303939132013-01-17T18:41:00.002-08:002013-01-17T18:54:05.293-08:00B.Sc/BCA/M.Sc/MCA/BE/B.Tech இறுதியாண்டில் செய்யும் ப்ராஜக்ட்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://images03.olx.in/ui/2/33/46/20672746_4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="168" src="http://images03.olx.in/ui/2/33/46/20672746_4.jpg" width="400" /></a></div>
<br />
<br />
சுற்றிவளைத்து சொல்ல விருப்பமில்லை. எந்த வெகுஜன ஊடகங்களிலும் பார்த்த நினைவில்லை. செமஸ்டர் இறுதியாண்டு ப்ராஜக்ட்டை காசு கொடுத்து வாங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லத்தான் இந்த பதிவு !!!<br />
<br />
பொதுவாக இண்டர்வீயூவில் சந்திக்கும் ப்ரஷ்ஷரிடம் (இளம்பொறியாளர்), அவர் என்ன தெரியும் என்று ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ளாரோ அதை பற்றிய கேள்விகளை (C, Java) கேட்போம். அதன் பிறகு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்ன செய்துள்ளார் என்பதை பற்றி கேட்போம். அதை அவர் எப்படி விளக்குகிறார் என்பதை உன்னிப்பாக கவனிப்போம். (எக்ஸ்பீரியன்ஸ் மக்களிடம் கடைசியாக பணிபுரியும் / பணியாற்றிய நிறுவனத்தில் என்ன வேலை செய்தார், அதில் அவரது பங்கு என்ன என்று கேட்பது மாதிரி)...<br />
<br />
பொதுவாக / என்னுடைய பார்வையில் (அதாவது நான் பார்த்தவரையில்) பே-பே-பே என்று 90 சதவீதம் பிள்ளைகள் உளறல்ஸ் ஆப் இண்டியாவாக திருதிரு என்று விழிக்கும். இது இந்தியா முழுமையிலும் உள்ள நிலை. காரணம் இது தான். ப்ராஜக்ட் செய்யுங்கள் என்று பல்கலைகழகம் அளிக்கும் 6 மாதத்தில் 5 மாதம் ஊர் சுற்றிவிட்டு (கடைசி செமஸ்டரில் தான் ப்ராஜக்ட்டும் வைவாவும் மட்டும் தான் இருக்கும் - மற்ற வாசகர்களுக்காக குறிப்பிடுகிறேன்), கடைசி ஒரு மாதத்தில் இந்த புராஜக்டுகளை விற்பதற்கென்றே உள்ள நிறுவனங்களிடம் சென்று 5 முதல் 10 ஆயிரம் வரை கட்டி (இதுதான் கடைசி செலவு என்று பெற்றோர்களிடம் வாங்குவது) ப்ராஜக்டை முடித்துவிடுவது. இந்த புற்றீசல் நிறுவனங்களும் (எதாவது ஒரு டெக்னாலஜி என்று நிறுவனம் பெயர் முடியும்) பணத்தை வாங்கிக்கொண்டு, இது தான் ப்பா ப்ராஜக்ட் டைட்டில், இது தான் டிஸ்க்ரிப்ஷன் என்று ப்ராஜக்டை கொடுத்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் எக்ஸ்ப்ளைன் செய்வர்கள், லேபை உபயொகப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள். சில நிறுவனங்கள் புத்தகம் வரை ஸ்பைரல் பைண்டிங் செய்து கொடுத்துவிடுகிறார்கள்...<br />
<br />
இதில் கொடுமை என்னவென்றால் HOD க்களும் இதை கண்டும் காணாமல் விட்டுவிடுவது தான். மாணவன் / மாணவி பெப்பெரெப்பே என்று வைவாவில் விழிப்பார்கள். என்னடா ப்ராஜக்ட் என்றால் முழுமையாக சொல்லமாட்டார்கள். மாணவன் / மாணவியின் வாழ்க்கையாயிற்றே ! என்று HOD கள் கொஞ்சம் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். எக்ஸ்டர்னல் வந்தாலும் அவர்களிடமும் கொஞ்சி / கெஞ்சி உங்கள் வாழ்க்கையை HOD காப்பாற்றுவார். (நீங்கள் அவர்களை என்னதான் கிண்டல் அடித்திருந்தாலும்)(இந்த ப்ராஜக்ட் வைவாவில் பெயில் ஆனால் டிகிரி கிடைக்காது).<br />
<br />
இது HOD அவர்களின் தவறா ? அல்லது இந்த மாணவர்களின் ப்ராஜக்ட் ஐ மட்டும் நம்பி நிறுவனம் நடத்தும் புற்றீசல் ப்ராஜக்ட் நிறுவனத்தின் தவறா ? உங்கள் கல்லூரிக்கு வந்து உங்களுடைய போலி / பொய் ப்ராஜக்டில் HOD யின் அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்பட்டு உங்களை பாஸ் செய்கிறார்களே அந்த எக்ஸ்டேர்னலின் தவறா ? அல்லது உங்களுக்கு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்பது எப்படியான வாழ்க்கையை கொடுக்கும் என்று கற்பிக்க தவறிய ட்ரெயிங் டைரக்டரின் தவறா ? அல்லது உங்களுக்கு புராஜக்ட்டை நிறுவனத்தில் வாங்கி தரதவறிய ப்ளேஸ்மெண்ட் டைரக்டரின் தவறா ?<br />
<br />
இது அனைத்துக்கும் பதில் 'இல்லை' என்பதே !!!<br />
<br />
அவர்கள் குதிரையை தண்ணீர் தொட்டிவரை கொண்டு சென்றுவிட்டார்கள். தண்ணீர் குதிரை தான் குடிக்கவேண்டும் !!!<br />
<br />
இது முழுக்க மாணவனின் / மாணவியின் தவறே !!!<br />
<br />
1999 ஆம் ஆண்டு Interrupt for Beginners என்று C மொழியில் B.Sc ப்ராஜெக்ட் செய்தோம் ! நான் பெரிய அளவில் செயல்படவில்லை என்றாலும், என்னுடைய தோழர் மணிவண்ணன் தனசேகரன் (திண்டிவனத்தை சேர்ந்தவர், இப்போது DELL நிறுவனம், பங்களூரிவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்) முழுமூச்சாக உழைத்தார். இந்த ப்ராஜக்ட் C மொழியில் உள்ள எடிட்டரில் சிறு மாறுதல்கள் செய்து அதனை சிறப்பாக மாற்றுவதாகும் ! அந்த புராஜக்ட் செய்து 7 ஆண்டுகள் கழித்து 2007 இல் பார்க்கும் வேலையினை விட்டு வேறு ஒரு வேலை மாறுவதற்காக இண்டர்வியூவை சந்திக்கும்போது, இண்டர்வியூ எடுத்தவர் புராஜக்ட் பற்றி நிரம்ப கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டார் ! எனக்கு வேலைக்கான ஆபரும் தந்தார். இது ஒரு எடுத்துக்காட்டு !<br />
<br />
ப்ராஜட் என்பது நீங்கள் செய்யவேண்டியது. அதனை பணம் கொடுத்து எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள். 4 மாதம் ஊர் சுற்றினால் கூட குறைந்தபட்சம் கடைசி 2 மாதத்தில் உட்கார்ந்து ப்ராஜக்ட் செய்யுங்கள். அல்லது உங்கள் ரெஸ்யுமோடு சென்று நிறுவனங்களின் கதவை தட்டுங்கள். உங்கள் ப்ளேஸ்மெண்ட் டைரக்டரை வம்புக்கு இழுத்து (நகைச்சுவைக்காக) அவர் மூலமாக அவர் உதவியோடு ஏதாவது ஒரு சிறிய நிறுவனத்தில் உங்கள் ப்ராஜக்டை செய்யுங்கள்.<br />
<br />
இது ஒரு WIN - WIN சிச்சுவேஷன். ஒரு சிறிய நிறுவனத்தில் நீங்கள் உங்களுடைய லேப்டாப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறேன், உங்களுடைய தேவை ஒன்றை (HR சிஸ்டம், அட்மின் மேனேஜ்மெண்ட், அவர்களுடைய மொபைல் அப்ளிக்கேஷன், அல்லது அவர்களுடைய வெப்-சைட்) நீங்கள் கம்யூட்டரைஸ் செய்து தருகிறேன் என்று சொன்னால் (சம்பளம் தேவையில்லை) அது அவர்களுக்கு லாபம் தானே ? அதே சமயம் உங்களுக்கும் ஒரு ப்ராஜக்ட் எப்படி செய்வது என்ற உண்மையான அனுபவம் கிடைக்கும் !<br />
<br />
நீங்கள் IT / CS டிப்பார்ட்மெண்ட் ஆக இருந்து எதாவது ஒரு சிறிய IT கம்பெனியில் சம்பளம் இல்லாமல் நான் வேலை செய்கிறேன், என்னுடைய ப்ராஜக்ட்டை இங்கே செய்துகொள்கிறேன் என்று சொல்லி HR இடம் கேட்டு பாருங்கள். அவர்களை பொறுத்தவரை இது லாபம் தான். அதே நேரம் அந்த இரண்டு மூன்று மாதத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றினால், அந்த நிறுவனம் உங்களை 100 சதவீதம் தன்னுடைய எம்ப்ளாயி ஆக மாற்றிக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.<br />
<br />
கேம்பஸிலோ, ஆப் கேம்பஸிலோ செலக்ட் ஆகவில்லை என்றாலும் இந்த ரூட் மூலமாக நீங்கள் எளிதில் ஒரு வேலையை பிடிக்கமுடியும். Trust Me !!<br />
<br />
இந்த பதிவு எழுதும் நோக்கமே, இது பலரை சென்றடையும், அதன் மூலம் மாணவ மாணவிகள் சிறு நிறுவனங்களின் கதவை தட்டுவீர்கள் என்பதே ! உங்கள் தோழர்கள் / தோழிகள் நார்த் இண்டியன்ஸ், மலையாளி ஆக இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்கள்.<br />
<br />
வெற்றி உங்களுடையதாகட்டும் !!!</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-28771623.post-4948935006869933362013-01-01T08:52:00.001-08:002013-01-01T08:58:01.737-08:00பொது (வெஸ்டர்ன்) கழிப்பிடமும் - மேலே கீழே தூக்கியும் (லிப்ட்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><u>வெஸ்டர்ன் கழிப்பிடம்</u></b><br />
<br />
இது பேசாப்பொருள் தான். ஆனால் யாராவது பேசியாக வேண்டுமே ? புத்தாண்டின் முதல் பதிவே இப்படி டாய்லெட்டில் ஆரம்பிக்கவேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் நாம் எல்லாரும் காலையில் ஆரம்பிப்பது அதில்தான் இல்லையா கி கி கி !!<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/64/8f/c8/western-toilet.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="265" src="http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/64/8f/c8/western-toilet.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வெஸ்டர்ன் டாய்லெட்</td></tr>
</tbody></table>
<br />
பதிவின் முதல் விஷயம் ஆண்களுக்கு மட்டுமேயானது. பெண்கள் யாராவது படிக்க நேர்ந்தால் இரண்டாவது மேட்டருக்கு தாவிக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்...<br />
<br />
வெஸ்டர்ன் டாய்லெட் பொதுவாக பல இடங்களில் வந்துவிட்டது. அலுவலகங்களில் கண்டிப்பாக வெஸ்டர்ன், சில வீடுகளில் வெஸ்டனும் நார்மல் இண்டியன் டாய்லெட்டும் இருப்பதை பார்த்திருக்கிறேன். இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் முதலில் ஒரு மூடி, அதன் கீழே உட்கார ஒரு சீட், அதன் கீழே பேசின் (சீட் அமைந்திருக்கும் இடமும் அந்த பேசினின் மேல்தான் இல்லையா)<br />
<br />
வீடுகளில் அல்லது அலுவலகத்தில் ஒன் டாய்லெட் (அதாங்க மூச்சா / சூச்ச்சூ) போகும்போது சில பக்கிகள் மேலே இருக்கும் சீட்டை தூக்காமல் அப்படியே நின்று அடித்துவிட்டு செல்வார்கள். இதனால் அந்த சீட்டின் நுனி பகுதியில் இரண்டு மூன்று துளி மூத்திர சொட்டு இருக்கும். அதில் உட்காரவே அருவருப்பாக இருக்கும். அன் ஹைஜீனிக் ஆன இந்த வேலையை செய்யாமல், உட்காரும் சீட் பகுதியை தூக்கிவிட்டு மூச்சா போய் தொலைங்களேன் மூதேவிகளா !!!<br />
<br />
அப்படி சீட்டை தூக்கி போகும்போதும், டாய்லெட்டுக்கும் உங்கள் 'அதுக்கும்' இடையே சரியான இடைவெளியை (எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் சென்று) போகவும். அதனால் டாய்லெட் தவிர்த்து கீழே சிந்துவதை தவிர்க்கலாம்...<br />
<br />
பொது (வெஸ்டர்ன்) டாய்லெட்டை உபயோகிக்கும்போது, அங்கே டாய்லெட் பேப்பர் இருக்கும் பட்சத்தில் (உங்கள் அதிஷ்டத்தை பொறுத்தது) அதனை டாய்லெட் சீட் மேல் (மூன்று பக்கமும்) போட்டுக்கொள்ளலாம். அமெரிக்கன் பை படத்தில் கூட காட்டுவார்கள்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://www.gobizkorea.com/att/cat/18992001/tp_html/img/18992001_cat_1_small_img_2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="200" src="http://www.gobizkorea.com/att/cat/18992001/tp_html/img/18992001_cat_1_small_img_2.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கொரிய பைடெட் ( bidet)</td></tr>
</tbody></table>
<br />
<br />
கொரியாவில் பைடெட் என்று சொல்லுவார்கள். டாய்லெட் சீட்டில் ஆயிரத்தெட்டு பட்டன் இருக்கும். ஒரு பட்டனை அமுக்கினால் கீழே இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். இன்னொரு பட்டன் சூடான காற்று. (நான் 200 டாலர் கொடுத்து ஒன்று வாங்கி வந்தேன், வீட்டில் இருக்கிறது - பிட் செய்யவில்லை).. என்ன - மெனு எல்லாம் கொரிய மொழியில் இருக்கிறது. எந்த பட்டன் எதற்கு என்று கொரிய மொழி தெரிந்திருந்தால் தான் புரியும் அல்லது அனுபவத்தில் கண்டடைய முடியும் :)<br />
<br />
சொல்ல வந்ததை எப்படியோ நீட்டி முழக்கி சொல்லிவிட்டேன். இனிமேல் பீ-கேர்புல். என்னை சொன்னேன்...<br />
<br />
<br />
<b><u>லிப்ட் மேட்டர்</u></b><br />
<br />
இதுவும் ஒரு சாதாரண / சின்ன விஷயம் தான். ஆனால் யாராவது ஒருவர் விளக்கித்தானே ஆகவேண்டும். (ஏன் என்றால் எனக்கும் இது ரொம்ப நாளைக்கு விளங்காமல் தான் இருந்தது).<br />
<br />
லிப்ட் திடீர் என்று நின்று விட்டால் என்ன செய்வது, கயிறு அறுந்துவிட்டால் எப்படி தப்பிப்பது, லிப்டில் போன் வொர்க் ஆகுமா என்று டெக்னிக்கல் மேட்டர் பேச வரவில்லை. மேலே சொன்னபடி ஒரு சிம்பிள் மேட்டர் தான்..<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwnPE99bOCoUvQ_Ee2JNFYKNnF2wLIQOvDGvQ9RNICaRAxzDRFNMmGfESe_-8bAaMiTIfARxV1qNgTYRgSYN4i7Zqg-35hQYNEyJ1V4VXpqQA4RCi_bft5iWxJe-99owAd11zvgQ/s1600/3683133183_d385edc877.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwnPE99bOCoUvQ_Ee2JNFYKNnF2wLIQOvDGvQ9RNICaRAxzDRFNMmGfESe_-8bAaMiTIfARxV1qNgTYRgSYN4i7Zqg-35hQYNEyJ1V4VXpqQA4RCi_bft5iWxJe-99owAd11zvgQ/s320/3683133183_d385edc877.jpg" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">லிப்ட் பட்டன்ஸ்</td></tr>
</tbody></table>
லிப்ட் முன்னால் மேலே / கீழே என்று ரெண்டு பட்டன் இருக்கும். அண்டர் கிரவுண்ட் இருக்கும் பில்டிங் ஆக இருந்தால் கீழே பட்டன். அண்டர் கிரவுண்ட் இல்லாத ஒரு பில்டிங்கில் நீங்கள் க்ரவுண்ட் ப்ளோரில் நின்றால் அங்கே மேலே செல்ல மட்டும் பட்டன் இருக்கும். அல்லது நீங்கள் ஒரு ஐந்தாவது மாடியில் இருந்தால் அந்த இடத்தில் நான் படத்தில் காட்டியது போல மேலும் கீழும் பட்டன்ஸ் இருக்கும்.<br />
<br />
பல பேர் நினைப்பது இரண்டு பட்டனையும் அழுத்தினால் லிப்ட் வேகமாக வந்துவிடும் / ஆனால் அது உண்மை இல்லை. கண்டிப்பாக வராது. அது வரும்போது தான் வரும் :)<br />
<br />
மேலே போகவேண்டும் என்றால் (அட நீங்கள் இருக்கும் தளத்தில் இருந்துங்க) மேலே உள்ள பொத்தான். கீழே போகவேண்டும் என்றால் கீழே உள்ள பொத்தான். இரண்டு பொத்தானையும் அழுத்தினீர்கள் என்றால், லிப்ட் வந்தபிறகு கதவு மீண்டும் ஒரு முறை திறந்து மூடும். இதனை தவிர்க்க நான் மேலே சொன்னபடி (எங்கே போகவேண்டுமோ அதன்படி) அழுத்தவும்.<br />
<br />
நன்றி !!</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28771623.post-57893370714150924082012-12-17T03:43:00.000-08:002012-12-17T07:05:24.181-08:00நான் Fresher. எனக்கு எதுவும் தெரியாது..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.anbusivam.com/wp-content/uploads/2011/10/interview.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="298" src="http://www.anbusivam.com/wp-content/uploads/2011/10/interview.gif" width="400" /></a></div>
<br />
காலையில் நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தார் ஒரு இளம்பொறியாளர். (Fresher). என்ன செய்கிறார் என்று விசாரித்தேன். கடந்த ஆண்டு BE படிப்பை முடித்துவிட்டு ஒரு ஆண்டாக வேலை தேடுகிறார்.<br />
<br />
என்ன தெரியும் என்று கேட்டேன்.. C, C++ என்று கல்லூரியில் படித்த சப்ஜெக்டுகளை சொன்னார். அதில் ஆழமான / இண்டஸ்ட்ரிக்கு தேவைப்படும் விஷயங்கள் அவருக்கு தெரியவில்லை அல்லது கற்பிக்கப்படவில்லை...<br />
<br />
ஆக அவரை நேரடியாக ஒரு பணியில் உட்கார வைத்து வேலை வாங்க முடியாது. ட்ரெயினிங் தரவேண்டும். ஒரு இரண்டு மாதங்களாவது ஆகும்.<br />
<br />
வேலை தேடும் இந்த ஒரு ஆண்டில் அண்ட்ராய்ட், ஐபோன், HTML5, வெப் சர்வீசஸ், XML, நெட்வொர்க்கிங் என்று எதையாவது பழகினீ ர்களா என்றேன், அதுவும் இல்லை.<br />
<br />
புற்றீசல் போல முளைத்திருக்கும் கணிணி படிப்பை சொல்லித்தரும் டிவி விளம்பர ஸ்காலர்ஷிப் நிறுவனங்களிடம் ரெண்டு சர்ட்டிபிக்கேட்ஸ் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அது இண்டஸ்ட்ரிக்கு தேவையானதாக / லேட்டஸ்ட் டெக்னாலஜியாக இருக்கவில்லை...<br />
<br />
ஆக, ஒரு ப்ரஷ்ஷர் அல்லது இளம்பொறியாளராக இருப்பவருக்கு உருப்படியாக எதுவும் தெரிவதில்லை, அல்லது என்ன தெரியவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்றும் தெரியவில்லை.<br />
<br />
ஏதாவது ஓப்பன் சோர்ஸ் போரம்மில் இணைந்துள்ளாரா / தனியாக ஏதுவும் ப்ராஜக்ட் செய்துள்ளாரா என்று பார்த்தேன் அதுவும் இல்லை.<br />
<br />
ஆக, படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், மனதில் பயத்தோடு, வேலை வேண்டுமே என்று தேடுவதை செய்கிறார்கள், பேஸ் புக்கில் "நான் எஞ்ஜினீயர் எனக்கு வேலை இல்லை" என்று ஏதாவது ஒரு த்ராபை குழுமத்தில் இணைந்து போட்டோஷாப் வேலைகள் செய்து விளையாடுகிறார்கள்.<br />
<br />
ஆனால் இந்த இண்டஸ்ட்ரி என்ன மாதிரியான ஆட்களை தேடுகிறது அதற்கு எப்படி தகுதியாவது என்று ஆழமாக சிந்திப்பதே இல்லை...<br />
<br />
"வேலை வேண்டும் என்றால் எக்ஸ்பீரியன்ஸ் தேவை என்று சொல்கிறாயே, நீ வேலை கொடுத்தாத்தாண்டா எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்" என்பது இளம்பொறியாளர்கள் மத்தியில் எப்போதும் வளைய வரும் ஜோக்.<br />
<br />
எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா ? எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் என்ன செய்யுறாங்க என்று பார்த்து அதை செய்யுங்க. CAD CAM Civil என்று அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடியது தான் இது. (IT துறைக்கு அதிகம் பொருந்தும்).<br />
<br />
ஒரு ஆண்டு 'வேலை தேடிய வேலை' செய்தமைக்கு கூடவே அண்ட்ராய்ட் / HTML5 / SQL Server / Web Development அப்படீன்னு எதையாவது செய்துகொண்டே இருந்தால் அதை வேலைக்கான நேர்முகத்தேர்வில் உங்களை ஷோகேஸ் செய்ய பயன்படுத்தலாமே ?<br />
<br />
ஒரு டிசைனர் அவருடைய டிசைன்களை கையோடு கொண்டுபோய் காட்டினால் - அந்த டிசைன் அற்புதமாக இருந்தால் - வேலை தருவாங்களா மாட்டாங்களா ? அந்த டிசைன் தானே அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் ? பி.டெக், பி.இ, எம்.இ, எம்.சி.ஏ முடித்துவிட்டு உங்கள் துறையில் ப்ராக்டிக்கலாக என்ன செய்யமுடியுமோ (தகவல் தொழில் நுட்ப துறையாக இருந்தால் ஒரு மொபைல் அப்ளிக்கேஷன் செய்யலாம்) அதை செய்யுங்களேன். அதை உங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆக காட்டுங்களேன்...<br />
<br />
நீங்கள் இப்படி களத்தில் குதித்து ராப்பகலாக உங்கள் துறையில் உழைக்கும்போது நல்ல வேலையும் உங்களை தேடிவரும், உங்கள் பெற்றோரும், நன்பர்களும் உங்களை மதிப்பார்கள் ! நீண்ட நாட்களாக சொல்லவேண்டும் என்று தோன்றிய விஷயம். மனதின் பாரம். இறக்கி வைத்துவிட்டேன்...<br />
<br />
டெயில் பீஸ் : நேர்முகத்தேர்வில் அந்த இளம்பொறியாளரை கனத்த இதயத்தோடு ரிஜெக்ட் செய்துவிட்டேன்...!!! <br />
<br />
<br /></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28771623.post-34474453879834911462012-10-30T03:28:00.000-07:002012-10-30T03:28:03.467-07:00பவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgddygGXRZuJGJoizY5g5TIUd1sqC7Jsx9qHIkXuW641rXyvmxDj5kCS1aNXtBH93_mat5zwZDC4aXd5edcWzqM_r57NeNE4AexltzjJR1jvGzC7gI9WXjHiLa1NQ2AhAkpeVFM/s1600/bava_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgddygGXRZuJGJoizY5g5TIUd1sqC7Jsx9qHIkXuW641rXyvmxDj5kCS1aNXtBH93_mat5zwZDC4aXd5edcWzqM_r57NeNE4AexltzjJR1jvGzC7gI9WXjHiLa1NQ2AhAkpeVFM/s320/bava_2.jpg" width="320" /></a></div>
<br />
<br />
பவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமத்தை உருவாக்கியுள்ளோம்...<br />
<br />
<a href="http://www.facebook.com/groups/384202364990745/">http://www.facebook.com/groups/384202364990745/</a><br />
<br />
பவா செல்லத்துரை பற்றிய எனது 2009 ஆண்டு பதிவு <a href="http://imsai.blogspot.in/2009/07/blog-post_24.html">http://imsai.blogspot.in/2009/07/blog-post_24.html</a> (படங்கள் எல்லாம் காணவில்லை)..<br />
<br />
அந்த சமயத்தில் பால குமாரன் அவர்களை பற்றிய கொலைவெறியில் இருந்தவன். என்னடா இவரது புத்தகங்களில் ரொம்ப அறிவுரை சொல்லி கொடுமைப்படுத்துகிறார் என்று...<br />
<br />
ஆனால் பாலகுமாரன் ஆட்சி செய்த காலத்தில் அவரது தேவை இருந்திருக்கிறது. அவரும் பலரை நல்வழிப்படுத்தியிருக்கிறார் என்று உணர்ந்திருக்கிறேன்...சாரி பாலகுமாரன்...<br />
<br />
லெட்ஸ் கம் பேக் டு த பாய்ண்ட்...<br />
<br />
மறுபடி லிங்க் தரேன், இது தான் பேஸ்புக் குழுமம்...<br />
<br />
<a href="http://www.facebook.com/groups/384202364990745/">http://www.facebook.com/groups/384202364990745/</a><br />
<br />
<div>
தமிழின் வெகுஜன ஊடகங்கள் பவாவை, கோணங்கியை, ஆர்.பி.ராஜநாயஹத்தை கொண்டாடவேண்டும்...அவர்களுடைய எழுத்துத்தான் நேர்மையான எழுத்து...</div>
<div>
<br /></div>
<div>
சாரு மற்றும் ஜெயமோகனின் இணைய தளங்கள் வழியாக இருவரும் ஓவர் எக்ஸ்போஸ் ஆகிவிட்டார்கள் :)))</div>
<div>
<br /></div>
<div>
பவாவையும் இந்த பேஸ்புக் குழுமத்தில் சிறிய போஸ்டுகள் கூடிய விரைவில் போடவைப்போம்...அவரை தீவிர வாசகர்கள் ஏற்கனவே அறிந்திருப்பார்கள்..அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு முயற்சி தான் இந்த குழுமம்...சேரும் அனைவருக்கும் நன்றி...</div>
<div>
<br /></div>
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28771623.post-32570167693397469712012-10-29T23:11:00.000-07:002012-10-29T23:12:27.191-07:00ஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தோழி கவிதா அவர்களை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...<br />
<br />
அடியேன் சமீபத்தில் ஒரு பதிவிட்டேன். அதன் இணைய முகவரியை ட்விட்டரில் கொடுத்து அனைவரையும் படிக்குமாறு கேட்டேன். அந்த முகவரி <a href="http://imsai.blogspot.in/2012/10/blog-post_29.html">http://imsai.blogspot.in/2012/10/blog-post_29.html</a><br />
<br />
இதை நீங்களா எழுதியது ? படிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். இருந்தாலும் அடியேன் அவர்களை படிச்சுருங்க என்று கெஞ்சி காலில் விழுந்து கதறி கேட்கும் ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அதை வன்மையான காமெடி மொழியில் பின் இணைப்புடன் தரும் வகையில் பதில் ட்வீட். இதனை ஸ்க்ரீன் ஷாட் மேனிப்புலேட் செய்பவர்கள், இணையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொடுக்க வாய்ப்பு உண்டு. பெயிண்ட் ப்ரஷ்ஷில் இரண்டு நிமிடத்தில் இந்த இரண்டு ஸ்கீரீன் ஷாட்கள் (ஒரிஜினல், மேனிப்புலேட் செய்யப்பட்டது) தயாரிக்கப்பட்டது. பாருங்கள்...<br />
<br />
<br />
படம் 1<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEfhuZpzyC2RuYXryrgeMIHseK2dIgIR6bHbMMSANmzs3Sjq_XkSWTQSqsf_PAeZlwkhwhJZC2gnfpHgoEqBHvXv5Zk46wls8Nw0hVxItVLgDtILLOr9mnS2JjMrQ91qxR5_un/s1600/S1.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEfhuZpzyC2RuYXryrgeMIHseK2dIgIR6bHbMMSANmzs3Sjq_XkSWTQSqsf_PAeZlwkhwhJZC2gnfpHgoEqBHvXv5Zk46wls8Nw0hVxItVLgDtILLOr9mnS2JjMrQ91qxR5_un/s400/S1.PNG" width="400" /></a></div>
<br />
<br />
படம் 2<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwWRb-v1XsxWuimUaAn4mJ7H9S2gWAqfj1lPHr4CAAi-ebcwfE6RAqBLxeslLtus0b_HRfXWh4zUl_6Tog_FQvhzzBEW1VRpY2vFUokZnsE6hQyXBcX7beRLTOD3ih9jykAMp6/s1600/S2.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwWRb-v1XsxWuimUaAn4mJ7H9S2gWAqfj1lPHr4CAAi-ebcwfE6RAqBLxeslLtus0b_HRfXWh4zUl_6Tog_FQvhzzBEW1VRpY2vFUokZnsE6hQyXBcX7beRLTOD3ih9jykAMp6/s400/S2.PNG" width="400" /></a></div>
<br />
டிஸ்கி : இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். அடுத்த நிமிடம் டெலீட் செய்ய காத்திருக்கிறேன்..இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...<br />
<br /></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-28771623.post-29758988564819875252012-10-29T21:29:00.001-07:002012-10-29T21:40:22.305-07:00தினத்தந்தியில் இருந்து எழுந்த உள்ளொளி !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<i>ஒரு மொக்கை பதிவை எழுதக்கூட பல முறை யோசிக்கவேண்டிய காலகட்டதை உருவாக்கியவர்களே. உங்களுக்கு என்னை எல்லாம் பார்த்தால் பாவமாக இல்லையா ? சரி பரவாயில்லை. அங்கங்கே திரு சார் எல்லாம் போட்டு மரியாதையாக <strike>திட்டி</strike> எழுதிக்கொள்கிறேன்..</i></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaLEy_voVUIBgk9o2q-mWv2NrtaeYAhmrXyZ0dFYJroK6nPHOWwHlCdt0uGhFIy6i-xug_ejNjVnHJpe4hqg4sArSBoPLU_x6WPaq2kJY4d9DYHXBZtqusF0Fk11BAhXomQKsN/s1600/20110720074128!Jeyamohan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaLEy_voVUIBgk9o2q-mWv2NrtaeYAhmrXyZ0dFYJroK6nPHOWwHlCdt0uGhFIy6i-xug_ejNjVnHJpe4hqg4sArSBoPLU_x6WPaq2kJY4d9DYHXBZtqusF0Fk11BAhXomQKsN/s320/20110720074128!Jeyamohan.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
எழுத்துலக பிதாமகனார், பல ஆயிரம் பக்கங்களுக்கு காத்திரமான நாவல்களை <i>(கதபுக் என்கிறார் தோழர் கல்வெட்டு என்கிற பலூன் மாமா)</i> எழுதி குவித்த, குவிக்கும், குவிக்கப்போகும் இலக்கிய சூப்பர் ஸ்டார் ஜெயமோகன் சார் சமீபத்தில் இணையத்தில் நடந்த சில அக்கப்போர்களை பற்றி தனது முத்தான கருத்துக்களை தனது வலைப்பூவில் உதிர்த்திருக்கிறார்..சாம்பிளுக்கு ரெண்டு...<br />
<div>
<br /></div>
<div>
- சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவருக்கு ஆபாச தாக்குதல் தொடுத்தார்கள், அவரது படத்தை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பினார்கள். இது அவரது முதல் பதிவில் பொங்கியதன் சாராம்சம். இந்த விடயம் அவர் காலையில் படிக்கும் தினத்தந்தி அல்லது தினமலரில் வந்திருக்கலாம் (http://www.jeyamohan.in/ என்ற இணைய தளத்தில் இருக்கும். என் நேரக்கொடுமை இந்த கந்தாயம் என்னுடைய கணினியில் திறக்க மறுக்கிறது. சரியான சுட்டியை கொடுக்க இயலவில்லை. இதற்கு என்னுடைய வாசகர்களிடம் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)</div>
<div>
<br /></div>
<div>
- சம்பந்தபட்ட <strike>பலான பலான</strike> நபருக்கு உதவ 15 லட்சம் அளவுக்கு பணம் சேர்த்துள்ளார்கள். இந்த விஷயம் அவரது நட்பு வட்டத்தில் உள்ள எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் சொல்லியது. இதுவும் அவரது பதிவிலேயே இருக்கிறது...அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர் எனக்கு தெரிந்து திரு சிரில் அலெக்ஸ் சார். வலைப்பதிவு / சற்றுமுன் காலத்தில் இருந்து (6 ஆண்டுகளாக) அவரை அறிந்தவன் அடியேன்..அவர் இது போன்ற மொக்கையான தகவலை சொல்லமாட்டார். ஆகவே மேற்படி தகவலை அவரைப்போன்றதொரு தினத்தந்தி தினமலர் சொம்பு சார் தான் சொல்லியிருக்கவேண்டும்... </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBpvNa_-xoHJ9EL4skeiTwBsxJpsYxXyQ6NrCL-WTmYo9SEiFNAC-UwfouqUGkqi2WSAMa-WORXjX2X5aRiDAUd80WAUiLXchGr9jfOsxGrdC_WdZhndtMmi0yvQ6cLb4FAM5p/s1600/Onida-Ghost-Model-new%5B7%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBpvNa_-xoHJ9EL4skeiTwBsxJpsYxXyQ6NrCL-WTmYo9SEiFNAC-UwfouqUGkqi2WSAMa-WORXjX2X5aRiDAUd80WAUiLXchGr9jfOsxGrdC_WdZhndtMmi0yvQ6cLb4FAM5p/s320/Onida-Ghost-Model-new%5B7%5D.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இந்த குறிப்பிட்ட விடயம் பற்றி அடியேன் கடைசியாக ட்வீட்டியதொரு ட்வீட்டு எப்படி போகிறதென்றால் தனிப்பட்ட வன்மம் மற்றும் சண்டை போன்றவைகளை நியூஸ் வொர்தியாக்க அவரை தொடர்ந்து <strike>பாலோ செய்து போலி பெயரில் </strike>பின் தொடர்ந்து அவர் ஆட்சியாளர்களை விமர்சிக்கும்போதெல்லாம் <strike>ஸ்க்ரீன் ஷாட்</strike> திரைச்சொட்டு எடுத்து குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இணையம் அறிந்த இனவெறியரான (சூத்திரர்களை ஆபாசமாக திட்டியவர் - திரைச்சொட்டு இருக்கிறது) பல்லாவரத்தான் என்பவர் உதவியோடு பழிவாங்கப்பட்டார் என்கிறது. (Safe Para கரெக்டுதானே) </div>
<div>
<br /></div>
<div>
இணையத்தில் இன்று புழங்குகிற நடுநிலை நட்டநடு செண்டர் வாதிகளில் இருந்து, தீவிர தமிழ் தேசிய திடீர் குபீர் இணைய புரட்சியாளர்கள் வரையிலும், கபடநாடகவேடதாரி போலி கம்யூனிஸ்டுகள் வரையிலும், கணிப்பொறி வல்லுனர்கள், டி.டி.பி ஆப்பரேட்டர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள் அனைவரும் அறிந்ததான உண்மை இது..</div>
<div>
<br /></div>
<div>
இவர்கள் தான் உங்களை கொண்டாடி, உங்கள் புத்தகங்களை காசு கொடுத்து எக்போக்களிலும், டயல் பார் புக்ஸ்களிலும், புத்தக கடைகளிலும் வாங்குபவர்கள்.. உங்களது <strike>சோ கால்ட்</strike> (திரு சோ ராமசாமி அவதூறு வழக்கு போட்டுடப்போறார்). so called இணைய தினத்தந்தி தினமலர் கக்கூஸ் / காபி ரீடிங் <strike>சொம்புகள்</strike> ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள் அல்ல...</div>
<div>
<br /></div>
<div>
ஆகவே இன்றைக்கு அனைவரும் அறிந்த பிரச்சனையில் நீங்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல <strike>வேட்டி அவிழ்ந்த குடிகாரனைப்போல</strike> அம்பலப்பட்டு நிற்பது கண்டு உண்மையில் பரிதாபப்படுகிறேன் சார். உங்களை நேருக்கு நேர் <strike>டவுசர் கழட்டி</strike> கேள்வி கேட்டு உங்கள் வாசகர் வட்ட (??) கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஆர்.பி.ராஜநாயஹம் அளவுக்கு நான் பெரிய வாசகன் அல்ல. உங்களது புத்தகம் ஒன்று கூட அடியேடினிடம் இல்லை. (வாங்கலாம் என்றிருந்தேன், ஆனால் இனி வாங்கப்போவதும் இல்லை)..</div>
<div>
<br /></div>
<div>
எனக்கு எழும் கேள்வி எல்லாம் இது தான் நித்யானந்த யதியிம் இருந்து பெற்ற உள்ளொளியா ? இந்த அவதூறு தான் இந்து ஞான மரபு தமிழ் கூறும் நல் உலகுக்கு தந்ததா ? இது தான் உங்கள் வாசகருக்கு நீங்க அளிக்கும் மன அமைதியா / ஆறுதலா ? இது தான் உங்களை பெரிய அறிவு ஜீவி என்று இது காறும் எண்ணிய அடியேனைப்போன்றவர்களுக்கு (அட என்னைத்தான் சொல்கிறேன்) நீங்கள் காட்டும் நித்திய பரிசுத்த தூய போற்றுதலுக்குறிய மன வெளிச்சமா ? </div>
<div>
<br /></div>
<div>
இந்த குறிப்பிட்ட பிரச்சனையில் உங்களது <strike>காத்திரமான இலக்கிய</strike> கத புத்தகத்தை பல பேர் முன்பு கிழித்து போட்ட திரு சாரு நிவேதிதா சாரும் கருத்து சொல்லியிருக்கிறார். அவரை யாரும் மதிக்கப்போவதில்லை. அவரது தீவிர வாசகர் / ஆதரவாளரான திரு யுவக்கிருஷ்ணா கூட மனம் நொந்திருக்கிறார்...அவரை பற்றி எல்லாருக்கும் தெரியும் (உதா : நித்யானந்தா வெளியிட்ட கடிதமும் ஒரு பெண்ணிடம் இணையத்தில் அவர் காட்டிய வக்கிரமும்), ஆகவே 90 சதவீதம் பேர் அவரை புறக்கணித்துவிடுவார்கள். ஆனால் நீங்களும் இந்த பிரச்சனையில் டவுசர் கழண்டு நிற்பீர்கள் என்று உண்மையில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...</div>
<div>
<br /></div>
<div>
அப்புறம் என்ன...இந்த பதிவு 100 பேருக்காவது ஷேர் ஆகும். பேஸ்புக்கில் / ட்விட்டரில் / கூகிள் ப்ளஸ்ஸில் நானே ஷேர் செய்வேன். (எனக்கு மார்க்கெட்டிங் நான் தானே சார்)...உங்கள் புத்தகங்களை நான் புறக்கணிப்பது போல இன்னும் 100 பேர் புறக்கணிக்கமாட்டார்களா என்ற நம்பிக்கையில் மெய் நிகர் உலகான இந்த இணையம் மூலமாக உங்கள் பொற்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து உள்ளம் உருகி வணங்கி உங்கள் பாதங்களை முத்தமிட்டு உளப்பூர்வமாக சொல்கிறேன், நீங்கள் ஒரு மரண மொக்கை சார் <strike>என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு</strike> பதிவை முடிக்கிறேன்..</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-28771623.post-1112699594701830682012-10-28T21:07:00.004-07:002012-10-28T21:07:31.243-07:00அப்பார்ட்மெண்ட் வாசிகளே ! உஷார் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://cdn.24.co.za/files/Cms/General/d/2100/fe4ec9be285041ff9751a6f24b169cd9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://cdn.24.co.za/files/Cms/General/d/2100/fe4ec9be285041ff9751a6f24b169cd9.jpg" width="259" /></a></div>
<br />
<br />
காலையிலேயே அப்பார்ட்மெண்ட் சொசைட்டியினரிடம் இருந்து மின்னஞ்சல். அப்பார்ட்மெண்டில் இணைந்து அப்பார்ட்மெண்டுக்கு உள்ளேயே (மொத்தம் 1000 வீடுகள்) இருந்த மளிகை கடை பையன் பொருட்களை கொடுக்க வந்தபோது வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்..<br />
<br />
இங்கே மளிகைகடை, மெடிக்கல்ஸ், பார்பர் ஷாப் என்று அனைத்து வசதிகளும் அப்பார்ட்மெண்ட் உள்ளேயே இருப்பதால், எக்ஸ்டென்ஷன் போனை கொண்டு தக்காளி ஒரு கிலோ, பூண்டு கால்கிலோ என்று சொன்னால் மளிகைப்பொருளை ஆள் அனுப்பி வீட்டுக்கே கொடுப்பார்கள். அப்படி வந்த ஒரு பையன் இந்த கொடூர செயலை செய்துள்ளான்..காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்கள், மளிகை கடையை உடனே அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறுமாறு சொசைட்டியினர் சொல்லிவிட்டார்கள்.<br />
<br />
இந்த கொடூரத்தில் இருந்து மீண்டுவர அந்த சிறுமிக்கு எவ்வளவு நாள் பிடிக்குமோ ? இந்த அப்பார்ட்மெண்ட்டில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்று இதுநாள் வரை நினைத்திருந்த என்னுடைய நினைப்பில் சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது இந்த சம்பவம். பெற்றோர்களில் அக்கறையின்மை என்று சொல்வதா அல்லது பாலியல் வறட்சியில் அலையும் சமூகத்தை சொல்வதா ?</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28771623.post-81100441781975268592012-10-21T20:53:00.000-07:002012-10-21T20:53:03.812-07:00உயிர்காப்போம் - உதவி தேவை !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளின் முட்டைகள் அடைகாக்கப் படாமல் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. அவைகள் செயற்கையாக அடைகாக்கப் பட இன்குபேட்டர் தேவைப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் பறவைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிட முடியுமாம். பல அரிய வகைப் பறவைகளும் இருக்கின்றன. அவைகளில் பெருக்கத்திற்கு இது பேருதவியாக இருக்கும்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">30 முட்டைகள் வைக்கும் அளவு ஆடோமேடிக் இன்குபேட்டருக்கான விலை வ</span><br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
ிவரம் ...<br /><br />30 eggs capacity fully automatic incubator - ரூ. 15500<br /><br />Package charges - ரூ. 500<br /><br />Total charges including transport - ரூ. 16000<br />For more details about incubator please contact - Mahesh – ph - +91-9787525252<br /><br />16000 ரூபாயை ஒருவரே தர முடியாதுன்னு தெரியும். நண்பர்கள் இணைந்து வாங்கித் தரலாம். முடிந்தவர்கள் உதவி செய்யவும்..</div>
<br />
<br />
<span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;">என்று தோழர் சஞ்ஜெய் பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இன்று என்னுடைய பங்களிப்பை செலுத்த இருக்கிறேன். </span></span><br />
<span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;">நீங்களும் உதவி செய்ய விரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள், அக்கவுண்ட் நம்பர் தருகிறேன். இந்த இன்குபேட்டரை வாங்கி வைப்பது தொடர்பான முழு தகவல்களையும் அவ்வப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு அப்டேட் செய்துவிடுகிறேன்...</span></span></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28771623.post-82763945808995177082012-10-20T19:59:00.002-07:002012-10-20T19:59:43.434-07:00நைஜீரியா ராகவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திரு நைஜீரியா ராகவன் அவர்களது மகன் அர்விந்த் மறைந்துவிட்டார். இப்போதுதான் தகவல் அறிந்தேன். ஒரு முறை புதுகை அப்துல்லாவுடன் இருக்கும் படத்தை சேமித்து வைத்திருந்தேன்...இன்றைக்கும் கண்ணிலேயே இருக்கிறது. ஆழ்ந்த அஞ்சலிகள் !!<br />
<br />
<br /></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28771623.post-1543078195373325372012-10-19T21:17:00.000-07:002012-10-19T21:51:30.976-07:00பாடகி சின்மயி Vs ட்விட்டர் ராஜன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Chinmayi_Sripada_Simply_Awesome.jpg/220px-Chinmayi_Sripada_Simply_Awesome.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Chinmayi_Sripada_Simply_Awesome.jpg/220px-Chinmayi_Sripada_Simply_Awesome.jpg" /></a></div>
<br />
<br />
பாடகி சின்மயி, கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்துள்ளார். ஒன்று அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்பது. மற்றையது தமிழ் இணைய ட்விட்டர் உலகில் இருக்கும் சிலர் தனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் / தொந்தரவு தருகிறார்கள் என்று. அதில் ஒரு குறிப்பிட்ட நபர் (ராஜன் இல்லாத மற்றைய ஒருவர்) மீது மேலும் கடுமையான புகாரை சொல்லியிருக்கிறார்...<br />
<br />
இதில் ராஜன் தவிர்த்து மற்றைய யாரும் எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு முறைகூட தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் அல்ல. அதனால் அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பதை பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் பாடகி சின்மயியின் மாடஸ்டியை குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் இணைய உலகில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவருக்கு மிரட்டல் விடுத்திருந்தாலோ அல்லது அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தாலோ அதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.<br />
<br />
தமிழக காவல்துறை, அதிலும் சைபர் க்ரைம், தமிழ் இணைய உலகுக்கு பரிச்சயமானது தான். தமிழ் இணையத்தில் அனைவரையும் ஆபாச அர்ச்சனை செய்துவந்த ஒரு சைக்கோவை வெறும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் வைத்து டவுசரை கழட்டி உட்காரவைத்தவர்கள். கூகிள் / ட்விட்டர் / யாஹூ உட்பட அனைத்து நிறுவனங்களும் தமிழக காவல்துறை அனுப்பும் மின்னஞ்சலுக்கு உடனே பதில் தருகிறார்கள். மின்னஞ்சல் முகவரி / ட்விட்டர் முகவரியை உருவாக்கியதில் இருந்து என்ன என்ன எழுதியிருந்தாலும் (டெலீட் செய்யப்பட்டவை உட்பட) முழுமையான பி.டி.எப் கோப்பாக அனுப்பிவிடுகிறார்கள். ஆகவே இதுபோன்ற சைபர் குற்றங்களில் தமிழக காவல்துறையின் அனுபவம் பற்றியோ, அல்லது அவர்களின் வேகம் பற்றியோ எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை...<br />
<br />
ஆனால் இந்த குறிப்பிட்ட புகார் எப்படி தொடங்கியது என்பது பற்றி எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்...(சமீப காலங்களில் ட்விட்டர் முகவரி உருவாக்கியவர்களுக்கு இது பற்றி தெரியாது, அவர்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்பதை விட, டெல்லியில் இருந்துகொண்டு என்னால் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகி விளக்கம் கொடுக்க இயலாத நிலையில் என்னால் முடிந்த வகையில் ஆரம்பகால தகவல்களை பதிவு செய்து வைப்பது என் கடமை என்று கருதுகிறேன்).<br />
<br />
மேலும் பொதுவாகவே பெண் புகார் கொடுத்தால் இளகும் மனம் உள்ள காவல் துறையினர், பாடகி சின்மயி போன்ற ஒரு பிரபலம் / செலப்ரட்டி புகார் கொடுத்தால் எதிர் தரப்பில் உள்ள சிவிலியன்கள் (ராஜன் உட்பட), என்ன சொல்லியிருக்கிறார்கள் / செய்திருக்கிறார்கள் என்று அவர்களது விளக்கத்தை தர கூட அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறியே...!!! அதனால் இது போன்ற விளக்கத்தை எழுதி, எனக்கு தெரிந்த காவல்துறை நன்பர்கள் மூலம் அவர்களுக்கு முன்பே கிடைக்குமாறு செய்வதும் இந்த பிரச்சனையில் இரண்டு தரப்பையும் விளக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். (மேலும் இந்த வாரம் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் பெரிதாக ஏதும் நடைபெற்றிருக்காது என்று நம்புகிறேன்)..<br />
<br />
பீடிகையிலேயே பீடி குடிக்க போகும் அளவுக்கு ப்ளேடு போடாதே ரவி விஷயத்துக்கு வா என்று அண்ணன் உண்மைத்தமிழன் அலறுகிறார்...!!<br />
<br />
- <i>பாடகி சின்மயி ட்விட்டருக்கு வந்தபோது உற்சாகமாக அனைவரும் பாலோ செய்தோம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது கருத்துக்களை தெரிந்துகொள்ள....</i><br />
<br />
<br />
- <i>இலங்கை படையினர் தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற ஒரு நிகழ்வின்போது, மீனவன் மீனை கொல்றான், சிங்கள படையினர் மீனவனை கொல்றான் என்ற வகையில் ஒரு ட்வீட்டை இட்டார். இது பரந்துபட்ட அளவில் அனைத்து தமிழ் ட்வீட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு எழ காரணமாக இருந்தது. தமிழ் உணர்வாளர்கள், நடுநிலையாளர்கள், பெண்கள் என அனைவரும் பாடகி சின்மயிக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை எழுதினார்கள். பாடகி சின்மயி, இதற்கு மறுப்போ மன்னிப்போ தெரிவிக்காமல், நான் ப்ராமின் என்பதால் என்னை தாக்குகிறீர்கள் என்ற ரீதியில் - சரியாக நினைவில்லை - எழுதினார். அதே நேரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் தடை செய்தார். இந்த குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக பங்கேற்க இயலாத வகையில் பணி சுமை இருந்தது. அதனால் நான் இதில் கலந்துகொள்ள இயலவில்லை...</i><br />
<br />
<br />
- <i>சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு என்று தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை தூற்றி எழுதினார். பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் சொன்னார். இது அவரது கருத்து என்ற வகையில் அல்லாமல், வன்மம் தெறிக்கும் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தார். நானும் என்னைப்போல மற்றவர்களும் அவரை கேள்வி கேட்டோம். சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து அதன் படியே இட ஒதுக்கீடு அமையவேண்டும் என்று நான் அவரிடம் விவாதம் செய்தேன். விவாதம் என்னவோ ஆரோக்கியமான வகையில் தான் சென்றது. ஆனால் ஒரு பிரபலம் / செலப்ரட்டி என்பதற்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லாமல் தன்னுடைய கருத்தை எதிர்த்து கருத்து சொன்னவர்களை எல்லாம் க்ளிக் / ப்ளாக் (தடை செய்வது) செய்தார். ஒரு கட்டத்தில் தமிழில் பதில் சொன்னவர்களை எல்லாம் தடை செய்தார். குறைந்தபட்சம் 100 பேரையாவது தடை செய்திருப்பார் என்பது என் கணிப்பு. பள்ளிக்கூட பிள்ளைகள் டூ விடுவது போல மிகையான இம்மெச்சூரிட்டியோடு நடந்துகொண்டார்...</i><br />
<br />
இது தான் ஆரம்பம்.<br />
<br />
இதன் பிறகு ராஜன் என்ன சொன்னாலும் அது தன்னை நோக்கித்தான் சொல்கிறார் என்ற வகையில் நடந்துகொண்டார். அதற்கு தூபம் போடுவது போல அவருடைய பாலோவர் ஆக இருக்கும் சில தோழர்கள் / தோழிகள் அவருக்கு தவறான வழிகாட்டியாக இருந்து "ஏய் அவன் உன்னைத்தான் சொல்கிறான்" என்பது போல அந்த ட்வீட்டுகளை எல்லாம் படம் எடுத்து பாடகி சின்மயிக்கு தொடந்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்...<br />
<br />
ஒரு படத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முயலும் வைகை புயல் வடிவேலு, புரோக்கராக செயல்பட்ட சிங்க முத்துவுக்கு கமிஷன் தொகையினை தர மறுக்க, சொம்பு கேட்கிறான், தங்க சொம்பு கேட்கிறான் என்று சொல்லியும், அதிலும், வடிவேலு காலை தூக்கி கொசு அடிக்க, "அங்க பாரு சொம்புக்காக ஒத்தை காலில் நிற்கிறான்" என்று ஒரே போடாக போட்டு தரும அடி வாங்க வைத்து கல்யாணத்தையே நிறுத்துவார்...<br />
<br />
இறுதியில் அந்த நிலையானதுங்க இந்த பிரச்சனை...<br />
<br />
ராஜனை பொறுத்த வரை இது தான் நேர்ந்தது. ஆனால் ராஜனுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு சில அல்லக்கைகள் ஓவராக நடந்துகொண்டார்கள், (அதிலும் குறிப்பிட்ட ஒருவர் படு ஆபாசமாக பேசியிருக்கிறார் )..அவர்களை கண்டறிந்து (அதற்கான ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் பாடகி சின்மயி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்) தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அதன் மூலம் தமிழ் இணையத்தில் பெண்கள் மேலும் சுகந்திரமாக இயங்கும் நிலை ஏற்படவேண்டும் என்பது சரியானதே...<br />
<br />
இதை பற்றி மேலும் பார்த்தோமானால், பொதுவாகவே தமிழ் இணையத்தில் பெண்கள் சுகந்திரமாக இயங்க இயலாத சூழ்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே ஏற்பட்டது. பெண்கள் தொட்டா சிணுங்கிகளாக இருக்கிறார்கள் என்பதை விட, அடிப்படை மனித பண்புகள், தனிமனித ஒழுக்கம் இல்லாத வீணாப்போனதுகளும் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பங்கேற்க தொடங்கியதும் ஒரு காரணம். இதற்கு காரணம், நமது கல்வி முறை. ஒழுக்கத்தை கட்டுப்பாடாக கற்பிக்கிறோமே தவிர, அதனை ஒரு வாழ்வியல் முறையாக கற்பிப்பது இல்லை. இதற்கு காரணம் மெக்காலே. ஆங்கிலேய ஆட்சி. இப்படி காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இவை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மாறப்போவதில்லை. பெண்கள் தான் மாற வேண்டும். you have to be more stronger in the social networks. நெல்லில் அடித்தால் கல்லில் அடியுங்கள். இது தான் தேவை. இதன் மூலம் தான், படிப்பினை தந்து மாற்றத்தை கொண்டுவர முடியும். கொஞ்சம் off topic ஆக போகிறேன் என்று நினைக்கிறேன்...!!<br />
<br />
நான் சொல்ல நினைத்ததை கன்வே செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...!!<br />
<br />
மேலும் ராஜனோ அல்லது அவரது டிசைப்பிள்ஸோ வேறு என்ன வகையில் பாடகி சின்மயிக்கு மன உளைச்சல் தந்தார்கள் என்பது பற்றி வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாத நிலையில், எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டேன்.<br />
<br />
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ராஜன் உட்பட இந்த பிரச்சனையில் இருக்கும் யாரையும் நான் சந்தித்ததே இல்லை. ராஜனிடம் மட்டும் சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்...வேறு ஒரு பிரச்சனையில், மனித தன்மை இல்லாமல் நடந்துகொண்ட ராஜன் உட்பட அனைவரையும் ப்ளாக் செய்துவிட்டேன்..இதனால் இவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் எழுதுவதும் இவர்களுக்கு போகாது :)))<br />
<br />
எல்லோரும் வாழ்க வளமுடன்...<br />
<br />
பி.கு: சில மாதம் முன் சென்னை சென்றிருந்தபோது, பாடகி சின்மயியை சந்தித்து இது குறித்து விளக்கம் தர முயன்றபோது, அவர் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவில்லை...<br />
<br />
(பதிவில் உள்ள படம் உதவி : விக்கிபீடியா)</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-28771623.post-22901734789683125732012-10-18T02:12:00.002-07:002012-10-18T02:12:21.211-07:00மாவீரர் மாதமும் தமிழ் அடிப்படைவாதிகளும் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Ni32cOhRt-sGxJaWseGxlmxlTOWuBiMlauw88sq6JY2PVI1blgz7Y3kSNazkYGwozKKmmBNwu6ND0yyvO6O4IzNxyGPi7avPvFHAV0JEGsT-AouJPzJKnvxW13kWXkhuyZaQ/s1600/RAJA6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="393" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Ni32cOhRt-sGxJaWseGxlmxlTOWuBiMlauw88sq6JY2PVI1blgz7Y3kSNazkYGwozKKmmBNwu6ND0yyvO6O4IzNxyGPi7avPvFHAV0JEGsT-AouJPzJKnvxW13kWXkhuyZaQ/s640/RAJA6.jpg" width="640" /></a></div>
<br />
<br />
இளையராஜா நவம்பர் மாதம் கனடாவில் (நவம்பர் 3) - ரோஜர்ஸ் செண்டரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்...இது கனடாவில் அல்லது முழு நார்த் அமெரிக்காவில் அவரது முதல் இசை கச்சேரி என்று சொல்கிறார்கள்..<br />
<br />
அடியேன் இளைய ராஜாவை விட ஏ.ஆர்.ரகுமானை அதிகம் ரசிப்பவன். நான் இசையை ரசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் இறுதியில் இளையராஜாவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்து, ரகுமான் கோலோச்சிக்கொண்டிருந்தார்...<br />
<br />
இளையராஜாவின் பல பாடல்கள் விருப்பம் என்றாலும் (மூனாவது படிக்கும்போது ஏனென்று தெரியாமல் விரும்பிய ஏதோ..மோஹம்...ஏதோ தாகம் பாடலாகட்டும்...பத்தாவது படிக்கும்போது பக்காவாக மனதில் இறங்கிய பனிவிழும் மலர்வனமாகட்டும்) அவரே பாடும் பாடல்கள் கொஞ்சம் கொலைவெறியை தூண்டுவது என்னவோ உண்மைதான்..முரளி படத்தில் எம்பாட்டு எம்பாட்டு என்று அவர் பாடியபோது வெறுப்பாகி திரையரங்கில் பக்கத்தில் இருந்த ஆளை கடித்து வைத்து அவர் மருத்துவமனை போனதெல்லாம் வேறு கதை)..<br />
<br />
ஏ.ஆர்.ரகுமானைப்போல பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தாமல் ஏசுதாஸ், சித்ரா, எஸ்பிபி, அவுங்க யாரும் ப்ரீயா இல்லைன்னாலோ இல்லை எஸ்.பி.பிக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் தானே பாடுவது என்றதொரு குண்டு சட்டியை வைத்து டிங்கிரி டம்பா ஆடிக்கொண்டிருந்ததும் என் விருப்பமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்...<br />
<br />
பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது அவரது தொழில் சம்பந்தமானது என்று எப்படி புறக்கணித்தோமோ அதே போல லண்டனோ பாரீஸோ கனடாவோ அவுஸ்திரேலியாவோ, எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாட்டு கட்டட்டும், டிங்கிரி டம்பா பாடட்டும். குத்தாட்டம் போடட்டும்..யார் வேண்டாம்ங்கறா ?<br />
<br />
இது தான் நமது நிலை...(நமதுன்னா, அட அது நான் தாங்க)..<br />
<br />
ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் புலம் பெயர் தேசங்களில் இயங்கிவரும் ஏஜெண்டுகள், இது மாவீரர் மாதம், இந்த மாதத்தில் இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், களியாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துவதும், அதை கச்சிதமாக கவ்விக்கொண்ட தமிழக ஏஜெண்டுகள், போலி தமிழ் தேசிய வாதிகள், திடீர் குபீர் புரட்சியாளர்கள், பேசுபுக், ட்விட்டர் போராளிகள், புலம்பெயர் தேசங்களில் இருந்து ஏற்கனவே வாங்கிய காசுக்கும், இனி வரப்போகும் டாலர் பவுண்டுகளுக்கும் கூவுபவர்களும், திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் எதிர்த்து அரசியல் நடத்தும் போராளிகள், நாங்க தான் தமிழர், மீதி பேரெல்லாம் தெலுங்கர், மே 17, 18, 19, 20 என்று எல்லாம் பேன்ஸி நேமில் புரட்சி கட்சி நடத்தும் அமைப்பினர், வலியுறுத்துகிறார்கள்...<br />
<br />
உண்மை ஒன்று தான். இதன் பின் புலம் இது தான்.<br />
<br />
தாயகத்தில் / ஈழத்தில் இப்போது போர் இல்லை. என்ன சொல்லி பணம் வசூலிப்பது ? இப்படியே விட்டால் நாம் பார்ம் அவுட் ஆகிவிடுவோம் என்று பயந்து தான், ஈழக்கனவு, அகண்ட தமிழகம், லெமூரியா கண்டம் என்று அவ்வப்போது அடித்துவிட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இடைத்தரகர் கும்பல் இது போன்ற மொக்கையான புரட்சியை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்...<br />
<br />
ஈழப்போர் நடந்தபோது ஒபசிட்டியில் இருக்கும் பிள்ளைகளை உடற்பயிற்சி கூடத்துக்கு அனுப்பிவிட்டு இணையத்தில் எதாவது போட்டோஷாப் செய்து கம்பேனி நடத்திய இந்த கும்பல், புலம்பெயர் தேசங்களில் வகை வகையான வாகனங்களில் வலம் வரும் இந்த கும்பல், தங்கள் இடைத்தரகர் ஜாப்பை காத்துக்கொள்ள, பொதுமக்களிடம் இருந்தும், வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் பணத்தை அறவிட இது போன்ற உண்ர்வை தூண்டும் வகையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்.<br />
<br />
இனி பணம் / நிதி கேட்டால் இது வரை கொடுத்த நிதிக்கு கணக்கு கேளுங்கள். துடைப்பகட்டையாலோ முறத்தாலோ அடித்து விரட்டுங்கள். இது போன்ற அடிப்படைவாதிகளை மாவீரர் மாதம் முழுவதும் பட்டினி கிடக்க சொல்லுங்கள், பட்டானாக பறந்துவிடுவார்கள்...மிரட்டல் விடுத்தால் அந்த அந்த நாடுகளில் உள்ள காவல் துறையில் சொல்லி நடவடிக்கை எடுங்கள்...<br />
<br />
இளையராஜா அல்ல, எந்த ராஜாவும் எந்த ஊரிலும் தொழில் செய்ய - அது மே மாதமாக இருந்தாலும் சரி, ஜூன் மாதமாக இருந்தாலும் சரி, நவம்பர் மாதமாக இருந்தாலும் சரி, உரிமை உண்டு.<br />
<br />
<i><b>டிஸ்கி : நான் மாவீரகளையும் அவர்களின் அளப்பரிய தியாகங்களையும் மதிப்பவன், இடைத்தரகர்களையும், புலிகள் பெயரால் பணம் வசூலித்து சுகமாக வாழுபவர்களையும் வெறுப்பவன்...!!!</b></i></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28771623.post-77930675787498887552012-10-16T05:22:00.001-07:002012-10-16T05:22:35.314-07:00ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...!!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...!!!!!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">==========================</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">====</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/293006_369498696451561_1553194391_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/293006_369498696451561_1553194391_n.jpg" width="320" /></a></div>
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.</span><br />
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88<br />
<br />
2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்<br />
<br />
3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794<br />
<br />
4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700<br />
<br />
5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்<br />
<br />
6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107<br />
<br />
7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி<br />
<br />
எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி<br />
<br />
9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034<br />
<br />
10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)<br />
<br />
11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317<br />
<br />
12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282<br />
<br />
13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்ப் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950<br />
<br />
14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்<br />
<br />
15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540<br />
<br />
16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098<br />
<br />
17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு<br />
<br />
18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018<br />
<br />
19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722<br />
<br />
20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059<br />
<br />
21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522<br />
<br />
22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598<br />
<br />
23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119<br />
<br />
24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380<br />
<br />
25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195<br />
<br />
26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012<br />
<br />
27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை<br />
<br />
28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820<br />
<br />
29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107<br />
<br />
30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243<br />
<br />
31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105<br />
<br />
32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921<br />
<br />
33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105<br />
<br />
34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்<br />
<br />
35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202<br />
<br />
36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111<br />
<br />
37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275<br />
<br />
38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்<br />
<br />
39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246<br />
<br />
40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை<br />
<br />
41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596<br />
<br />
42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்<br />
<br />
43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203<br />
<br />
44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411<br />
<br />
44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்<br />
<br />
45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்<br />
<br />
46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்<br />
<br />
47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் குளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்<br />
<br />
48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095<br />
<br />
49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்<br />
<br />
50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767<br />
<br />
51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007<br />
<br />
52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்<br />
<br />
53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,<br />
<br />
54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825<br />
<br />
55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்<br />
<br />
56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை<br />
<br />
57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்<br />
<br />
58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்<br />
<br />
59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642<br />
<br />
60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்<br />
<br />
61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1<br />
<br />
62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001<br />
<br />
63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்<br />
<br />
64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375<br />
<br />
65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்<br />
<br />
66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு.<br />
<br />
<br />
நன்றி: ஜீரோ பட்ஜெட் இணைய தளம் / பேஸ்புக்</div>
<br />
<span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;">தகவல் : </span></span></div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-28771623.post-29255400562750640472012-10-13T20:58:00.002-07:002012-10-13T20:58:46.945-07:00மாற்றான் - விமர்சனம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.musicperk.com/wp-content/uploads/2012/08/Maatran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://www.musicperk.com/wp-content/uploads/2012/08/Maatran.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
கூட்டிக்கிட்டு போறதெல்லாம் ஆங்கிலம், ஹிந்தி. கல்லூரி காலத்தில் தமிழ் படத்தை த்யேட்டரில் பார்த்ததோடு சரி என்று தங்கமணி ஒரு பாட்டம் புலம்பி வைக்க...(ஏற்கனவே இந்த விஜய் ரசிகை துப்பாக்கிக்கு டிட்டெக் புக் செய்துவிடுவார் என்ற சந்தேகங்கள் இருந்தாலும்), சரி டிக்கெட்ட போடு என்றேன்...</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
பி.வி.ஆர், கடைசி இருக்கைகள் மூன்று (இப்போதெல்லாம் மகளுக்கும் சேர்த்து - 4 வயது ஆகப்போகிறது, மடியில் உட்காருவதில்லை) புக் செய்தாயிற்று.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
படத்துக்கு கிளம்பும் முன் கேபிள் சங்கர் மாற்றான் விமர்சனம் என்று கூகிளில் தேடினேன். விமர்சனம் எழுதியிருந்தார். வழக்கம்போல அவரது அரசியலை அதில் புகுத்தியிருந்தாலும் படத்தில் லாஜிக் ஓட்டை அது இது என்று மரண மொக்கை என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். ஏற்கனவே கேபிள் சங்கர் மொக்கை என்று சொல்லிய படங்கள் சூப்பராகவும், அவர் சூப்பர் என்று சொல்லிய படங்கள் த்ராபையாகவும் இருந்து - அனுபவப்பட்டவன் என்ற முறையில் படத்தை சந்தோஷமாகவே எதிர்கொள்ள தயாராக இருந்தேன்...</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://wallpaperpassion.com/upload/2457/kajal-agarwal-wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://wallpaperpassion.com/upload/2457/kajal-agarwal-wallpaper.jpg" width="212" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நாலு நாற்பது படத்துக்கு 4 மணிக்கு காரை எடுத்தால் வழியில் கடும் ட்ராபிக். 5:10 க்கு தான் படத்துக்குள் நுழைய முடிந்தது. தமிழ் படத்தை பொறுத்தவரை க்ளைமாக்ஸில் உட்கார்ந்தாலும் கதை புரியும் என்ற நியதிப்படி, மூன்றாவது பாப்கார்னை கொறிக்கும்போது கதை புரிய ஆரம்பித்தது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
என்னை பொறுத்தவரை படத்தின் ப்ளஸ்கள்..</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இரண்டு சூர்யாக்கள் - அவர்களை திரையில் கொண்டுவர அவரது கடுமையான உழைப்பு.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
காஜல் அகர்வால் - அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். சப்பி சீக்ஸ், ரோஸீ லிப்ஸ் என்று ரைம்ஸ் பாடலாம் போலிருக்கிறது..</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.thamizhthirai.com/wp-content/uploads/2012/10/harris-jayaraj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="232" src="http://www.thamizhthirai.com/wp-content/uploads/2012/10/harris-jayaraj.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இசை - ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு. அந்த பாடல்களை உயிர்ப்போடு கொடுக்க சூர்யா(க்கள்), காஜல் அகர்வால், இயக்குனர், உதவி இயக்குனர்கள், பாரின் லொக்கேஷன்கள்..பிண்ணனி இசையும் பரவாயில்லை. (இது என்ன கொரியன் மூவியா பிண்ணனி இசையிலேயே வாழுறதுக்கு ? எல்லாம் இதுக்கு இது போதும் போங்கயா)..</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.southdreamz.com/wp-content/uploads/2012/03/subha-586x389.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="http://www.southdreamz.com/wp-content/uploads/2012/03/subha-586x389.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
வசனம் : பல இடங்களில் அட போடவைக்கும் வசனம். சுபா நன்றாக எழுதியிருக்கிறார்... (க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரையும் கூட்டிவாங்கப்பா)</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.thehindu.com/multimedia/dynamic/00636/KV_ANAND_camera_jpg_636599f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://www.thehindu.com/multimedia/dynamic/00636/KV_ANAND_camera_jpg_636599f.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
திரைக்கதை, இயக்கம் : பொதுவாக வேகமான திரைக்கதையை தர முயற்சி பண்ணியிருக்கிறார் கேவி ஆனந்த். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
குறை : படத்தில் சந்தானம் / வடிவேலு / விவேக் - அட குறைந்த பட்சம் ஒரு சிவ கார்த்திகேயனையாவது போட்டிருக்கலாம். ஆனாலும் அது பெரிய குறையாக தெரியாமல் படம் மின்னல் வேகத்தில் போகிறது. சில இடங்களில் சூர்யாவின் வசனமே காமெடியில் ஸ்கோர் செய்கிறது. (த்யேட்டர் ரெஸ்பான்ஸ்)..</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
மொத்தத்தில் படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஏதுவானது. (எந்த இடத்திலும் ஆபாச காட்சிகளோ, முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளோ, அருவருப்பான விஷயங்களோ இல்லை. அறுவை சிகிச்சை நடைபெறுவதை அப்படியே காட்டும்போது சில பேர் விரும்பாமல் போகலாம்..). என்னுடைய மார்க் - நூத்துக்கு 80.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
டிஸ்கிகள் : சூர்யாவோ, கேவி ஆனந்தோ, காஜல் அகர்வாலோ, அல்லது படத்தை வினியோகிக்கும் தோழர்களோ எனக்கு மாமன் மச்சான் மச்சினி உறவு இல்லை. இந்த விமர்சனத்தின் பின்னால் எந்த அரசியலும் இல்லை. படத்தை காசு கொடுத்து திரை அரங்கில் பார்த்த வெறும் பார்வையாளனாக என்னுடைய சொந்த கருத்தை பதிவு செய்கிறேன்... ஏதோ ஒரு ஆங்கில படம் பார்த்து இயக்குனர் காப்பி அடித்தார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்...வலைப்பதிவுகளில் வரும் விமர்சனங்கள் அந்த வலைப்பதிவர்களின் சொந்த கருத்துக்கள். அதனால் நீங்கள் படத்தை பார்த்து முடிவு செய்யுங்கள். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28771623.post-37660331886486020812012-10-11T08:51:00.001-07:002012-10-11T08:51:33.644-07:00நித்யானந்தா Vs ஆர்த்தி ராவ் -> நீதிபதி கே சந்துரு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.newsreporter.in/wp-content/uploads/2011/07/Nithyananda-complaints-SUNTV.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.newsreporter.in/wp-content/uploads/2011/07/Nithyananda-complaints-SUNTV.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">Vs</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://bharatabharati.files.wordpress.com/2012/09/aarthi-rao.jpg?w=455&h=345" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="http://bharatabharati.files.wordpress.com/2012/09/aarthi-rao.jpg?w=455&h=345" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு எழுதவேண்டிய தேவை இருக்கிறது. என்னுடைய வாசகர்கள் (அப்படி யாராவது இருந்தா) மன்னிக்க. இந்த பதிவு பரபரப்புக்காகவோ / சூடான இடுகையில் வரவேண்டுமென்றோ எழுதப்படுவதல்ல...<br />
<br />
இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் செய்தி. நித்யானந்தா நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஆர்த்தி ராவ் மற்றும் லெனின் கருப்பன் ஆகியோர் செய்தி / காட்சி ஊடகங்களுக்கு தன்னைப்பற்றி பேட்டிகள் வழங்கக்கூடாது என்பது அவரது மனுவின் சாராம்சம்.<br />
<br />
இதனை விசாரித்த நீதியரசர் சந்துரு (நீதிபதி என்று சொன்னால் போதும் என்று சொல்கிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை. நீதியரசர் என்பது தனிமனித துதி என்கிறார். அப்ப சினிமாவில் காண்பிப்பதுபோல இப்பல்லாம் மை லார்ட் - யுவர் ஹானர் சொல்வதில்லையா ? ) - மறுபதி விஷயத்துக்கு வருகிறேன். நீதிபதி சந்துரு, இந்த மனுவை நிராகரித்திருக்கிறார்.<br />
<br />
நீதிமன்றத்தை அணுகுபவர்கள் சுத்தமான கையோடு இருக்கவேண்டும் (Clean Hands) என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார்.<br />
<br />
நித்யானந்தா பற்றிய வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இருக்கிறது, இன்னும் தீர்ப்பு வரவில்லை. அப்படி இருக்கையில் நித்யானந்தா Clean Hands இல்லாதவர் என்ற முன் முடிவோடு நித்யானந்தாவின் மனுவை நீதிபதி நிராகரித்திருக்கிறார். இது முறையா ? இதன் மூலம் செய்தி / காட்சி ஊடகங்களில் (அவை அவதூறா அல்லது உண்மையா என்பது வேறு வழக்கு) வந்த செய்திகளால் நீதிபதி இன்ப்ளூயன்ஸ் செய்யப்பட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுகிறது என்று ட்விட்டர் குறுந்தகவல் தளத்தில் பதிவிட்டேன்.<br />
<br />
நீதிபதி கே சந்துரு அவர்கள் ஒரு வழக்கில் போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை (அவர்களது வழக்கு மேல் முறையீட்டில் தள்ளுபடி செய்யப்பட்டபிறகும் திருப்பி தர உத்தரவிடவில்லை - டெக்னிக்கலாக மறுத்துவிட்டார் (அப்பவே ஏன் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு போடவில்லை என்று சொல்லி)) என்று என் தந்தையார் ஆறு மாதம் முன்பு சொன்னது நியாபகம் வருகிறது...அதுவும் அந்த குறுந்தகவலுக்கு காரணம்..<br />
<br />
வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எனக்கு பதிலாக கொடுத்த விடயங்களை, திரு ரெக்ஸ் அருள் மறுத்திருக்கிறார்...<br />
<br />
வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் பதில்கள்..<br />
<br />
Prabhu Rajadurai :@prabhuadv<br />
<div>
<br /></div>
clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition<br />
<br />
However the clean hands principle won't apply here Judges sometimes stretch it too far, even to personal character & repute<br />
<br />
<br />
செந்தழல்_ரவி @senthazalravi<br />
@prabhuadv அதை தான் சார் நான் சொல்கிறேன். நீதியரசர் அதிகப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார் என்று.<br />
<br />
<br />
செந்தழல்_ரவி @senthazalravi<br />
@prabhuadv இது போல சிரி சிரி ரவிஷங்கர் மீது அவதூறு செய்பவர்கள் பற்றிய வழக்கு வந்தால் ( அவர் மீது இப்போது எந்த குற்றச்சாட்டும் இல்லை)<br />
<br />
<br />
Rex Arul @rexarul\<br />
<br />
@prabhuadv /:clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition:/ @senthazalravi<br />
<br />
@prabhuadv Prabhu, you are DEAD wrong on this fallacious claim. You're entitled to your opinion, which can be wrong or right<br />
<br />
@prabhuadv But, here you are wrong. Supreme Court of India has repeatedly clarified the "clean hands" doctrine. @senthazalravi 3/<br />
<br />
@prabhuadv It never said that "clean-hands" doctrine applies only to WRIT & not ORIGINAL or APPELLATE side. That's ur view<br />
<br />
@prabhuadv Supreme Court of India has repeatedly clarified that any litigant-writ or otherwise-approaching w/ vexatious @senthazalravi 5/<br />
<br />
@prabhuadv claims & unclean hands to mislead by prevarications & outright lies comes under "fraud vitiates all" doctrine @senthazalravi<br />
<br />
@prabhuadv Right from "State of Haryana Vs. Karnal Distillery Co Ltd" to "G Jayshree & ors Vs. Bhagwandas S Patel & ors"<br />
<br />
@prabhuadv it's simple & clear: do NOT lie to the court. Get that Prabhu? Do NOT lie to the courts. That's heart of it @senthazalravi 8/<br />
<br />
@prabhuadv "It is settled law that a person who approaches the Court for grant of relief, equitable or otherwise " @senthazalravi 9/<br />
<br />
@prabhuadv " is under a solemn obligation to candidly disclose all the material/important facts " @senthazalravi 10/<br />
<br />
@prabhuadv "which have bearing on the adjudication of the issues raised in the case. In other words, " @senthazalravi 11/<br />
<br />
@prabhuadv "he owes a duty to the court to bring out all the facts and refrain from concealing/suppressing" @senthazalravi 12/<br />
<br />
@prabhuadv "any material fact within his knowledge or which he could have known by exercising diligence expected " @senthazalravi<br />
<br />
@prabhuadv "of a person of ordinary prudence.If he is found guilty of concealment of material facts or making an attempt "@senthazalravi<br />
<br />
@prabhuadv "to pollute the pure stream of justice, the court not only has the right but a duty to deny relief to such person" @senthazalravi<br />
<br />
@prabhuadv Those were Supreme Court of India's words on "unclean hands" doctrine & "fraud vitiates all". @senthazalravi 15/<br />
<br />
@prabhuadv You may have your own compulsions to attack "clean hands" doctrine as I can understand.But,pls don't mislead<br />
<br />
@prabhuadv What you tweeted is your misunderstanding of law. Jurisprudence & settled-law is different than ur opinion<br />
<br />
@prabhuadv To even remotely impute "unclean hands" not applicable 2 other branches of law except Writ as u say is travesty.<br />
<br />
@senthazalravi நான் இந்திய உச்ச நீதிமன்ற மேற்கோள்களை காட்டினேன். அமெரிக்காவில் perjury என்னும் கோட்பாட்டுக்கு அருகில் வரும் @prabhuadv<br />
<br />
@senthazalravi ஒரு case law evolution தான் இந்திய நீதிமன்றங்களின் "unclean hands" concept. இதன் அடுத்த பரிணாமம் perjuryஐ @prabhuadv<br />
<br />
@senthazalravi வேரோடு அறுப்பது தான். இந்திய உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு இது குறித்து வேறு ஒரு landmark தீர்ப்பு வழங்கியது @prabhuadv<br />
<br />
திரு ரெக்ஸ் அருள் தான் ஒரு வழக்கறிஞர் அல்ல என்றும், தான் ஒரு பொறியாளர் என்றும் தெரிவித்திருக்கிறார்..சட்ட புத்தகங்களில் இருந்தெல்லாம் உதாரணம் தருகிறார்...கலக்குறீங்க...இது பற்றி உங்கள் இருவரின் முழுமையான கருத்தை ட்விட்டர் குறுந்தளத்தில் (இவர்கள் இருவருக்கும் நேரம் இருக்கும்போது எழுதினார்கள் என்றால் படிக்க அருமையாக இருக்கும்)...<br />
<br />
பதிவில் இருக்கும் படங்களை கூகிள் இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் (நித்யானந்தா அவர்கள் அல்லது ஆர்த்தி ராவ் அவர்கள் கேட்டுக்கொண்டால் நீக்கிவிட தயாராக இருக்கிறேன்..ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ரொம்ப சட்ட சிக்கல் பாக்கவேண்டியிருக்கு இப்பல்லாம்..)<br />
<br />
<span style="color: red;">கொஞ்சம் சம்பந்தம் இல்லாத அப்டேட்: கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான கேள்விகளுடன் உச்சநீதிமன்றத்தை அணுகி அதில் மத்திய அரசு / அணுசக்தி கழகம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள் பூவுலகின் நன்பர்கள் (வலைப்பதிவர்கள் அனைவரும் அறிந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன்). வாழ்த்துக்கள் !!!! மிக்க மகிழ்ச்சி...</span><br />
<br />
<br />
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-28771623.post-91934380134131868752012-09-26T01:42:00.001-07:002012-09-26T01:42:37.335-07:00சோதனை பதிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<br />
<br />
இதையும் கடைசி வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணி பாக்குறீயே தோழா/தோழி நீ அவ்ளோ வெட்டியாவா இருக்க ? </div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-28771623.post-61320369957139564442011-04-06T04:49:00.000-07:002011-04-06T04:49:04.314-07:00All about Dynamic Views for Readers - Blogger Helpகூகிள் வழங்கும் டைனமிக் வியூஸ். நமது தளத்தினை பல வடிவங்களில் காட்டலாம்...ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28771623.post-70970679804989846242011-03-23T01:38:00.000-07:002011-03-23T01:38:42.214-07:00பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் ரசிகர் மன்றம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">எங்களது முந்தைய தானை தலைவரான ஜே.கே ரித்திஷ் (மத்திய பாராளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகம்) இப்போது எல்லாம் நடிப்பதில் அவ்வளவு அக்கறை காட்டாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் படம் வரும் நாள் பிளாட்டினம் நாள் என்று நாங்கள் காத்திருந்தபோது, எங்கள் தாகத்தை கொஞ்சமாவது தணிக்கும் முயற்சியாக, பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் சில பல படங்களை கொடுக்கவிருக்கிறார்.<br />
<br />
ஏற்கனவே வெளிவந்த லத்திகா என்ற காவியம், கலைஞரின் இளைஞனை விட வேகமாக ஓடுகிறது என்று தகவல்கள் வரும் வேளையில், ஆஹா. வந்தானே எமது பவர் ஸ்டார், வருகிறதே அடுத்தடுத்து படங்கள் என்று நாங்கள் இறுமாந்து, இறும்பூது எய்யும்போது, ஒருவர் யார் இந்த டாக்டர் சீனிவாசன் என்று ஒரு கேள்வியை போகிறபோக்கில் வீசிச்சென்றுவிட்டார். நெஞ்சு கொதிக்கிறது. கொஞ்சம் படங்களை போட்டு அவரை அறிமுகம் செய்யும்வாக்கில் இந்த இடுகை.<br />
<br />
இந்த இடுகை, பவர் ஸ்டாருக்கு பவர் கொடுக்க அல்ல. அவர் பவரை உங்களுக்கு காட்ட. இந்த இடுகையில் அவர் புகழ் பாடும் நடவடிக்கைக்கு பதில், வந்துள்ள, வரப்போகும் வெள்ளிவிழா படங்களில் இருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiENsf4nKj1HZb9fNi7MII8fXjlN-O-8LQXrlmV1ql1yLnozUiLlF4rGfwvgmpvMPsJfAnxDJHhk_iApU4QISywd5OoQTvrfBQNkUVCQTE2BXhWrKhltmU3btHFm_xWUjEPoHoy/s1600/ananda-thollai-02.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiENsf4nKj1HZb9fNi7MII8fXjlN-O-8LQXrlmV1ql1yLnozUiLlF4rGfwvgmpvMPsJfAnxDJHhk_iApU4QISywd5OoQTvrfBQNkUVCQTE2BXhWrKhltmU3btHFm_xWUjEPoHoy/s320/ananda-thollai-02.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWal6ZAJysvu3tXj72yB1zyCWVEyuSX3PdKSfVcy7rU2nRdYjri-FDJER06ntBJ9ik4gYKK3OTWiZkri6_3D2R-aaq5ouiDbNuWkndl6yBC55x2-gVsfcaDQ5GIuKmo_HPCPzc/s1600/lathika_012.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="213" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWal6ZAJysvu3tXj72yB1zyCWVEyuSX3PdKSfVcy7rU2nRdYjri-FDJER06ntBJ9ik4gYKK3OTWiZkri6_3D2R-aaq5ouiDbNuWkndl6yBC55x2-gVsfcaDQ5GIuKmo_HPCPzc/s320/lathika_012.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkqU1eRvFXcUicuCYpP2n04WMtoLjlh2YX_15XTbdj44tCB0yn_5hziXNaRdCdmd-R9zxxJb4ynjwFlvVJ8eCbKl-t3gbccWz-h27rMP6XLo-qHKeaNNT06i_q61AaELXFzBxy/s1600/lathika_movie_hot_stills_gallery_01.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkqU1eRvFXcUicuCYpP2n04WMtoLjlh2YX_15XTbdj44tCB0yn_5hziXNaRdCdmd-R9zxxJb4ynjwFlvVJ8eCbKl-t3gbccWz-h27rMP6XLo-qHKeaNNT06i_q61AaELXFzBxy/s320/lathika_movie_hot_stills_gallery_01.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW6gy6X7H4OK-bODEp9C0-1iNB_ozoH3ORh1lx18Hz4Uh0jvT8RKa4noLGDaPcBTl-8yCHn2N_aHgw5emt1XGNyyBx2JEaD2RYjWxrjK7rfey0iRElaofYUqJ9NH5fWJI8PF_U/s1600/lathika_movie_hot_stills_pics_photos_0.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="213" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW6gy6X7H4OK-bODEp9C0-1iNB_ozoH3ORh1lx18Hz4Uh0jvT8RKa4noLGDaPcBTl-8yCHn2N_aHgw5emt1XGNyyBx2JEaD2RYjWxrjK7rfey0iRElaofYUqJ9NH5fWJI8PF_U/s320/lathika_movie_hot_stills_pics_photos_0.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoLohIcO-lVX_HlxPjibDyXgggPdpBtkqW8G2VwIfLBdZg0d61dphGB37mT5nGjXaSLtAqpi5Y-TQwF1KsqZkvg1bb9SSNm6zYW_DurTBHZl5NlgTnlmI4IeFnQ0xGnZR01CeQ/s1600/lathika-dr-srimivasan-meenakshikailash-movie-gallery-09.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoLohIcO-lVX_HlxPjibDyXgggPdpBtkqW8G2VwIfLBdZg0d61dphGB37mT5nGjXaSLtAqpi5Y-TQwF1KsqZkvg1bb9SSNm6zYW_DurTBHZl5NlgTnlmI4IeFnQ0xGnZR01CeQ/s320/lathika-dr-srimivasan-meenakshikailash-movie-gallery-09.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxXQ4QcuSv8iqap4urwGOQFwlimROAl0Yj8yM9SLzY4p76r_2el9baJZM50X79Z88PEwjmllUvOhi_0cValU55FqBvu6x-4vGIdXk6cCqYhhOrf8OJDvwtw08god-j621HsMsk/s1600/lathika-srinivasan-meenachi-kailash-stills-gallery-14_720_southdreamz.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="213" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxXQ4QcuSv8iqap4urwGOQFwlimROAl0Yj8yM9SLzY4p76r_2el9baJZM50X79Z88PEwjmllUvOhi_0cValU55FqBvu6x-4vGIdXk6cCqYhhOrf8OJDvwtw08god-j621HsMsk/s320/lathika-srinivasan-meenachi-kailash-stills-gallery-14_720_southdreamz.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCRMNpDBxBA06hOPZV0ptOMTe5zr9AOQC0IcvsZ2mSwJQd-C5AsAYa-ai4XlU-Ll7Jxp-QKLrvqr8yrLVd-WHX2KCHlaNpvnNmbm8S1lsdtRVQdHf1TTQSt0mJpFbwt-61YFT0/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCRMNpDBxBA06hOPZV0ptOMTe5zr9AOQC0IcvsZ2mSwJQd-C5AsAYa-ai4XlU-Ll7Jxp-QKLrvqr8yrLVd-WHX2KCHlaNpvnNmbm8S1lsdtRVQdHf1TTQSt0mJpFbwt-61YFT0/s320/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg" /></a></div><br />
வாழ்க பவர் ஸ்டார். வீழ்க அவர் புகழை குலைக்க நினைக்கும் திம்மிகள்.<br />
<br />
</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-28771623.post-79478845515884203392010-12-27T15:13:00.000-08:002010-12-27T22:16:07.942-08:00அண்ணன் உண்மை(த்)தமிழனுக்கு கடிதம்..அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு..<br />
<br />
நான் தங்களின் <a href="http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html">'மீண்டும் போலிப்பிரச்சனை ! தாங்கலைடா சாமி. முருகா. ஏன் இந்த சோதனை'</a> என்ற புலம்பல் பதிவு பார்த்தேன். அண்ணே இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ? தாங்கள் குறிப்பிட்ட <a href="http://ujiladevi.blogspot.com/">உஜிலாதேவி</a> என்ற தளத்தில் எந்தவிதமான ஆபாச மேட்டர்களோ, அட்லீஸ்ட் அனுஷ்கா படங்களோ கூட இல்லாமல் வெறும் வெத்துவேட்டாக உள்ளதே ? இதை போய் எப்படி நீங்கள் போலிப்பதிவு என்று சொல்லலாம் ? அல்லது நார்த் இண்டியன் வாசனை வீசும் இந்த பெயரிலேயே அனைவரும் கிக் ஆகிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? தமிழன் அவ்வளவு காய்ந்து போயா கிடக்கிறான் ?<br />
<br />
மேலும் உண்மைத்தமிழன் என்ற பெயரை நீங்கள் பேடட்ண்ட் / இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி போல கருதுவது எந்த விதத்தில் நியாயம் ? அல்லது தாங்கள் மட்டும் தான் உண்மைத்தமிழன் மற்ற தமிழன் எல்லாம் பொய்த்தமிழன் என்பது போல கருதுகிறீர்களா ? உங்களுக்காக த் என்ற எழுத்தை கஷ்டப்பட்டு மாற்றி தனித்து தெரியும்படி உண்மை தமிழன் என்று தெளிவாக உள்ளதே ?<br />
<br />
அதுவும் அந்த உண்மை தமிழனும் ஆன்மீகம் சோதிடம் ராமாயண ஆய்வு, மகாபாரத ஆய்வு (பெரிய சயிண்டிஸ்டா வருவார் பாருங்க) போன்ற ஆத்திக அயிட்டங்களை தானே பிரித்து மேய்கிறார் ?<br />
<br />
தாங்கள் குறிப்பிட்ட ஜாக்கி சேகர் <a href="http://www.jackiesekar.com/2010/12/1826122010.html">ஜாண்டிவெஜ் அண்டு நாண்டிவெஜ்</a> பதிவில் அவர் என்ன ஆபாச பின்னூட்டமா போட்டிருக்கிறார் ? இன்னும் நூறு நாட்களில் சென்னை சரிசெய்யபடும். பகவானுக்கே வெளிச்சம். என்று எழுதிவிட்டு தன்னுடைய பதிவின் சுட்டி ஒன்றை கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை இவ்வளவு பெரிதுபடுத்துவது முறையா ? நீதியா ? இது தான் தாங்கள் சூட்டிக்கொண்ட உண்மைத்தமிழன் (234345345345345345) என்ற பெயருக்கு அழகா ?<br />
<br />
பல ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்து நீளமாக (ஏற்கனவே உங்கள் பதிவுகள் புத்தகம் அளவுக்கு இருக்கிறது, உலாவியில் லோட் ஆக அரை மணி நேரம் ஆகிறது என்ற புகார் உள்ளது) பதிவு போட்ட நீங்கள், திரு உஜாலாதேவி அலைஸ் உண்மை(த் மிஸ்ஸிங்)தமிழன் தன்னுடைய அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளாரே ? ஒரு போன் செய்து கேட்டிருக்கலாமே ?<br />
<br />
போகிற போக்கைப்பார்த்தால் கடிதத்தில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதுபவர்கள் இங்கிதம் தெரியாமல் தங்கள் பெயரின் முதல் வார்த்தையை உபயோகப்படுத்திய போலிகள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே ? ஒரு கற்பனைக்காக வைத்துக்கொள்வோம், இது குறித்து தாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துவிடுகிறார்கள். உண்மை என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லாம் போலிகள் என்று. அய்யகோ. நினைத்துபார்க்கவே கொடூரமாக உள்ளதே ! (கர்ணகடூரம் என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன். கர்ணன் என்பது சிவாஜி படம், மகாபாரத கேரக்டர். யாராவது சண்டைக்கு வந்திடப்போகிறார்கள்)<br />
<br />
இம்புட்டு சட்டம் பேசும் நீங்கள் உண்மை(த் இல்லை)தமிழன் அவர்களை போலி என்று எப்படி சொல்லப்போச்சு ? அவர் வருங்காலத்தில் கன்னாபின்னாவென பிரபல பதிவர் ஆகியபிறகு, பழைய போலி மேட்டர் எல்லாம் எடுத்து படித்துவிட்டு, தன்னை போலியோடு ஒப்பிட்டு இவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறாரே இந்த உண்மை(த் இருக்கு)தமிழன் என்று வருந்தினால் நீங்கள் எப்படி அவரை ஆற்றுப்படுத்தப்போகிறீர்கள் ?<br />
<br />
<img src="http://im.in.com/connect/images/profile/b_profile1/Anjali_Devi_300.jpg" /><br />
<br />
நீங்கள் இப்போது போட்டுள்ள பதிவு, தேவை-இல்லாத-சுய-இரக்க-மேனியா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் செய்யும் செயல். அருகாமையில் உள்ள ஆங்கில மருத்துவ கெமிஸ்டிடம் தன்னம்பிக்கை-டானிக்-மிக்ஸிங்லெஸ் கொஞ்சம் வாங்கி ராவாக உள்ளெ விடவும். உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.<br />
<br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">போட்டோவில் புளிமூட்டை போல போஸ் கொடுக்கும் அந்த நபர், பார்ப்பதற்கு பச்சப்புள்ளை போல இருக்கிறார். அவரை போய் நீங்கள் எப்படி போலி என்று சொல்லப்போச்சு ? ஆகவே உங்கள் தவறை நினைத்து அப்பன் முருகனிடமும் உண்மை தமிழனிடமும் மன்னிப்பு கேட்டு பகிரங்க பதிவு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">இவன்,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">தங்கள் உண்மை(?) யுள்ள</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">செந்தழல் ரவி</div><div><br />
பிற்சேர்க்கை:<br />
<br />
உண்மையான உண்மைத்தமிழன் இளையராஜா பிடிக்கும் அந்த படம் பிடிக்கும் என்று போட்டிருப்பது போல உண்மை தமிழனும் போட்டிருப்பது கூட தவறு என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். இது என்ன காமெடி ? ரசனை இரண்டு பேருக்கும் ஒன்றாக இருக்கக்கூடாதா ?<br />
<br />
மேலும் பரிதாபப்பட்ட அந்த ஜீவன் உண்மையாரின் பதிவில் வந்த அய்யா நான் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லிய இந்த பின்னூட்டம் :<br />
<br />
<br />
<dt class="comment-author" id="comment-3530739111731227826" style="font-family: Verdana, Arial; font-size: small;"><a href="http://www.blogger.com/profile/13419585766492234862" rel="nofollow" style="color: #336699;">உண்மை தமிழன்</a> said...</dt><br />
<dd class="comment-body" style="font-family: Verdana, Arial; font-size: small;">பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்<br />
<br />
இதையும் படிச்சி பாருங்க ( ஒரு பதிவின் சுட்டியை கொடுத்துள்ளார். இவரின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை )</dd><span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial; font-size: x-small;"><span><br />
Read more: <a href="http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html#ixzz19NscPgbo" style="color: #003399;">http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html#ixzz19NscPgbo</a></span></span></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-28771623.post-22334890811682875962010-04-22T04:43:00.000-07:002010-04-22T05:20:57.076-07:00அதிர்ச்சி 2035<img src="http://www.orlandoweekly.com/blog/images/ShockJillGgallery.jpg" /><br />
<br />
மே 18, வருடம் இரண்டாயிரத்து முப்பந்தைந்து..முதல்வர் லெனின் தன்னுடைய வேளச்சேரி வீட்டின் ஓய்வறையில்..<br />
<br />
ஐந்தாவது முறை முதல்வரானதற்கான பாராட்டு விழா பற்றிய செய்திகளை Dailyகரன் பத்திரிக்கையில் படித்துக்கொண்டிருந்தார். சுருதிஹாசன் மகள் சூர்யாஹாசனின் கெட்ட ஆட்டம் கலர் படங்களாக கண்ணில் விரிந்தது..<br />
<br />
உதவியாளர் மேகநாதன் ஒரு இளைஞரை அழைத்துவந்தார்.<br />
<br />
சார் இவர் காலையில் இருந்தே உங்களை பார்க்கனும் என்று காத்திருக்கிறார்..<br />
<br />
யார் தம்பி நீங்க ? என்ன வேண்டும் ?<br />
<br />
என்னை நல்லா உற்றுப்பாருங்க..!! உங்களுக்கே தெரியும்...!!!<br />
<br />
கண்களை சுருக்கி கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்த முதல்வரின் கையில் இருந்த செய்தித்தாள் தானே நழுவியது.<br />
<br />
அதிர்ச்சியில் உறைந்த அவரது வார்த்தைகளும் உடைந்து குழறியது..<br />
<br />
ந் நீ நீங்க நீங்க !!!<br />
<br />
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____<br />
<br />
நாமல் கூஜபக்சே தன்னுடைய பல் மருத்துவரிடம் கிளம்பிய போது மணி ஆறு. மே மாதம் 18 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கிளம்பி வந்த இலங்கை ஜனாதிபதி இப்படி தனியே கிளம்பிப்போவது ஒன்றும் புதிதல்ல..<br />
<br />
பல் மருத்துவரின் மருத்துவமனை..<br />
<br />
சிரித்த முகத்துடன் வரவேற்ற பல் மருத்துவரை எங்கோ பார்த்தது போல இருந்தது...<br />
<br />
ஹெல்லோ என்றபடி அறையின் உள்ளே நுழைந்தவரிடம் சில வினாடி தயக்கம்..<br />
<br />
என்ன தயங்குகிறீர்கள் ?<br />
<br />
நீங்கள் ? ஆட்ரியன் என்பவரின் தானே நான் அப்பாயிண்மெண்ட் வாங்கினேன் ?<br />
<br />
நீங்கள் மேலே போகும்வரை ஆட்ரியன் மயக்கத்தில் இருந்து எழமாட்டார் ?<br />
<br />
என்ன ?<br />
<br />
மருத்துவரிடம் கையில் கச்சிதமாக ஒரு மைக்ரோ துப்பாக்கி அமைதியாக நீண்டது.<br />
<br />
நாமலுக்கு இப்போது உடலெல்லாம் உதறத்தொடங்கிவிட்டாலும், எதிரில் இருப்பது யார் என்று தெரிந்துபோனது.<br />
<br />
யூ யூ யூ ?<br />
<br />
சத்தமில்லாமல் செத்துப்போனார் ஒரு ஜனாதிபதி.<br />
<br />
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____<br />
<br />
மதுரை. மே பதினெட்டு. நாம் தமிழகம் கட்சியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு வந்து பாண்டியன் உறைவிட உணவகத்தில் தங்கியிருந்த இயக்குனர் நீமான்.<br />
<br />
அண்ணே ? யாரோ ஒரு தம்பி நேற்று காலையில் இருந்தே காத்திருக்காங்க. ஜெர்மனியில் இருந்து வந்திருக்கார். மாநாட்டுக்கு போறதுக்கு முன்பு ஒரு ரெண்டு நிமிஷம் அந்த தம்பிக்கிட்ட பேசிருங்க.<br />
<br />
சரி வரச்சொல்.<br />
<br />
உள்ளே நுழைந்தவரின் முகம் எங்கோ பார்த்த ஒரு முகத்தை நியாபகப்படுத்த, கண்களை சுருக்கினார் நீமான்..<br />
<br />
அண்ணே. என்னை தெரியலையா ?<br />
<br />
யார் என்று புரிந்துபோய், உடல் உதறி, சிலிர்ப்பு அடங்காமல் இருக்கையில் இருந்து எழுந்து பாய்ந்து போய் கட்டியணைத்துக்கொண்டார்.<br />
<br />
தம்பி நீங்க ? நீங்க ? அப்படியே இருக்கீங்க !!<br />
<br />
அவர் கட்டியணைத்தது தமிழ் ஈழத்துக்காய் போராடிய மாவீரன் பிரபாகரன்.<br />
<br />
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____<br />
<br />
அதே வினாடியில் இலங்கை NDTV செய்தி சேனலில் ஸ்க்ரோல் நியூஸ் ஓட ஆரம்பித்தது.<br />
<br />
இலங்கை முன்னாள் அமைச்சர் பருணா தனது அறையில் தூக்கில் தொங்கினார். அவர் யாரையோ பார்த்து பயந்து இந்த காரியத்தை செய்ததாக அவரது பணியாளர் சாட்சியம்.<br />
<br />
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராசபக்சே மாடிப்படியில் தடுக்கி விழுந்து சாவு.<br />
<br />
இலங்கை பலாலி விமானதளத்தில் இருந்த போர் விமானங்கள் ஐந்தை காலையில் இருந்து காணவில்லை.<br />
<br />
<br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____</div><div><br />
</div><div>தேவையற்ற பழைய செய்திகள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மே 18 2010 அன்று அனுமதி அளித்தது</div><div><br />
</div><div>2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலைகள் காரணமாக ஸ்காண்டிநேவியா மூன்று வாரங்களுக்கு முடங்கியது.</div><div><br />
</div><div>2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.</div><div><br />
</div><div>2015 ஆம் ஆண்டு உயிர்கொல்லி நோய் எயிட்சுக்கு நியூசிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.</div><div><br />
</div><div>2017 ஆம் ஆண்டு அரபு நாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.</div><div><br />
</div><div>2019 ஆம் ஆண்டு மாலத்தீவு முழுமையாக கடலில் மூழ்கியது. எவாக்குவேட் செய்யப்பட்ட மக்கள் ஆஸ்திலேயியா டாஸ்மேனியாவில் குடியமர்த்தப்பட்டார்கள்.<br />
<br />
<br />
<div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">க்ளோனிங் 2021 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமானது. இது ஏற்கனவே க்ளோனிங் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று வரையறுக்கப்பட்டது.</div></div><div></div></div><div><br />
</div><div>_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-28771623.post-47222069563585341732010-04-21T05:44:00.000-07:002010-04-21T06:07:02.554-07:00டோண்டு.....கிசு கிசு !!!<img src="http://thumb1.shutterstock.com.edgesuite.net/display_pic_with_logo/183121/183121,1249211472,2/stock-photo-business-man-hitting-himself-with-a-red-boxing-glove-in-the-face-34629805.jpg" /><br />
<br />
முரளிமனோஹர்* விஷயத்துக்கு பிறகு இருபது பதிவுகள் டோண்டு சாரை திட்டி கச்சை கட்டின. அவரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கவேண்டும், ஆட்டத்திலேயே சேர்க்கக்கூடாது என்று எல்லாம். அசரலையே மனுஷன்.<br />
<br />
முரளி மனோஹர் என்று பின்னூட்டியதில் எதாவது ஆபாசம் இருக்கிறதா, இல்லையே ? கல்கி கூட புனை பெயரில் எழுதினாரே என்று எல்லார் வாயையும் அடைத்தார்.<br />
<br />
முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.<br />
<br />
இப்போது குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் அன்னை பார்வதி அம்மாவை பற்றி இப்படி வன்மத்துடன் கூடிய யூக பதிவு ஒன்றை எழுதியிருக்கிறாரே என்று பல பதிவர்கள் உணர்வோடு பொங்குகிறார்கள். அதில் விழும் வாக்குகளும் அமோகம்..பலே பலே. மஸோக்கிஸ்டு*** என்பவர்கள் தன்னை துன்புறுத்துவதில் சுகம் காண்பார்களாமே ?<br />
<br />
இந்த பதிவில் சில கிசு கிசு மேட்டர்கள். யார் என்ன என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவேண்டாம்.<br />
<br />
1. கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நன்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.<br />
<br />
2. ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.<br />
<br />
3. சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.<br />
<br />
4. தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நன்பன்.<br />
<br />
5. தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..<br />
<br />
6. தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.<br />
<br />
என்னமோப்பா. ஏதோ என்னால முடிஞ்சது..!!<br />
<br />
ஆனால் இந்த மனிதாபிமான பிரச்சினையை வைத்து திரட்டிகள் இவரை நீக்கனும், கூகிள் இவர் ஐடியை முடக்கனும் என்றெல்லாம் எழுதி உங்கள் எனர்ஜியை வீணடிக்கவேண்டாம். போடா ஜாட்டான் என்று சொல்லிவிடும் இந்த கோட்டான். இவன் அசர மாட்டான். (எதுகை மோனைக்காக எழுதிட்டேன் டோண்டு சார்)<br />
<br />
தனக்கு எல்லாம் வல்ல தகர நெடுங்குழைகாதன் அணுக்கிரகம் இருப்பதாக நம்புவன் எப்படியும் உடைய மாட்டான். இன்னும் சுப்ரமணிய சாமியும் சோவும் வாழும் தமிழ்நாட்டில் இவருக்கு என்ன குறைச்சல் ? ஆனால் இப்படி பெருவாரியான வாக்குகளும் எதிர்பதிவுகளும் நாமும் குறைந்தபட்ச மனிதாபிமானம் உள்ள நாட்டில்தான் வாழ்கிறோம் என்று காட்டுவது நிறைவு.<br />
<br />
ஏன் பார்ப்பணீயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள், உயர் சாதீயம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்று ஜாதிப்பாசத்தோடு சொல்பவர். எந்த ஒரு பொருளும் அல்லது கண்டுபிடிப்பும் அதனை கண்டுபிடித்தவர் பெயரை வைத்து சொல்வது இயல்புதானே ? உதா (ராமன் விளைவு, டாப்ளர் எபெக்ட்). இந்த கேள்வியை கேட்டால் மழுப்புவார்.<br />
<br />
ஆனால் இந்த பிரச்சினையை வைத்து பதிவு போட்டவர்கள் நாளைக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை என்று போங்கள். கறாறாக பேசி தொகையை வாங்கிக்கொண்டு வேலைக்கு எந்த குறையும் வைக்காமல் சிறப்பாக செய்து கொடுப்பார். அது தான் டோண்டு !!!<br />
<br />
பி.கு :<br />
<br />
இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்****.<br />
<br />
..<br />
..<br />
..<br />
* முரளிமனோஹர் என்ற புனைபெயரில் வன்மமான தாக்குதலை பதிவர்கள் சந்திக்க நேர்ந்தது.<br />
** சமீபத்தில் - சமீபத்தில் என்பது டோண்டு ராகவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. உ.தா : சமீபத்தில் 1976 ல்<br />
*** மசோகிஸ்டு - தன்னை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்<br />
**** ரத்னா கபே சந்திப்புகளில் போண்டாவை ஆர்டர் செய்து தின்றதால். (பில் சம அளவில் பிரிக்கப்படும்.)<br />
....<br />
....ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-28771623.post-78978148338131043602010-04-20T07:56:00.000-07:002010-04-20T08:06:17.340-07:00பார்வதியம்மா. எனது எண்ணங்கள்.<img alt="02vaiko.jpg (336×450)" src="http://im.rediff.com/news/2008/jan/02vaiko.jpg" /><br />
<br />
எனக்கு மட்டும் தான் தெரியும் வள். நான் மட்டும் தான் உரிமை கொண்டாடுவேன் வள். வள் வள் வள் லொள் வள் வள் அவ்வ்வூவூவூ<br />
<br />
<img alt="nedumaran06.jpg (350×327)" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/nedumaran06.jpg" /><br />
<br />
ரகசியமா வெச்சிருந்தேன் ளொள் ளொள். குடுத்த காசுக்கு அவ்ளோதான் கூவமுடியும் வள்...ஹவ் ஹவ் லொள் வொள்ள்ள்ள்...அகீகீ வள்ள்.<br />
<br />
<img alt="thiruma.jpg (300×399)" src="http://tamizhanban.files.wordpress.com/2009/11/thiruma.jpg" /><br />
<br />
எதுவுமே முடியல..முடியல முடியல. என்னதான் செய்யறது வள். என்னால ஆனமட்டும் பார்த்துட்டேன் வள். என்னைய ஆட்டத்துலே சேக்கமாட்டேங்குறானுங்க வள்..கொக்கரக்கோ. வள் லொள் லொள் லொள் லொள். கோகோக்க்க்கோக்க்க்கொக்க்கொக்க லொள் லொள்<br />
<br />
<img src="http://tamizhanban.files.wordpress.com/2009/11/ilankovan.jpg" /><br />
<br />
ஹைய்யா ஜாலி ஜாலி. கெழவிக்கு கஷ்டம். எப்படி பழிவாங்குனோம் பார்த்தியா வள் வள்...அவ்வ்வு வூவூவூ வள்.<br />
<br />
<img alt="ki.veeramani.jpg (311×278)" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNSc4EuKxS2u8MccHuONbY9t9ufcCxfNYmUuAg7wafiGITEuIQAQGAzDzFBWmyUzvy3P2TT125zKKavfhpQy9QGOpOHWonFSMSB7Lf-vz_154fN-q7J_-LKgM8Ab1GivrpieGk/s640/ki.veeramani.jpg" /><br />
<br />
அந்தம்மா தான் காரணம்..கொக்காரக்கோ. வள் வள் வள்..அவதான் அவதான் காரணம் வள்..<br />
<br />
<img alt="ramadoss_36709e.jpg (318×477)" src="http://beta.thehindu.com/multimedia/dynamic/00036/ramadoss_36709e.jpg" /><br />
<br />
என்னைய கூப்பிடவே இல்லை தெரியுமா...லொள் வொள் கண்டுக்கவே மாட்டேங்குறானுங்க..வொள் வொள் அவ்வூ வள் வள் வள்<br />
<br />
<img alt="karunanidhi-23109313.jpg (313×234)" src="http://www.asiantribune.com/files/images/karunanidhi-23109313.jpg" /><br />
<br />
இந்தா பாரு அறிக்கை. இந்தா பாரு அந்த அம்மா மத்திய அரசுக்கு எழுதுன நோட். எனக்கு சத்தியமா பண்ணண்டு மணிக்கு தான் தெரியும். இல்லை காலையில நூஸு பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்கிடேன். இல்லை இல்லை. நான் போன் பண்ணலாம்னு பார்த்தேன்...சத்தியமா..மொபைல்ல க்ரடிட் இல்ல. எப்படி அர்த்த ராத்திரியில ரீபில் பண்றது ? எங்க மாறன் பேமிலி என்ன மொபைல் கம்பெனியா நடத்துது ?? நம்புங்க ப்ளீஸ்..இப்பத்தான் ஸ்டாலினை வெளிய அனுப்பி கார்டு கவர் வாங்கியார சொல்லியிருக்கேன். இந்தா ப்ரைம் மினிஸ்டருக்கு லட்டர் எழுதுறேன். டோண்ட் ஒர்ரி. பீ ஹேப்பி...ஹேய்...பை த வே...வாட்ச் மானாட மயிலாட யா ...<br />
<br />
எப்புடி மேட்டரை முடிச்சேன் பார்த்தியா !!!<br />
<br />
..<br />
..<br />
...ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-28771623.post-43531563439942959792010-03-10T04:53:00.000-08:002010-03-10T06:37:13.685-08:00ஏய் ? எங்கடா புடிச்சீங்க இவனை ?எதுவும் விமர்சனம் செய்துவிடவேண்டாம். அதனால் அவனுக்குத்தான் வீண் விளம்பரம்.<br />
<br />
பெரியாரிஸ்டாமே ? ஜூவிக்காரங்க எப்படி கண்டுபிடிச்சாங்கப்பா ?<br />
<br />
இந்த வீணாபோனவனை வெச்சு குமுதம் ரிப்போர்ட்டர் கல்லாக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்களே ?<br />
<br />
மொத்தல்ல நாலாயிரம்னு சொன்னான். அப்புறம் இருவத்தஞ்சாயிரம். இப்ப இவம் பொண்டாட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாளாமே ?<br />
<br />
ஆட்டோவுக்கே காசில்லாதவன் எப்படி மீட்டிங்குக்கு இருவத்தாஞ்சாயிரம் கொடுத்தான் ?<br />
<br />
இவனை சொல்லக்கூடாது. இவனை கடவுள்னு லெட்டர் போடுறவங்களை சொல்லனும்...<br />
<br />
ஜூனியர் விகடன் பேட்டியில தான் ஒரு வுமனைஸர்னு சொல்லிட்டு, முண்ட கலப்பை இப்ப தனக்கு உமனைஸர்னாலே என்னன்னு தெரியாதுங்குது. ஸ்காட்சுன்னா என்னான்னு தெரியுமா ? ஜட்டி ரெண்டாயிரம்னு கதை உட தெரியுமா ? எனக்கு தெரிஞ்சு ஜாக்கி ஜட்டிய விட காஸ்ட்லி எதுவும் இல்லீங்ணா...<br />
<br />
இவனுக்கு ஸ்டார் ஓட்டல்ல சரக்கு ஊத்தி விட்டவங்களை என்ன செய்யறது ?<br />
<br />
மூனு வயசு குழந்தை எப்படிடா மொபைல் வெச்சிருக்கும் ? சுத்தமா மறை கழண்டுபோச்சு...<br />
<br />
ஆங்கில் பட இயக்குனரோட நன்பர் போன் போட்டாராமே ? ஜேம்ஸ் கேமரூன் ப்ரண்டு பாம்ஸ் ஆரஞ்சூஸ் ஆக இருக்குமே ?<br />
<br />
இவனோட புத்தகத்தை எந்த யுனிவர்ஸிட்டியில வெக்கப்போறாங்க ? ஒருவேளை டாய்லெட்ல பேப்பர் தீந்துட்டா வெப்பாங்க. இல்லை முன் அட்டையையும் பின் அட்டையையும் கிழிச்சுட்டு வெப்பாங்க.<br />
<br />
கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வெய் கணக்கா பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சுட்டானே ? லஜ்ஜையில்லாம ?<br />
<br />
ஏய் இவனுக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா இல்லை நடிக்கிறானா ?<br />
<br />
மலையாளத்துல இவன் எழுத்தை மொழிபெயர்க்கறவன் கெடச்சான், காதை கடிச்சு துப்பிடுவேன்...<br />
<br />
நாலு இட்டாலியன் ரைட்டர்ஸ், மூனு யூரோப்பிய டைரக்டர்ஸ் பேரை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இப்படியும் அப்படியும் அடிச்சு விட்டே முப்பது வருசத்தை ஓட்டிட்டான்யா..<br />
<br />
கூபாவுல போய் விட்டு இவனை செயில்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்...!!<br />
<br />
அந்த முண்ட கலப்பை படத்தை நெட்ல தேடினா இது தான் வருது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://msp264.photobucket.com/albums/ii166/zombs/monkey.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="243" src="http://msp264.photobucket.com/albums/ii166/zombs/monkey.jpg" width="320" /></a></div><br />
<br />
<br />
முப்பது வருசமா கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்த எளுத்தாளர், இண்டலக்சுவல் பட்டத்தை குப்பைத்தொட்டியில் தான் தேடனும். உத்தமம் இல்லாத தமிளு எளுத்தாளரே...!!!.<br />
.<br />
.<br />
.ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com155tag:blogger.com,1999:blog-28771623.post-78957866229940232152010-03-02T10:06:00.000-08:002010-03-02T14:15:48.204-08:00நித்யானந்தர் நடிகை சன் நியூஸ் விடியோ.<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/6UcCAEB5T38&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/6UcCAEB5T38&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br />
<br />
http://www.youtube.com/watch?v=zRk_IGNnzNw&feature=player_embedded<br />
<br />
http://imvj.info/2010/03/swamy-nithyananda-scandal-video-affair.html<br />
<br />
நோ.கமெண்ட்ஸ். <br />
<br />
சமீபத்தில் <a href="http://www.charuonline.com/">சாரு ஆன்லைனில்</a> நித்யானந்தர் அலகாபாத் டூர் போயிருக்கிறதாக செய்தி படித்தேன். நார்த் இண்டியாவில் A என்ற நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்று எண்டிடிவி வீடியோ வெளியிடாமல் இருந்தால் சரி.<br />
<br />
முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை வேகவேகமாக நீக்கியுள்ளார்கள். ஆனால் டவுன்லோட் செய்து என்னுடைய சொந்த இடத்தில் அப்லோடு செய்துள்ளேன். இப்ப இன்னா பண்ணுவே ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
ஆர் என்ற எழுத்தில் ஆரம்பிக்கு நடிகை யார் என்று தீ'யாக தேடவேண்டாம்.<br />
<br />
சாமீயார் நல்ல எ.சி.டி திரை தொலைக்காட்சிப்பெட்டி வைத்திருக்கிறார். முதல் காட்சியில் ஏதோ சிவாஜி படம் ஓடுகிறது. அடுத்த காட்சியில் ஆங்கில படம் போல தெரிகிறது. சாமியார் அறையில் உள்ள ப்ளாஸ்கு வெளிநாட்டு ப்ளாஸ்கு.<br />
<br />
நடிகையிடம் வாங்கி போட்டுக்கொள்ளும் மாத்திரை வயாக்கராவா அல்லது பி.பி மாத்திரையா ? காலையில் எழுந்தவுடன் துள்ளி எழுந்து வயாக்கராவா போடுவார் துறவி ? கதவை திற நடிகை வரட்டும்.ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com47