Monday, December 27, 2010

அண்ணன் உண்மை(த்)தமிழனுக்கு கடிதம்..

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு..

நான் தங்களின் 'மீண்டும் போலிப்பிரச்சனை ! தாங்கலைடா சாமி. முருகா. ஏன் இந்த சோதனை' என்ற புலம்பல் பதிவு பார்த்தேன். அண்ணே இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ? தாங்கள் குறிப்பிட்ட உஜிலாதேவி என்ற தளத்தில் எந்தவிதமான ஆபாச மேட்டர்களோ, அட்லீஸ்ட் அனுஷ்கா படங்களோ கூட இல்லாமல் வெறும் வெத்துவேட்டாக உள்ளதே ? இதை போய் எப்படி நீங்கள் போலிப்பதிவு என்று சொல்லலாம் ? அல்லது நார்த் இண்டியன் வாசனை வீசும் இந்த பெயரிலேயே அனைவரும் கிக் ஆகிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? தமிழன் அவ்வளவு காய்ந்து போயா கிடக்கிறான் ?

மேலும் உண்மைத்தமிழன் என்ற பெயரை நீங்கள் பேடட்ண்ட் / இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி போல கருதுவது எந்த விதத்தில் நியாயம் ? அல்லது தாங்கள் மட்டும் தான் உண்மைத்தமிழன் மற்ற தமிழன் எல்லாம் பொய்த்தமிழன் என்பது போல கருதுகிறீர்களா ? உங்களுக்காக த் என்ற எழுத்தை கஷ்டப்பட்டு மாற்றி தனித்து தெரியும்படி உண்மை தமிழன் என்று தெளிவாக உள்ளதே ?

அதுவும் அந்த உண்மை தமிழனும் ஆன்மீகம் சோதிடம் ராமாயண ஆய்வு, மகாபாரத ஆய்வு (பெரிய சயிண்டிஸ்டா வருவார் பாருங்க) போன்ற ஆத்திக அயிட்டங்களை தானே பிரித்து மேய்கிறார் ?

தாங்கள் குறிப்பிட்ட ஜாக்கி சேகர் ஜாண்டிவெஜ் அண்டு நாண்டிவெஜ் பதிவில் அவர் என்ன ஆபாச பின்னூட்டமா போட்டிருக்கிறார் ? இன்னும் நூறு நாட்களில் சென்னை சரிசெய்யபடும். பகவானுக்கே வெளிச்சம். என்று எழுதிவிட்டு தன்னுடைய பதிவின் சுட்டி ஒன்றை கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை இவ்வளவு பெரிதுபடுத்துவது முறையா ? நீதியா ? இது தான் தாங்கள் சூட்டிக்கொண்ட உண்மைத்தமிழன் (234345345345345345) என்ற பெயருக்கு அழகா ?

பல ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்து நீளமாக (ஏற்கனவே உங்கள் பதிவுகள் புத்தகம் அளவுக்கு இருக்கிறது, உலாவியில் லோட் ஆக அரை மணி நேரம் ஆகிறது என்ற புகார் உள்ளது) பதிவு போட்ட நீங்கள், திரு உஜாலாதேவி அலைஸ் உண்மை(த் மிஸ்ஸிங்)தமிழன் தன்னுடைய அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளாரே ? ஒரு போன் செய்து கேட்டிருக்கலாமே ?

போகிற போக்கைப்பார்த்தால் கடிதத்தில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதுபவர்கள் இங்கிதம் தெரியாமல் தங்கள் பெயரின் முதல் வார்த்தையை உபயோகப்படுத்திய போலிகள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே ? ஒரு கற்பனைக்காக வைத்துக்கொள்வோம், இது குறித்து தாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துவிடுகிறார்கள். உண்மை என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லாம் போலிகள் என்று. அய்யகோ. நினைத்துபார்க்கவே கொடூரமாக உள்ளதே ! (கர்ணகடூரம் என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன். கர்ணன் என்பது சிவாஜி படம், மகாபாரத கேரக்டர். யாராவது சண்டைக்கு வந்திடப்போகிறார்கள்)

இம்புட்டு சட்டம் பேசும் நீங்கள் உண்மை(த் இல்லை)தமிழன் அவர்களை போலி என்று எப்படி சொல்லப்போச்சு ? அவர் வருங்காலத்தில் கன்னாபின்னாவென பிரபல பதிவர் ஆகியபிறகு, பழைய போலி மேட்டர் எல்லாம் எடுத்து படித்துவிட்டு, தன்னை போலியோடு ஒப்பிட்டு இவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறாரே இந்த உண்மை(த் இருக்கு)தமிழன் என்று வருந்தினால் நீங்கள் எப்படி அவரை ஆற்றுப்படுத்தப்போகிறீர்கள் ?



நீங்கள் இப்போது போட்டுள்ள பதிவு, தேவை-இல்லாத-சுய-இரக்க-மேனியா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் செய்யும் செயல். அருகாமையில் உள்ள ஆங்கில மருத்துவ கெமிஸ்டிடம் தன்னம்பிக்கை-டானிக்-மிக்ஸிங்லெஸ் கொஞ்சம் வாங்கி ராவாக உள்ளெ விடவும். உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.

போட்டோவில் புளிமூட்டை போல போஸ் கொடுக்கும் அந்த நபர், பார்ப்பதற்கு பச்சப்புள்ளை போல இருக்கிறார். அவரை போய் நீங்கள் எப்படி போலி என்று சொல்லப்போச்சு ? ஆகவே உங்கள் தவறை நினைத்து அப்பன் முருகனிடமும் உண்மை தமிழனிடமும் மன்னிப்பு கேட்டு பகிரங்க பதிவு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,
தங்கள் உண்மை(?) யுள்ள
செந்தழல் ரவி

பிற்சேர்க்கை:

உண்மையான உண்மைத்தமிழன் இளையராஜா பிடிக்கும் அந்த படம் பிடிக்கும் என்று போட்டிருப்பது போல உண்மை தமிழனும் போட்டிருப்பது கூட தவறு என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். இது என்ன காமெடி ? ரசனை இரண்டு பேருக்கும் ஒன்றாக இருக்கக்கூடாதா ?

மேலும் பரிதாபப்பட்ட அந்த ஜீவன் உண்மையாரின் பதிவில் வந்த அய்யா நான் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லிய இந்த பின்னூட்டம் :


உண்மை தமிழன் said...

பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்

இதையும் படிச்சி பாருங்க ( ஒரு பதிவின் சுட்டியை கொடுத்துள்ளார். இவரின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை )

Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html#ixzz19NscPgbo

Thursday, April 22, 2010

அதிர்ச்சி 2035



மே 18, வருடம் இரண்டாயிரத்து முப்பந்தைந்து..முதல்வர் லெனின் தன்னுடைய வேளச்சேரி வீட்டின் ஓய்வறையில்..

ஐந்தாவது முறை முதல்வரானதற்கான பாராட்டு விழா பற்றிய செய்திகளை Dailyகரன் பத்திரிக்கையில் படித்துக்கொண்டிருந்தார். சுருதிஹாசன் மகள் சூர்யாஹாசனின் கெட்ட ஆட்டம் கலர் படங்களாக கண்ணில் விரிந்தது..

உதவியாளர் மேகநாதன் ஒரு இளைஞரை அழைத்துவந்தார்.

சார் இவர் காலையில் இருந்தே உங்களை பார்க்கனும் என்று காத்திருக்கிறார்..

யார் தம்பி நீங்க ? என்ன வேண்டும் ?

என்னை நல்லா உற்றுப்பாருங்க..!! உங்களுக்கே தெரியும்...!!!

கண்களை சுருக்கி கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்த முதல்வரின் கையில் இருந்த செய்தித்தாள் தானே நழுவியது.

அதிர்ச்சியில் உறைந்த அவரது வார்த்தைகளும் உடைந்து குழறியது..

ந் நீ நீங்க நீங்க !!!

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

நாமல் கூஜபக்சே தன்னுடைய பல் மருத்துவரிடம் கிளம்பிய போது மணி ஆறு. மே மாதம் 18 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கிளம்பி வந்த இலங்கை ஜனாதிபதி இப்படி தனியே கிளம்பிப்போவது ஒன்றும் புதிதல்ல..

பல் மருத்துவரின் மருத்துவமனை..

சிரித்த முகத்துடன் வரவேற்ற பல் மருத்துவரை எங்கோ பார்த்தது போல இருந்தது...

ஹெல்லோ என்றபடி அறையின் உள்ளே நுழைந்தவரிடம் சில வினாடி தயக்கம்..

என்ன தயங்குகிறீர்கள் ?

நீங்கள் ? ஆட்ரியன் என்பவரின் தானே நான் அப்பாயிண்மெண்ட் வாங்கினேன் ?

நீங்கள் மேலே போகும்வரை ஆட்ரியன் மயக்கத்தில் இருந்து எழமாட்டார் ?

என்ன ?

மருத்துவரிடம் கையில் கச்சிதமாக ஒரு மைக்ரோ துப்பாக்கி அமைதியாக நீண்டது.

நாமலுக்கு இப்போது உடலெல்லாம் உதறத்தொடங்கிவிட்டாலும், எதிரில் இருப்பது யார் என்று தெரிந்துபோனது.

யூ யூ யூ ?

சத்தமில்லாமல் செத்துப்போனார் ஒரு ஜனாதிபதி.

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

மதுரை. மே பதினெட்டு. நாம் தமிழகம் கட்சியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு வந்து பாண்டியன் உறைவிட உணவகத்தில் தங்கியிருந்த இயக்குனர் நீமான்.

அண்ணே ? யாரோ ஒரு தம்பி நேற்று காலையில் இருந்தே காத்திருக்காங்க. ஜெர்மனியில் இருந்து வந்திருக்கார். மாநாட்டுக்கு போறதுக்கு முன்பு ஒரு ரெண்டு நிமிஷம் அந்த தம்பிக்கிட்ட பேசிருங்க.

சரி வரச்சொல்.

உள்ளே நுழைந்தவரின் முகம் எங்கோ பார்த்த ஒரு முகத்தை நியாபகப்படுத்த, கண்களை சுருக்கினார் நீமான்..

அண்ணே. என்னை தெரியலையா ?

யார் என்று புரிந்துபோய், உடல் உதறி, சிலிர்ப்பு அடங்காமல் இருக்கையில் இருந்து எழுந்து பாய்ந்து போய் கட்டியணைத்துக்கொண்டார்.

தம்பி நீங்க ? நீங்க ? அப்படியே இருக்கீங்க !!

அவர் கட்டியணைத்தது தமிழ் ஈழத்துக்காய் போராடிய மாவீரன் பிரபாகரன்.

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

அதே வினாடியில் இலங்கை NDTV செய்தி சேனலில் ஸ்க்ரோல் நியூஸ் ஓட ஆரம்பித்தது.

இலங்கை முன்னாள் அமைச்சர் பருணா தனது அறையில் தூக்கில் தொங்கினார். அவர் யாரையோ பார்த்து பயந்து இந்த காரியத்தை செய்ததாக அவரது பணியாளர் சாட்சியம்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராசபக்சே மாடிப்படியில் தடுக்கி விழுந்து சாவு.

இலங்கை பலாலி விமானதளத்தில் இருந்த போர் விமானங்கள் ஐந்தை காலையில் இருந்து காணவில்லை.


_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

தேவையற்ற பழைய செய்திகள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மே 18 2010 அன்று அனுமதி அளித்தது

2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலைகள் காரணமாக ஸ்காண்டிநேவியா மூன்று வாரங்களுக்கு முடங்கியது.

2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.

2015 ஆம் ஆண்டு உயிர்கொல்லி நோய் எயிட்சுக்கு நியூசிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு அரபு நாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு மாலத்தீவு முழுமையாக கடலில் மூழ்கியது. எவாக்குவேட் செய்யப்பட்ட மக்கள் ஆஸ்திலேயியா டாஸ்மேனியாவில் குடியமர்த்தப்பட்டார்கள்.


க்ளோனிங் 2021 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமானது. இது ஏற்கனவே க்ளோனிங் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று வரையறுக்கப்பட்டது.

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

Wednesday, April 21, 2010

டோண்டு.....கிசு கிசு !!!



முரளிமனோஹர்* விஷயத்துக்கு பிறகு இருபது பதிவுகள் டோண்டு சாரை திட்டி கச்சை கட்டின. அவரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கவேண்டும், ஆட்டத்திலேயே சேர்க்கக்கூடாது என்று எல்லாம். அசரலையே மனுஷன்.

முரளி மனோஹர் என்று பின்னூட்டியதில் எதாவது ஆபாசம் இருக்கிறதா, இல்லையே ? கல்கி கூட புனை பெயரில் எழுதினாரே என்று எல்லார் வாயையும் அடைத்தார்.

முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.

இப்போது குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் அன்னை பார்வதி அம்மாவை பற்றி இப்படி வன்மத்துடன் கூடிய யூக பதிவு ஒன்றை எழுதியிருக்கிறாரே என்று பல பதிவர்கள் உணர்வோடு பொங்குகிறார்கள். அதில் விழும் வாக்குகளும் அமோகம்..பலே பலே. மஸோக்கிஸ்டு*** என்பவர்கள் தன்னை துன்புறுத்துவதில் சுகம் காண்பார்களாமே ?

இந்த பதிவில் சில கிசு கிசு மேட்டர்கள். யார் என்ன என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவேண்டாம்.

1. கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நன்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.

2. ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.

3. சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.

4. தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நன்பன்.

5. தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..

6. தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.

என்னமோப்பா. ஏதோ என்னால முடிஞ்சது..!!

ஆனால் இந்த மனிதாபிமான பிரச்சினையை வைத்து திரட்டிகள் இவரை நீக்கனும், கூகிள் இவர் ஐடியை முடக்கனும் என்றெல்லாம் எழுதி உங்கள் எனர்ஜியை வீணடிக்கவேண்டாம். போடா ஜாட்டான் என்று சொல்லிவிடும் இந்த கோட்டான். இவன் அசர மாட்டான். (எதுகை மோனைக்காக எழுதிட்டேன் டோண்டு சார்)

தனக்கு எல்லாம் வல்ல தகர நெடுங்குழைகாதன் அணுக்கிரகம் இருப்பதாக நம்புவன் எப்படியும் உடைய மாட்டான். இன்னும் சுப்ரமணிய சாமியும் சோவும் வாழும் தமிழ்நாட்டில் இவருக்கு என்ன குறைச்சல் ? ஆனால் இப்படி பெருவாரியான வாக்குகளும் எதிர்பதிவுகளும் நாமும் குறைந்தபட்ச மனிதாபிமானம் உள்ள நாட்டில்தான் வாழ்கிறோம் என்று காட்டுவது நிறைவு.

ஏன் பார்ப்பணீயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள், உயர் சாதீயம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்று ஜாதிப்பாசத்தோடு சொல்பவர். எந்த ஒரு பொருளும் அல்லது கண்டுபிடிப்பும் அதனை கண்டுபிடித்தவர் பெயரை வைத்து சொல்வது இயல்புதானே ? உதா (ராமன் விளைவு, டாப்ளர் எபெக்ட்). இந்த கேள்வியை கேட்டால் மழுப்புவார்.

ஆனால் இந்த பிரச்சினையை வைத்து பதிவு போட்டவர்கள் நாளைக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை என்று போங்கள். கறாறாக பேசி தொகையை வாங்கிக்கொண்டு வேலைக்கு எந்த குறையும் வைக்காமல் சிறப்பாக செய்து கொடுப்பார். அது தான் டோண்டு !!!

பி.கு :

இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்****.

..
..
..
* முரளிமனோஹர் என்ற புனைபெயரில் வன்மமான தாக்குதலை பதிவர்கள் சந்திக்க நேர்ந்தது.
** சமீபத்தில் - சமீபத்தில் என்பது டோண்டு ராகவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. உ.தா : சமீபத்தில் 1976 ல்
*** மசோகிஸ்டு - தன்னை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்
**** ரத்னா கபே சந்திப்புகளில் போண்டாவை ஆர்டர் செய்து தின்றதால். (பில் சம அளவில் பிரிக்கப்படும்.)
....
....

Tuesday, April 20, 2010

பார்வதியம்மா. எனது எண்ணங்கள்.

02vaiko.jpg (336×450)

எனக்கு மட்டும் தான் தெரியும் வள். நான் மட்டும் தான் உரிமை கொண்டாடுவேன் வள். வள் வள் வள் லொள் வள் வள் அவ்வ்வூவூவூ

nedumaran06.jpg (350×327)

ரகசியமா வெச்சிருந்தேன் ளொள் ளொள். குடுத்த காசுக்கு அவ்ளோதான் கூவமுடியும் வள்...ஹவ் ஹவ் லொள் வொள்ள்ள்ள்...அகீகீ வள்ள்.

thiruma.jpg (300×399)

எதுவுமே முடியல..முடியல முடியல. என்னதான் செய்யறது வள். என்னால ஆனமட்டும் பார்த்துட்டேன் வள். என்னைய ஆட்டத்துலே சேக்கமாட்டேங்குறானுங்க வள்..கொக்கரக்கோ. வள் லொள் லொள் லொள் லொள். கோகோக்க்க்கோக்க்க்கொக்க்கொக்க லொள் லொள்



ஹைய்யா ஜாலி ஜாலி. கெழவிக்கு கஷ்டம். எப்படி பழிவாங்குனோம் பார்த்தியா வள் வள்...அவ்வ்வு வூவூவூ வள்.

ki.veeramani.jpg (311×278)

அந்தம்மா தான் காரணம்..கொக்காரக்கோ. வள் வள் வள்..அவதான் அவதான் காரணம் வள்..

ramadoss_36709e.jpg (318×477)

என்னைய கூப்பிடவே இல்லை தெரியுமா...லொள் வொள் கண்டுக்கவே மாட்டேங்குறானுங்க..வொள் வொள் அவ்வூ வள் வள் வள்

karunanidhi-23109313.jpg (313×234)

இந்தா பாரு அறிக்கை. இந்தா பாரு அந்த அம்மா மத்திய அரசுக்கு எழுதுன நோட். எனக்கு சத்தியமா பண்ணண்டு மணிக்கு தான் தெரியும். இல்லை காலையில நூஸு பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்கிடேன். இல்லை இல்லை. நான் போன் பண்ணலாம்னு பார்த்தேன்...சத்தியமா..மொபைல்ல க்ரடிட் இல்ல. எப்படி அர்த்த ராத்திரியில ரீபில் பண்றது ? எங்க மாறன் பேமிலி என்ன மொபைல் கம்பெனியா நடத்துது ?? நம்புங்க ப்ளீஸ்..இப்பத்தான் ஸ்டாலினை வெளிய அனுப்பி கார்டு கவர் வாங்கியார சொல்லியிருக்கேன். இந்தா ப்ரைம் மினிஸ்டருக்கு லட்டர் எழுதுறேன். டோண்ட் ஒர்ரி. பீ ஹேப்பி...ஹேய்...பை த வே...வாட்ச் மானாட மயிலாட யா ...

எப்புடி மேட்டரை முடிச்சேன் பார்த்தியா !!!

..
..
...

Wednesday, March 10, 2010

ஏய் ? எங்கடா புடிச்சீங்க இவனை ?

எதுவும் விமர்சனம் செய்துவிடவேண்டாம். அதனால் அவனுக்குத்தான் வீண் விளம்பரம்.

பெரியாரிஸ்டாமே ? ஜூவிக்காரங்க எப்படி கண்டுபிடிச்சாங்கப்பா ?

இந்த வீணாபோனவனை வெச்சு குமுதம் ரிப்போர்ட்டர் கல்லாக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்களே ?

மொத்தல்ல நாலாயிரம்னு சொன்னான். அப்புறம் இருவத்தஞ்சாயிரம். இப்ப இவம் பொண்டாட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாளாமே ?

ஆட்டோவுக்கே காசில்லாதவன் எப்படி மீட்டிங்குக்கு இருவத்தாஞ்சாயிரம் கொடுத்தான் ?

இவனை சொல்லக்கூடாது. இவனை கடவுள்னு லெட்டர் போடுறவங்களை சொல்லனும்...

ஜூனியர் விகடன் பேட்டியில தான் ஒரு வுமனைஸர்னு சொல்லிட்டு, முண்ட கலப்பை இப்ப தனக்கு உமனைஸர்னாலே என்னன்னு தெரியாதுங்குது. ஸ்காட்சுன்னா என்னான்னு தெரியுமா ? ஜட்டி ரெண்டாயிரம்னு கதை உட தெரியுமா ? எனக்கு தெரிஞ்சு ஜாக்கி ஜட்டிய விட காஸ்ட்லி எதுவும் இல்லீங்ணா...

இவனுக்கு ஸ்டார் ஓட்டல்ல சரக்கு ஊத்தி விட்டவங்களை என்ன செய்யறது ?

மூனு வயசு குழந்தை எப்படிடா மொபைல் வெச்சிருக்கும் ? சுத்தமா மறை கழண்டுபோச்சு...

ஆங்கில் பட இயக்குனரோட நன்பர் போன் போட்டாராமே ? ஜேம்ஸ் கேமரூன் ப்ரண்டு பாம்ஸ் ஆரஞ்சூஸ் ஆக இருக்குமே ?

இவனோட புத்தகத்தை எந்த யுனிவர்ஸிட்டியில வெக்கப்போறாங்க ? ஒருவேளை டாய்லெட்ல பேப்பர் தீந்துட்டா வெப்பாங்க. இல்லை முன் அட்டையையும் பின் அட்டையையும் கிழிச்சுட்டு வெப்பாங்க.

கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வெய் கணக்கா பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சுட்டானே ? லஜ்ஜையில்லாம ?

ஏய் இவனுக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா இல்லை நடிக்கிறானா ?

மலையாளத்துல இவன் எழுத்தை மொழிபெயர்க்கறவன் கெடச்சான், காதை கடிச்சு துப்பிடுவேன்...

நாலு இட்டாலியன் ரைட்டர்ஸ், மூனு யூரோப்பிய டைரக்டர்ஸ் பேரை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இப்படியும் அப்படியும் அடிச்சு விட்டே முப்பது வருசத்தை ஓட்டிட்டான்யா..

கூபாவுல போய் விட்டு இவனை செயில்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்...!!

அந்த முண்ட கலப்பை படத்தை நெட்ல தேடினா இது தான் வருது.




முப்பது வருசமா கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்த எளுத்தாளர், இண்டலக்சுவல் பட்டத்தை குப்பைத்தொட்டியில் தான் தேடனும். உத்தமம் இல்லாத தமிளு எளுத்தாளரே...!!!.
.
.
.

Tuesday, March 02, 2010

நித்யானந்தர் நடிகை சன் நியூஸ் விடியோ.





http://www.youtube.com/watch?v=zRk_IGNnzNw&feature=player_embedded

http://imvj.info/2010/03/swamy-nithyananda-scandal-video-affair.html

நோ.கமெண்ட்ஸ்.

சமீபத்தில் சாரு ஆன்லைனில் நித்யானந்தர் அலகாபாத் டூர் போயிருக்கிறதாக செய்தி படித்தேன். நார்த் இண்டியாவில் A என்ற நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்று எண்டிடிவி வீடியோ வெளியிடாமல் இருந்தால் சரி.

முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை வேகவேகமாக நீக்கியுள்ளார்கள். ஆனால் டவுன்லோட் செய்து என்னுடைய சொந்த இடத்தில் அப்லோடு செய்துள்ளேன். இப்ப இன்னா பண்ணுவே ?


ஆர் என்ற எழுத்தில் ஆரம்பிக்கு நடிகை யார் என்று தீ'யாக தேடவேண்டாம்.

சாமீயார் நல்ல எ.சி.டி திரை தொலைக்காட்சிப்பெட்டி வைத்திருக்கிறார். முதல் காட்சியில் ஏதோ சிவாஜி படம் ஓடுகிறது. அடுத்த காட்சியில் ஆங்கில படம் போல தெரிகிறது. சாமியார் அறையில் உள்ள ப்ளாஸ்கு வெளிநாட்டு ப்ளாஸ்கு.

நடிகையிடம் வாங்கி போட்டுக்கொள்ளும் மாத்திரை வயாக்கராவா அல்லது பி.பி மாத்திரையா ? காலையில் எழுந்தவுடன் துள்ளி எழுந்து வயாக்கராவா போடுவார் துறவி ? கதவை திற நடிகை வரட்டும்.