Friday, November 20, 2009

18+. மிஸ். ட்ரினிடாட் டொபாக்கோ கூகிளில் இப்படி தேடவேண்டாம்.





நீங்கள் படத்தில் பார்ப்பது மிஸ் ட்ரினிடாட் அண்டு டொபாக்கோ (Miss Trinidad & Tobago 2008 Anya Ayoung-Chee )






இந்த படத்தில் என்ன இருக்கிறது அப்படீங்கறீங்களா ?

அம்மணியும் அவரது காதலரும் மற்றும் மிஸ் ஜப்பான் என்று கருதப்படும் இளம்பெண்ணும் ஜில்பான்ஸாக இருந்த வீடியோ இண்டர்நெட்டை கலக்குகிறது.



Miss Trinidad & Tobago 2008 S (ஒரு எழுத்து மிஸ்ஸிங்) X என்று போட்டு தேடி தொலையவேண்டாம்.




ஊதுற சங்கை ஊதிவிடத்தானே வேண்டும் ???

Thursday, October 29, 2009

சர்வேசன் நச் கதைப்போட்டியில் செந்தழல் ரவி

சர்வேசன் வைக்கும் நச் கதைப்போட்டியில் களத்தில் குதித்துவிட்டேன். 20 டாலராமே ? சொக்கா சொக்கா ங்கொக்கா மக்கா, எனக்கே பரிசு எனக்கே பரிசு என்று துள்ளிக்கொண்டிருக்கேன்.

இந்த ராமச்சந்திரன் உஷா, பினாத்தல் சுரேஷ், ஷைலஜா, முகிலன், பாப்பு, குகன், நிலா ரசிகன், நானானி, விதூஷ், நந்தா, அரவிந்தன், டி வி ஆர், கிஷோர், சதங்கா, கோபி, ராமலஷ்மி இவங்க எல்லாம் போட்டி போடலைன்னா நான் தான் ஜெயிச்சிருப்பேன். என்ன செய்ய, அவங்களும் போட்டி போட்டுட்டாங்க. சரி. லெட்ஸ் கவுண்ட் மை டேய்ஸ்.

மக்கள்ஸின் கதைகளை நான் விமர்சனம் செய்தபோது டென்ஷனானவர்கள் அடியேனின் கதையை இங்கே வாசித்து கடுப்பாகவும், டென்ஷனாகவும், திட்டவும்.

இதுவரை வந்த 'நச்' கதைகள்:

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
2. அசைன்மென்ட் - கிஷோர்
3. ராஸ்கல்ல் - ராம்குமார் அமுதன்
4. உதவி - ஷைலஜா
5. உயிரின் உயிரே - R. Gopi
6. தொழில் - ராமலக்ஷ்மி
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
10. திருப்பம் - சின்ன அம்மிணி
11. வல்லவனுக்கு வல்லவன் - பெயர் சொல்ல விருப்பமில்லை
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
13. ஆவணி பௌர்ணமி - நானானி
14. நொடிப் பொழுதில் - Pappu
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
16. ஜில்லுனு ஒரு காதல் - Vidhoosh
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
18. ஆதவன் - நான் ஆதவன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
20. யாரோ ஒருத்தி - குகன்
21. செவப்புத் தோல் - ஈ.ரா
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்

கலந்துகொண்டவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள், இனி கலக்கப்போறவங்களுக்கும்.

NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக!

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?

1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்
2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்
3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்
4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ
5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்
6. மாயாவதி, சி.என்.எஸ்
7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி
8. அத்வானி, ஆர்.முத்துக்குமார்
9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்
10. சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர்
11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்
12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா
13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்
14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்
15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா
16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி
17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்
18. மெட்ராஸ் - சென்னை, நந்திதா கிருஷ்ணா
19. தும்பிக்கை வந்தது எப்படி?, ருட்யார்ட் கிப்ளிங்
20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்


கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!

1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in

ஹரன்பிரசன்னா வலைப்பதிவில் கண்டேன், இங்கும் பதிந்தேன். சுட்டி http://www.nizhalkal.blogspot.com/

Friday, October 02, 2009

2016 ஒலிம்பிக்ஸ் எங்கே ??

கோப்பன்ஹேகனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் 2016 ஒலிம்பிக் எங்கே நடக்கப்போகிறது என்று முடிவுசெய்யப்படும்.

இந்த வாய்ப்பை பெற களத்தில் குதித்து கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நகரங்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா ?

சிக்காகோ:

பேரை கேட்டவுடன் பாண்டியராஜனின் அரை பேண்ட் சிக்காக்கோ ஜீன்ஸ் நியாபகம் வருதா ? அமெரிக்க இல்லினாஸ் மாகானத்திலேயே மிகப்பெரிய அழகிய நகரம். 2.8 மில்லியன் மக்கள், அமெரிக்காவிலேயே மிகப்பெரும் நகரங்களின் மூன்றாவது.



1833 இல் இருந்து ஒரு நகரமாக அங்கீகரிக்கப்பட்ட, நார்த் அமெரிக்காவின் மாபெரும் வர்த்தக மற்றும் தொலைதொடர்பு நகரம் இது. விண்டி சிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சிட்டியில் வளைய வந்த ஒபாமா, இப்போது அமெரிக்க அதிபர். அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போராடுகிறது சிக்காகோ.

டோக்கியோ:



ஈஸ்டும் வெஸ்டும் கலந்த பாரம்பரிய டோக்கியோ. கமலகாசனில் இருந்து கவுண்டமணி வரை தயாரிப்பாளர் காசில் சுற்றிப்பார்த்த நகரம். பிரம்மாண்ட ஒலிம்பிக் ஸ்டேடியம் எல்லாம் ஏற்கனவே கட்டிவிட்டு, வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டோக்கியோ என்றால் நன்னீர் கடலில் கலக்கும் இடம் என்று பொருளாம். ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக 500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நகரத்தின் அழகை கூகிளாண்டவரிடம் தேடி பாருங்க. இன்று முழுக்க ரசிக்கலாம்.

நீள அகலத்தில் 90 க்கு 25 கிலோமீட்டர் பகுதி இந்த டோக்கியோ, மொத்த மக்கள் தொகை 12.9 மில்லியனாம். பகல் வேலை நேரத்தில் மட்டும் 25 லட்சம் மக்கள் வேலைக்காகவும் கல்விக்காகவும் டோக்கியா வருகிறார்களாம். அற்புதமாக க்ளைமேட், அழகாக நகரம். நான் சப்போட் செய்வது இவர்களுக்கே.

ரியோ டி ஜெனிரோ:

ரியோ டி ஜெனிரோ அப்படீன்னா ஜனவரியின் ஆறுன்னு அர்த்தம். ப்ரெசிலின் இரண்டாவது பெரிய நகரம். உலக பொருளாதாரத்தின் வளரும் நாடுகள் வரிசையில் இந்தியாவுடன் சேர்த்து பார்க்கப்படும் ப்ரேசில் பொருளாதார வல்லரசாக மாறிக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு ப்ரேசிலின் தலைநகராக இருந்த ரியோ, 11 இல் இருந்து 13 மில்லியன் பாப்புலேஷன் கொண்டது.



கிளுகிளுப்புக்கு பெயர் போன ரியோவின் கார்னிவல்களும் சம்பா நடனமும் ரொம்ப பேமஸ். இந்த சின்ன ஹிண்ட்டோடு நிறுத்திக்கறேன். மேற்கொண்டு கூகிளாண்டவரிடம் தேடி கிளுகிளுத்துகொள்பவர்கள் செய்யலாம். அந்த படங்களை எல்லாம் இங்கன போட முடியாது ஓய். சாம்பிள் ஒன்று மட்டும்..



பீச்சுகளும்,பல்வேறு வகை மக்களும் வாழும் ரியோ, மொத்தமே 14 லட்சம் மக்கள்தொகை கொண்டது.



இது கண்டிப்பாக இளைஞர் பட்டாளத்தின் சாய்ஸ் என்பதி எந்த சந்தேகமும் இல்லை. பெரிசா ஒரு பெருமூச்சோடு அடுத்த இடம் பார்த்துவிடுவோம்.

மாட்ரிட்:



ஸ்பெயின் தலைநகரம். அய்ரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரம். 3.2 மில்லியன் மக்களுடன், 234 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஸ்பெயினின் மாபெரும் நகரம். கரடிகளின் நகரம் என்று முன்பொரு காலத்தில் வழங்கப்பட்டதாம். வரலாற்றில் ரோமானியர்களாலும் ஆளப்பட்ட நகரம்.

உள்நாட்டு போரால் 1930 களில் பாதிக்கப்பட்ட மாட்ரிட், அதன் பின் 1960 களில் ப்ரான்ஸிஸ்கோ ப்ராங்கோ காலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சிகண்டது.



கலையுணர்ச்சியும் வீரமும் அதிகம் கொண்ட ஸ்பானியர்களின் ரசிகன் நான்.

2020 ஒலிம்பிக்ஸ் டெல்லியில் நடக்கவேண்டும் என்று உள்ளூர ஆசையுடன் எழுதப்பட்ட பதிவு. பிடிச்சிருந்தா ஓட்டு குத்துங்க.

Thursday, October 01, 2009

வெண்ணை போல் ஒருவன்



நேரம் : காலை 9 மணி
இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் மொபைல் ஒலிக்கிறது.

போறார் : ஹலோ. கமிஷனர் போறார் ஹியர். ஹூ ஈஸ் திஸ் ?

மிடில் மேன் : ஹெல்லோ. நான் மிடில் மேன் பேசறேன். சி.எம் கிட்ட பேசனும். என்னோட நெகோஷியேட் பண்ணப்போறது யாரு ?

போறார் : முண்டம். சி.எம் கிட்ட பேசனும்னா சி.எம் வீட்டுக்கு போன் போடவேண்டியது தானே ? ஏண்டா எனக்கு போன் பண்றே ?

மிடில் மேன் : சென்னையில இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கறமாதிரி குண்டு இருக்கு. அதே மாதிரி சிட்டி முழுக்க நாலு குண்டு வெச்சிருக்கேன்.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.

போறார் : யோவ்...ரியல்லி ? நீ குண்டு வெச்சது உண்மையா ? ஆர் யூ சீரியஸ் ?

மிடில் மேன் : ஆமா இவர் மிர்ச்சி சுச்சி பாரு. போன் போட்டு காமெடி பண்ண ? யோவ் உண்மையிலேயே குண்டு வெச்சிருக்கேன். உடனே பாம் ஸ்க்வாடை அனுப்பி தேடு. மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.

போறார் : எந்த ஒயரை வெட்டனும்னு பாம் ஸ்க்வாடுக்கு தெரியும். நீ குண்டு வெச்ச இடத்தை பத்தி சொல்லு.

மிடில் மேன் : ஐ ஐ. கஷ்டப்பட்டு குண்டு வெச்சது நானு, இடத்தை சொன்னா நீ நோவாம நோம்பி திங்கலாம்னு பாக்குறியா ? தேடி எடுய்யா நீயே ?

போறார் : மிடில் மேன். ப்ளீஸ் ப்ளீஸ். எங்க இருக்குனு ஒரு க்ளூவாவது குடேன் ப்ளீஸ்..

மிடில் மேன் : சரி ரொம்ப கெஞ்சற. இந்த மேட்டர் முடிஞ்சதும் ரெண்டு பாக்கெட் நேந்திரம் சிப்ஸ் தரேன்னு சொல்லு. க்ளூ தரேன்.

போறார் : (அல்ப்ப பாண்டி பயபுள்ள). சத்தியமா ஏற்பாடு பண்றேன். க்ளூ குடுத்து தொலை.

மிடில் மேன் : அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல தண்ணி வராத எடம் எதுன்னு பார்த்து அங்க தேடச்சொல்லு.

போறார் : பாத்ரூமா ?

மிடில் மேன் : அதே. அதே. வேற பால்கனியிலயா தண்ணி வராது ? என்ன கமிஷனரோ ? அஞ்சு நிமிசத்துல போன் பண்றேன். அப்புறம், வீட்ல எல்லாரும் சவுக்கியமா ? இந்த புட்டுல வாழைப்பழத்தை பிணைஞ்சு சாப்பிட்டா தொண்டையில அடைக்குதே அதுக்கு என்ன செய்வீங்க கேரளாவுல ?

போறார் : (போனை அக்குளில் மறைத்துக்கொண்டு) மிஸ்டர் வெல்லாரியா, சொல்ல மறந்துட்டேன். இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க.

மிடில் மேன் : எனக்கும் கேட்டுது. காலை ட்ரேஸ் பண்றதை மெதுவா சொல்லக்கூட தெரியலை. நீ எல்லாம் என்ன கமிஷனர் ?

...........பீப் பீப் பீப்.........

வெல்லாரியா : சார். ரொம்ப ஷார்ட் கால். ட்ரேஸ் பண்ண முடியல.

போறார் : யோவ் மணிக்கணக்கா பேசிக்கிட்டிருந்தேனே ?

வெல்லாரியா : சார், நீங்க உங்க வீட்டம்மாக்கிட்ட பேசுறீங்கன்னு நினைச்சேன்.

போறார் : சரி அடுத்த காலையாவது ஒழுங்கா ட்ரேஸ் பண்ணித்தொலை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

(பாம் ஸ்க்வாட் பாமை கண்டுபிடித்து மஞ்சள் ஒயரை விட்டுவிட்டு பச்சை ஒயரை வெட்ட பாம் செயலிழக்கிறது. கமிஷனர் போறார், வார் ரூமுக்கு போறார். எல்லோரும் அங்கே அசம்பிளாகி நிற்கிறார்கள்)

போறார் : யாருக்காவது மூச்சா போகனும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க.

எல்லோரும் கோரஸாக : நோ சார். ஏற்கனவே நாங்க போயிட்டோம்.

போறார் : இனிமே இந்த ரூம்ல நடக்கறது இந்த நாலு செவுத்துக்குள்ள தான் இருக்கனும்.

முந்திரி : சார், மேல ஒன்னு கீழ ஒன்னுன்னு ரெண்டு செவுரு இருக்கே, அது வழியா போலாமா ?

போறார் : இவனை தூக்கி போட்டு மிதிங்கடா. (முந்திரியை எல்லோரும் கும்முகிறார்கள்). எல்லோரும் அலர்ட்டா இருங்க. அவன் போன் பண்ணுவான். வெல்லாரியா ட்ரேஸ் பண்ணுவான். போலீஸ் போய் அவனை புடிச்சுடனும்..சி.எம், பி.எம், சீப் செக்கரட்டரி எல்லாருக்கும் போன் போட்டு சொல்லுங்க. ஆயிரம் போலீஸை சென்னை சிட்டியை சுத்தி சுத்தி வரச்சொல்லுங்க...

..ரிங் ரிங்..

போறார் : வேற நம்பர்..ஆனால் அவன் தான். ஆல் டீம் அலர்ட்...

பெண் குரல் : சார், ஐசிஐசிஐ பர்சனல் லோன் டிப்பார்ட்மெண்ட் சார். பத்து பர்சண்ட் இண்ட்ரஸ்ட். உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருக்குனா சொல்லுங்க சார். பார்க், பீச் எங்கியாவது மீட் பண்ணலாம்..

போறார் : ஷிட். போனை வைம்மா. படற லோல் பத்தாதுன்னு லோன் குடுக்க வந்துட்டா. எந்த லோனும் வேண்டாம்...

வெல்லாரியா : சார். காலை ட்ரேஸ் பண்ணியாச்சு. பக்கத்து தெருவுல இருந்து வருது சார்.

போறார் : டேய்...என்ன கொலகாரனாக்காத..எரிச்சலாகிறார்.

...ரிங் ரிங்...

போறார் : இது கண்டிப்பா அவன் தான். எவ்ரிபடி அலர்ட்...

மிடில் மேன் : ஹாய். டைம் பாம் குண்டை எடுத்துட்டீங்களா ? அதுல இருந்த டைம் பீஸ் சரியா அடிக்காது. அதை யூஸ் பண்ணனும்னு நினைக்கவேண்டாம். ஒருமுறை காலை 5 மணி ட்ரெயினுக்கு அலாரம் வெச்சா, சாயங்காலம் 5 மணிக்கு அடிச்சுது.

போறார் : யோவ்..என் கிட்டயே டைம் பீஸ் இருக்கு. நீ வேற எங்க குண்டு வெச்சிருக்க அதை சொல்லு...

...பீப் பீப் பீப்....

போறார் : வெல்லாரியா...ட்ரேஸ் பண்ணியா ? கால் திடீர்னு கட்டாயிருச்சு...

வெல்லாரியா : சார். அவன் ஒரே நம்பர்ல இருந்து தான் போன் பண்ணுறான். திரும்ப அவனுக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுங்க. ஒர்க் ஆவுதா பார்ப்போம்...

போறார் : முண்ட கலப்பை. ஏன் போனே பண்ணலாமே ? கவர்மண்டு காசு தானே ?

வெல்லாரியா : க்ரேட் ஐடியா சார்.

..கமிஷனர் போறார் திரும்ப அதே எண்ணுக்கு அழைக்கிறார்...

போறார் : ரிங் போவுது. ரிங் போவுது. ஆல் டீம் அலர்ட். எல்லோரும் அலர்ட்.

பியூன் ஆறுமுகம் : ஹல்லோ ?

போறார் : மிடில் மேன், என்ன குரலை மாத்தி பேசுற ?

பியூன் ஆறுமுகம் : யோவ். நான் எதுக்கு குரலை மாத்தி பேசனும் ? நீ யார் அதை சொல்லு..

போறார் : நான் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் பேசறேன். யாருய்யா நீ ?

பியூன் ஆறுமுகம் : சாசாசார்...நான் கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஸ்டாப் ஆறுமுகம் பேசறேன் சார். டாக்டர் ரூம்ல மறதியா வெச்சுட்டு போன செல்போனை ஒரு பைத்தியம் எடுத்துக்கிச்சு சார். இப்பத்தான் சார் கஷ்டப்பட்டு புடுங்கினோம்.

போறார் : தேங்கியூ வெரிமச். டேக் கேர் ஆறுமுகம்...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

முன்னாள் கமிஷனர் ஏ.பீ.சீ போறார், பீச்சில் டாபர் மேன் நாயுடன் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

போறார் : யார் அந்த மிடில் மேன். காத்து மாதிரி வந்தான். லூசு மாதிரி பேசினான். பைத்தியத்தோட போனுக்கு சி.எம் வரைக்கும் தொந்தரவு பண்ணதால என்னோட வேலைக்கும் வேட்டு வெச்சான். பச்சை ஒயரை செவுத்துல இருந்து கட் பண்ண பாம் ஸ்க்வாட் எந்த பள்ளிக்கூடத்துல படிச்சானுங்களோ ? எனிவே..ஐ லைக் டு பீ எ மிடில் மேன். ஐ யம் எ ஜெண்டில் மேன். ஆவேனே சூப்பர் மேன். லா லா லா...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Monday, September 14, 2009

Force India F1 மற்றும் டென்னிஸ்



தமிழக ஊடகங்களில் காணகிடைக்கவில்லை. அதனால் நான் எழுதவேண்டியதா போச்சு. இரண்டு ஸ்போர்ட்ஸ் செய்திகள். 1. போர்ஸ் இண்டியா நேற்றைய இட்டாலியன் க்ரான்ப்ரிக்ஸில் நான்காவது இடத்தில் நிறைவு செய்துள்ளது. மொத்தம் பதிமூன்று புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் போர்ஸ் இண்டியா. ட்ரைவர் இருபத்தாறு வயது ஆட்ரியன் சுடில், ஜெர்மனிக்காரர். நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கிவருகிறது போர்ஸ் இண்டியா F1 டீம். நிறுவனர் விஜய் மல்லைய்யா மெருமைப்பட இன்னும் பல விஷயங்கள் நடதேறியிருக்கிறது. 2. யூ.எஸ் ஓப்பன் டென்னிஸில் ரபேல் நடாலை குமுறிவிட்டார் டெல்பெட்ரோ. 6- என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தினார். நடால் எப்பவும் கொஞ்சம் பெரிய டவுசராக போட்டு விளையாடுவார். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே என்னடா டவுசர் சின்னதாக இருக்கிறது, கிழிந்துவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் இப்படி கிழியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஆறுமுறை ரோஜரிடம் நேரடியாக தோற்றவர்தான் டெல் பெட்ரோ. ஆனால் மறுபடி ஒருவாய்ப்பு அவருக்கு, ரோஜருக்கோ, பதினைந்தாவது க்ரான்ஸ்லாம் வரலாற்று கனவு. பார்ப்போம் ஆட்டம் எப்படி அமைகிறது என்று. என்னைப்பொறுத்தவரை, நடாலை வீழ்த்த யாராலும் முடியாது என்று நினைப்பேன். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்பது டைம் டு டைம் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.




நடுவரை முறைத்துக்கொண்ட வில்லிய்ம்ஸும் குழந்தையோடும் பெண்கள் பிரிவிவின் கிம் க்ளிஸ்டர்ஸும் உபரி நியூஸ். பைனஸ்ஸில் கிம்முடன் மோதிய மேடம் Caroline Wozniacki படத்தை பதிவில் போடுகிறேன். நன்றி.முதல் முறையாக யூ எஸ் ஓப்பன் பைனல்ஸ் வந்தவருக்கு இம்சையின் பாராட்டு.

Thursday, September 10, 2009

லக்கிலூக் !!!



கேள்வி : லக்கிலுக் தான் போலி டோண்டா ? அல்லது அவருக்கும் போலி டோண்டுக்கும் கொண்டான் கொடுத்தான் உறவுண்டா ? லக்கிலுக் ஆபாச பதிவு எழுதினாரா ? புரியல தயவு செய்து விளக்கவும்.
பதில் : ஆரம்பத்தில் லக்கிலுக்கும் போலி டோண்டிடம் இருந்து ஆபாச பின்னூட்டங்கள் பெற்றவர்தான். அந்த வகையில் அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்.

அடியேன் போலி டோண்டு மீது புகார் தர காவல் நிலையம் சென்றபோது, முந்தின நாள் இரவு, கணிணி இணைய கடை ஒன்றில், உண்மையார் டைப் செய்த போலி டோண்டு மீதான புகார் ஆவணங்கள், போலி டோண்டு குரல் பதிவு சிடிக்கள் போன்றவற்றை ப்ரிண்ட் அவுட் எடுத்ததில் இருந்து, சிடிக்களை பல பதிவுகளாக பிரதி எடுத்தது வரை அவரே செய்தார். அடியேன் எதிரில் இருந்த முருகன் இட்டிலி கடையில் சென்று உணவருந்தியபோது, இணைய கடை மூடும் நேரம் வந்ததால் அவர் பசியோடு அமர்ந்து இந்த பணியை முடித்தார்.

இந்த விவகாரத்தில் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். !!!!
போலி பதிவு எழுதும் அளவுக்கு அந்த வெகுளியான மனது செல்லாது. அவருடன் ஒரே ஒரு நாள் பழகியவர் கூட இதை கண்டுகொள்வார்.

பி.கு : இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. உங்களுக்கு ஒரு ஜே.

Wednesday, September 09, 2009

திமுக ஆட்சி சரியில்லை - திரு.ராகுல் காந்தி


படம் உதவி : கூகிள் கொம்பனி

தமிழகத்தில் திரு ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்வது தெரிந்ததே. இளைஞர்களையும் விவசாயிகளையும் கட்சியில் சேர்ப்பதே திட்டமாம். அதுவும் இல்லாமல் முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அவரை சந்திக்க தடைவேறு.(அப்ப மாப்பி சஞ்சய் அவரை சந்திக்கமுடியுமா என்ற எடக்குமடக்கான கேள்வியை எழுப்பாதீர்)

ஆங்காங்கே மக்களை சந்தித்து குறை கேட்கிறாராம். மீனவர்களும் மக்களும் தங்களது சொல்லமுடியாத துன்பங்களை ராகுல்ஜியிடம் கொட்டி, வடிகால் தேடுகிறார்களாம்.

குறிப்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்த தமிழக மீனவர் சமுதாயத்தின் கண்ணீரை கர்ச்சீப் வைத்து துடைக்காத குறையாம். அம்புட்டுபேரும், ராகுல்ஜியின் பெருந்தன்மையையும், ஏழைப்பங்காள மனோபாவத்தையும் கண்டு கண்ணீர் உகுக்கிறார்களாம்.

தலைப்பு : திமுக ஆட்சி சரியில்லை

அதாவது, மக்களுக்கு குறையில்லாத ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் நடாத்தினால், ராகுல்ஜி ஏன் இங்கு வந்து மக்களின் குறையை கேட்கப்போகிறார் ?

பி.கு : முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் யாரும் சந்திக்கக்கூடாது என்றால் ராகுல்ஜி தேங்கா மட்டையையும், ஈயம் பித்தாளையையும் தான் சந்திக்கவேண்டும். பர்த்து சட்டிபிக்கேட்டோடு காவல்துறையிடம் ஒரு காங்கிரஸ்காரர் கெஞ்சும் காட்சியை காண சகியாமல் இந்த பதிவு. உங்களது ஆதரவை ஓட்டுகள், மற்றும் கள்ள ஓட்டுகள் குத்துவதன் மூலம் தெரிவிக்கவும்.

Monday, September 07, 2009

திபிசிதி வாக்குமூலம்...கூ..கூ...

உங்களுக்கு இந்த டாப்பிக் பிடிக்கவில்லையென்றால் CHO KA KA O என்று யூ டூபில் தேடி GummiBear என்ற ஆல்பத்தை சந்தோஷமாக பார்க்கவும். நல்லாருக்கு..

பாவம் திரு.திபிசிதி. (இதன் அர்த்தம் தமிழ்நாட்டில் பிறந்த குழம்பிய திராவிடன்)

ஒரு வாக்குமூலமே கொடுத்துவிட்டார். போலி யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. பதிவுலகில் மிக அநாகரீகமாக நடந்துகொண்டவர். (உங்களுக்கு இந்த அநாகரீகம் என்ற வார்த்தையின் உண்மையான வலி புரிய, நீங்கள் திரு.போலியாரிமிருந்து ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் பெற்றவறாயிருக்கவேண்டியது அவசியம்)

திரு.திபிசிதியின் பதிவில்

திபிசிதி:
கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால்,


கோவி.கண்ணன் said...
என்னுடன் நெருக்கமாக பழகிய காரணங்களுக்காக உங்கள் மீது

கூட்டுக்களவாணிகள் திரைப்படத்தில் ஒரு காட்சி கீழே.......



உங்கள் குடும்பத்தை பற்றி அசிங்கமான வார்த்தைகளில் தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்துக்கொண்டும், உங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து, செந்தழல் ரவி என்ற புனைப்பெயரில் எழுதுபவர், பார்ப்பணர்களை பற்றி அவதூறாக எழுதுகிறார், அவரை பணியில் இருந்து நீங்குங்கள் என்றும், தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும்படி உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட போலி வலைப்பதிவில் எழுதியும் வந்தவர்களுடன், நட்போடு இருக்கும் உங்களை குதறாமல் கொஞ்சவா செய்வார்கள் திபிசிதி ? உங்கள் அறிவுக்கு (??) இது எட்டாமல் போனது ஏனோ ?

சென்னை சைபர் க்ரைம் பிரிவில் இப்போதும் உங்கள் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு உங்கள் நன்பர்களும், நன்பர்களின் நன்பர்களும் ரொம்ப செய்துள்ளார்கள். கூட்டுக்களவாணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ இல்லையோ ??

இந்த பதிவு பிடித்திருந்தாலும் பிடிக்காமல் போனாலும் உங்கள் ஓட்டு மூலம் தெரிவிக்கவும்.


பிற்சேர்க்கைகள்

1. இந்த ட்விட்டர் குரூப் இமெயில் அனுப்பும்போது, சாக்கடைகளுக்கும் அனுப்பிவிடுகிறது. ட்விட்டரிடம் கம்ப்ளைண்ட் செய்யவேண்டும்.

2. களவாணிகளின் அலைபேசி எண் கண்டுபிடிப்பது , காவல்துறையினரிடம் கொடுக்கவே.

Sunday, September 06, 2009

YSR மரணம். அதிர்ச்சியில் ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் சாவு


மரணம் கொண்டாடப்படக்கூடியதல்ல. அதன் இழப்பு அதீதமானது. ஆனால் அதை வைத்து செய்தி நிறுவனங்கள் விளையாடும் விளையாட்டு எரிச்சல் தருகிறது.

Tuesday, August 25, 2009

நமது கணினியை உளவு பார்க்கிறதா இட்லிவடை வலைப்பதிவு ?

நான் இப்போதெல்லாம் கூகிள் க்ரோம் உபயோகப்படுத்துகிறேன். காரணம், கூகிள் க்ரோமின் செக்யூரிட்டி எனக்கு பிடித்திருக்கிறது.

இட்லிவடை பதிவை திறந்தால் இட்லிவடை பல குக்கிகளையும், அன்னியலோகம் டாட் காம் என்ற இணைய தளத்தில் இரண்டு குக்கிகளையும் என்னுடைய கணினியில் நிறுவுகின்றது.

குக்கிகள் என்றால் என்ன ? குக்கி என்பது ஒரு உளவாளி போன்றவர். நமது கணியில் அமர்ந்துகொண்டு தகவல்களை வெளி ஆட்களுக்கு தருபவர் இந்த குக்கி.

குக்கி பற்றி திண்ணையில் குமாரபாரதி அவர்கள் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் :

வலைப் பட்சணங்கள்

பிறிதொரு வகை ஊடுருவல், வலையில் உலவும் பொழுது நடைபெறுகிறது. பல வகை பட்சணங்களை - குக்கிகளை கணினியில் (C:WindowCookies) விதைக்கின்றன. பல குக்கிகள் வலைத்தொடரபுகளை விரைவில் ஏற்படுத்தத் துணைபுரிகின்றன. இன்னும் குறிப்பாகக் கூறினால் குக்கிகள் இல்லாமல் சில தளங்களுடன் ஊடாட முடியாது. குக்கிகளை ஏற்றுக் கொள்ளவும் என்ற கட்டளையை Tools>>Internet Options >>Advanced ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் சில வகைக் குக்கிகள் கணினியில் உட்கார்ந்து கொண்டு பல தகவல்களை வெளியேற்று கின்றன.எங்கள் வாழ்வு முறைகள் வாங்கும் பொருட்கள் போன்றவற்றை சந்தைப் படுத்துகை ஆராய்ச்சிகளுக்காக சேகரித்து அனுப்புகின்றன. இவை மிக நாசூக்காகவே இயங்குவன. உலக வலைத்தளத்தில் எனது நடவடிக்கைகளை ஆராய்ந்து இவர்கள் சந்தை கட்ட முனைந்தால் .. .


திண்ணை கட்டுரையின் முழு உரல் > http://www.thinnai.com/?module=displaystory&story_id=40106021&format=html

திண்ணை கட்டுரையின் சுட்டி

குக்கி பற்றிய விக்கி பக்கம். குக்கி விக்கி.



இட்லிவடை இன்ஸ்டால் செய்த இட்லிவடை தளத்தின் குக்கிகள்.




இட்லிவடை இன்ஸ்டால் செய்த அன்னியலோகம் தளத்தின் குக்கிகள்.


குக்கிகள் மூலமாக நாம் ப்ரவுஸ் செய்த தளங்கள், நமது புரொபைல், நமது தனிப்பட்ட தகவல்களை திருடமுடியும். நமது அலுவலகம் எது, நமது நாடு என்ன, நாம் ப்ரவுஸ் செய்யும் கணினி என்ன என்பது வரை திருட முடியும் என்று ஒரு தளத்தில் படித்தேன்.

இட்லிவரை தான் மட்டும் வரவில்லை, அன்னியலோகம் தளத்து நன்பரையும் என்னுடைய கணினி பெட்டிக்குள் நுழைத்துவிட்டார். ஒரு வீட்டுக்குள் சொல்லாமல் நுழைவது ட்ரெஸ்பாஸிங். நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் சொல்லாமல் ஏன் நுழைந்தீர்கள் ?

நான் தினமும் பார்வையிடும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் செய்யாத ஒரு வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் ? உங்களது உண்மையான நோக்கம் என்ன ?

அடியேன் கேட்பது இதுதான். தொழில் நுட்பம் அறியாத பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஏன் இப்படி உளவு பார்க்கிறீர்கள் ? நேர்மையான பதிலை இட்லிவடை குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

Sunday, August 09, 2009

இலங்கை பாஸ்போர்ட் ? விசா கிடையாது : இந்தியன் எம்பஸி


ஆகஸ்ட் 09 2009 : கடந்த ஏழு ஆண்டுகளாக நார்வேயில் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழர் செல்வராசா. இவர் நார்வேயில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆண்டும், நார்வேயின் குளிர்காலத்தில் தமிழகத்தில் பயணம் செய்து, திருத்தலங்களை தரிசனம் செய்வது வழக்கம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, சரவணா ஸ்டோர்ஸ், பழனி முருகன், திருப்பதி , திருவண்ணாமலை போன்ற தலங்களை தரிசிப்பதுடன், பெரிய அளவில் தன்னுடைய நிறுவனத்துக்கு தேவையான பொருட்களையும் கொள்முதல் செய்வார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக சுற்றுப்பயணத்துக்கான விசாவை வழங்கி வந்த இந்தியன் எம்பஸி, இந்தமுறை இந்திய விசா தர மறுத்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், இந்திய எம்பசி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சிகப்பு நிற பாஸ்போர்ட், அதாவது நார்வேஜியன் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே இந்திய விசா தரமுடியும், இலங்கை பாஸ்போட்டுக்கு இந்திய விசா தர முடியாது என்று மறுத்துள்ளனர்.

எந்தவிதமான குற்றப்பின்னணி அற்றவரான செல்வராசா, எழுபது வயதுக்கு மேல் கடந்தவர். தனக்கு ஒரு சீனியர் சிட்டிஸன் என்ற வகையிலாவது இந்தியா செல்ல விசா வழங்கவேண்டும் என்று கோரியபோது, ஓஸ்லோ இந்திய எம்பஸி அதிகாரிகள் எந்த விதத்திலும் மனமிரங்கவில்லையாம்...

தமிழர்கள் இந்தியாவுக்கு வரும்போது, இந்திய சுற்றுலாத்துறையில் இருந்து, விமான துறையில் இருந்து, அவர் தங்கும் ஹோட்டல், அவர் வழக்கமாக வாங்கும் பழனி பஞ்சாமிர்த கடைக்காரரில் இருந்து அனைவருக்கும் லாபமே, எந்த விதத்திலும் நட்டமில்லை.

இது நார்வே எம்பஸியில் மட்டுமா, அல்லது மற்ற அனைத்து எம்பஸிகளிலும் இதே நிலையா, இந்திய வெளியுறவுத்துறை ஏதேனும் குறிப்பிட்ட வகையிலான வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதா, இலங்கை கடவுச்சீட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ?

அப்படி வழிகாட்டும் நெறிமுறைகள் ஏற்கனவே இருந்தால் கடந்த ஐந்தாண்டுகளாக எப்படி அனுமதி வழங்கப்பட்டது ? இதுபோன்ற 'திடீர்' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியுறவுத்துறைக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெரிந்துதான் உருவாக்கப்படுகிறதா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன...

தகவல் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட இந்த நாட்களில், அரசு துறையிலும், அமைச்சகத்தில் இருந்தும் வலைப்பதிவுகளை பார்வையிடுவதாக செய்திகள் வந்துள்ளவேளையில் இதனை வலைப்பதிவு முலம் வெளியிடுகிறேன்..

இந்த பதிவை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆ.ராசா போன்ற வலைப்பதிவு செய்யும் தமிழக அரசுத்துறையினருக்கும் அனுப்புகிறேன், மேலும் ஆங்கிலத்தில் எழுதி, இந்திய எக்ஸ்டர்னல் அபையர்ஸ் மினிஸ்டரிக்கும் அனுப்புகிறேன்..அதனால் உங்கள் மறுமொழிகளில் வேறெதுவும் விவரங்கள் இருந்தால் தெரிவியுங்கள்...இணைத்துக்கொள்கிறேன்...

தமிழக புலனாய்வு பத்திரிகைகள் தொடர்புகொண்டால், மேல்விவரங்களையும் தெரிவிக்கிறேன்.

Monday, August 03, 2009

எங்கே தியாகி எங்கே தியாகி ? 5+

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்ககூடாத இடுகை

இந்த பதிவில் எங்கோ ஒளிந்திருக்கும் தியாகியை கண்டுபிடியுங்கள். அவரது அரும் சாதனைகளை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை. முந்தைய ராக்கி ஷாவந்த் இடுகைக்கு முக்காடு போட்டு வந்து பார்த்தவர்கள் (ஆயிரம் பேருக்கு மேல்) இந்த இடுகையையும் பார்த்து விட்டு, பின்னூட்டத்தில் ஏதாவது ஜொள்ளிவிட்டு மன்னிக்க சொல்லிவிட்டு போகவும்.



















ஆனா இந்த ஆட்டத்துல எதாவது மேட்ச் பிக்ஸிங் இருக்குமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது. ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல் (ரசிகையர் மன்றம்)

Monday, July 27, 2009

வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்...!!!!!!!!!!!!

ஓம். ரீம். ஐஸ் க்ரீம். !! இதுதான் அந்த இரண்டு மந்திரங்கள்.

இதனை தினமும் இரவு பதினோரு மணியில் இருந்து பண்ணிரண்டு மணிவரை இடைவிடாமல் ஜெபித்துவந்தால் வாழ்க்கை வளம்பெறும். இளமை திரும்பும். நீண்ட ஆயுள் கிடைக்கும்..!!!

என்ன நக்கலா !! அப்படீங்கறீங்களா ? அடப்போங்க சார்...!!! எத்தனை பதிவு எழுதினாலும் நாடு திருந்தமாட்டேங்குதே ? பாலியல் வன்முறை நடக்குது...கத்தரிக்காய் கிலோ இருவது ரூபாய் விக்குது. பஸ்ல நடத்துனர் டிக்கெட் சில்லறை தராம ஏமாத்துறார்...!!!

சரி நம்ம உண்மையிலேயே மேட்டருக்கு போவோம்..அங்க சுத்தி இங்க சுத்தி வந்துட்டாண்டா மேட்டருக்கு..!!! என்று டென்ஷன் ஆகவேண்டாம்...இந்தாருங்கள் மூன்று மந்திரங்கள்..!!

1. Take it Easy... !!!
2. One At a Time... !!!


தமிழ் பதிவில் ஆங்கிலத்தில் ஏன் மந்திரம் என்று குழம்பவேண்டாம். சோ எங் பக் என்ற என்னுடைய சவுத் கொரிய ரசிகைக்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்..!!!

முதல் மந்திரத்தை பார்ப்போம்..!!

Take It Easy !!



அடிக்கடி இதை சொல்லுங்கள்...நன்பரிடத்தில்...பணியிடத்தில்...

கடுமையான பணிச்சூழல் அதிகரித்து, மண்டை காய்ந்துகொண்டிருக்கும்போதுகூட.....உங்களுக்கு நீங்களே கூட சொல்லிக்கொள்ளலாம்..!! டேக் இட் ஈஸி...எவ்ளோ ஈஸியான மந்திரம் பாருங்க...

எப்போதெல்லாம் எதாவது ப்ரச்சனை உங்களை சூழ்கிறதோ, அப்போது எதிரில் இருப்பவரிடமும் சொல்லலாம்..மனைவியிடம் கூட அடிக்கடி சொல்லலாம்...உங்கள் பிள்ளையிடம் சொல்லலாம்..

இடுக்கண் வருங்கால் நகுக, என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னதும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்று. இப்போதெல்லாம் இடுக்கண் வந்தால் நகுத்தீர்கள் என்றால் சென்னையென்றால் கீழ்ப்பாக்கம், பெங்களூரென்றால் நிம்ஹான்ஸ். நகுத்தல் என்றால் கன்னட மொழியிலும் சிரித்தல். தெரியுமா ?

பிரச்சினைகள் உங்களை சூழும்போது மனதுக்குள் இதனை சொல்லுங்கள். டேக் இட் ஈஸி. எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் நம்மால். நமக்கு அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறது. டேக் இட் ஈஸி. டேக் இட் ஈஸி. எளிதாக எடுத்துக்கொள்வேன். கோபப்படமாட்டேன். வெற்றியாளன் நான். டேக் இட் ஈஸி...

எங்கே ஒருமுறை சொல்லுங்கள்...டேக் இட் ஈஸி...!!!

One At a Time !!



முதலில் பல பிரச்சினைகளைக்கு காரணம், நாம் பல விஷயங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு, எல்லாவறையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்கவேண்டும் என்று கொலைவெறியோடு அலைவது..ஒரு சிலர், இது போன்று பல செயல்களை, பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் அசகாய திறமையை வளர்த்துக்கொண்டு கலக்குவார்கள். ஆனால் அந்த திறமை குறைவாக கொண்டிருப்பவர்கள், அதையும் செய்யமுடியாமல், இதையும் செய்யமுடியாமல், குடும்ப வாழ்க்கையிலும் மொக்கை, பணியிலும் டொங்கு, பிஸினஸிலும் ஊற்றல் என்று மண்டையை பிய்த்துகொண்டு அலைவார்கள்...!!!

ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அய்யோ, இன்னொரு வேலை இருக்கிறதே, அதை செய்யவில்லையே என்று டென்ஷன் ஆவது...

ப்ரயாரட்டைஸ் செய்யுங்க...மனைவிக்கு ஒரு காபி தந்துவிட்டு, அப்புறம் வாஷிங் மெஷினில் துணி போடுங்க. காபி பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு வாஷிங் மெஷினுக்கு போனால் காபி கொதித்து கீழே கொட்டும். இந்த நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் இன்னும் டென்ஷன் ஆகும்...தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டே காபி பாத்திரத்தை எடுக்க போனீர்கள் என்றால் குழந்தை திடீரென அழும். பாத்ரூமில் லைட் எரிந்து கரண்ட் வேஸ்ட் ஆகும். யாராவது அந்த நேரத்தில் வீட்டு பெல் அடித்தால் டோட்டல் டேமேஜ். இது ஒரு உதாரணம். அடியேனின் சொந்த வாழ்க்கையை இதில் கோர்த்து பார்த்து குஜால் ஆகவேண்டாம்...

எது முதலில். எதற்கு ப்ரயாரிட்டி. அதை சரியாக கணித்து செயல்படுவதில் உங்களுக்கு வெற்றி...வாஷிங் மெஷின். தொலைபேசி அழைப்பு. அப்புறம் பார்க்கலாம். அழும் குழந்தையை எடுங்கள். கேஸ் ஸ்டவ்வை நிறுத்துங்கள். கதவை திறந்து பதில் சொல்லுங்கள். குழந்தையோடு காபியை மனைவிக்கு கொடுத்துவிட்டு, வாஷிங் மெஷின் போங்கள். இது எவ்வளவு எளிமையாக இருக்கிறது ?

எங்கே மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் ஓன் அட் எ டைம்...!!!

இதை கடைபிடித்தால் ஒரு மண்டலம் அதாவது 48 நாளில் கிடைக்காத வெளிநாட்டு பயண ஆசை பூர்த்தியாகும், தடைப்பட்டிருந்த செவ்வாய் தோஷ திருமணம் நடைபெறும், வெகுநாட்களாக வீட்டில் இருக்கும் மகனுக்கு வேலை கிடைக்கும்...!!!


மூன்றாவது மந்திரம் கூட ஒன்று உண்டு. அது எனக்கு பின்னூட்டம் அளித்தாலோ அல்லது ஓட்டு போட்டாலோ சொல்லப்படும்..!!!

Saturday, July 25, 2009

மனைவியின் எடை குறைய எளிய வழிகள்

இன்று வலைமேயும்போது ஈழநேசன் என்ற தளத்தில் எடை குறைய எளிய வழிகள் என்ற கட்டுரையை பார்த்தேன்...!!!



உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த லிங்கு...!!!

ஆமாம் பின்ன...மனைவியிடம் நேரடியாக இதை பகிர்ந்துகொண்டு எவன் உருட்டுகட்டை அடிவாங்குறது ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!!

அப்படி தப்பித்தவறி பகிர்ந்துகொண்டு உடல் நலம் குன்றியவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி : டாக்டர் புருனோ. சென்னை.

Friday, July 24, 2009

பவா செல்லத்துரை - யோகி ராம் சுரத்குமார் . கிழிந்து தொங்கும் பாலகுமாரன்



இன்றைக்கு காலவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்ட, தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமை என்று தன்னைத்தானே தற்பெருமைச்சேற்றில் மூழ்கடித்துக்கொண்ட பாலகுமாரனை பற்றிய பதிவு இது...


சிலசமயம் சில எழுத்துக்கள் என்னை ஆச்சர்யம், கோபம், அதிர்ச்சி என்று கலவையான உணர்வுகளை நோக்கி சுனாமிபோல இழுத்துக்கொண்டு சென்றுவிடும்...

அப்படிப்பட்ட பதிவு இந்த பதிவு..எனக்கென்னமோ இரண்டாம் பாகமான இதனை படித்துவிட்டு, முதல் பாகத்தை படிக்கலாம்போல உள்ளது...



பதிவை போட்டவுடனே...டேய் இவரை கூடவா இதுவரை நீ வாசிக்கவில்லை என்று யாராவது பின்னூட்டமிடும் அபாயத்தினூடே பயணித்தே இந்த சிறு அறிமுகத்தை (அட..எனக்கு நானே) எழுதிக்கொள்கிறேன்...!!!!

Tuesday, July 21, 2009

வரவனையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ?



போட்டோ கமெண்ட் : முஸ்தப்பா முஸ்தப்பா.....!!!!

இப்போ...!!!

வரவணையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ? பின்னூட்டத்தில் சொல்லவும்...இந்த பதிவுக்கு பின்னூட்டம் மறைக்கப்படும். சரியான பதில் சொல்பவருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்.

க்ளூ : அதெல்லாம் ஒன்னும் கொடுக்க முடியாது...!!

அன்புள்ள நர்சிம்...

கொஞ்ச நாளைக்கு முன்னாலயே உங்களுக்கு இந்த லெட்டர் எழுதனும்னு நெனைச்சேன்...ஆனா இப்ப தான் நேரம் கிடைச்சது...

வலையுலகில் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் அப்படீன்னு எடுத்துக்கிட்டா....தேசிகன், லக்கி, அடுத்தபடியா நீங்கதான்...

குழப்பமா எழுதுனா தான் அது எழுத்து, மீதி எல்லாம் ஊறுன உளுந்து அப்படீன்னு நினைக்கிற இந்த காலத்துல, தெளிவான நடையில, என்னை மாதிரி தற்குறிக்கும் புரியற மாதிரி நீங்க எழுதுறது தான் உங்களை ரொம்ப பிடிச்சதுக்கு காரணம்...



ஆமாம்...ஏதோ கேள்விப்பட்டேன்...உங்க பேருல எவனோ பின்னூட்டம் போட்டு உங்க பேரை 'கெடுத்துட்டான்' அப்படீன்னு திரட்டிகள்ல இனிமே இணைக்கமாட்டேன் அப்படீன்னு சொல்லிட்டீங்களாமே ?

ஏம்பா...

யாரோ செய்த அந்த செயல் எப்படி உங்களை, உங்கள் எழுத்தை, உங்கள் முடிவுகளை மாற்றலாம் ?

எழுத்துலகில் மட்டுமா, அல்லது இப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் இருக்கீங்களா ?

பார் எக்ஸாம்பிள்...

நீங்க 100 பேர் வேலை செய்யுற ஒரு கம்பெனியில மேனேஜரா இருக்கீங்க...நல்லா வேலை செய்யற ஒருத்தருக்கு பதவி உயர்வு தர்றீங்க...

ஆனா அது புடிக்காத பொறாமை புடிச்ச பயபுள்ளைக ரெண்டு பேர், உங்க காதுல விழற மாதிரி, பாருடா...அந்த பயல் ஆயில் அடிச்சதால அவனுக்கு மட்டும் பதவி உயர்வு என்று பேசுறாங்க...

இப்ப நீங்க என்ன செய்வீங்க...

1. அவங்களை உடனே கண்டிப்பீங்க...அவங்களோட எண்ணம் தவறுன்னு புரியவைப்பீங்க..
2. அய்யோ அப்படி பேசுறானுங்களே...அப்படீன்னு அந்த நல்லா வேலை செய்யற, நியாயமா பதவி உயர்வு கிடைக்கவேண்டிய நபரோட பதவி உயர்வை பறிச்சுடறீங்க...
3. இப்படி பேசிட்டாங்களே...கவரிமான் பரம்பரையாச்சே நான்..என்று வேலையை விட்டு நின்னுடறீங்க..

தல..மேனேஜ்மெண்ட் ராஜாவான நீங்க இதுல முதல் ஆப்ஷனை தானே நீங்க எடுப்பீங்க...

அதே நேரம் உங்களை பற்றி தெரிந்த, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றவர்கள், இந்த புறணியை கண்டுக்கிடுவாங்கன்னு நினைச்சீங்களா...அப்கோர்ஸ் நாட்...அவங்களுக்கு உங்களை நல்லா தெரியுமாதலால், இதனை புறந்தள்ளிடுவாங்கதானே ?

கார்க்கி தளத்தில், பரிசல் தளத்தில், உங்களை படிக்க லிங்க் தந்திருக்காங்க...எனக்கும் அப்படி லிங்க் தர தெரியும், அல்லது narsim.in அப்படீன்னு நேரடியா உங்க தளத்தின் முகவரியை போட்டு உங்க தளத்துக்கு வரவும் தெரியும்...

சாருவும், ஜெயமோகனும் என்ன திரட்டிகள்ல இணைச்சு வெச்சா எழுதறாங்க ? அவங்க வாசகர்கள் அவர்களை நேரடியா போய் படிக்கலையா ? அது மாதிரி உங்களை படிக்க தெரியும் தல எனக்கு...இருந்தாலும், திரட்டிகள் மூலமாத்தான் நீங்க அறிமுகம். அந்த திரட்டியை விட்டு போறேன் என்று நீங்கள் சொன்னதும் இந்த மடலை எழுத தோனுச்சு எனக்கு...

தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை, புறணி பேசுதலும், பொறாமையும், அடுத்துக்கெடுத்தலும் இருந்துக்கிட்டே தான் இருக்கும் நர்சிம். இதனை புறந்தள்ளி தொடர்ந்து நடைபோடுறதில் தானே உங்கள் நெஞ்சுரம் வெளிச்சமாகும் ?

வெகுஜன இதழ்களில் உங்கள் படைப்புகள் வரும்போதே தெரியலையா, உங்களால் ரசனையாக எழுத முடியுது என்று ? யாரோ எவரோ செய்யும் சிறிய அவதூறுகளை புறந்தள்ளி, மீண்டும் திரட்டிகளில் நீங்கள் நடைபோடுவதை காண ஆவலாயிருக்கும் நன்பனின் மடல்...!!!

Monday, July 20, 2009

யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தின் அறிவிப்பு !!!



இது நன்பர் ரமேஷ் அவர்களின் மின் அஞ்சலோட சிக்னேச்சருங்க...இவருக்கு எதையாவது இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யலைன்னா தூக்கம் வராது. எதையாவது யாருக்காவது செய்துக்கிட்டே இருக்கனும், நம்மால நாலு பேருக்காவது பயன் கிடைக்கனும் என்று எப்போதும் நினைப்பவர்..

அவர் இணைந்திருக்கும் யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தோட இணைய தளத்தை பற்றி வலையுலகில் அறிமுகப்படுத்தறது தான் இந்த பதிவின் நோக்கம்...!!!

யூ.ஏ.இ தமிழ்சங்கத்தின் இணையதளத்தின் சுட்டி http://www.uaetamilsangam.com/

யூ ஏ இ வேலைவாய்ப்புகள் http://www.uaetamilsangam.com/jobsinuaeweb.asp
குழந்தைகளுக்கான பக்கம் http://www.uaetamilsangam.com/utschilddict.asp
திருமண தகவல் மையம் : http://www.uaetamilsangam.com/utsmembersarea.asp

இவங்க ஆன்லைன் ஆக்டிவிட்டீஸ் சிலது

1) ஆன்லைன் க்விஸ் , மாசம் ரெண்டு பேருக்கு பரிசு
2) லைபரரி புக்ஸ்
3) தமிழ் படங்களுக்கான லைபரரி
4) தங்கம் விலை பற்றி தகவல்
5) தமிழக செய்திகள்

ரமேஷை தொடர்புகொள்ள ramesh@uaetamilsangam.com

இம்சையை கூட்டுபவைகளை அண் இன்ஸ்ட்டால் செய்ய..

சில ப்ரொக்ராம்கள் நிரந்தரமாக நமது கணினியில் உட்கார்ந்து மொக்கை போட்டுக்கொண்டிருக்கும். அண் இன்ஸ்ட்டால் செய்ய போனாலோ முடியவே முடியாது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுரு, நான் என் வேலையை பார்த்துக்கறேன் என்று விட்டுவிடுவீர்கள்..

அதுவும் உங்கள் கணிணியிலேயே தங்கிவிடும்...

அது ச்சும்மா இருந்தா பரவாயில்லை. வைரஸாக இருந்து தொலைந்தால் ? அவ்வப்போது கணிணி ரீபூட் ஆவது, ஆமையை விட மெதுவாக நகருவது, வாடிப்பட்டியில் இருப்பவருக்கு இமெயில் அனுப்பினால் பஸ்ஸ்டாண்டு வரைக்கும் கூட போகாமல் திரும்பி வந்துவிடுவது என்று ஆயிரத்தெட்டு தொல்லை கொடுக்கும்...

இதுக்கெல்லாம் சூனியம் வைப்பதுபோல நம்ம பில்பூனைகள் அய்யா (பில்கேட்ஸ்ங்க) ஒரு தீர்வை தந்துள்ளார்...



http://support.microsoft.com/default.aspx?scid=kb;[LN];290301

மேற்கானும் இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்யும் இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி, அதனை திறந்து, தேவை இல்லாத ஐட்டங்களை எல்லாம் டெட்டால், ப்ராஸோ ஊற்றி கழுவி, உங்க கணினியை பளபளப்பாக மாற்றவும்...

உங்கள் நீண்டகால தொல்லைகளை க்ளிக் செய்து, ரிமூவ் என்ற பட்டனை மட்டும் அமுக்கவும். க்ளியர் ஆல் என்ற பட்டனை அமுக்கினால் எல்லாமே பூடும். ஜாக்கிரதை...!!!!

Thursday, July 16, 2009

கூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்



பிரபல வறுவல்..மன்னிக்க..பதிவர் சக்திவேல் குறித்து அனைவரும் அறிவோம். இப்போதெல்லாம் எந்த திரட்டியை திறந்தாலும் அந்த திரட்டியில் முதன்மையான பதிவராக முன்னனியில் நிற்கும் திரு சக்திபேல் இன்றைக்கு கூகிள் நிறுவனத்தை நோக்கி தன்னுடைய அறச்சீற்றமானதொரு கேள்விக்கணையை தொடுத்துள்ளார்.

இதுக்கு மேல புண்ணூட்டத்தில் மட்டுமே பேசப்படும். வயிறு குலுங்கவைக்கும் ஒரு புண்ணூட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்...

Monday, July 13, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!

சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல...

சுவாரஸ்ய விருதுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இது ஒரு தொடர் விருது வழங்கும் விழா...

நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..

நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்...

கடைசியா எனக்கும் இதே விருது உங்கள் யார் கையாலயாவது கெடைக்கும் என்ற நம்பிக்கையில்..

இந்தாங்க...!!

எவ்ளோ அழகா எழுதறார். கூகிள் விளம்பரங்களை பற்றி இவர் எளிமையா போட்ட ரெண்டு பதிவே போதும்...இவரை பற்றி சொல்ல..தமிழில் தொழில்நுட்பம் இவருடைய நெஞ்சத்தில் இருந்து இன்னும் இன்னும் வரவேண்டும்...
பயபுள்ள பெட்னாவை கவர் செய்த விதம் என்ன, அங்கே நடந்த நிகழ்வை கொச்சைப்படுத்த ஒரு பத்திரிக்கையாளை நோக்கி அறச்சீற்றம் கொண்டதென்ன, ஆஹா. எழிலாய் பழமைபேசும் இவருக்கு கண்டிப்பாக ஒரு விருது...
பொதுவாக எழுத்தில் அரிதாக கைவருவது நகைச்சுவை உணர்ச்சி. அது குடுகுடுப்பையாரிடம் இயல்பாகவே வந்து அமர்ந்துவிட்டது. மொக்கையான மாலைப்பொழுதுகளில் குடுகுடுப்பையாரின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தால் வெடிச்சிரிப்பு க்யாரண்டி. இந்தாய்யா விருது...
அமித்து குட்டிப்பொண்ணோட லூட்டிகளும், அவர்களோட அனுபவங்களும், நாமே அமித்து குட்டி கூட விளையாடுவதை போன்று தோன்றும்...வாழ்க்கையை அமித்து பாப்பாவின் ஊடாக கற்று, விளையாடி, வாழ்ந்துவரும் அவர்களுக்கு இந்தாங்க விருது...
ஜாலியாக பொழுதுபோகும் இன்னொரு வலைப்பக்கம் இது. இந்த ஆளும் காமெடியில் பின்னுவான். சடை இல்லை. காமெடி. சில சமயம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட நம்மை சிரிக்கவைக்கும்...இந்தா புடி விருது...
ஒருமுறை சந்தித்தபோது சொன்னார். ஒரு அம்பது பதிவு ரெடி பண்ணிட்டு அப்புறம் ஒவ்வொன்னா போட்டு எப்படி கலக்கறேன் பாரு, என்று. சகோதரி பட்டாம்பூச்சி, இன்னும் 50 பதிவை தொடவில்லை என்றாலும், ஒபாமா பதிவு, 32 கேள்விபதில் என்று தொடர்ந்து எழுதுகிறார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த விருது...!!!
இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...அவர்களை உற்சாகப்படுத்த இது ஒரு நல்ல டானிக்.






விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!!




அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



எப்படி இருந்த நான்...
(போஸ் :கல்கி விஜயகுமார்...)















இப்படி
ஆய்ட்டேன்...
(போஸ் : மம்மி பகவான்...)



அம்மா பகவான் படத்துல தேன் வழியுதாம்...!!! அட பதர்களே ? படத்தில் எப்படிடா தேன் வழியும் ? எல்லாம் இந்த அல்லேலூயா கும்பல் கத்துக்கொடுத்தது...

இயேசு சிலையில் இருந்து கண்ணீர் வழியுதுன்னு சொன்ன வெளிநாட்டு சரக்கை, உள்நாட்டு டாஸ்மாக்ல கொண்டுவந்துட்டது எதோ ஒரு வீணாப்போனது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................




..............................



பொன்னர் சங்கர் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில், பொன்னராகவும், சங்கராகவும் நடிக்கிறார்.

கிரகலட்சுமியிடம் இருந்து தப்பிச்ச உனக்கு இப்படி ஒரு கெரகமா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

..............................

விடுதலை சிறுத்தைகள் ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்...!!! திருமா...





















வடிவேலு : இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது ?
பூச்சுபாண்டி : அது அவனுங்களோட தல விதி...