Monday, December 17, 2012

நான் Fresher. எனக்கு எதுவும் தெரியாது..


காலையில் நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தார் ஒரு இளம்பொறியாளர். (Fresher). என்ன செய்கிறார் என்று விசாரித்தேன். கடந்த ஆண்டு BE படிப்பை முடித்துவிட்டு ஒரு ஆண்டாக வேலை தேடுகிறார்.

என்ன தெரியும் என்று கேட்டேன்.. C, C++ என்று கல்லூரியில் படித்த சப்ஜெக்டுகளை சொன்னார். அதில் ஆழமான / இண்டஸ்ட்ரிக்கு தேவைப்படும் விஷயங்கள் அவருக்கு தெரியவில்லை அல்லது கற்பிக்கப்படவில்லை...

ஆக அவரை நேரடியாக ஒரு பணியில் உட்கார வைத்து வேலை வாங்க முடியாது. ட்ரெயினிங் தரவேண்டும். ஒரு இரண்டு மாதங்களாவது ஆகும்.

வேலை தேடும் இந்த ஒரு ஆண்டில் அண்ட்ராய்ட், ஐபோன், HTML5, வெப் சர்வீசஸ், XML, நெட்வொர்க்கிங் என்று எதையாவது பழகினீ ர்களா என்றேன், அதுவும் இல்லை.

புற்றீசல் போல முளைத்திருக்கும் கணிணி படிப்பை சொல்லித்தரும் டிவி விளம்பர ஸ்காலர்ஷிப் நிறுவனங்களிடம் ரெண்டு சர்ட்டிபிக்கேட்ஸ் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அது இண்டஸ்ட்ரிக்கு தேவையானதாக / லேட்டஸ்ட் டெக்னாலஜியாக இருக்கவில்லை...

ஆக, ஒரு ப்ரஷ்ஷர் அல்லது இளம்பொறியாளராக இருப்பவருக்கு உருப்படியாக எதுவும் தெரிவதில்லை, அல்லது என்ன தெரியவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்றும் தெரியவில்லை.

ஏதாவது ஓப்பன் சோர்ஸ் போரம்மில் இணைந்துள்ளாரா / தனியாக ஏதுவும் ப்ராஜக்ட் செய்துள்ளாரா என்று பார்த்தேன் அதுவும் இல்லை.

ஆக, படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், மனதில் பயத்தோடு, வேலை வேண்டுமே என்று தேடுவதை செய்கிறார்கள், பேஸ் புக்கில் "நான் எஞ்ஜினீயர் எனக்கு வேலை இல்லை" என்று ஏதாவது ஒரு த்ராபை குழுமத்தில் இணைந்து போட்டோஷாப் வேலைகள் செய்து விளையாடுகிறார்கள்.

ஆனால் இந்த இண்டஸ்ட்ரி என்ன மாதிரியான ஆட்களை தேடுகிறது அதற்கு எப்படி தகுதியாவது என்று ஆழமாக சிந்திப்பதே இல்லை...

"வேலை வேண்டும் என்றால் எக்ஸ்பீரியன்ஸ் தேவை என்று சொல்கிறாயே, நீ வேலை கொடுத்தாத்தாண்டா எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்" என்பது இளம்பொறியாளர்கள் மத்தியில் எப்போதும் வளைய வரும் ஜோக்.

எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா ?  எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் என்ன செய்யுறாங்க என்று பார்த்து அதை செய்யுங்க. CAD CAM Civil என்று அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடியது தான் இது.  (IT துறைக்கு அதிகம் பொருந்தும்).

ஒரு ஆண்டு 'வேலை தேடிய வேலை' செய்தமைக்கு கூடவே அண்ட்ராய்ட் / HTML5 / SQL Server / Web Development அப்படீன்னு எதையாவது செய்துகொண்டே இருந்தால் அதை வேலைக்கான நேர்முகத்தேர்வில் உங்களை ஷோகேஸ் செய்ய பயன்படுத்தலாமே ?

ஒரு டிசைனர் அவருடைய டிசைன்களை கையோடு கொண்டுபோய் காட்டினால் - அந்த டிசைன் அற்புதமாக இருந்தால் - வேலை தருவாங்களா மாட்டாங்களா ? அந்த டிசைன் தானே அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் ? பி.டெக், பி.இ, எம்.இ, எம்.சி.ஏ முடித்துவிட்டு உங்கள் துறையில் ப்ராக்டிக்கலாக என்ன செய்யமுடியுமோ (தகவல் தொழில் நுட்ப துறையாக இருந்தால் ஒரு மொபைல் அப்ளிக்கேஷன் செய்யலாம்) அதை செய்யுங்களேன். அதை உங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆக காட்டுங்களேன்...

நீங்கள் இப்படி களத்தில் குதித்து ராப்பகலாக உங்கள் துறையில் உழைக்கும்போது நல்ல வேலையும் உங்களை தேடிவரும், உங்கள் பெற்றோரும், நன்பர்களும் உங்களை மதிப்பார்கள் ! நீண்ட நாட்களாக சொல்லவேண்டும் என்று தோன்றிய விஷயம். மனதின் பாரம். இறக்கி வைத்துவிட்டேன்...

டெயில் பீஸ் : நேர்முகத்தேர்வில் அந்த இளம்பொறியாளரை கனத்த இதயத்தோடு ரிஜெக்ட் செய்துவிட்டேன்...!!! 


Tuesday, October 30, 2012

பவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமம்



பவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமத்தை உருவாக்கியுள்ளோம்...

http://www.facebook.com/groups/384202364990745/

பவா செல்லத்துரை பற்றிய எனது 2009 ஆண்டு பதிவு http://imsai.blogspot.in/2009/07/blog-post_24.html (படங்கள் எல்லாம் காணவில்லை)..

அந்த சமயத்தில் பால குமாரன் அவர்களை பற்றிய கொலைவெறியில் இருந்தவன். என்னடா இவரது புத்தகங்களில் ரொம்ப அறிவுரை சொல்லி கொடுமைப்படுத்துகிறார் என்று...

ஆனால் பாலகுமாரன் ஆட்சி செய்த காலத்தில் அவரது தேவை இருந்திருக்கிறது. அவரும் பலரை நல்வழிப்படுத்தியிருக்கிறார் என்று உணர்ந்திருக்கிறேன்...சாரி பாலகுமாரன்...

லெட்ஸ் கம் பேக் டு த பாய்ண்ட்...

மறுபடி லிங்க் தரேன், இது தான் பேஸ்புக் குழுமம்...

http://www.facebook.com/groups/384202364990745/

தமிழின் வெகுஜன ஊடகங்கள் பவாவை, கோணங்கியை, ஆர்.பி.ராஜநாயஹத்தை கொண்டாடவேண்டும்...அவர்களுடைய எழுத்துத்தான் நேர்மையான எழுத்து...

சாரு மற்றும் ஜெயமோகனின் இணைய தளங்கள் வழியாக இருவரும் ஓவர் எக்ஸ்போஸ் ஆகிவிட்டார்கள் :)))

பவாவையும் இந்த பேஸ்புக் குழுமத்தில் சிறிய போஸ்டுகள் கூடிய விரைவில் போடவைப்போம்...அவரை தீவிர வாசகர்கள் ஏற்கனவே அறிந்திருப்பார்கள்..அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு முயற்சி தான் இந்த குழுமம்...சேரும் அனைவருக்கும் நன்றி...

Monday, October 29, 2012

ஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி ?

தோழி கவிதா அவர்களை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...

அடியேன் சமீபத்தில் ஒரு பதிவிட்டேன். அதன் இணைய முகவரியை ட்விட்டரில் கொடுத்து அனைவரையும் படிக்குமாறு கேட்டேன். அந்த முகவரி http://imsai.blogspot.in/2012/10/blog-post_29.html

இதை நீங்களா எழுதியது ? படிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். இருந்தாலும் அடியேன் அவர்களை படிச்சுருங்க என்று கெஞ்சி காலில் விழுந்து கதறி கேட்கும் ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அதை வன்மையான காமெடி மொழியில் பின் இணைப்புடன் தரும் வகையில் பதில் ட்வீட். இதனை ஸ்க்ரீன் ஷாட் மேனிப்புலேட் செய்பவர்கள், இணையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொடுக்க வாய்ப்பு உண்டு. பெயிண்ட் ப்ரஷ்ஷில் இரண்டு நிமிடத்தில் இந்த இரண்டு ஸ்கீரீன் ஷாட்கள் (ஒரிஜினல், மேனிப்புலேட் செய்யப்பட்டது) தயாரிக்கப்பட்டது. பாருங்கள்...


படம் 1



படம் 2


டிஸ்கி : இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். அடுத்த நிமிடம் டெலீட் செய்ய காத்திருக்கிறேன்..இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...

தினத்தந்தியில் இருந்து எழுந்த உள்ளொளி !!

ஒரு மொக்கை பதிவை எழுதக்கூட பல முறை யோசிக்கவேண்டிய காலகட்டதை உருவாக்கியவர்களே. உங்களுக்கு என்னை எல்லாம் பார்த்தால் பாவமாக இல்லையா ? சரி பரவாயில்லை. அங்கங்கே திரு சார் எல்லாம் போட்டு மரியாதையாக திட்டி எழுதிக்கொள்கிறேன்..



எழுத்துலக பிதாமகனார், பல ஆயிரம் பக்கங்களுக்கு காத்திரமான நாவல்களை (கதபுக் என்கிறார் தோழர் கல்வெட்டு என்கிற பலூன் மாமா) எழுதி குவித்த, குவிக்கும், குவிக்கப்போகும் இலக்கிய சூப்பர் ஸ்டார் ஜெயமோகன் சார் சமீபத்தில் இணையத்தில் நடந்த சில அக்கப்போர்களை பற்றி தனது முத்தான கருத்துக்களை தனது வலைப்பூவில் உதிர்த்திருக்கிறார்..சாம்பிளுக்கு ரெண்டு...

- சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவருக்கு ஆபாச தாக்குதல் தொடுத்தார்கள், அவரது படத்தை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பினார்கள். இது அவரது முதல் பதிவில் பொங்கியதன் சாராம்சம். இந்த விடயம் அவர் காலையில் படிக்கும் தினத்தந்தி அல்லது தினமலரில் வந்திருக்கலாம் (http://www.jeyamohan.in/ என்ற இணைய தளத்தில் இருக்கும். என் நேரக்கொடுமை இந்த கந்தாயம் என்னுடைய கணினியில் திறக்க மறுக்கிறது. சரியான சுட்டியை கொடுக்க இயலவில்லை. இதற்கு என்னுடைய வாசகர்களிடம் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)

- சம்பந்தபட்ட பலான பலான நபருக்கு உதவ 15 லட்சம் அளவுக்கு பணம் சேர்த்துள்ளார்கள். இந்த விஷயம் அவரது நட்பு வட்டத்தில் உள்ள எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் சொல்லியது. இதுவும் அவரது பதிவிலேயே இருக்கிறது...அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர் எனக்கு தெரிந்து திரு சிரில் அலெக்ஸ் சார். வலைப்பதிவு / சற்றுமுன் காலத்தில் இருந்து (6 ஆண்டுகளாக) அவரை அறிந்தவன் அடியேன்..அவர் இது போன்ற மொக்கையான தகவலை சொல்லமாட்டார். ஆகவே மேற்படி தகவலை அவரைப்போன்றதொரு தினத்தந்தி தினமலர் சொம்பு சார் தான் சொல்லியிருக்கவேண்டும்... 



இந்த குறிப்பிட்ட விடயம் பற்றி அடியேன் கடைசியாக ட்வீட்டியதொரு ட்வீட்டு எப்படி போகிறதென்றால் தனிப்பட்ட வன்மம் மற்றும் சண்டை போன்றவைகளை நியூஸ் வொர்தியாக்க அவரை தொடர்ந்து பாலோ செய்து போலி பெயரில் பின் தொடர்ந்து அவர் ஆட்சியாளர்களை விமர்சிக்கும்போதெல்லாம் ஸ்க்ரீன் ஷாட் திரைச்சொட்டு எடுத்து குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இணையம் அறிந்த இனவெறியரான (சூத்திரர்களை ஆபாசமாக திட்டியவர் - திரைச்சொட்டு இருக்கிறது) பல்லாவரத்தான் என்பவர் உதவியோடு பழிவாங்கப்பட்டார் என்கிறது. (Safe Para கரெக்டுதானே) 

இணையத்தில் இன்று புழங்குகிற நடுநிலை நட்டநடு செண்டர் வாதிகளில் இருந்து, தீவிர தமிழ் தேசிய திடீர் குபீர் இணைய புரட்சியாளர்கள் வரையிலும், கபடநாடகவேடதாரி போலி கம்யூனிஸ்டுகள் வரையிலும், கணிப்பொறி வல்லுனர்கள், டி.டி.பி ஆப்பரேட்டர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள் அனைவரும் அறிந்ததான உண்மை இது..

இவர்கள் தான் உங்களை கொண்டாடி, உங்கள் புத்தகங்களை காசு கொடுத்து எக்போக்களிலும், டயல் பார் புக்ஸ்களிலும், புத்தக கடைகளிலும் வாங்குபவர்கள்.. உங்களது சோ கால்ட் (திரு சோ ராமசாமி அவதூறு வழக்கு போட்டுடப்போறார்). so called  இணைய தினத்தந்தி தினமலர் கக்கூஸ் / காபி ரீடிங் சொம்புகள் ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள் அல்ல...

ஆகவே இன்றைக்கு அனைவரும் அறிந்த பிரச்சனையில் நீங்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல  வேட்டி அவிழ்ந்த குடிகாரனைப்போல அம்பலப்பட்டு நிற்பது கண்டு உண்மையில் பரிதாபப்படுகிறேன் சார். உங்களை நேருக்கு நேர் டவுசர் கழட்டி கேள்வி கேட்டு உங்கள் வாசகர் வட்ட (??) கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஆர்.பி.ராஜநாயஹம் அளவுக்கு நான் பெரிய வாசகன் அல்ல. உங்களது புத்தகம் ஒன்று கூட அடியேடினிடம் இல்லை. (வாங்கலாம் என்றிருந்தேன், ஆனால் இனி வாங்கப்போவதும் இல்லை)..

எனக்கு எழும் கேள்வி எல்லாம் இது தான் நித்யானந்த யதியிம் இருந்து பெற்ற உள்ளொளியா ? இந்த அவதூறு தான் இந்து ஞான மரபு தமிழ் கூறும் நல் உலகுக்கு தந்ததா ? இது தான் உங்கள் வாசகருக்கு நீங்க அளிக்கும் மன அமைதியா / ஆறுதலா ? இது தான் உங்களை பெரிய அறிவு ஜீவி என்று இது காறும் எண்ணிய அடியேனைப்போன்றவர்களுக்கு (அட என்னைத்தான் சொல்கிறேன்) நீங்கள் காட்டும் நித்திய பரிசுத்த தூய போற்றுதலுக்குறிய மன வெளிச்சமா ? 

இந்த குறிப்பிட்ட பிரச்சனையில் உங்களது காத்திரமான இலக்கிய கத புத்தகத்தை பல பேர் முன்பு கிழித்து போட்ட திரு சாரு நிவேதிதா சாரும் கருத்து சொல்லியிருக்கிறார். அவரை யாரும் மதிக்கப்போவதில்லை. அவரது தீவிர வாசகர் / ஆதரவாளரான திரு யுவக்கிருஷ்ணா கூட மனம் நொந்திருக்கிறார்...அவரை பற்றி எல்லாருக்கும் தெரியும் (உதா : நித்யானந்தா வெளியிட்ட கடிதமும் ஒரு பெண்ணிடம் இணையத்தில் அவர் காட்டிய வக்கிரமும்), ஆகவே 90 சதவீதம் பேர் அவரை புறக்கணித்துவிடுவார்கள். ஆனால் நீங்களும் இந்த பிரச்சனையில் டவுசர் கழண்டு நிற்பீர்கள் என்று உண்மையில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...

அப்புறம் என்ன...இந்த பதிவு 100 பேருக்காவது ஷேர் ஆகும். பேஸ்புக்கில் / ட்விட்டரில் / கூகிள் ப்ளஸ்ஸில் நானே ஷேர் செய்வேன். (எனக்கு மார்க்கெட்டிங் நான் தானே சார்)...உங்கள் புத்தகங்களை நான் புறக்கணிப்பது போல இன்னும் 100 பேர் புறக்கணிக்கமாட்டார்களா என்ற நம்பிக்கையில் மெய் நிகர் உலகான இந்த இணையம் மூலமாக உங்கள் பொற்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து உள்ளம் உருகி வணங்கி உங்கள் பாதங்களை முத்தமிட்டு உளப்பூர்வமாக சொல்கிறேன், நீங்கள் ஒரு மரண மொக்கை சார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பதிவை முடிக்கிறேன்..


Sunday, October 28, 2012

அப்பார்ட்மெண்ட் வாசிகளே ! உஷார் !



காலையிலேயே அப்பார்ட்மெண்ட் சொசைட்டியினரிடம் இருந்து மின்னஞ்சல். அப்பார்ட்மெண்டில் இணைந்து அப்பார்ட்மெண்டுக்கு உள்ளேயே (மொத்தம் 1000 வீடுகள்) இருந்த மளிகை கடை பையன் பொருட்களை கொடுக்க வந்தபோது வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்..

இங்கே மளிகைகடை, மெடிக்கல்ஸ், பார்பர் ஷாப் என்று அனைத்து வசதிகளும் அப்பார்ட்மெண்ட் உள்ளேயே இருப்பதால், எக்ஸ்டென்ஷன் போனை கொண்டு தக்காளி ஒரு கிலோ, பூண்டு கால்கிலோ என்று சொன்னால் மளிகைப்பொருளை ஆள் அனுப்பி வீட்டுக்கே கொடுப்பார்கள். அப்படி வந்த ஒரு பையன் இந்த கொடூர செயலை செய்துள்ளான்..காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்கள், மளிகை கடையை உடனே அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறுமாறு சொசைட்டியினர் சொல்லிவிட்டார்கள்.

இந்த கொடூரத்தில் இருந்து மீண்டுவர அந்த சிறுமிக்கு எவ்வளவு நாள் பிடிக்குமோ ? இந்த அப்பார்ட்மெண்ட்டில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்று இதுநாள் வரை நினைத்திருந்த என்னுடைய நினைப்பில் சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது இந்த சம்பவம். பெற்றோர்களில் அக்கறையின்மை என்று சொல்வதா அல்லது பாலியல் வறட்சியில் அலையும் சமூகத்தை சொல்வதா ?

Sunday, October 21, 2012

உயிர்காப்போம் - உதவி தேவை !!

கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளின் முட்டைகள் அடைகாக்கப் படாமல் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. அவைகள் செயற்கையாக அடைகாக்கப் பட இன்குபேட்டர் தேவைப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் பறவைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிட முடியுமாம். பல அரிய வகைப் பறவைகளும் இருக்கின்றன. அவைகளில் பெருக்கத்திற்கு இது பேருதவியாக இருக்கும்.

30 முட்டைகள் வைக்கும் அளவு ஆடோமேடிக் இன்குபேட்டருக்கான விலை வ
ிவரம் ...

30 eggs capacity fully automatic incubator - ரூ. 15500

Package charges - ரூ. 500

Total charges including transport - ரூ. 16000
For more details about incubator please contact - Mahesh – ph - +91-9787525252

16000 ரூபாயை ஒருவரே தர முடியாதுன்னு தெரியும். நண்பர்கள் இணைந்து வாங்கித் தரலாம். முடிந்தவர்கள் உதவி செய்யவும்..


என்று தோழர் சஞ்ஜெய் பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இன்று என்னுடைய பங்களிப்பை செலுத்த இருக்கிறேன். 

நீங்களும் உதவி செய்ய விரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள், அக்கவுண்ட் நம்பர் தருகிறேன். இந்த இன்குபேட்டரை வாங்கி வைப்பது தொடர்பான முழு தகவல்களையும் அவ்வப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு அப்டேட் செய்துவிடுகிறேன்...

Saturday, October 20, 2012

நைஜீரியா ராகவன்

திரு நைஜீரியா ராகவன் அவர்களது மகன் அர்விந்த் மறைந்துவிட்டார். இப்போதுதான் தகவல் அறிந்தேன். ஒரு முறை புதுகை அப்துல்லாவுடன் இருக்கும் படத்தை சேமித்து வைத்திருந்தேன்...இன்றைக்கும் கண்ணிலேயே இருக்கிறது. ஆழ்ந்த அஞ்சலிகள் !!


Friday, October 19, 2012

பாடகி சின்மயி Vs ட்விட்டர் ராஜன்



பாடகி சின்மயி, கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்துள்ளார். ஒன்று அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்பது. மற்றையது தமிழ் இணைய ட்விட்டர் உலகில் இருக்கும் சிலர் தனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் / தொந்தரவு தருகிறார்கள் என்று. அதில் ஒரு குறிப்பிட்ட நபர் (ராஜன் இல்லாத மற்றைய ஒருவர்) மீது மேலும் கடுமையான புகாரை சொல்லியிருக்கிறார்...

இதில் ராஜன் தவிர்த்து மற்றைய யாரும் எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு முறைகூட தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் அல்ல. அதனால் அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பதை பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் பாடகி சின்மயியின் மாடஸ்டியை குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் இணைய உலகில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவருக்கு மிரட்டல் விடுத்திருந்தாலோ அல்லது அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தாலோ அதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

தமிழக காவல்துறை, அதிலும் சைபர் க்ரைம், தமிழ் இணைய உலகுக்கு பரிச்சயமானது தான். தமிழ் இணையத்தில் அனைவரையும் ஆபாச அர்ச்சனை செய்துவந்த ஒரு சைக்கோவை வெறும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் வைத்து டவுசரை கழட்டி உட்காரவைத்தவர்கள். கூகிள் / ட்விட்டர் / யாஹூ உட்பட அனைத்து நிறுவனங்களும் தமிழக காவல்துறை அனுப்பும் மின்னஞ்சலுக்கு உடனே பதில் தருகிறார்கள். மின்னஞ்சல் முகவரி / ட்விட்டர் முகவரியை உருவாக்கியதில் இருந்து என்ன என்ன எழுதியிருந்தாலும் (டெலீட் செய்யப்பட்டவை உட்பட) முழுமையான பி.டி.எப் கோப்பாக அனுப்பிவிடுகிறார்கள். ஆகவே இதுபோன்ற சைபர் குற்றங்களில் தமிழக காவல்துறையின் அனுபவம் பற்றியோ, அல்லது அவர்களின் வேகம் பற்றியோ எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை...

ஆனால் இந்த குறிப்பிட்ட புகார் எப்படி தொடங்கியது என்பது பற்றி எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்...(சமீப காலங்களில் ட்விட்டர் முகவரி உருவாக்கியவர்களுக்கு இது பற்றி தெரியாது, அவர்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்பதை விட, டெல்லியில் இருந்துகொண்டு என்னால் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகி விளக்கம் கொடுக்க இயலாத நிலையில் என்னால் முடிந்த வகையில் ஆரம்பகால தகவல்களை பதிவு செய்து வைப்பது என் கடமை என்று கருதுகிறேன்).

மேலும் பொதுவாகவே பெண் புகார் கொடுத்தால் இளகும் மனம் உள்ள காவல் துறையினர், பாடகி சின்மயி போன்ற ஒரு பிரபலம் / செலப்ரட்டி புகார் கொடுத்தால் எதிர் தரப்பில் உள்ள சிவிலியன்கள் (ராஜன் உட்பட), என்ன சொல்லியிருக்கிறார்கள் / செய்திருக்கிறார்கள் என்று அவர்களது விளக்கத்தை தர கூட அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறியே...!!! அதனால் இது போன்ற விளக்கத்தை எழுதி, எனக்கு தெரிந்த காவல்துறை நன்பர்கள் மூலம் அவர்களுக்கு முன்பே கிடைக்குமாறு செய்வதும் இந்த பிரச்சனையில் இரண்டு தரப்பையும் விளக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். (மேலும் இந்த வாரம் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் பெரிதாக ஏதும் நடைபெற்றிருக்காது என்று நம்புகிறேன்)..

பீடிகையிலேயே பீடி குடிக்க போகும் அளவுக்கு ப்ளேடு போடாதே ரவி விஷயத்துக்கு வா என்று அண்ணன் உண்மைத்தமிழன் அலறுகிறார்...!!

- பாடகி சின்மயி ட்விட்டருக்கு வந்தபோது உற்சாகமாக அனைவரும் பாலோ செய்தோம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது கருத்துக்களை தெரிந்துகொள்ள....


- இலங்கை படையினர் தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற ஒரு நிகழ்வின்போது, மீனவன் மீனை கொல்றான், சிங்கள படையினர் மீனவனை கொல்றான் என்ற வகையில் ஒரு ட்வீட்டை இட்டார். இது பரந்துபட்ட அளவில் அனைத்து தமிழ் ட்வீட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு எழ காரணமாக இருந்தது. தமிழ் உணர்வாளர்கள், நடுநிலையாளர்கள், பெண்கள் என அனைவரும் பாடகி சின்மயிக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை எழுதினார்கள். பாடகி சின்மயி, இதற்கு மறுப்போ மன்னிப்போ தெரிவிக்காமல், நான் ப்ராமின் என்பதால் என்னை தாக்குகிறீர்கள் என்ற ரீதியில் - சரியாக நினைவில்லை - எழுதினார். அதே நேரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் தடை செய்தார். இந்த குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக பங்கேற்க இயலாத வகையில் பணி சுமை இருந்தது. அதனால் நான் இதில் கலந்துகொள்ள இயலவில்லை...


- சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு என்று தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை தூற்றி எழுதினார். பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் சொன்னார். இது அவரது கருத்து என்ற வகையில் அல்லாமல், வன்மம் தெறிக்கும் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தார். நானும் என்னைப்போல மற்றவர்களும் அவரை கேள்வி கேட்டோம். சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து அதன் படியே இட ஒதுக்கீடு அமையவேண்டும் என்று நான் அவரிடம் விவாதம் செய்தேன். விவாதம் என்னவோ ஆரோக்கியமான வகையில் தான் சென்றது. ஆனால் ஒரு பிரபலம் / செலப்ரட்டி என்பதற்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லாமல் தன்னுடைய கருத்தை எதிர்த்து கருத்து சொன்னவர்களை எல்லாம் க்ளிக் / ப்ளாக் (தடை செய்வது) செய்தார். ஒரு கட்டத்தில் தமிழில் பதில் சொன்னவர்களை எல்லாம் தடை செய்தார். குறைந்தபட்சம் 100 பேரையாவது தடை செய்திருப்பார் என்பது என் கணிப்பு. பள்ளிக்கூட பிள்ளைகள் டூ விடுவது போல மிகையான இம்மெச்சூரிட்டியோடு நடந்துகொண்டார்...

இது தான் ஆரம்பம்.

இதன் பிறகு ராஜன் என்ன சொன்னாலும் அது தன்னை நோக்கித்தான் சொல்கிறார் என்ற வகையில் நடந்துகொண்டார். அதற்கு தூபம் போடுவது போல அவருடைய பாலோவர் ஆக இருக்கும் சில தோழர்கள் / தோழிகள் அவருக்கு தவறான வழிகாட்டியாக இருந்து "ஏய் அவன் உன்னைத்தான் சொல்கிறான்" என்பது போல அந்த ட்வீட்டுகளை எல்லாம் படம் எடுத்து பாடகி சின்மயிக்கு தொடந்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்...

ஒரு படத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முயலும் வைகை புயல் வடிவேலு, புரோக்கராக செயல்பட்ட சிங்க முத்துவுக்கு கமிஷன் தொகையினை தர மறுக்க, சொம்பு கேட்கிறான், தங்க சொம்பு கேட்கிறான் என்று சொல்லியும், அதிலும், வடிவேலு காலை தூக்கி கொசு அடிக்க, "அங்க பாரு சொம்புக்காக ஒத்தை காலில் நிற்கிறான்" என்று ஒரே போடாக போட்டு தரும அடி வாங்க வைத்து கல்யாணத்தையே நிறுத்துவார்...

 இறுதியில் அந்த நிலையானதுங்க இந்த பிரச்சனை...

ராஜனை பொறுத்த வரை இது தான் நேர்ந்தது. ஆனால் ராஜனுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு சில அல்லக்கைகள் ஓவராக நடந்துகொண்டார்கள், (அதிலும் குறிப்பிட்ட ஒருவர் படு ஆபாசமாக பேசியிருக்கிறார் )..அவர்களை கண்டறிந்து (அதற்கான ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் பாடகி சின்மயி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்) தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அதன் மூலம் தமிழ் இணையத்தில் பெண்கள் மேலும் சுகந்திரமாக இயங்கும் நிலை ஏற்படவேண்டும் என்பது சரியானதே...

இதை பற்றி மேலும் பார்த்தோமானால், பொதுவாகவே தமிழ் இணையத்தில் பெண்கள் சுகந்திரமாக இயங்க இயலாத சூழ்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே ஏற்பட்டது. பெண்கள் தொட்டா சிணுங்கிகளாக இருக்கிறார்கள் என்பதை விட, அடிப்படை மனித பண்புகள், தனிமனித ஒழுக்கம் இல்லாத வீணாப்போனதுகளும் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பங்கேற்க தொடங்கியதும் ஒரு காரணம். இதற்கு காரணம், நமது கல்வி முறை. ஒழுக்கத்தை கட்டுப்பாடாக கற்பிக்கிறோமே தவிர, அதனை ஒரு வாழ்வியல் முறையாக கற்பிப்பது இல்லை. இதற்கு காரணம் மெக்காலே. ஆங்கிலேய ஆட்சி. இப்படி காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இவை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மாறப்போவதில்லை. பெண்கள் தான் மாற வேண்டும். you have to be more stronger in the social networks. நெல்லில் அடித்தால் கல்லில் அடியுங்கள். இது தான் தேவை. இதன் மூலம் தான், படிப்பினை தந்து மாற்றத்தை கொண்டுவர முடியும். கொஞ்சம் off topic ஆக போகிறேன் என்று நினைக்கிறேன்...!!

நான் சொல்ல நினைத்ததை கன்வே செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...!!

மேலும் ராஜனோ அல்லது அவரது டிசைப்பிள்ஸோ வேறு என்ன வகையில் பாடகி சின்மயிக்கு மன உளைச்சல் தந்தார்கள் என்பது பற்றி வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாத நிலையில், எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டேன்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ராஜன் உட்பட இந்த பிரச்சனையில் இருக்கும் யாரையும் நான் சந்தித்ததே இல்லை. ராஜனிடம் மட்டும் சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்...வேறு ஒரு பிரச்சனையில், மனித தன்மை இல்லாமல் நடந்துகொண்ட ராஜன் உட்பட அனைவரையும் ப்ளாக் செய்துவிட்டேன்..இதனால் இவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் எழுதுவதும் இவர்களுக்கு போகாது :)))

எல்லோரும் வாழ்க வளமுடன்...

பி.கு: சில மாதம் முன் சென்னை சென்றிருந்தபோது, பாடகி சின்மயியை சந்தித்து இது குறித்து விளக்கம் தர முயன்றபோது, அவர் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவில்லை...

(பதிவில் உள்ள படம் உதவி : விக்கிபீடியா)

Thursday, October 18, 2012

மாவீரர் மாதமும் தமிழ் அடிப்படைவாதிகளும் !!!



இளையராஜா நவம்பர் மாதம் கனடாவில் (நவம்பர் 3) - ரோஜர்ஸ் செண்டரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்...இது கனடாவில் அல்லது முழு நார்த் அமெரிக்காவில் அவரது முதல் இசை கச்சேரி என்று சொல்கிறார்கள்..

அடியேன் இளைய ராஜாவை விட ஏ.ஆர்.ரகுமானை அதிகம் ரசிப்பவன். நான் இசையை ரசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் இறுதியில் இளையராஜாவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்து, ரகுமான் கோலோச்சிக்கொண்டிருந்தார்...

இளையராஜாவின் பல பாடல்கள் விருப்பம் என்றாலும் (மூனாவது படிக்கும்போது ஏனென்று தெரியாமல் விரும்பிய ஏதோ..மோஹம்...ஏதோ தாகம் பாடலாகட்டும்...பத்தாவது படிக்கும்போது பக்காவாக மனதில் இறங்கிய பனிவிழும் மலர்வனமாகட்டும்) அவரே பாடும் பாடல்கள் கொஞ்சம் கொலைவெறியை தூண்டுவது என்னவோ உண்மைதான்..முரளி படத்தில் எம்பாட்டு எம்பாட்டு என்று அவர் பாடியபோது வெறுப்பாகி திரையரங்கில் பக்கத்தில் இருந்த ஆளை கடித்து வைத்து அவர் மருத்துவமனை போனதெல்லாம் வேறு கதை)..

ஏ.ஆர்.ரகுமானைப்போல பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தாமல் ஏசுதாஸ், சித்ரா, எஸ்பிபி, அவுங்க யாரும் ப்ரீயா இல்லைன்னாலோ இல்லை எஸ்.பி.பிக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் தானே பாடுவது என்றதொரு குண்டு சட்டியை வைத்து டிங்கிரி டம்பா ஆடிக்கொண்டிருந்ததும் என் விருப்பமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்...

பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது அவரது தொழில் சம்பந்தமானது என்று எப்படி புறக்கணித்தோமோ அதே போல லண்டனோ பாரீஸோ கனடாவோ அவுஸ்திரேலியாவோ, எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாட்டு கட்டட்டும், டிங்கிரி டம்பா பாடட்டும். குத்தாட்டம் போடட்டும்..யார் வேண்டாம்ங்கறா ?

இது தான் நமது நிலை...(நமதுன்னா, அட அது நான் தாங்க)..

ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் புலம் பெயர் தேசங்களில் இயங்கிவரும் ஏஜெண்டுகள், இது மாவீரர் மாதம், இந்த மாதத்தில் இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், களியாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துவதும், அதை கச்சிதமாக கவ்விக்கொண்ட தமிழக ஏஜெண்டுகள், போலி தமிழ் தேசிய வாதிகள், திடீர் குபீர் புரட்சியாளர்கள், பேசுபுக், ட்விட்டர் போராளிகள், புலம்பெயர் தேசங்களில் இருந்து ஏற்கனவே வாங்கிய காசுக்கும், இனி வரப்போகும் டாலர் பவுண்டுகளுக்கும் கூவுபவர்களும், திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் எதிர்த்து அரசியல் நடத்தும் போராளிகள், நாங்க தான் தமிழர், மீதி பேரெல்லாம் தெலுங்கர், மே 17, 18, 19, 20 என்று எல்லாம் பேன்ஸி நேமில் புரட்சி கட்சி நடத்தும் அமைப்பினர்,   வலியுறுத்துகிறார்கள்...

உண்மை ஒன்று தான். இதன் பின் புலம் இது தான்.

தாயகத்தில் / ஈழத்தில் இப்போது போர் இல்லை. என்ன சொல்லி பணம் வசூலிப்பது ? இப்படியே விட்டால் நாம் பார்ம் அவுட் ஆகிவிடுவோம் என்று பயந்து தான், ஈழக்கனவு, அகண்ட தமிழகம், லெமூரியா கண்டம் என்று அவ்வப்போது அடித்துவிட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இடைத்தரகர் கும்பல் இது போன்ற மொக்கையான புரட்சியை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்...

ஈழப்போர் நடந்தபோது ஒபசிட்டியில் இருக்கும் பிள்ளைகளை உடற்பயிற்சி கூடத்துக்கு அனுப்பிவிட்டு இணையத்தில் எதாவது போட்டோஷாப் செய்து கம்பேனி நடத்திய இந்த கும்பல், புலம்பெயர் தேசங்களில் வகை வகையான வாகனங்களில் வலம் வரும் இந்த கும்பல், தங்கள் இடைத்தரகர் ஜாப்பை காத்துக்கொள்ள, பொதுமக்களிடம் இருந்தும், வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் பணத்தை அறவிட இது போன்ற உண்ர்வை தூண்டும் வகையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்.

இனி பணம் / நிதி கேட்டால் இது வரை கொடுத்த நிதிக்கு கணக்கு கேளுங்கள். துடைப்பகட்டையாலோ முறத்தாலோ அடித்து விரட்டுங்கள். இது போன்ற அடிப்படைவாதிகளை மாவீரர் மாதம் முழுவதும் பட்டினி கிடக்க சொல்லுங்கள், பட்டானாக பறந்துவிடுவார்கள்...மிரட்டல் விடுத்தால் அந்த அந்த நாடுகளில் உள்ள காவல் துறையில் சொல்லி நடவடிக்கை எடுங்கள்...

இளையராஜா அல்ல, எந்த ராஜாவும் எந்த ஊரிலும் தொழில் செய்ய - அது மே மாதமாக இருந்தாலும் சரி, ஜூன் மாதமாக இருந்தாலும் சரி, நவம்பர் மாதமாக இருந்தாலும் சரி, உரிமை உண்டு.

டிஸ்கி : நான் மாவீரகளையும் அவர்களின் அளப்பரிய தியாகங்களையும் மதிப்பவன், இடைத்தரகர்களையும், புலிகள் பெயரால் பணம் வசூலித்து சுகமாக வாழுபவர்களையும் வெறுப்பவன்...!!!

Tuesday, October 16, 2012

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...!!!!!

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...!!!!!
==============================



தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.

1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88

2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்

3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794

4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700

5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்

6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107

7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி

எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி

9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034

10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)

11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317

12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282

13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்ப் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950

14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்

15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540

16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098

17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு

18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018

19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722

20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059

21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522

22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598

23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119

24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380

25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195

26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012

27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை

28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820

29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107

30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243

31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105

32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921

33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105

34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்

35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202

36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111

37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275

38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்

39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246

40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை

41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596

42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்

43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203

44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411

44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்

45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்

46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்

47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் குளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்

48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095

49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்

50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767

51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007

52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்

53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,

54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825

55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்

56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை

57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்

58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்

59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642

60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்

61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1

62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001

63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்

64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375

65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்

66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு.


நன்றி: ஜீரோ பட்ஜெட் இணைய தளம் / பேஸ்புக்

தகவல் : 

Saturday, October 13, 2012

மாற்றான் - விமர்சனம்.


கூட்டிக்கிட்டு போறதெல்லாம் ஆங்கிலம், ஹிந்தி. கல்லூரி காலத்தில் தமிழ் படத்தை த்யேட்டரில் பார்த்ததோடு சரி என்று தங்கமணி ஒரு பாட்டம் புலம்பி வைக்க...(ஏற்கனவே இந்த விஜய் ரசிகை துப்பாக்கிக்கு டிட்டெக் புக் செய்துவிடுவார் என்ற சந்தேகங்கள் இருந்தாலும்), சரி டிக்கெட்ட போடு என்றேன்...

பி.வி.ஆர், கடைசி இருக்கைகள் மூன்று (இப்போதெல்லாம் மகளுக்கும் சேர்த்து - 4 வயது ஆகப்போகிறது, மடியில் உட்காருவதில்லை) புக் செய்தாயிற்று.

படத்துக்கு கிளம்பும் முன் கேபிள் சங்கர் மாற்றான் விமர்சனம் என்று கூகிளில் தேடினேன். விமர்சனம் எழுதியிருந்தார். வழக்கம்போல அவரது அரசியலை அதில் புகுத்தியிருந்தாலும் படத்தில் லாஜிக் ஓட்டை அது இது என்று மரண மொக்கை என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். ஏற்கனவே கேபிள் சங்கர் மொக்கை என்று சொல்லிய படங்கள் சூப்பராகவும், அவர் சூப்பர் என்று சொல்லிய படங்கள் த்ராபையாகவும் இருந்து - அனுபவப்பட்டவன் என்ற முறையில் படத்தை சந்தோஷமாகவே எதிர்கொள்ள தயாராக இருந்தேன்...



நாலு நாற்பது படத்துக்கு 4 மணிக்கு காரை எடுத்தால் வழியில் கடும் ட்ராபிக். 5:10 க்கு தான் படத்துக்குள் நுழைய முடிந்தது. தமிழ் படத்தை பொறுத்தவரை க்ளைமாக்ஸில் உட்கார்ந்தாலும் கதை புரியும் என்ற நியதிப்படி, மூன்றாவது பாப்கார்னை கொறிக்கும்போது கதை புரிய ஆரம்பித்தது. 

என்னை பொறுத்தவரை படத்தின் ப்ளஸ்கள்..

இரண்டு சூர்யாக்கள் - அவர்களை திரையில் கொண்டுவர அவரது கடுமையான உழைப்பு.
காஜல் அகர்வால் - அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். சப்பி சீக்ஸ், ரோஸீ லிப்ஸ் என்று ரைம்ஸ் பாடலாம் போலிருக்கிறது..



இசை - ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு. அந்த பாடல்களை உயிர்ப்போடு கொடுக்க சூர்யா(க்கள்), காஜல் அகர்வால், இயக்குனர், உதவி இயக்குனர்கள், பாரின் லொக்கேஷன்கள்..பிண்ணனி இசையும் பரவாயில்லை. (இது என்ன கொரியன் மூவியா பிண்ணனி இசையிலேயே வாழுறதுக்கு ? எல்லாம் இதுக்கு இது போதும் போங்கயா)..



வசனம் : பல இடங்களில் அட போடவைக்கும் வசனம். சுபா நன்றாக எழுதியிருக்கிறார்... (க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரையும் கூட்டிவாங்கப்பா)



திரைக்கதை, இயக்கம் : பொதுவாக வேகமான திரைக்கதையை தர முயற்சி பண்ணியிருக்கிறார் கேவி ஆனந்த். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

குறை : படத்தில் சந்தானம் / வடிவேலு / விவேக் - அட குறைந்த பட்சம் ஒரு சிவ கார்த்திகேயனையாவது போட்டிருக்கலாம். ஆனாலும் அது பெரிய குறையாக தெரியாமல் படம் மின்னல் வேகத்தில் போகிறது. சில இடங்களில் சூர்யாவின் வசனமே காமெடியில் ஸ்கோர் செய்கிறது. (த்யேட்டர் ரெஸ்பான்ஸ்)..

மொத்தத்தில் படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஏதுவானது. (எந்த இடத்திலும் ஆபாச காட்சிகளோ, முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளோ, அருவருப்பான விஷயங்களோ இல்லை. அறுவை சிகிச்சை நடைபெறுவதை அப்படியே காட்டும்போது சில பேர் விரும்பாமல் போகலாம்..). என்னுடைய மார்க் - நூத்துக்கு 80.

டிஸ்கிகள் : சூர்யாவோ, கேவி ஆனந்தோ, காஜல் அகர்வாலோ, அல்லது படத்தை வினியோகிக்கும் தோழர்களோ எனக்கு மாமன் மச்சான் மச்சினி உறவு இல்லை. இந்த விமர்சனத்தின் பின்னால் எந்த அரசியலும் இல்லை. படத்தை காசு கொடுத்து திரை அரங்கில் பார்த்த வெறும் பார்வையாளனாக என்னுடைய சொந்த கருத்தை பதிவு செய்கிறேன்... ஏதோ ஒரு ஆங்கில படம் பார்த்து இயக்குனர் காப்பி அடித்தார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்...வலைப்பதிவுகளில் வரும் விமர்சனங்கள் அந்த வலைப்பதிவர்களின் சொந்த கருத்துக்கள். அதனால் நீங்கள் படத்தை பார்த்து முடிவு செய்யுங்கள். 


Thursday, October 11, 2012

நித்யானந்தா Vs ஆர்த்தி ராவ் -> நீதிபதி கே சந்துரு


Vs


நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு எழுதவேண்டிய தேவை இருக்கிறது. என்னுடைய வாசகர்கள் (அப்படி யாராவது இருந்தா) மன்னிக்க. இந்த பதிவு பரபரப்புக்காகவோ / சூடான இடுகையில் வரவேண்டுமென்றோ எழுதப்படுவதல்ல...

இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் செய்தி. நித்யானந்தா நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஆர்த்தி ராவ் மற்றும் லெனின் கருப்பன் ஆகியோர் செய்தி / காட்சி ஊடகங்களுக்கு தன்னைப்பற்றி பேட்டிகள் வழங்கக்கூடாது என்பது அவரது மனுவின் சாராம்சம்.

இதனை விசாரித்த நீதியரசர் சந்துரு (நீதிபதி என்று சொன்னால் போதும் என்று சொல்கிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை. நீதியரசர் என்பது தனிமனித துதி என்கிறார். அப்ப சினிமாவில் காண்பிப்பதுபோல இப்பல்லாம் மை லார்ட் - யுவர் ஹானர் சொல்வதில்லையா ? ) - மறுபதி விஷயத்துக்கு வருகிறேன். நீதிபதி சந்துரு, இந்த மனுவை நிராகரித்திருக்கிறார்.

நீதிமன்றத்தை அணுகுபவர்கள் சுத்தமான கையோடு இருக்கவேண்டும் (Clean Hands) என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார்.

நித்யானந்தா பற்றிய வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இருக்கிறது, இன்னும் தீர்ப்பு வரவில்லை. அப்படி இருக்கையில் நித்யானந்தா Clean Hands இல்லாதவர் என்ற முன் முடிவோடு நித்யானந்தாவின் மனுவை நீதிபதி நிராகரித்திருக்கிறார். இது முறையா ? இதன் மூலம் செய்தி / காட்சி ஊடகங்களில் (அவை அவதூறா அல்லது உண்மையா என்பது வேறு வழக்கு) வந்த செய்திகளால் நீதிபதி இன்ப்ளூயன்ஸ் செய்யப்பட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுகிறது என்று ட்விட்டர் குறுந்தகவல் தளத்தில் பதிவிட்டேன்.

நீதிபதி கே சந்துரு அவர்கள் ஒரு வழக்கில் போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை (அவர்களது வழக்கு மேல் முறையீட்டில் தள்ளுபடி செய்யப்பட்டபிறகும் திருப்பி தர உத்தரவிடவில்லை - டெக்னிக்கலாக மறுத்துவிட்டார் (அப்பவே ஏன் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு போடவில்லை என்று சொல்லி)) என்று என் தந்தையார் ஆறு மாதம் முன்பு சொன்னது நியாபகம் வருகிறது...அதுவும் அந்த குறுந்தகவலுக்கு காரணம்..

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எனக்கு பதிலாக கொடுத்த விடயங்களை, திரு ரெக்ஸ் அருள் மறுத்திருக்கிறார்...

வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் பதில்கள்..

Prabhu Rajadurai ‏:@prabhuadv

clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition

However the clean hands principle won't apply here Judges sometimes stretch it too far, even to personal character & repute


செந்தழல்_ரவி ‏@senthazalravi
@prabhuadv அதை தான் சார் நான் சொல்கிறேன். நீதியரசர் அதிகப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார் என்று.


செந்தழல்_ரவி ‏@senthazalravi
@prabhuadv இது போல சிரி சிரி ரவிஷங்கர் மீது அவதூறு செய்பவர்கள் பற்றிய வழக்கு வந்தால் ( அவர் மீது இப்போது எந்த குற்றச்சாட்டும் இல்லை)


Rex Arul ‏@rexarul\

@prabhuadv /:clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition:/ @senthazalravi

@prabhuadv Prabhu, you are DEAD wrong on this fallacious claim. You're entitled to your opinion, which can be wrong or right

@prabhuadv But, here you are wrong. Supreme Court of India has repeatedly clarified the "clean hands" doctrine. @senthazalravi 3/

@prabhuadv It never said that "clean-hands" doctrine applies only to WRIT & not ORIGINAL or APPELLATE side. That's ur view

@prabhuadv Supreme Court of India has repeatedly clarified that any litigant-writ or otherwise-approaching w/ vexatious @senthazalravi 5/

@prabhuadv claims & unclean hands to mislead by prevarications & outright lies comes under "fraud vitiates all" doctrine @senthazalravi

@prabhuadv Right from "State of Haryana Vs. Karnal Distillery Co Ltd" to "G Jayshree & ors Vs. Bhagwandas S Patel & ors"

@prabhuadv it's simple & clear: do NOT lie to the court. Get that Prabhu? Do NOT lie to the courts. That's heart of it @senthazalravi 8/

@prabhuadv "It is settled law that a person who approaches the Court for grant of relief, equitable or otherwise " @senthazalravi 9/

@prabhuadv " is under a solemn obligation to candidly disclose all the material/important facts " @senthazalravi 10/

@prabhuadv "which have bearing on the adjudication of the issues raised in the case. In other words, " @senthazalravi 11/

@prabhuadv "he owes a duty to the court to bring out all the facts and refrain from concealing/suppressing" @senthazalravi 12/

@prabhuadv "any material fact within his knowledge or which he could have known by exercising diligence expected " @senthazalravi

@prabhuadv "of a person of ordinary prudence.If he is found guilty of concealment of material facts or making an attempt "@senthazalravi

@prabhuadv "to pollute the pure stream of justice, the court not only has the right but a duty to deny relief to such person" @senthazalravi

@prabhuadv Those were Supreme Court of India's words on "unclean hands" doctrine & "fraud vitiates all". @senthazalravi 15/

@prabhuadv You may have your own compulsions to attack "clean hands" doctrine as I can understand.But,pls don't mislead

@prabhuadv What you tweeted is your misunderstanding of law. Jurisprudence & settled-law is different than ur opinion

@prabhuadv To even remotely impute "unclean hands" not applicable 2 other branches of law except Writ as u say is travesty.

@senthazalravi நான் இந்திய உச்ச நீதிமன்ற மேற்கோள்களை காட்டினேன். அமெரிக்காவில் perjury என்னும் கோட்பாட்டுக்கு அருகில் வரும் @prabhuadv

@senthazalravi ஒரு case law evolution தான் இந்திய நீதிமன்றங்களின் "unclean hands" concept. இதன் அடுத்த பரிணாமம் perjuryஐ @prabhuadv

@senthazalravi வேரோடு அறுப்பது தான். இந்திய உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு இது குறித்து வேறு ஒரு landmark தீர்ப்பு வழங்கியது @prabhuadv

திரு ரெக்ஸ் அருள் தான் ஒரு வழக்கறிஞர் அல்ல என்றும், தான் ஒரு பொறியாளர் என்றும் தெரிவித்திருக்கிறார்..சட்ட புத்தகங்களில் இருந்தெல்லாம் உதாரணம் தருகிறார்...கலக்குறீங்க...இது பற்றி உங்கள் இருவரின் முழுமையான கருத்தை ட்விட்டர் குறுந்தளத்தில் (இவர்கள் இருவருக்கும் நேரம் இருக்கும்போது எழுதினார்கள் என்றால் படிக்க அருமையாக இருக்கும்)...

பதிவில் இருக்கும் படங்களை கூகிள் இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் (நித்யானந்தா அவர்கள் அல்லது ஆர்த்தி ராவ் அவர்கள் கேட்டுக்கொண்டால் நீக்கிவிட தயாராக இருக்கிறேன்..ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ரொம்ப சட்ட சிக்கல் பாக்கவேண்டியிருக்கு இப்பல்லாம்..)

கொஞ்சம் சம்பந்தம் இல்லாத அப்டேட்: கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான கேள்விகளுடன் உச்சநீதிமன்றத்தை அணுகி அதில் மத்திய அரசு / அணுசக்தி கழகம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள் பூவுலகின் நன்பர்கள் (வலைப்பதிவர்கள் அனைவரும் அறிந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன்). வாழ்த்துக்கள் !!!! மிக்க மகிழ்ச்சி...


Wednesday, September 26, 2012

சோதனை பதிவு

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதையும் கடைசி வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணி பாக்குறீயே தோழா/தோழி நீ அவ்ளோ வெட்டியாவா இருக்க ?