Thursday, September 13, 2007

ஜாதிப்புத்தியை தேடி.....



இப்படி பைனாக்குலர்ல பார்த்தா ஜாதிப்புத்தி தெரியுமா தெரியலையே ? வளர்மதி எப்படி கண்டுபிடிச்சாரு ஜாதிப்புத்திய ? எனக்கு தெரிஞ்சு இந்த ஒருவருட பழக்கத்தில சுகுணா என்ன ஜாதின்னு எனக்கோ, நான் என்ன ஜாதின்னு அவருக்கோ தெரிஞ்சுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கல...அப்படியே தெரிஞ்சு என்ன ஆகப்போவுது ?

சுகுணாக்கிட்ட நாப்பதாயிரம் அமவுண்ட்ட வாங்கிக்கிட்டு ஏமாத்தினாரா வளர்மதி ? அதுக்கு ஏன் இன்னும் விளக்கம் சொல்லல ?

பென்சில் திருடிட்டான், பல்ப்பம் திருடிட்டான் அப்படின்னு சிறுபிள்ளைத்தனமா வளர்மதி எழுதியதை பார்த்தவுடன் சீரியஸா ஆவுறதுக்கு பதில் எனக்கு கடுமையா சிரிப்புத்தான் வந்தது...சுகுணா அடிக்கடி பயன்படுத்தும் பின்னவீனத்துவ வார்த்தைகள் தெருவுக்கு தெரு குழாயடியில் கிடைக்குமே ? அதுக்கெல்லாம் காப்பிரைட் வாங்கச்சொல்றாரா ?

ஆனா சுகுணாவும் இதுக்கு ரொம்ப டென்ஷனாகியது (சாவலாம்போல இருக்கு, இருபத்தெட்டு எனக்கு கொஞ்சம் ஓவரோன்னு தான் தோனுது...என்னுடைய குடும்பம் பற்றியும் என்னுடைய பிறப்பு பற்றியும் மூர்த்தி மலேசியாவில் இருந்து அசிங்கமா எழுதியபோது, அதை பற்றி தனக்கு ஒரு கருத்தும் இல்லை என்று கூலாக இருந்தவர், இப்போ தன்னைப்பற்றி ஒருத்தர் எழுதினவுடன் "ம்மாத்தேன் போ, உம்மாச்சி கண்ணைக்குத்தும்" ரேஞ்சுக்கு செய்வது சரியா ?

ஒருத்தன் அசிங்கமா திட்டினால், அது வெறும் கெட்ட வார்த்தை...சுகுணாவை பொறுத்தவரை...ஆனால் அவன் உன்னைத்திட்டினால், அது உன் மனதை புண்படுத்தும் வார்த்தை...அது இப்போ புரிஞ்சிருக்குமில்ல...எங்களை திட்டினப்ப, தோழர் டூண்டு...இப்ப அவன் இவன் வளர்மதியா ? இது என்னப்பா நியாயம் ?

இந்தவிஷயத்தில் தோழர் வரவணையான் என்ன சொல்கிறார் என்று தெரிந்தால் தான் மேல் விவரம் புரியவரும்...ஆனால் நடுவில் நான் தேவையில்லாம ஒரு பதிவு போட்டு அது சரியான நேரத்தில் அநாகரீக ஜாதிப்புத்தி பதிவுக்கு கீழே அமர்ந்ததால் என்னை ஒருவேளை சுகுணா தவறா நினைப்பாரோ என்று நினைத்தேன்...ஆனா அப்படி எல்லாம் இல்லையாம்...

தமிழச்சி இந்த விஷயத்தில் இம்மீடியட்டாக பதிவு போட்டு பட்டையை கிளப்பியது அருமை..!!

இந்த விஷயத்தில் எனக்கு கிடைத்த அட்வைஸ் என்னவென்றால், ஆராய்ச்சி செய்கிறேன் என்று வளர்மதி பதிவுப்பக்கம் போயிடாதே, உண்மையிலேயே டவுஸர் கிழிஞ்சு தாவு தீந்திரும் என்பது தான்...அதை மட்டும் இப்போதைக்கு ஸ்ரிக்ட்டா பாலோ செய்வது நலம்....

15 comments:

குழலி / Kuzhali said...

//ஒருத்தன் அசிங்கமா திட்டினால், அது வெறும் கெட்ட வார்த்தை...சுகுணாவை பொறுத்தவரை...ஆனால் அவன் உன்னைத்திட்டினால், அது உன் மனதை புண்படுத்தும் வார்த்தை...அது இப்போ புரிஞ்சிருக்குமில்ல...எங்களை திட்டினப்ப, தோழர் டூண்டு...இப்ப அவன் இவன் வளர்மதியா ? இது என்னப்பா நியாயம் ?
//
இது சூப்பர்....


ஒரு ஒருத்தருக்கு ஒரு பிரேக்கிங் பாயிண்ட் ஒருத்தனுக்கு அவங்க அம்மாவை அசிங்கமா திட்டினா அது பிரேக்கிங் பாயிண்ட் சுகுணாவுக்கு சாதி புத்தின்னா அது பிரேக்கிங் பாயிண்ட் போல அம்மாவை அசிங்கமா திட்டினானே எல்லாத்துக்கும் கருத்து சொல்றவரே அப்போ ஏன் வரலைன்னா
தனக்கு நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்று எதுவும் கிடையாது அதனால வரலைன்னா
சாதிப்புத்திங்கறதுக்கு மட்டும் யாருமே
கேட்கலையேன்னு ஒரு கூப்பாடு
ஏன் கேட்கனும்? அது சுகுணாவோட பிரேக்கிங் பாயிண்ட்
சரியா? உங்க பிரேக்கிங் பாயிண்ட்டுக்கு எல்லோரும் அலறனும்னு ஏன் எதிர்பார்க்கின்றீர்? ஒரு ஒருத்தனுக்கும் பிரேக்கிங் பாயிண்ட் மாறும் இல்லையா....

லக்கிலுக் said...

//ஆராய்ச்சி செய்கிறேன் என்று வளர்மதி பதிவுப்பக்கம் போயிடாதே, உண்மையிலேயே டவுஸர் கிழிஞ்சு தாவு தீந்திரும் என்பது தான்...//

தோழர் உங்களோடு தாவூ தீர்ந்து டவுசர் கிழிகிறது தோழர் :-(

உன் பதிவிலே என் கொண்டையை ஏன்யா அப்பப்போ காமிக்கறே? :-(((((

வவ்வால் said...

இன்னா மாமு நக்கல் ஓவரா பூடுச்சு... பஜார்ல உஷாரா இல்லாங்காட்டி நிஜார உர்விடுவாங்கோ!
//இப்படி பைனாக்குலர்ல பார்த்தா ஜாதிப்புத்தி தெரியுமா தெரியலையே ? வளர்மதி எப்படி கண்டுபிடிச்சாரு ஜாதிப்புத்திய ?//

அதெல்லாம் மைக்ரோஸ்கோப் வச்சு பார்க்கணும் தலிவா! :-))
அப்போ தான் ஜீன்ல ஓடுற சாதிபுத்தி தெரியும்:-))

வவ்வால் said...

குழலி சார்,

செந்தழல் ரவி சரியாகத்தான் சுட்டிக்காட்டியுள்ளார், அவர் ஏதோ முற்றும் துறந்த முனிவர் போல தீதும் நன்றும் என்னை தீண்டாது என்று போர்க்களத்தில் கீதோபதேசம் கணக்கா பேசினார், அப்படிப்பட்டவருக்கு இதெல்லாம் வலிக்காமல் தானே இருக்க வேண்டும்.

//சரியா? உங்க பிரேக்கிங் பாயிண்ட்டுக்கு எல்லோரும் அலறனும்னு ஏன் எதிர்பார்க்கின்றீர்? ஒரு ஒருத்தனுக்கும் பிரேக்கிங் பாயிண்ட் மாறும் இல்லையா....//

சரி நீங்க சொல்றப்போல அடுத்தவங்க கஷ்டம் அவங்களுக்கு மத்தவங்க வருத்தம் பட வேணாம் தான் , அலற
வேணாம் ஆனா சும்மா இருக்கலாமே! எதுக்கு வீணா தத்துவம்லாம் பேசி பெரிய மனித தோரணைக்காட்டிக்கனும் கம்முனு அமுக்கினு இருக்கலாம்ல!

பக்கத்து வீட்டில இழவு விழுந்தா மனுசனா பொறந்தா சாகாம இருக்க முடியாதுனு லேசாக ஆறுதல் சொல்லுவாங்க அவன் வீட்டில இழவு விழுந்தா மார்ல அடிச்சுக்கிட்டு ஒப்பாரி வைப்பங்களாம்!

We The People said...

////ஒருத்தன் அசிங்கமா திட்டினால், அது வெறும் கெட்ட வார்த்தை...சுகுணாவை பொறுத்தவரை...ஆனால் அவன் உன்னைத்திட்டினால், அது உன் மனதை புண்படுத்தும் வார்த்தை...அது இப்போ புரிஞ்சிருக்குமில்ல...எங்களை திட்டினப்ப, தோழர் டூண்டு...இப்ப அவன் இவன் வளர்மதியா ? இது என்னப்பா நியாயம் ?
//
இது சூப்பர்....//

ரிப்பீட்ட்ட்டே!!!

We The People said...

ஊரில் உள்ள எல்லாருடைய அம்மா, அப்பா,பாட்டி என அனைவரையும் கேவலமா திட்டும் டூண்டுவிடம் வெறைட்டி தேடியவர், இப்படி சொல்லவது எனக்கும் கரெக்டா படல....

:)

அன்புடன்,
நா ஜெயசங்கர்

Anonymous said...

ஜாதிபுத்தியை தேடவே வேண்டாமே. எல்லோரும் உங்கள் தலையை ஆள்காட்டி விரலால் ஒரு தட்டு தட்டுங்கள், அது கிடைக்கும்.

உண்மைத்தமிழன் said...

இந்த நேரத்துலதான் இதையெல்லாம் எழுதணுமா? உங்களையெல்லாம்..

ரவி said...

என்ன எழவு பிரேக்கிங் பாயிண்ட்டோ, ஒரு மண்ணும் புரியல...

இந்த ஆளுங்களை சாமியாடி கீழே இறங்கவைக்கிறது ரொம்ப குஷ்டம்..ச்ச கஷ்டமப்பா...

ரவி said...

தாவு தீர்ந்து டவுசர் கிழிந்தால்தான் கொலைவெறிப்பதிவர்னு தெரியவரும்...

ரவி said...

///அதெல்லாம் மைக்ரோஸ்கோப் வச்சு பார்க்கணும் தலிவா! :-))
அப்போ தான் ஜீன்ல ஓடுற சாதிபுத்தி தெரியும்:-)) ///

எங்க வரீங்கன்னு புரியுது...நாங்கதான் அடிவருடியாச்சே, நாங்க எப்படி அதெல்லாம் சிந்திப்போம் ஹி ஹி

ரவி said...

வவ்வால் தொடர்ந்து பதிவுக்கு வந்து கருத்துகள் பல வைப்பதுக்கு நன்றி..ஆனா எனக்கு தான் என்ன சொல்ல வரீங்கன்னு காண்டக்ஸ்ட் புரியமாட்டேன்ங்குது...சரி ரைட்டு விடுங்க..

ரவி said...

//ரிப்பீட்ட்ட்டே!!! ///

இதுக்கு காப்பிரைட் பாலபாரதிக்கிட்ட இருக்கே ? நீங்க ஏன் ஊஸ் பன்றீங்க ? வளர்பிறைக்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்களா என்ன ?

ரவி said...

என்ன வீ.த பீப்புள், நீங்களும் தோழர் மலேசிய போலிடோண்டு மூர்த்திமேலே கொலைவெறியில இருக்கீங்க போலிருக்கு...வெல்கம் டு த க்ளப்...

We The People said...

//என்ன வீ.த பீப்புள், நீங்களும் தோழர் மலேசிய போலிடோண்டு மூர்த்திமேலே கொலைவெறியில இருக்கீங்க போலிருக்கு...வெல்கம் டு த க்ளப்...//

அட நான் ஏற்கனவே அந்த க்ளபில் மெம்பர் தான் நீங்களும் & குழலியும் தான் நியூ என்ட்ரி :)