Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, June 22, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 4



நாற்பதில் இருந்து ஐம்பது கதைகள்

இஷா கோபிகர். எனக்கு பிடித்த நடிகை அல்ல..!! இருந்தாலும் வேண்டி விரும்பி கேட்ட வாசகருக்காக...!!!!

51. சரணாகதி : ‘உயிரோடை‘ எஸ்.லாவண்யா

சிறு கதைக்கான ஸ்கெலட்டன், கரு எல்லாம் நன்று. ஆனால் கதையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதை தவிர்த்திருக்கலாம்...எளிமையான கதை...கதை மாந்தரின் பெயர் அருமை...கதையில் திடீரென எட்டிப்பார்க்கும் திருப்பாவை கூட அழகு...

நல்ல முயற்சி. குழப்பம் இல்லாத தெளிவான நடை. சிற்சில எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் அந்த கடைசி வரியில்...
எனக்கு பிடித்திருக்கிறது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

52. ஆசை வந்தது போலவே : தவறு

கதைக்கான சரியான சுட்டியை கொடுக்க தவறியுள்ளார்...

தன் சிந்தனையோட்டத்தை எழுத்தில் வடித்துள்ளார்....கதை என்பதையும் தாண்டி, ஏதோ ஒரு கட்டுரையை வாசிப்பது போல இருக்கிறது....

என்னுடைய மதிப்பெண் 50 / 100

53. ஹெலிகாப்டர் : அற்புதன்

இந்த கதைக்களம் உணர்வுகளை சுண்டி இழுக்கக்கூடியது. இன்னும் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த வலியை அழுத்தமாக வாசகர்களின் மனதில் பதிய வைத்திருந்திருக்கவேண்டும். தவறிவிடுகிறது...

இன்னும் முயலவேண்டும் அற்புதன்...

என்னுடைய மதிப்பெண் 52 / 100

54. கொள்ளி.. கொள்ளி.. : சந்துரு

உண்மையில் நல்ல கதைக்கரு. அற்புதமான சிந்தனை. உங்கள் குற்ற உணர்ச்சியை கண்டிப்பாக தூண்டிவிடக்கூடும்..ஆனால் எழுதப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்யவில்லை...கொஞ்சம் வளவளாவாக உள்ளது..ஒரு பக்க கதையாக சுருக்கினால் அருமையாக வரக்கூடும்...

என்னுடைய மதிப்பெண் 51 / 100

55. கதையின் தலைப்பு ஒருவேளை உங்களிடமே இருக்ககூடும். : கும்க்கி

சரியான சுட்டி கொடுக்கப்படவில்லை. வலைப்பதிவில் இருந்து கதையை கண்டுபிடித்தேன்.....கும்க்கி மாற்றுவார் என்று நம்புவோம்...

கடைசி ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை...கதை அங்கே தான் கொண்டுசெல்கிறது என்று முன்பே தெரிந்தது...ஆனால் கடைசியில் சரசக்கா பேசுவதாக வரும் வசனம் தேவையற்றது..

இது நல்ல கதையா இல்லையா என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் உள்ளது. தலைப்பு எதுவும் வைக்கத்தோன்றவில்லை...

என்னுடைய மதிப்பெண் 62 / 100

56. &&& தாய்மை &&& : சுமஜ்லா

கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!

என்னுடைய மதிப்பெண் 70 / 100

57. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் : நிலாரசிகன்

நல்ல கதைசொல்லும் உத்தி. ஏற்கனவே சில கதைகளில் பார்த்திருந்தாலும், இந்த கதைக்கு தேவையான ஒன்று...

சமூகத்தின் நடபடிகளை கதையாக்கியிருக்கிறார் நிலா ரசிகன், நல்ல தலைப்பு, எளிமையான நடை. நான் ரசித்தேன்...

என்னுடைய மதிப்பெண் 70 / 100

58. சின்னு : நாடோடி இலக்கியன்

அற்புதமான மொழிநடை. வட்டார வழக்கு...கதையும் அதன் முடிவும் சூப்பர். ஆற அமற படித்து ரசிக்கவேண்டிய கதை...!!!! வேறென்ன சொல்ல, வெற்றிபெற வாழ்த்துக்கள் நாடோடியாரே...

என்னுடைய மதிப்பெண் 75 / 100

59. செல்லம்மாள்.. : ஆ.ஞானசேகரன்

வட்டார வழக்கில் முயன்றிருக்கிறார் ஆ.ஞானசேகரன். கதையின் உள்ளடக்கம் அவ்வளவாக கவரவில்லை. தினத்தந்தி செய்திக்கு ஒரு முடிவு கொடுத்து கதையாக்கியதுபோல இருக்கிறது...

என்னுடைய மதிப்பெண் 50 / 100

60. எதிர்பார்ப்பு : S.A. நவாஸுதீன்

ஷாக்கிங் இறுதி ட்விஸ்டுடன் கூடிய மிடில் ஈஸ்ட் கதை. எதிர்பாராத அந்த இறுதி முடிவில் ஸ்கோர் செய்கிறார் நவாஸ். அதற்காகவே கொஞ்சம் சுவாரய்ஸ்யமற்ற நடையை பற்றி கவலைப்படாமல் படிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

61. விலைமகளே பரவாயில்லை : SUREஷ்

கண்ட இடத்திலும் கலர் அடித்து கொஞ்சம் கலீஜாக இருந்தாலும், பதிவில் எடுத்துகொண்ட மேட்டர் அழுத்தமானது...

சுவாரயஸ்யமான நடை இல்லையென்றாலும் கூட, கொஞ்சம் ரசிக்கலாம்...தலைப்பிலேயே முழு கதையையும் சொல்வதையும், கதைக்கு நடுவே முடிவையும் சொல்வதையும் தவிர்த்திருந்தால், இறுதிவரை சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 60 / 100

62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்

அற்புதமான நடை..அருமையான கதைக்கரு...கலக்கலான முடிவு...

வேண்டாம்...வேண்டாம்...அட..இந்த கதையை படிக்காமல் இருக்கவேண்டாம்...

இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!

என்னுடைய மதிப்பெண் 80 / 100

63. கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி : சாம்ராஜ்ய ப்ரியன்

நல்ல கதை..இன்னும் எலாபரேட்டாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...கொஞ்சம் கொசுவத்தி சுத்தவைக்கும் நடை...

நன்று...!!!

என்னுடைய மதிப்பெண் 60 / 100

64. \"இது நியாயமா, கிருஷ்ணா????\"- : \'இனியவன்\' என். உலகநாதன்

இனியவன் எழுதிய இந்த கதையை விக்ரமன் பார்த்தால் ஒரு படம் எடுத்துடுவார். அந்த அளவுக்கு ஒரு முழுமையான கதை. வார்த்தைக்கோர்ப்புகளில் சில இடங்களில் சுவாரஸ்யம் குன்றும் வகையில் இருந்தாலும் ஒரு முழு அளவில் பார்க்கும்போது அவை பெரிதாக தெரியவில்லை...

சில இடங்களில் எடிட் செய்தால் இன்னும் அற்புதமான கதையாக மிளிரும்.

என்னுடைய மதிப்பெண் 65 / 100

65. அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....... : அன்புடன் அருணா

கொஞ்சம் வேறுபட்ட நடை இருந்திருக்கலாம்...இருந்தாலும் எடுத்த முயற்சியில் மனம் தளராமல் கதையை கொண்டு சென்றுள்ளார்கள்...

கொஞ்சம் பெரிய பாண்ட் கடுப்படித்தாலும், இந்த கதைச்சூழலும், அதன் இறுதியில் உள்ள மெசேஜும் நன்று...நல்ல முயற்சி..!!!

என்னுடைய மதிப்பெண் 60 / 100

Friday, June 19, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள்...



அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...இருந்தாலும் சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100


கதையின் கேரக்டருக்கு எழிலரசி என்ற அழகு பெயர்...நன்று....கதை முழுதும் நல்ல தமிழ்...கொஞ்சம் அமெச்சூரான நடை...விறுவிறுப்பு குறைவு கதையில்...முடிவு அவ்வளவாக கவரவில்லை...

என்னுடைய மதிப்பெண் 35 / 100


நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100


கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்...கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்...அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை...கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை...எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


எளிமையான நகைச்சுவை நடையில் அதிரடியாக ஆரம்பித்துவிடுகிறது கதை...நாலு பாராவுக்கு ஒரு புன்னகை நிச்சயம்...கதையில் வரும் கேரக்டர்களின் பெயர்களுக்காகவே ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது...மெயின் கேரக்டர் மணிப்பயலின் தேர்தல் உரை வயிற்று வலியை வரவைக்கும்...சிரிச்சுதாங்க...கடைசி கட்ட க்ளிமாக்ஸும் கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்..கதையில் முடிவு என்று ஒன்றும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


கதையை படித்தவுடன் நீங்கள் எப்போதோ தின்ற நமுத்த முறுக்கு உங்கள் நியாபகத்துக்கு கண்டிப்பாக வரும்...வாத்தியாருக்கு குண்டுசவுரி சொன்ன பதில்கள் சூப்பர்...அடிக்கடி நமக்கு வெடிச்சிரிப்பு வருவதற்கான வானிலை தெரிகிறது கதையில்..முடிவு என்று பெரிதாக எதுவும் இல்லை...ஆனால் சிரிப்புக்கு க்யாரண்டி...

என்னுடைய மதிப்பெண் 68 / 100


கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100


முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100


எளிமையான வார்த்தைகளில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் கதை. அன்றாட வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை அற்புதமான நடையில் சொல்கிறது கதை...குறையொன்றும் இல்லை க்ருஷ்ணா...பரிசு கிடைக்கும் என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன ?

என்னுடைய மதிப்பெண் 70 / 100


கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...

கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதையும் தவிர்க்க இயலவில்லை...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?

என்னுடைய மதிப்பெண் 72 / 100


எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 55 / 100


புதிய உத்தி...தமிழுக்கு புதிது...ஆனால் புரிந்துகொண்டு ரசிக்கப்படுமா என்பது கேள்விக்குறி...கொஞ்சம் பின்னவீனத்துவம், கொஞ்சம் சர்ரியலிஸம்...பாரதி வரிகள்...ஆங்கில கலப்பு...

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

மற்றபடி கதை வாசிக்க நன்றாகத்தானிருக்கிறது...கொஞ்சம் குழப்பமான முடிவும்..

என்னுடைய மதிப்பெண் 60 / 100


எளிமையான நடை. இயல்பான கதை. கதை எதை நோக்கி போகிறது என்பது கொஞ்சம் யூகிக்க முடியும்படி இருந்தாலும், முடிவு நன்று....கொஞ்சம் அமெச்சூர்த்தனத்தை தவிர்க்கவேண்டும்...

லாஸ்ட் பஞ்ச் கூட நல்லாத்தான் இருந்தது...!!!

என்னுடைய மதிப்பெண் 50 / 100


எழுத்துப்பிழைகளை தவிர்க்கவேண்டும். கதையை முடித்தவுடன் ரிவ்யூ அவசியம்..ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நடையை செதுக்கியிருந்திருக்கலாம்..

ஆழமான சமூக பிரச்சினைதான், இருந்தாலும் எளிமையகவே முடிந்துவிட்டது...அவை எவையையும் அலசாமல்...கொஞ்சம் நான் கடவுள் சாயல்..முடிவு நன்று.

என்னுடைய மதிப்பெண் 50 / 100


முதல் வரியிலேயே எழுத்துபிழை 'பளீர்' என்று அடிக்கிறது..கடைசி வரியிலும் அதையே ஸ்வாசிக்க வேண்டியுள்ளது...

சின்ன சம்பவம், அதை டேக்கிள் செய்த விதம் கதையாகியுள்ளது...கொஞ்சம் சுவாரஸ்யமற்ற நடை. இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம்..

என்னுடைய மதிப்பெண் 45 / 100


எளிமையான அழகான நடை. அதற்காகவே எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம். லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம்..

கதையின் முடிவு எதிர்பாராதது, இரண்டொரு முறை படித்தால் புரிந்துவிடும்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100


அசோகமித்திரன் டைப் பார்ப்பன பாஷைக்கதை. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கதையில் எதோ சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது..

இயல்பாக அங்கே இங்கே பார்க்கக்கூடிய மனிதர்களை வைத்து பின்னப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை என்றாலும், கதையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு விவாதத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவுக்கு விஷயம் உண்டு..

என்னுடைய மதிப்பெண் 50 / 100


அற்புதமான நடை. எழுத்தாளரின் ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு அழகியலோடு வெளிப்படுகிறது..ஆங்காங்கே புன்முறுவலோடு இந்த கதையோடு நீங்கள் பயணிக்கலாம்...

'பசங்க' படத்துக்கு நான் விமர்சனம் எழுவும் எழுதவில்லை...அதற்கு காரணம் அது விமர்சனத்தை தவிர வேறு விதமான சிந்தனையை கிளப்பியது...அதே போல இந்த கதையும்..வாசியுங்க...அனுபவிங்க..

இறுதியில் வரும் கவிதையின் முரண் அழகியல் அற்புதமானது...மீள் வாசிப்பு செய்ய தூண்டும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 80 / 100


இதுபோன்ற கேவலமான கதைகளை எல்லாம் எப்படி போட்டிக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை...

மட்டரகமான வார்த்தைப்பிரயோகம்...விளிம்புநிலை பற்றி எழுதும்போது 'ங்கோத்தா' ' தெவிடியா' என்று எழுதினால் அது கதையோடு ஒன்றி வரும்..

ஆனால் தேவை இல்லாமல் இணைக்கப்பட்ட புணர்ச்சி சம்பந்தமான வார்த்தைப்பிரயோகங்கள் அருவருப்பை தருகிறது...

எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் -200 / 100 (மைனஸ் எரநூரு)


சாதீயம் குறித்த ஒரு ஸ்னாப்ஷாட் கதை. ஈகிள்ஸ் ஐ வியூ என்று கூட சொல்லலாம்...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பு செய்ய தூண்டிய கதை...இன்னும் கொஞ்சம் போல உற்சாக நடை இருந்திருக்கலாம்...

முடிவு கூட சிறப்பாகத்தான் இருக்கிறது...ஒரு நல்ல கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒன்று...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, சிறுகதை, போட்டிக்கு எழுதுகிறோம் என்றதும் பதிவர்கள் முகத்தை ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல் வைத்துக்கொள்வார்கள் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,...அல்லது நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்...ஒன்றிரண்டு பேரைத்தவிர, முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறாங்க நம்ம மக்கள்...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

Saturday, June 06, 2009

மெய்ப்பொருள் - திரைப்பட விமர்சனம்



பொதுவாக விமர்சனம் எழுதுபவர்களுக்கே உண்டான கெட்ட பழக்கம் ஒன்று உண்டு. படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை ஏனோ கடைசிவரை எழுத மறந்துவிடுவார்கள்...நான் உங்களை உண்மையிலேயே சோதிக்க விரும்பவில்லை...மறந்தும் இந்த படத்துக்கு போயிராதீங்க...

மற்றபடி கொலைவெறியோடு இந்த படத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் அல்லது வேறு வேலை வெட்டி எதுவும் கொஞ்சநேரத்துக்கு இல்லை என்றால் மேலே படியுங்கள்...

அமெரிக்காவில் அமவுண்டு தேத்தும் சாப்ப்ட்டுவேர் எஞ்சினீயர்களுக்கு ஏனோ இந்த திடீர் கொலைவெறி..ஒரு 'தமிழ்' படத்தை எடுத்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அருள்பாலிக்கவேண்டும் என்பது தான் அது..

கிருஷ், அனுஷா, சுரேன், குமார், ராணி, கிரிஷ் எல்ரிஜா, ஜான் மேஷா என்பவர்கள் இந்த படத்தில் நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு ஆகிய வேலைகளை செய்துள்ளார்கள்...

யார் யார் என்ன என்ன செய்துள்ளார்கள் என்பது தேவையற்றது....ஏன் தேவையற்றது என்பதற்கு பெரிதாக எந்த காரணமும் இல்லை...அவர்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனபது தான் காரணம்...

வில்லன், தனக்கு இ.எஸ்.பி பவர் என்று ஒரு மருத்துவரை ஏமாற்றுவது எந்த பழிவாங்கும் படலத்துக்காக என்பது படத்தின் ஒன்லைனர்.

அமெச்சூர்த்தனமான கேமரா, இசை என்ற பெயரில் இ(ம்)சை, எந்த திருப்பங்களும் இல்லாத சொத்தைத்தனமான திரைக்கதை, எவ்வித எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் கஞ்சி குடித்த கழுதை போன்று முகத்தை வைத்துக்கொள்ளும் நடிகர்கள் மொத்தத்தில் த்ராபையான டைரக்ஷன் என நம்மை துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்...

எடிட்டிங்கின் அடிப்படை கூட தெரியாமல் ஒரு எடிட்டிங், அட்லீஸ்ட் முகத்தில் உள்ள வியர்வையையாவது துடைத்துவிட்டு படம் எடுக்கமுடியாத மேக்கப் என்று மொத்தத்தில் இது சாப்ட்டுவேர் எஞ்சினீயர்களின் ஊத்திக்கொண்ட ப்ராஜக்ட்...

பாத்திர தேர்வில் இந்த அளவு கொடுமையான அவுட்புட் நான் பார்த்தவரை எந்த படத்துக்கும் கிடைத்ததில்லை...ஹீரோ, ஹீரோயின், சைடு ஆக்டர் என்று யாருக்கும் சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை...இந்த கதையில் தமிழ் மெகா சீரியல் நடிகர்களை நடிக்கவைத்திருந்தாலே மிரட்டியிருந்திருக்கலாம்...

அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு 'கலை' தாகம் எடுத்தால் ஏதாவது பாருக்கு போய் நன்றாக குடித்து தீர்த்திருந்திருக்கலாம்....அல்லது கோடம்பாக்கத்துக்கு வந்து படத்தை தயாரிக்க மட்டுமே செய்திருக்கலாம்...எதாவது இயக்குனருக்கு, நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்திருக்கலாம்...

எல்லாம் வெறும் லாம் தான்...இப்படி லா(ட)ம் கட்டுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஓடிப்போயிருப்பேனே..மெய்ப்பொருள் என்ற அழகு தமிழ் பெயரை பார்த்து அல்லவா ஏமாந்துவிட்டேன்..? ஓக்கே அட்லீஸ் வரிவிலக்காவது கிடக்கட்டும்...

கேமிராவை ஒரு பத்தியில் தனியாக திட்டவில்லை என்றால் முதல் இருபது நிமிடத்தில் தியேட்டரை விட்டு ஓடிய என் வாய்க்கு போஜனம் கிடைக்காது...கேமிராவை நிலையாக ஒரு இடத்தில் வைத்து படம் பிடிக்கக்கூட முடியாமல் மேலும் கீழும் ஆட்டும் கேமிராமேனை க்வாண்டனாமோ பே சிறையில் ஒரு மாமாங்கம் சித்ரவதை செய்யவேண்டும்...

மெய்ப்பொருள் 'காண்பது' அறிவல்ல...