Friday, June 19, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள்...



அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...இருந்தாலும் சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100


கதையின் கேரக்டருக்கு எழிலரசி என்ற அழகு பெயர்...நன்று....கதை முழுதும் நல்ல தமிழ்...கொஞ்சம் அமெச்சூரான நடை...விறுவிறுப்பு குறைவு கதையில்...முடிவு அவ்வளவாக கவரவில்லை...

என்னுடைய மதிப்பெண் 35 / 100


நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100


கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்...கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்...அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை...கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை...எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


எளிமையான நகைச்சுவை நடையில் அதிரடியாக ஆரம்பித்துவிடுகிறது கதை...நாலு பாராவுக்கு ஒரு புன்னகை நிச்சயம்...கதையில் வரும் கேரக்டர்களின் பெயர்களுக்காகவே ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது...மெயின் கேரக்டர் மணிப்பயலின் தேர்தல் உரை வயிற்று வலியை வரவைக்கும்...சிரிச்சுதாங்க...கடைசி கட்ட க்ளிமாக்ஸும் கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்..கதையில் முடிவு என்று ஒன்றும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


கதையை படித்தவுடன் நீங்கள் எப்போதோ தின்ற நமுத்த முறுக்கு உங்கள் நியாபகத்துக்கு கண்டிப்பாக வரும்...வாத்தியாருக்கு குண்டுசவுரி சொன்ன பதில்கள் சூப்பர்...அடிக்கடி நமக்கு வெடிச்சிரிப்பு வருவதற்கான வானிலை தெரிகிறது கதையில்..முடிவு என்று பெரிதாக எதுவும் இல்லை...ஆனால் சிரிப்புக்கு க்யாரண்டி...

என்னுடைய மதிப்பெண் 68 / 100


கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100


முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100


எளிமையான வார்த்தைகளில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் கதை. அன்றாட வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை அற்புதமான நடையில் சொல்கிறது கதை...குறையொன்றும் இல்லை க்ருஷ்ணா...பரிசு கிடைக்கும் என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன ?

என்னுடைய மதிப்பெண் 70 / 100


கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...

கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதையும் தவிர்க்க இயலவில்லை...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?

என்னுடைய மதிப்பெண் 72 / 100


எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 55 / 100


புதிய உத்தி...தமிழுக்கு புதிது...ஆனால் புரிந்துகொண்டு ரசிக்கப்படுமா என்பது கேள்விக்குறி...கொஞ்சம் பின்னவீனத்துவம், கொஞ்சம் சர்ரியலிஸம்...பாரதி வரிகள்...ஆங்கில கலப்பு...

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

மற்றபடி கதை வாசிக்க நன்றாகத்தானிருக்கிறது...கொஞ்சம் குழப்பமான முடிவும்..

என்னுடைய மதிப்பெண் 60 / 100


எளிமையான நடை. இயல்பான கதை. கதை எதை நோக்கி போகிறது என்பது கொஞ்சம் யூகிக்க முடியும்படி இருந்தாலும், முடிவு நன்று....கொஞ்சம் அமெச்சூர்த்தனத்தை தவிர்க்கவேண்டும்...

லாஸ்ட் பஞ்ச் கூட நல்லாத்தான் இருந்தது...!!!

என்னுடைய மதிப்பெண் 50 / 100


எழுத்துப்பிழைகளை தவிர்க்கவேண்டும். கதையை முடித்தவுடன் ரிவ்யூ அவசியம்..ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நடையை செதுக்கியிருந்திருக்கலாம்..

ஆழமான சமூக பிரச்சினைதான், இருந்தாலும் எளிமையகவே முடிந்துவிட்டது...அவை எவையையும் அலசாமல்...கொஞ்சம் நான் கடவுள் சாயல்..முடிவு நன்று.

என்னுடைய மதிப்பெண் 50 / 100


முதல் வரியிலேயே எழுத்துபிழை 'பளீர்' என்று அடிக்கிறது..கடைசி வரியிலும் அதையே ஸ்வாசிக்க வேண்டியுள்ளது...

சின்ன சம்பவம், அதை டேக்கிள் செய்த விதம் கதையாகியுள்ளது...கொஞ்சம் சுவாரஸ்யமற்ற நடை. இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம்..

என்னுடைய மதிப்பெண் 45 / 100


எளிமையான அழகான நடை. அதற்காகவே எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம். லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம்..

கதையின் முடிவு எதிர்பாராதது, இரண்டொரு முறை படித்தால் புரிந்துவிடும்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100


அசோகமித்திரன் டைப் பார்ப்பன பாஷைக்கதை. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கதையில் எதோ சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது..

இயல்பாக அங்கே இங்கே பார்க்கக்கூடிய மனிதர்களை வைத்து பின்னப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை என்றாலும், கதையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு விவாதத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவுக்கு விஷயம் உண்டு..

என்னுடைய மதிப்பெண் 50 / 100


அற்புதமான நடை. எழுத்தாளரின் ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு அழகியலோடு வெளிப்படுகிறது..ஆங்காங்கே புன்முறுவலோடு இந்த கதையோடு நீங்கள் பயணிக்கலாம்...

'பசங்க' படத்துக்கு நான் விமர்சனம் எழுவும் எழுதவில்லை...அதற்கு காரணம் அது விமர்சனத்தை தவிர வேறு விதமான சிந்தனையை கிளப்பியது...அதே போல இந்த கதையும்..வாசியுங்க...அனுபவிங்க..

இறுதியில் வரும் கவிதையின் முரண் அழகியல் அற்புதமானது...மீள் வாசிப்பு செய்ய தூண்டும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 80 / 100


இதுபோன்ற கேவலமான கதைகளை எல்லாம் எப்படி போட்டிக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை...

மட்டரகமான வார்த்தைப்பிரயோகம்...விளிம்புநிலை பற்றி எழுதும்போது 'ங்கோத்தா' ' தெவிடியா' என்று எழுதினால் அது கதையோடு ஒன்றி வரும்..

ஆனால் தேவை இல்லாமல் இணைக்கப்பட்ட புணர்ச்சி சம்பந்தமான வார்த்தைப்பிரயோகங்கள் அருவருப்பை தருகிறது...

எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் -200 / 100 (மைனஸ் எரநூரு)


சாதீயம் குறித்த ஒரு ஸ்னாப்ஷாட் கதை. ஈகிள்ஸ் ஐ வியூ என்று கூட சொல்லலாம்...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பு செய்ய தூண்டிய கதை...இன்னும் கொஞ்சம் போல உற்சாக நடை இருந்திருக்கலாம்...

முடிவு கூட சிறப்பாகத்தான் இருக்கிறது...ஒரு நல்ல கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒன்று...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, சிறுகதை, போட்டிக்கு எழுதுகிறோம் என்றதும் பதிவர்கள் முகத்தை ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல் வைத்துக்கொள்வார்கள் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,...அல்லது நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்...ஒன்றிரண்டு பேரைத்தவிர, முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறாங்க நம்ம மக்கள்...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

28 comments:

கே.என்.சிவராமன் said...

ரவி,

மிக்க நன்றி... உங்கள் ஆர்வத்துக்கும், உழைப்புக்கும், நண்பர்களை காயப்படுத்தாத விமர்சனத்துக்கும்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ரவி said...

நன்றி பைத்தியக்காரன்.

மற்ற கதைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்...!!

பதிவு பெரிதாகிவிடும் என்று தனி தனி பதிவுகளாக போடவிருக்கிறேன்...

சென்ஷி said...

மிக்க நன்றி ரவி..

அடுத்த கட்ட விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன்!

குடுகுடுப்பை said...

கதை படிக்காமல் நான் விமர்சனம் நல்லா இருக்குன்னு பாராட்ட முடியாது, விமர்சித்த துணிச்சலில் தழல் தெரிகிறது..

நானும் கூட ஒரு கதை எழுதியிருக்கலாம் போல இருக்கு.

ரவி said...

நன்றி சென்ஷி...

சிறுகதையிருக்கும் இடங்களிலெல்லாம் தென்படுகிறீர்களே ?

சிறுகதை மேல் நல்ல கொலைவெறி போல..

உமது சிறுகதையையும் படிக்க, விமர்சனம் எழுத உடனே ஆவல்...

ரவி said...

நன்றி குடுகுடுப்பை...எடுங்கள் பேனாவை...எழுதுங்கள் கதையை...

இன்னும் பத்து நாள் இருக்கு...

லாஸ்ட்ல பர்ஸ்ட்டா வாங்க....

இராம்/Raam said...

ரவி,

சூப்பரூ... :)

நீங்க இன்னும் கதை எழுதலையா???

ரவி said...

இராம்...இன்னும் இல்லை...கடைசி நாள் வரைக்கும் வெயிட்டிங்...

அதுவரைக்கும் எதுவும் தோணலைன்னா எழுதற உத்தேசம் இல்லை ஹி ஹி

நந்தாகுமாரன் said...

என் கதை பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

//

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

//

இது என் நோக்கமல்ல ... பொதுவாக என் படைப்புகளில் ’read between the lines’ இருக்கும் ... இதில் பிராக்கெட்டுக்குள் கொஞ்சம் non lineraity முயற்சித்துப் பார்த்தேன் தவிர ஒரு இடைவெட்டாகவும் அதிகம் பேசும் மனதின் குரலாகவும் அதை வரித்திருந்தேன் :)

// ...கொஞ்சம் குழப்பமான முடிவும்.. // - உங்கள் வரிகளிலேயே இதை விளக்குவதென்றால் ... // ..ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை // இங்கே நான் விரும்புகிறேன் :)

50 pass என்று கொண்டால் கதைக்கு 60 கொடுத்திருக்கிறீர்கள் ... தேறுகிறது என்று தோன்றுகிறது :) நன்றி

ரவி said...

விளக்கத்துக்கு நந்தா நன்றி...!!!

என்னுடைய பார்வையிலே சொன்னேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி ரவி

வால்பையன் said...

அண்ணே நான் எப்போ வருவேன்!
எதாவது சொல்லுங்க!
ஒரே பதட்டமா இருக்கு!

ரவி said...

நன்றி டிவிஆர். வால்ஸ்...வெயிட் ப்ளீஸ்...

ரவி said...

கதையை காப்பி செய்து தனியாக படிக்கிறேன். யார் எழுதினாங்க என்று தெரியக்கூடாது, அப்படி தெரிந்தால் அது விமர்சனத்தின் நடுநிலை தன்மையை பாதிச்சுரும்னு...ஹி ஹி...அதனால கவலைப்படாத வால்ஸ்..உன் டவுசர் கிழியும்...

நந்தாகுமாரன் said...

புரிகிறது ரவி ... நானும் என் பார்வையை சொன்னேன் ... உங்கள் விமர்சன முயற்சி பெரிதும் பாராட்டிற்கு உரியது ... மற்ற கதைகளைப் பற்றிய உங்கள் பார்வையையும் அறிய மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் ... மீண்டும் நன்றி :)

வால்பையன் said...

//அதனால கவலைப்படாத வால்ஸ்..உன் டவுசர் கிழியும்...//

இதுக்கு பேர் தான் வாய கொடுத்து சூ.. புண்ணாக்கிறதா!?

♫சோம்பேறி♫ said...

ஒன்றிரண்டைத் தவிர மற்றவை நல்ல (சரியான) விமர்சனங்கள். :-)

(BTW, மானாட மயிலாடவில் நமீதாவுக்கும், குஷ்பூக்கும் நடுவில் உள்ள இருக்கை காலியாக இருக்காம்.

ஜெயம் ரவியைக் கூப்பிடலாம்னு சொன்னாங்க. நான் செந்தழல் ரவி தான் கரெக்டா இருப்பார்னு அடிச்சு சொல்லிட்டேன். :-)

போறீங்களா பாஸ்)

ரவி said...

நமீதாவுக்கும் குஸ்பூவுக்கும் நடுவாலியா ? என்னையை வெச்சு காமெடி கீமடி பண்ணலியே ?

அங்க ஷகீலாவோட டிக்கி உக்காந்தா நல்லாயிருக்காது ??

வெட்டிப்பயல் said...

விமர்சனம் அருமை!

பத்தொன்பதாவது கதையை ரொம்ப திட்டிட்ட மாதிரி இருக்கு. நான் கதையை இன்னும் படிக்கல. இருந்தாலும் கொஞ்சம் பாவம் பார்த்து விட்டிருக்கலாம்.

நீங்க கதை எழுதினா பரிசு நிச்சயம் :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விலைமகளே பரவாயில்லை

படித்துவிட்டீர்களா சார்,

நசரேயன் said...

விமர்சனத்துக்கு நன்றி, பிழைகளை திருத்த முயற்சிக்கிறேன்

ரவி said...

நன்றி வெட்டிப்பயல். உங்கள் கதை விமர்சனம் அடுத்த பதிவாக போட்டுவிட்டேன்

ரவி said...

சுரேஷ் படிக்கிறேன்...நசரேயன் நன்றி..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ரவி.

ரவி said...

நல்லது பினாத்தலாரே...

ஆ.சுதா said...

உங்கள் உழைப்புக்கு மிகுந்த நன்றிகள்.
இது போன்று எழுத்தார்வம் கொண்டவர்களை ஊக்குவிப்பதென்பது நல்ல ஆரோக்கியமான விசயம்.
உங்கள் பார்வை சிறப்பானதாக இருக்கின்றது.

Suresh said...

நல்ல விஷியம் பாஸ் புது கதைகளை படிக்க உங்க விமர்சனம் தூண்டியது உண்மை ..

Anonymous said...

http://englishkaran.blogspot.com/2009/06/blog-post_22.html

Anne...Konjam ithaiyum padichuttu unga karutthai sollunga...
Its just a try from my side.