Friday, June 19, 2009

வணங்காமண் பற்றி மேலதிக தகவல் : கலைஞர் கடிதம்


வணங்கமண் கப்பல் (கேப்டன் அலி)




தமிழக முதல்வர்



இப்போ நியூஸ்..

வணங்கா மண் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து திருப்பி அனுப்புவது தெரிந்தது...

இந்த கப்பல் இப்போது இந்திய கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கிறதாம்..

தமிழக முதல்வர், இதனை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும், இதில் உள்ள பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி...

அதை தமிழக அமைச்சர் பொன்முடியிடம் கொடுத்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்க சொல்லி கொடுத்தனுப்பியிருக்காராம்...

ஏற்கனவே எஸ்.எம்.கிருஷ்ணாவை மதிக்காம அறிக்கை விட்டது இலங்கை அரசு..

எதாவது ராஜதந்திர நடவடிக்கை மூலமாக அந்த பொருட்கள் மருந்துகள் தமிழர்களை சென்று அடைந்தால் நன்றாக இருக்கும்...நடக்குமா ?

கேப்டன் அலி என்பது கப்பலின் பெயர், அதனால் கேப்டன் விஜயகோந்தும் இது குறித்து பண்ரூட்டியாரிடம் விசாரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளாராம்...

நீங்க ஓட்டு போட்டுட்டு எடத்தை காலி பண்ணுங்க சாமீ..நம்மால முடிஞ்சது அது தான்..!!! பதிவு போடுவது, ஓட்டு போடுவது...பின்னூட்டம் போடுவது...ஹும்...

1 comment:

குறை ஒன்றும் இல்லை !!! said...

இன்னுமா கருணாநிதிய இந்த உலகம் நம்புது?