Tuesday, June 30, 2009

சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், ஜ்யோராம் சுந்தர், நர்சிம் சந்திப்பு...



முதலில் சாரு தொண்டையை கனைத்துக்கொண்டு ஆரம்பிக்கிறார்...

சாரு : ஜெயமோகன் பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணிபோட்டதால் எதிர்வீட்டு தாத்தா மண்டையை போட்டார். இது தெரிந்து மூன்றாவது வீட்டு கிழவி பாத்ரூமில் தடுக்கி விழுந்து செத்துப்போனார்.

பைத்தி: நர்சிம் வீட்டில் வைத்திருந்த பீர் பானையில் மூச்சா விட்டார் சாரு. அதனால் பிரெஞ்சு பலான படம் பார்த்துக்கொண்டிருந்த அய்யனார் அவரை நடுராத்திரியில் அடித்து துரத்தினார்.

ஜ்யோராம்: சாரு, நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் பைத்தியக்காரன் சொல்வது எனக்கு ஏற்புடையதில்லை. நைட்டு எங்க சரக்கு ?

நர்சிம் : சாரு, பைத்தி, ஜ்யோராம், நீங்க எல்லாரும் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. எனக்கு எது ஏற்புடையதோ அதை சொல்லுவேன். நானும் ரவுடிதான். அய்யோ நான் வாங்கித்தரமாட்டேன். வாய்க்கு குடிக்கச்சொன்னா வவுத்துக்கே குடிக்கறானுங்க...

செந்தழல் ரவி: நான் என்ன சொல்ல வரேன்னா ?

லக்கிலுக்: ரவி, இரும்படிக்கற எடத்துல ஈக்கென்ன வேலை ? வாட் ஆர் யூ டூயிங் ஹியர் ?

செந்தழல் ரவி: ச்சும்மா சண்டை நடக்குதே, வேடிக்கை பார்த்து எஞ்சாய் பண்ணலாம்னு...நான் ஈன்னா நீ என்ன ப்ப்ப்ப்ப்...

லக்கிலுக்: ஹல்லோ. ஸ்ஸ்ஸ்டாப்பிட். வாங்க நாம அப்படி ஓரமா ஒக்காந்து தேத்தன்னி குடிச்சு கிங்ஸ் புகைக்கலாம்...

சாரு: சிட்டிங்நாத் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் ஒரு உதவி இயக்குனர். அந்த ஜெமோ எல்லா இயக்குனர் கால்லயும் விழறார். அதை இவர் பார்த்திருக்கார்.

பைத்தி: யாரு பார்த்தது ?

சாரு: சிட்டிங்நாத்.

பைத்தி: எப்ப ?

சாரு: முந்தா நேத்து..

பைத்தி: சிட்டிங்நாத் எந்த படத்தோட உதவி இயக்குனர் ?

சாரு: உண்மைத்தமிழனோட புனிதப்போர் குறும்படத்துல.

செந்தழல் ரவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

லக்கிலுக்: கிழிஞ்சது டவுசர் போ..

ஜ்யோராம் : எனக்கு அசிங்கமாயிருக்கிறது. நான் சத்தியமாக யாமம் புத்தகம் வெச்சிருக்கேன்...

செந்தழல் ரவி: அண்ணே பெட்ரூம்ல தானே வெச்சிருக்கீங்க...

ஜ்யோராம் : தம்பி நீ இண்டலிஜெண்டலி டா...எப்படி கண்டுபிடிச்ச ?

செந்தழல் ரவி : சாரு வீட்லயும் தலைக்காணி பஞ்சை எல்லாம் எடுத்து எறிஞ்சுட்டு அதை தான் வெச்சிருக்காராம். கட்டுடைக்கறாராம்.

லக்கிலுக்: என்னது கட்டடம் கட்றாங்களா ?

செந்தழல் ரவி: இல்ல சிமெண்டு போட்டு பூசுறாங்க...

ஜ்யோராம் : டேய்...உங்களை மாதிரி சிறுபத்திரிகைகள் பற்றி அறியாத தற்குறிகளை எல்லாம் இங்கே யார் கூப்பிட்டது ? பரிணாமம் தெரியுமா ? நிறப்பிரிகை தெரியுமா ? கல்குதிரை ? மண்டையனுங்களா...அப்படி ஓரமா உக்காருங்க..

சாரு: ஹே ஹேய். நான் நூறு ரூபாய் கூட இல்லாம ஆட்டோ புடிக்க முடியாம நடந்து தெருத்தெருவா ஸ்டார் ஹோட்டல் போயி தண்ணியடிக்கறேன் தெரியுமா ?

பைத்தி: ஆமாம் இவர் ரொம்ப ஏழைதான் போலிருக்கு...

சாரு: பிச்சைக்காசு 500 டாலர் கொடுக்கிறான் என்பதற்காக ஜெமோ அமெரிக்காவரைக்கும் போறாரு. நான் ஜட்டி போடுவதை நிறுத்தி முன்னூறு நாளாச்சு. அவரைக்காய் சாம்பாரில் உப்பில்லை. கழுதையோடு இப்போதெல்லாம் பேசுவதில்லை. ஹே பாபா. ஸேவ் திஸ் வேர்ல்ட். தமிழ் வாழ்க.

பைத்தியக்காரன் : சார், என்னோட பேர் பைத்தியக்காரன். ஆனா நீங்க..

சாரு: பைத்தியக்காரன்னு சொல்லுறியா ? ஹி ஹி ஹி...சட்டை போட்டிருந்தா தானே கிழிச்சிக்க முடியும் ? நான் இப்ப எல்லாம் சட்டையே போடறதில்லையே...ஹேஹேஹெ..

சுரேஷ் கண்ணன்: என்னை தவிர உலகத்தில் எவனுக்கும் அறிவில்லை. எல்லாரும் முட்டாள்கள். நானும் ரவுடிதான். ஆனா எவனும் என்னை மதிக்கமாட்டேங்கிறான். 2000 ஆம் ஆண்டுலயே நான் கால்குலேட்டர்ல ஒன்னும் பதினொன்னும் பண்ணெண்டுன்னு கூட்டினேன்.

ஜெமோ: டேய். எல்லோடும் என் இருப்பை மறந்து மறுப்பை இறுக்கறீங்களே ? என் இருப்பு இங்கே இன்றியமையாததாகிறது. என்னை எவனும் கண்டுக்க மாட்டேங்கறீங்களே ? ஜெய் ஹிந்த். பாரத் மாதா கீ ஜே.

அட்லீஸ்ட் என்ன ஒரு மலையாள கவிதையாவது சொல்ல உடுங்கடா...இவட ஞானும் உண்டு. கரலே கரலிண்ட கரலே நின்னோடொந்துச்சிரிக்கும்..கிளியே மாரச கிளியே வெருதே நின்னு கினுங்காதே...ஜிங்கிஜாங்க்...

சாரு: ஏய் இவன் இங்கதான் இருக்கான். நர்சிம். ஜ்யோராம். இந்தாளை புடிங்க. கருட புராணத்தின்படி இந்தாளை எண்ணை கொப்பறையில் போடனும்...

நர்சிம் : சாரு, ஒரு நிமிஷம் இருங்க...எண்ணை கொப்பறையில பார்ட்டிக்கு சிக்கன் வறுத்துக்கிட்டிருக்கோம். அப்புறமா போடலாம். அதுவரை இந்த ஆளுக்கிட்ட அலப்பரைய கொடுத்துக்கிட்டிருங்க. நானும் ஜ்யோராம் சுந்தரும் பைத்தியக்காரனை ரெண்டு பக்கமும் புடிச்சுக்கிறோம்..நீங்க கத்தியால குத்துங்க...

சாரு: எதுக்கு கத்தியால குத்தனும் ? என்னோட ஜீரோ டிகிரியோட லத்தீன் மொழிபெயர்ப்ப வலுக்கட்டாயமா படிக்கவைங்க. அதுவே சுத்தியால அடிச்சமாதிரி இருக்காது ?

பைத்தியக்காரன் : டேய் செந்தழல் ரவி, லக்கிலுக், காப்பாத்துங்கடா. நாகார்ஜூன் லண்டன்ல இருக்கார்....

ரவிசங்கர் : பைத்தியக்காரன். நீங்க கத்தும்போது டேய் ரவி லக்கின்னு சொன்னா அவங்க எப்படி வருவாங்க. நீங்க கத்தும்போது லகரம் குழைந்து மகரம் ஆகிடுது. அப்படி தவறான ஓசை எழுந்தா அதன் அர்த்தம் மாற வாய்ப்பு இருக்கு இல்லையா ?

லக்கிலுக்: அய்யோ இன்னொருத்தன் ஆரம்பிச்சுட்டாண்டா...மகரநெடுங்குழைகாதா ? காப்பாத்துடா...

டோண்டு: ஹைப்பர்லிங்க் வந்தது. வந்தேன். எங்கே பிராமணன் நூறாவது பகுதியில ஜெமோவை பற்றி சோ ராமசாமி என்ன சொன்னார்னா ?

செந்தழல் ரவி: அய்யோ இப்ப என்னால முடியல. லக்கி வாங்க ஓடிப்போயிடலாம்...

சாரு: மறுபடி பழிய மேட்டருக்கு வரேன். இந்த ஜெமோவோட விவாதம் செஞ்சு பேசிக்கிட்டிருந்ததால மனுஷ்ய புத்திரனுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு. அவர் போலீஸ்ல புகார் கொடுக்கப்போறார். உண்மையில பைத்தியம் இந்த ஜெமோ தான்..

ஜெமோ: உன்னுடைய பதில்கள் பீப்பீரியானி போல இருக்கு. நீ பீப்பீ ஊதத்தான் லாயக்கு. போயி அரச இலையை கூராக மடித்து பீப்பி செய் போ...

சாரு: நீ எல்லா உதவி இயக்குனர்கள் கால்லயும் விழுறயாமே ? உனக்கு வசனம் எழுத சான்ஸ் தந்தா அந்த படம் உருப்புட்ட மாதிரி தான். எஸ்.ராவோட பிஸ்கேட்டை தட்டி பறிச்சு புடிங்கினேயே ?

ஜெமோ: நீ பெரிய புடுங்கி...உனக்கும் அந்த பிஸ்கேட் வேனும்னு தான இவ்ளோ அலையற...ஹே பகவான்...அபு ஜந்தர் கீ மந்தர். இஸ்லியே ஏக் பந்தர். இவட நோக்குன்னு, பிராந்தன்.

சாரு: பிராந்தியா ? உன்னால அத மோந்து கூட பாக்கமுடியாது. மீசையே இல்லாத நீ எப்படி பிராந்தி குடிக்கப்போற ? கட்டுடைக்கறதே தொழிலா இருப்பவன் நான். என்னுடைய ஜீரோ டிகிரி சைனாவின் பெஸ்ட் செல்லர்.

ஜெமோ: உன்னோட புத்தகத்தால சீனாவோட குப்பைத்தொட்டி ரொம்பிடுச்சுன்னு உன்ன அரஸ்ட் பண்ண கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் ஆர்டர் போடும். நீ உருப்புடவே மாட்ட. காற்றில்லா வெற்றிடத்தில் நீ எவ்ளோ கூவுனாலும் கேக்காது..

சாரு: ஆமா, நான் வெற்றிடத்துல கூவுறேன், இவரு வெற்றிலைய மெல்லுறாரு. ஜீரோ டிகிரியை ஆங்கிலத்துல ஈ புக்கா வித்தவண்டா நான். உன்னுடைய அல்லக்கையை வெச்சு உனக்கு நீயே கடிதம் எழுதி அதுக்கு பதிலும் எழுதுறியே, கேவலமா இல்லையா ?

ஜெமோ: எழுத்தாளர் சங்கத்துல இருந்து உனக்கு நோட்டீஸ் வரும். உன்னிடம் போய் விவாதம் செய்கிறேனே ? உனக்கு உளச்சிக்கல்.

சாரு: உளச்சிக்கல், மலச்சிக்கல். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாத நீ ஒரு இண்டலெக்சுவல் ப்ராஸ்ட்டிட்டுட்.

இதற்கிடையே இவர்கள் சண்டையில் சுவாரஸ்யம் தவறிப்போன ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரன், நர்சிம் மூவரும் ஒரு புல் ஓல்டு மங்குடனும், முந்திரி வறுவலுடனும் (ஸ்பான்ஸர் : நர்சிம் ) ஓரமாக உட்கார்ந்துவிடுகிறார்கள்...

லக்கிலுக் வழக்கம்போல பெப்சி பாட்டிலை முகர்ந்துவிட்டு மட்டையாக, செந்தழல் ரவி நடந்த நிகழ்வை பதிவாக்க..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

49 comments:

உண்மைத்தமிழன் said...

செம காமெடி தம்பி..

வயிறு குலுங்க சிரித்தேன்..!

Thamiz Priyan said...

;-))))))))))))))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜெமோ அஞ்சு நிமிஷம் பேசினாலே 10 தடவை ‘யதி' வரணுமே :)

செம நக்கல் பதிவு :)

Athisha said...

நாங்களும் ஒன்னு போட்டிருக்கோம்ல..

மணிகண்டன் said...

:)-

ரவி said...

யதி வராமல் எழுதும்போது கட்டுடைக்கறோம் அண்ணாச்சி.

நன்றி உண்மையாரே...

நன்றி தமிழ் பிரியன் மணி அதிஷா...

கே.என்.சிவராமன் said...

:-) செம நக்கலு...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

anujanya said...

மொத்தத்தில் ஊரே சிரிக்கிறது :))) குசும்பன் மட்டும் உங்க மேல கோவமா இருக்காராம். அவர் எழுத வேண்டிய பதிவு - 'ச்சே வடை போச்சே' னு ஒரே சோகம் :))

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

செம காமெடி

☀நான் ஆதவன்☀ said...

முடியலண்ணே...முடியல :)

ரவி said...

ச்சும்மா இறுக்கத்தை குறைக்க...பைத்தியக்காரன்...ஜாலியாகவே எடுத்துக்குவீங்க இல்லையா ?

ரவி said...

அனுஜைன்யா, டிவிஆர், ஆதவன், நன்றி....

குசும்பன் இதை வைத்து கார்ட்டூன் தயாரித்தால் நன்று..!!!

நாமக்கல் சிபி said...

ரவி,

சிரிப்பு நான் ஸ்டாப்பா போயிகிட்டிருக்கு!

:))))))))))))))))

வினவு said...

1.ரவியிடம் இவ்வளவு படைப்புத் திறனா?

2.இந்த நாடகத்தில் வினவு இடம் பெறாமல் போனதற்கு காரணம்?

3.சாரு, ஜெ.மோ அடித்துக் கொள்வதை பலரும் தீவிரமாக வேடிக்கை பார்ப்பதற்கு என்ன காரணம்?

வினவு

பதி said...

;)))))))))))))))))

வால்பையன் said...

ஹா ஹா ஹா

நல்ல சிரிக்க வச்சிங்க!

அதிஷான்னு கூட அவருக்கு ஒரு நெருங்கிய தோழர் உண்டு! அவரும் அங்க வந்து சவுண்டு சவுண்டு பார்த்தார், ஆனா ஏற்கனவே அங்க சவுண்டு அதிகமா இருந்ததால ரிப்பீட் ஆகிட்டார்!
இனிமே சாருவ பத்தி எழதும் போது மறக்காம அதிஷாவுக்கும் ஒரு சீட்டு போட்டு வையுங்க!

Unknown said...

செம்ம அப்ஸர்வேஷன் :-)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

மை டியர் பிரெண்ட்,

நல்லா இருக்கு ரவி.ரவின்னாலே ஒளி வட்டம் இருக்கும் போல.

“நட்புக்காக”(guest appearance) என்ற
ரீதியில் எனக்கு ஒரு ரோல் கொடுத்து
இருக்கீங்க.நன்றி.

அதிஷாவை ஏன் விட்டு விட்டுவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

ரவி அந்த(ப்ளாக்) ஹிட் கவுண்டர் நானும்(html text) பேஸ்ட்செய்தேன்.
வேலைச்செய்யவில்லையே.உங்களுக்கு முதலில் பிராப்ளம் வந்து சரியாகியதா இல்லை போட்டவுடன் ஓகேயா?

Anonymous said...

கற்பனை போலத் தெரியவில்லை ரவி. நல்லா இருக்கு.

உண்மைத்தமிழன் said...

///3.சாரு, ஜெ.மோ அடித்துக் கொள்வதை பலரும் தீவிரமாக வேடிக்கை பார்ப்பதற்கு என்ன காரணம்?///

வினவு ஸார்..

இரண்டு பேரின் சண்டையும் தீவிரமான காமெடியாக இருப்பதால்தான் அனைவரும் தீவிரமாகவே வேடிக்கை பார்க்கிறார்கள்..

ரவி said...

இல்லையே, ஹிட் கவுண்டர் தெரியுமே ? Expand Widget Templates போட்டபிறகு போட்டீர்களா ? மின் அஞ்சல் அனுப்புங்க
கோடை அனுப்புறேன்...

நாமக்கல் சிபி, நன்றி..

வினவு, மொக்கைத்திறன் மட்டுமே. இந்த நாடகத்தில் இப்போது களத்தில் இறங்கி மண்டை உடைந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்கள். சாருவும் ஜெமோவும் கட்டுடைத்து கல்லறை கட்டியவர்கள் இல்லையா ?

பதி, தொடரும் ஆதரவுக்கு நன்றி...

வால்ஸ்...எஞ்சாய்ஸ்...

அதிஷாவுக்கு கண்டிப்பா அடுத்த முறை சீட்டு போட்டுடுறேன்..

ஆயில்யன் said...

//ஹே பாபா. ஸேவ் திஸ் வேர்ல்ட். தமிழ் வாழ்க//
//2000 ஆம் ஆண்டுலயே நான் கால்குலேட்டர்ல ஒன்னும் பதினொன்னும் பண்ணெண்டுன்னு கூட்டினேன்//

வரிகளாய் படிக்க ஆரம்பிக்கையில் தொடங்கிய புன்னகை பெரும் சிரிப்பாய் மாறித்தான் போனது

செம கலக்கல் :-)))))

ரவி said...

வடகரை அண்ணாச்சி, ஆயில்ஸ்...நன்றி...!!!! உங்களது பாராட்டு புல்மீல்ஸ்..

கொழுவி said...

கற்பனை போலத் தெரியவில்லை ரவி. நல்லா இருக்கு.//

அப்போ இது உண்மையில்லையா..?

Pot"tea" kadai said...

//ஜெமோ: உன்னுடைய பதில்கள் பீப்பீரியானி போல இருக்கு. நீ பீப்பீ ஊதத்தான் லாயக்கு. போயி அரச இலையை கூராக மடித்து பீப்பி செய் போ...//

மன்னிக்கவும் ஜெமோ. தகவல் பிழை உள்ளது. அரச இலையில் பீப்பீ செய்வதை விடவும் பூவரச இலையில் பீப்பீ செய்வது சுலபம். பீப்பீ இசையும் பூவரச இலையில் நவரசமாக இருக்கும். அதனால அடுத்த முறை இன்பர்மேசன் கரிட்டா குடுங்க. நீங்க சொல்ற எல்லாத்தையும் பாப்பாரபட்டி பலராமன் அப்படியே நம்பராராம்.

அபி அப்பா said...

எலேய் குசும்பா ஓடியா இங்கிட்டு. நர்சிம்மை ஜீப்பிலே இருந்து இன்னி இழுக்க முடியாது நடு சீட்டுக்கு போயிட்டாரு. இங்கிட்டு வா, செந்தழலார் தான் தொங்கிட்டு இருக்கார். ரெண்டு பேரும் சேர்ந்து இழுத்து போடுவோம். வரும் போது லக்கிக்கு 4 பேரை காவலுக்கு போட்டுட்டு வா, இல்லாட்டு ஜீப் கூட் ரோட்டிலே வரும் போது திடீர்ன்னு வந்து ஜீப்பிலே குதிச்சிடுவாரு ஓடியா ஓடியா!!

ரவி said...

பொட்டீக்கடையாரே ? நீங்க வந்துட்டீங்களே ?

சரி அப்ப அங்கிட்டு ஒரு 'பூ' கவனிக்க பெரிய 'பூ' போட்டிடறேன்.

அபி அப்பா. குசும்பனையும் ஆசிப் அண்ணாச்சியையும் கூட்டிவாங்க. என்னுடைய பதிவில் அவர் பின்னூட்டம் போட்டு ஒரு மாமாங்கம் ஆவுது. குசும்பனை முக்காடை நீக்கிட்டு வரச்சொல்லுங்க.

நாகா said...

தூக்குங்கடா அந்த ஜீப்ப :-) இறுக்கம் சற்றே குறைந்தது போலுள்ளது

Pot"tea" kadai said...

//
சரி அப்ப அங்கிட்டு ஒரு 'பூ' கவனிக்க பெரிய 'பூ' போட்டிடறேன்.//

அடியேன் ஒரு சாமானியன். கவனிக்கவும் சாமான் இல்லை. அதனால் மறைவு நவிற்சியணியில் கதைக்காமல் நமது புனித வளனார் ஈ எம் ஆர் குரூப்பு வகையறாவில் கதைக்கவும்

Anonymous said...

சரி டயமாவுது. குளிச்சிட்டு வரேன் கட்டைய சாத்தனும்.

ரவி said...

வாங்க நாகா. அனானி. நன்றி.

பொட்டீயாரே, ஈ எம். ஆர் குரூப்புக்கு இருந்தது போன்ற த்ராபையான ஒரு பில்டிங் அந்த கேம்பஸிலேயெ கிடையாது என்பது வெள்ளிடை மலை.

அந்த காலத்தில் போர்டிங் சாமியாராக இருந்த ஆக்னெல் தான் இப்போது ப்ரின்ஸிப்பால் என்பதும் அவர் என்னுடைய பெஸ்ட்டு பிரண்டு என்பதும் உமக்கு உபரி தகவல்.

சரவணகுமரன் said...

இதுக்கு பயந்தே இனி யாரும் சண்டை போடா கூடாது... :-)

Pot"tea" kadai said...
This comment has been removed by a blog administrator.
ஒரு காசு said...

கலக்கல் சாமி.

ரவி said...

பொட்டியாரே...நாள பின்ன நாம சுத்தப்போற ஏரியாவாச்சே. அதான் உமது பின்னூட்டத்தை ரிமூவ் செய்துவிட்டேன். வருடத்துக்கு பத்தாயிரம் இஸ்டூடன்ஸு உள்ள பள்ளி, ஈஸியாக அவருடைய பார்வைக்கே போகும் வாய்ப்புண்டு.

போன மாதம் ஒரு பய புள்ளைக்கு பதினொன்றாம் வகுப்பு கம்பூட்டர் சயன்ஸ் குருப் கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்யும் அளவுக்கும் நமது நட்பு உள்ளது. நாம பல்லு போன காலங்களில் அந்த கேம்பஸில் எதாவது பாடம் நடத்தி பொழைச்சுக்கொள்ளாலாம், நீரும் கெஸ்ட்டு லெக்சராக வாரும்.

மணிகண்டன் said...

***
அந்த காலத்தில் போர்டிங் சாமியாராக இருந்த ஆக்னெல் தான் இப்போது ப்ரின்ஸிப்பால் என்பதும்
***

திருச்சி மண்டல கல்லூரி குறித்து பேசுகிறீர்கள் தானே !

மணிகண்டன் said...

ஒ....இது இஸ்கூலா

ஷங்கி said...

ரொம்ம்ப நன்னாருக்குவோய்!, பேஷ், பேஷ்!!!

இரா. வசந்த குமார். said...

:))))) superpaa...!!!!

PRABHU RAJADURAI said...

வயிறு குலுங்க சிரித்தேன்..!

Joe said...

செம ரகளை!

குப்பன்.யாஹூ said...

கலக்கல், எல்லாரும் போல நானும் வயிறு குலுங்க சிரித்தேன், ரசித்தேன்,

இந்த கிண்டலுக்கு பிறகாவது எல்லாரும் ஒன்று இனைந்து படைப்புக்கள் உருவாக்கலாம். நாளைய தலைமுறைக்கு நல்ல சுவையான படைப்புக்களை வழங்கி விட்டு செல்லலாம்.

குப்பன்_யாஹூ

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் தலைவா...!

தமிழன்-கறுப்பி... said...

சுத்தி இருக்கிறவங்களை மறந்து சிரிச்சுட்டே இருந்தேன்...


:))

ரவி said...

நன்றி பிரபு ராஜதுரை, குப்பன், தமிழன் கருப்பி.....

நர்சிம் said...

மிக ரசித்தேன் தல.. இப்பத்தான் போத தெளிஞ்சு படிச்சேன்.. கலக்கல்.

நல்லதந்தி said...

சிரிச்சி சிரிச்சி வாயும், வவுறும் புண்ணாயிடுச்சி!:)

ரவி said...

நன்றி நர்சிம்..ஸ்டார் ஆப் த வீக்...

நன்றி நல்ல தந்தி.