
பாருங்க இந்த படத்தை...இதில் மத்திய ரெண்டு கேபினெட், ஒரு மாநில உள்ளாட்சி அமைச்சர்கள் இருக்காங்க...அதுவும் இல்லாம ஒரு முதல் அமைச்சரும் இருக்கார்...கண்டுபிடிங்க பார்ப்போம் ? அடிங்...என்று சொல்லவேண்டாம்...
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்...அழகிரிக்கு இந்தியும் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, அவரை எப்படி கேபினெட்டுல வெச்சுக்கறதுன்னு கேட்டானாம் ஒரு குடுமி...ஐ மீன் சிங்...இது என்ன அநியாயம் ?
ஒரு தமிழனாக எனக்கு வந்த எரிச்சலில் சொன்னென்...அப்ப லல்லுவுக்கு இந்தி மட்டும்தானே தெரியும் ? தமிழ் தெரியாத இவர் எப்படி போன கேபினட்ல தமிழ்நாட்டுக்கு மந்திரியா இருந்தார் ? (மத்திய ரயில்வே அமைச்சர்னா தமிழ்நாட்டுக்கும் தானே ? )
என்ன அநியாயம், இந்த சாரு இவ்ளோ நாள் கெனத்துல போட்ட கல்லுமாதிரி இருந்துட்டு, இப்ப கொடுத்த காசுக்கு மேல கூவுறமாதிரி ஒரு பதிவு போட்டிருககாரு..
..சாருவின், ஜெமோவின் கள்ள மவுனங்களை டவுசர் கிழித்த தமிழ்நதியின் பதிவு பார்த்துட்டீங்கதானே ? இல்லைன்னா இந்தாங்க லிங்க்...!!!
லக்கிலுக்குக்கு பொண்ணு பொறந்திருக்கு...வாழ்த்துக்கள்...தொலைபேசியில் அழைக்கமுடியாத சூழலில் ஒரு பதிவை போட்டு வாழ்த்திக்கறேன்...என்ன அநியாயம், இந்த ஆளு கல்யாணம் ஆனவர்னு கூட தெரியாம பலபேர் இருந்திருக்காங்க...ஒருவேளை இவர் சுண்டக்கஞ்சியும், பட்டை சரக்கும் டெய்லி அடிப்பாரு என்று தெரியாதவங்களும் உண்டோ ? பத்த வெச்சியே பரட்டை..
டீச்சரின் பூனை செத்துப்போச்சாம்...வருத்தங்கள்...அவரும் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்...சாரி டீச்சர்...
என்ன அநியாயம் ? இந்த இலங்கையில இத்தனை மக்கள் செத்ததுக்கும் ஒரு சுவரொட்டி ஒட்டுங்கடே...என்னது, பஜன பாடனுமா ? கடவுளை தேடனுமா ? சரி சரி, நீங்க உங்க வேலையை பாருங்க...