Tuesday, June 30, 2009

தெனாலி Ø நான் ரசித்த வலைப்பக்கம்...



நான் ரசித்த வலைப்பக்கம் இது. தமிழ்நாடு இலங்கை இந்தியா சினிமா என்று பிரித்து செய்திகளை தருகிறார்கள். நல்ல போட்டோ கேலரியும் உள்ளது. அதில் முமைத் கானின் படம் ஒன்று..

...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், ஜ்யோராம் சுந்தர், நர்சிம் சந்திப்பு...



முதலில் சாரு தொண்டையை கனைத்துக்கொண்டு ஆரம்பிக்கிறார்...

சாரு : ஜெயமோகன் பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணிபோட்டதால் எதிர்வீட்டு தாத்தா மண்டையை போட்டார். இது தெரிந்து மூன்றாவது வீட்டு கிழவி பாத்ரூமில் தடுக்கி விழுந்து செத்துப்போனார்.

பைத்தி: நர்சிம் வீட்டில் வைத்திருந்த பீர் பானையில் மூச்சா விட்டார் சாரு. அதனால் பிரெஞ்சு பலான படம் பார்த்துக்கொண்டிருந்த அய்யனார் அவரை நடுராத்திரியில் அடித்து துரத்தினார்.

ஜ்யோராம்: சாரு, நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் பைத்தியக்காரன் சொல்வது எனக்கு ஏற்புடையதில்லை. நைட்டு எங்க சரக்கு ?

நர்சிம் : சாரு, பைத்தி, ஜ்யோராம், நீங்க எல்லாரும் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. எனக்கு எது ஏற்புடையதோ அதை சொல்லுவேன். நானும் ரவுடிதான். அய்யோ நான் வாங்கித்தரமாட்டேன். வாய்க்கு குடிக்கச்சொன்னா வவுத்துக்கே குடிக்கறானுங்க...

செந்தழல் ரவி: நான் என்ன சொல்ல வரேன்னா ?

லக்கிலுக்: ரவி, இரும்படிக்கற எடத்துல ஈக்கென்ன வேலை ? வாட் ஆர் யூ டூயிங் ஹியர் ?

செந்தழல் ரவி: ச்சும்மா சண்டை நடக்குதே, வேடிக்கை பார்த்து எஞ்சாய் பண்ணலாம்னு...நான் ஈன்னா நீ என்ன ப்ப்ப்ப்ப்...

லக்கிலுக்: ஹல்லோ. ஸ்ஸ்ஸ்டாப்பிட். வாங்க நாம அப்படி ஓரமா ஒக்காந்து தேத்தன்னி குடிச்சு கிங்ஸ் புகைக்கலாம்...

சாரு: சிட்டிங்நாத் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் ஒரு உதவி இயக்குனர். அந்த ஜெமோ எல்லா இயக்குனர் கால்லயும் விழறார். அதை இவர் பார்த்திருக்கார்.

பைத்தி: யாரு பார்த்தது ?

சாரு: சிட்டிங்நாத்.

பைத்தி: எப்ப ?

சாரு: முந்தா நேத்து..

பைத்தி: சிட்டிங்நாத் எந்த படத்தோட உதவி இயக்குனர் ?

சாரு: உண்மைத்தமிழனோட புனிதப்போர் குறும்படத்துல.

செந்தழல் ரவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

லக்கிலுக்: கிழிஞ்சது டவுசர் போ..

ஜ்யோராம் : எனக்கு அசிங்கமாயிருக்கிறது. நான் சத்தியமாக யாமம் புத்தகம் வெச்சிருக்கேன்...

செந்தழல் ரவி: அண்ணே பெட்ரூம்ல தானே வெச்சிருக்கீங்க...

ஜ்யோராம் : தம்பி நீ இண்டலிஜெண்டலி டா...எப்படி கண்டுபிடிச்ச ?

செந்தழல் ரவி : சாரு வீட்லயும் தலைக்காணி பஞ்சை எல்லாம் எடுத்து எறிஞ்சுட்டு அதை தான் வெச்சிருக்காராம். கட்டுடைக்கறாராம்.

லக்கிலுக்: என்னது கட்டடம் கட்றாங்களா ?

செந்தழல் ரவி: இல்ல சிமெண்டு போட்டு பூசுறாங்க...

ஜ்யோராம் : டேய்...உங்களை மாதிரி சிறுபத்திரிகைகள் பற்றி அறியாத தற்குறிகளை எல்லாம் இங்கே யார் கூப்பிட்டது ? பரிணாமம் தெரியுமா ? நிறப்பிரிகை தெரியுமா ? கல்குதிரை ? மண்டையனுங்களா...அப்படி ஓரமா உக்காருங்க..

சாரு: ஹே ஹேய். நான் நூறு ரூபாய் கூட இல்லாம ஆட்டோ புடிக்க முடியாம நடந்து தெருத்தெருவா ஸ்டார் ஹோட்டல் போயி தண்ணியடிக்கறேன் தெரியுமா ?

பைத்தி: ஆமாம் இவர் ரொம்ப ஏழைதான் போலிருக்கு...

சாரு: பிச்சைக்காசு 500 டாலர் கொடுக்கிறான் என்பதற்காக ஜெமோ அமெரிக்காவரைக்கும் போறாரு. நான் ஜட்டி போடுவதை நிறுத்தி முன்னூறு நாளாச்சு. அவரைக்காய் சாம்பாரில் உப்பில்லை. கழுதையோடு இப்போதெல்லாம் பேசுவதில்லை. ஹே பாபா. ஸேவ் திஸ் வேர்ல்ட். தமிழ் வாழ்க.

பைத்தியக்காரன் : சார், என்னோட பேர் பைத்தியக்காரன். ஆனா நீங்க..

சாரு: பைத்தியக்காரன்னு சொல்லுறியா ? ஹி ஹி ஹி...சட்டை போட்டிருந்தா தானே கிழிச்சிக்க முடியும் ? நான் இப்ப எல்லாம் சட்டையே போடறதில்லையே...ஹேஹேஹெ..

சுரேஷ் கண்ணன்: என்னை தவிர உலகத்தில் எவனுக்கும் அறிவில்லை. எல்லாரும் முட்டாள்கள். நானும் ரவுடிதான். ஆனா எவனும் என்னை மதிக்கமாட்டேங்கிறான். 2000 ஆம் ஆண்டுலயே நான் கால்குலேட்டர்ல ஒன்னும் பதினொன்னும் பண்ணெண்டுன்னு கூட்டினேன்.

ஜெமோ: டேய். எல்லோடும் என் இருப்பை மறந்து மறுப்பை இறுக்கறீங்களே ? என் இருப்பு இங்கே இன்றியமையாததாகிறது. என்னை எவனும் கண்டுக்க மாட்டேங்கறீங்களே ? ஜெய் ஹிந்த். பாரத் மாதா கீ ஜே.

அட்லீஸ்ட் என்ன ஒரு மலையாள கவிதையாவது சொல்ல உடுங்கடா...இவட ஞானும் உண்டு. கரலே கரலிண்ட கரலே நின்னோடொந்துச்சிரிக்கும்..கிளியே மாரச கிளியே வெருதே நின்னு கினுங்காதே...ஜிங்கிஜாங்க்...

சாரு: ஏய் இவன் இங்கதான் இருக்கான். நர்சிம். ஜ்யோராம். இந்தாளை புடிங்க. கருட புராணத்தின்படி இந்தாளை எண்ணை கொப்பறையில் போடனும்...

நர்சிம் : சாரு, ஒரு நிமிஷம் இருங்க...எண்ணை கொப்பறையில பார்ட்டிக்கு சிக்கன் வறுத்துக்கிட்டிருக்கோம். அப்புறமா போடலாம். அதுவரை இந்த ஆளுக்கிட்ட அலப்பரைய கொடுத்துக்கிட்டிருங்க. நானும் ஜ்யோராம் சுந்தரும் பைத்தியக்காரனை ரெண்டு பக்கமும் புடிச்சுக்கிறோம்..நீங்க கத்தியால குத்துங்க...

சாரு: எதுக்கு கத்தியால குத்தனும் ? என்னோட ஜீரோ டிகிரியோட லத்தீன் மொழிபெயர்ப்ப வலுக்கட்டாயமா படிக்கவைங்க. அதுவே சுத்தியால அடிச்சமாதிரி இருக்காது ?

பைத்தியக்காரன் : டேய் செந்தழல் ரவி, லக்கிலுக், காப்பாத்துங்கடா. நாகார்ஜூன் லண்டன்ல இருக்கார்....

ரவிசங்கர் : பைத்தியக்காரன். நீங்க கத்தும்போது டேய் ரவி லக்கின்னு சொன்னா அவங்க எப்படி வருவாங்க. நீங்க கத்தும்போது லகரம் குழைந்து மகரம் ஆகிடுது. அப்படி தவறான ஓசை எழுந்தா அதன் அர்த்தம் மாற வாய்ப்பு இருக்கு இல்லையா ?

லக்கிலுக்: அய்யோ இன்னொருத்தன் ஆரம்பிச்சுட்டாண்டா...மகரநெடுங்குழைகாதா ? காப்பாத்துடா...

டோண்டு: ஹைப்பர்லிங்க் வந்தது. வந்தேன். எங்கே பிராமணன் நூறாவது பகுதியில ஜெமோவை பற்றி சோ ராமசாமி என்ன சொன்னார்னா ?

செந்தழல் ரவி: அய்யோ இப்ப என்னால முடியல. லக்கி வாங்க ஓடிப்போயிடலாம்...

சாரு: மறுபடி பழிய மேட்டருக்கு வரேன். இந்த ஜெமோவோட விவாதம் செஞ்சு பேசிக்கிட்டிருந்ததால மனுஷ்ய புத்திரனுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு. அவர் போலீஸ்ல புகார் கொடுக்கப்போறார். உண்மையில பைத்தியம் இந்த ஜெமோ தான்..

ஜெமோ: உன்னுடைய பதில்கள் பீப்பீரியானி போல இருக்கு. நீ பீப்பீ ஊதத்தான் லாயக்கு. போயி அரச இலையை கூராக மடித்து பீப்பி செய் போ...

சாரு: நீ எல்லா உதவி இயக்குனர்கள் கால்லயும் விழுறயாமே ? உனக்கு வசனம் எழுத சான்ஸ் தந்தா அந்த படம் உருப்புட்ட மாதிரி தான். எஸ்.ராவோட பிஸ்கேட்டை தட்டி பறிச்சு புடிங்கினேயே ?

ஜெமோ: நீ பெரிய புடுங்கி...உனக்கும் அந்த பிஸ்கேட் வேனும்னு தான இவ்ளோ அலையற...ஹே பகவான்...அபு ஜந்தர் கீ மந்தர். இஸ்லியே ஏக் பந்தர். இவட நோக்குன்னு, பிராந்தன்.

சாரு: பிராந்தியா ? உன்னால அத மோந்து கூட பாக்கமுடியாது. மீசையே இல்லாத நீ எப்படி பிராந்தி குடிக்கப்போற ? கட்டுடைக்கறதே தொழிலா இருப்பவன் நான். என்னுடைய ஜீரோ டிகிரி சைனாவின் பெஸ்ட் செல்லர்.

ஜெமோ: உன்னோட புத்தகத்தால சீனாவோட குப்பைத்தொட்டி ரொம்பிடுச்சுன்னு உன்ன அரஸ்ட் பண்ண கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் ஆர்டர் போடும். நீ உருப்புடவே மாட்ட. காற்றில்லா வெற்றிடத்தில் நீ எவ்ளோ கூவுனாலும் கேக்காது..

சாரு: ஆமா, நான் வெற்றிடத்துல கூவுறேன், இவரு வெற்றிலைய மெல்லுறாரு. ஜீரோ டிகிரியை ஆங்கிலத்துல ஈ புக்கா வித்தவண்டா நான். உன்னுடைய அல்லக்கையை வெச்சு உனக்கு நீயே கடிதம் எழுதி அதுக்கு பதிலும் எழுதுறியே, கேவலமா இல்லையா ?

ஜெமோ: எழுத்தாளர் சங்கத்துல இருந்து உனக்கு நோட்டீஸ் வரும். உன்னிடம் போய் விவாதம் செய்கிறேனே ? உனக்கு உளச்சிக்கல்.

சாரு: உளச்சிக்கல், மலச்சிக்கல். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாத நீ ஒரு இண்டலெக்சுவல் ப்ராஸ்ட்டிட்டுட்.

இதற்கிடையே இவர்கள் சண்டையில் சுவாரஸ்யம் தவறிப்போன ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரன், நர்சிம் மூவரும் ஒரு புல் ஓல்டு மங்குடனும், முந்திரி வறுவலுடனும் (ஸ்பான்ஸர் : நர்சிம் ) ஓரமாக உட்கார்ந்துவிடுகிறார்கள்...

லக்கிலுக் வழக்கம்போல பெப்சி பாட்டிலை முகர்ந்துவிட்டு மட்டையாக, செந்தழல் ரவி நடந்த நிகழ்வை பதிவாக்க..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Monday, June 29, 2009

சிங்கப்பூர் டூர் போலாம் வாரீயளா ???


சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம். அத்தகைய நல்ல வாய்ப்புகளை சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி இணையதளமும் ஏற்படுத்திக் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றனர்.

மணற்கேணி 2009

கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பதும், சுரப்பதும் நமக்குத் தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.

இந்த ஆண்டுக்கான மணற்கேணி - 2009 போட்டி சூலை 01, 2009 துவங்குகிறது. பதிவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை போட்டிப் பிரிவுகளுக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பதிவு வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இட்டீடு(விவாதம்) வேண்டி பதிவிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயன்ற வரை தனித்தமிழில் ஆக்கங்களைத் தர முயலுங்கள். முனைப்பிற்கான முயற்சி இது. போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்போ அல்லது போட்டி கடைசி தினத்திற்கு பின்போ வரும் கருத்தாய்வுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலாது, போட்டிக்கு அனுப்பும் கடைசி நாள் வரை போட்டி கருத்தாய்வு வலைப்பதிவுகளிலே அல்லது எந்த விதத்திலும் எங்கேயும் வெளியாகியிருக்க கூடாது, போட்டி விதிமுறைகள் சூலை 01,2009 அன்று வெளியிடப்படும்...

கருத்தாய்வு போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது, ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது, இது தொடர்பான விவரங்களை போட்டி தலைப்புகள் என்ற சுட்டியின் கீழ் காணலாம். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவர் என மொத்தம் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்

இணைப்பு தர

மணற்கேணி 2009 பற்றிய விளம்பரத்தை உங்கள் தளங்களில் இட்டு இம்முயற்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்

Friday, June 26, 2009

தட்ஸ் தமிழில் உரையாடல் சிறுகதைப்போட்டி அறிவிப்பு...!!!

தட்ஸ் தமிழில் உரையாடல் சிறுகதை போட்டி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

தட்ஸ் தமிழ் குழுவினருக்கும் ஏ.கே.கானுக்கும் நன்றி..!!!

புது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் வெர்ஷன் 2


புது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் என்ற முல்லையின் பதிவை பார்த்து இந்த பதிவு. அங்கே இதனை பின்னூட்டமாகவும் போட்டாச்சு...!!!

கண்ட கண்ட செய்திகளை கேட்டு மனது குழப்பமடையாமல் பார்த்துக்கொள்வதும் தேவை...

ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் குழந்தை நல்ல உடல் நலனுடன் இருக்கும்...சளி சுரம் போன்ற தொல்லைகள் அடிக்கடி வராது...

அப்படியே சளி சுரம் போன்றவை வந்தாலும், உடனே மாத்திரை போடுவது ஊசி போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம். தானாக சரியாகும்படி விடலாம்..பிள்ளையின் இம்யூன் ஸிஸ்டம் சிறப்பாக அமைய இது உதவும்...

குழந்தைகளை தூக்கும்முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்வது முக்கியம்.

குழந்தையை பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையின் முகத்தில் வலுக்கட்டாய உம்மா தருவதை தடுக்கவேண்டும். அவர்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம்.

குழந்தையை தோளில் கிடத்தி முன்னும் பின்னும் கொஞ்சம் / என்ன ஒரு அரை மணி நேரம் நடந்தால் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தை திடீரென்று அழுதால் உடைகளை கழட்டி பரிசோதியுங்கள். இறுக்கமான உடைகள், அன்கம்பர்டபுளாக இருக்க வாய்ப்பு உண்டு.

அதிக குளிரும் சரி, அதிக சூடும் சரி, குழந்தைக்கு ஆகாது.

கச்சா முச்சா நாட்டு வைத்தியங்களை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திணிப்பதை தவிருங்கள். நீங்கள் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கும் 100 வருடத்துக்கு முன் இருந்த குழந்தைக்கும் வேறுபாடு உள்ளது. அந்த ரப்பஸ்ட்நெஸ் இப்போது இல்லை. அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

கடைசியாக, குழந்தையை பெற்றபிறகு தாய் தனது உடல் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பார். வேளைக்கு இரும்புச்சத்து, கால்சியம் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதில் சோம்பேறித்தனமும் வெறுப்பும் இருக்கும். நீங்கள் கட்டயப்படுத்தி அல்லது நல்ல விதமாக சொல்லி அந்த மாத்திரைகளை உட்கொள்ளச்செய்யவேண்டும்.

இல்லையென்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் மூட்டு வலி, கால் வலி கை வலி என்ற பல உபாதைகளுக்கு அவர்கள் ஆளாவார்கள்.

அப்பா டே விஷ்ஷஸ்...!!

ஓப்பன் ஐடியில் பிரச்சினையா ?

தமிழ்மணத்தின் ஓப்பன் ஐடி பற்றிய அறிவிப்பை படித்து புரிந்துகொள்ள அரைநாள் ஆகும் என்று அப்பீட் ஆகிய பிரபல பதிவர்களுக்காகவே...இந்த ஓப்பன் ஐடி தமிழ்மணத்தில் ஓட்டு போட மட்டும் இல்லாமல் இன் பியூச்சர் பல இடங்களில் பயன்படும்...

உங்களிடம் யாகூ முகவரி இருக்கா ? கண்டிப்பா இருக்கும்...

ஓப்பன் ஐடி பற்றி கேட்கும் பெட்டியில் உங்கஐடி@yahoo.com என்று கொடுங்க.

அது யாகூவின் லாகின் பேஜுக்கு கொண்டு செல்லும்...

அங்கிட்டு உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் ஆவுங்க...

அப்புறமா ஒரு பேஜ் லோட் ஆகி Confirm என்று கேட்கும்.

அதில் கன்பர்ம் பட்டன் அடிச்சிட்டீங்கன்னா போதும்...

தமிழ்மணத்தில் மட்டும் இதன் மூலம் ஓட்டு போட முயற்சி செய்யுங்க...



இவ்வளவு சொல்லியும் ஓட்டு போட முடியாதவர்களால் எதுவுமே முடியாது. அதனால் அட்லீஸ் நமீதா படத்தை டபுள் க்ளிக் செய்து பார்த்து சந்தோஷம் அடையவும்...





தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறு வாக்களிப்பது ?

தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்

OpenID என்றால் என்ன ?

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .

எப்படி வாக்களிப்பது ?

வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?

இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?

உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த

குப்பையான விளம்பர இடுகைகளை மட்டுறுத்தல் செய்கிறதா தமிழ்ஷ்




சமீப காலமாக குப்பையான இடுகைகளை தமிழிஷ் இல் பார்க்க முடியவில்லை. இடுகையை அழுத்தி அமுக்கி வெளியிட்டாலும் அவை பிரசுரம் ஆக சில நிமிட நேரம் பிடிக்கிறது.

என்ன காரணம் என்று உச்சந்தலையில் எலுமிச்சை தேய்த்து எமது தாட்புல் ஸ்பாட்டில் அமர்ந்து யோசித்ததில், இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு வெளிவருவது தெரிகிறது...

இதில் நிர்வாகத்தினருக்கு பணிச்சுமைதான் அதிகரிக்கும் என்றாலும், கடந்த வாரங்களாக பார்த்துவந்த தேவையற்ற விளம்பர ஸ்பாம் இடுகைகளை காணமுடியவில்லை.

ஆக பில்டர் செய்யப்பட்ட நல்ல இடுகைகளே தொடரும் இடுகைகள் வரிசையில் வருகின்றன. முன்பெல்லாம் மொக்கையான இடுகைகளை Bury பட்டன் அழுத்தி துரத்திக்கொண்டிருந்தேன். இப்போது பரி பட்டன் அழுத்தும் வேலை மிகவும் குறைந்துவிட்டது.

ஆக நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கையால், வெட்டியான பதிவுகளில் என்னுடைய நேரம் பெருமளவு வீணாகாமல், நல்ல இடுகைகளை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது...

இந்தாங்க பெரிய வாழ்த்துக்கள்...!!!



அதே சமயம், மற்ற திரட்டிகளில் உள்ளது போல இந்த வார இஸ்டார் மாதிரி எங்களது பதிவுகளை பெருமைப்படுத்தினால் மகிழ்வோம்...!!!! இது கோரிக்கை விண்ணப்பம் மட்டுமே !!!! அப்புறம் எதாவது கதை போட்டி, கட்டுரை போட்டின்னு வெச்சு எதாவது பரிசு அமவுண்டா கொடுத்தீங்கன்னா புல் க்வாட்டருக்கு ஆகும். கண்ஸிடர் செய்வீர்களா ???

உங்களது பொன்னான வாக்குகளை அள்ளி தெளிக்க மறவாதீர் !!!!!!!!

Thursday, June 25, 2009

ஆ.ராசா வலைப்பதிகிறார்


லக்கிலுக் ஒருமுறை ஆ.ராசாவின் உரையை பிடிஎப் கோப்பாக அனுப்பியிருந்தார். இளைய தலைமுறை தலைவர்களில் இவரது ஆழ்த்த வாசிப்பனுபவம் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது...

இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா அவர்கள் வலைப்பதிகிறார்.

வாழ்த்தி வரவேற்ப்போம்...!!!!

என்னை அவரது ரசிகனாக்கிய அந்த உரையை தரவிரக்கம் செய்ய சுட்டி இன்னொரு சுட்டி ( முதலில் இந்த சுட்டியை க்ளிக்கி 10 வினாடிகள் காத்திருக்கவேண்டும். பிறகு Create Download Link என்ற பொத்தானை அழுத்தினால், வேறு ஒரு பக்கம் திறந்து, கோப்பு தரவிறங்கும்...

கேள்வி பதில் !!!!!!!!!!!!!!!!!!!!!


அம்மணியின் பெயர் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ்

கேள்வி : தங்களது முந்தைய ராக்கி ஷாவந் இடுகைக்கு முக்காடு போட்டுக்கொண்டு வந்தவர்கள் எத்தனைபேர் ? யாரையாவது சந்தேகப்படுகிறீர்களா ?

பதில் : சில ஆயிரம் பேர் வந்தனர்...கிளு கிளு குளு குளு மேட்டர் என்றாலே அப்பன் முருகன் அங்கே உண்மைத்தமிழனை அனுப்புவான். ஆனால் போண்டாவை விரும்பும் பிரபல பதிவர் ஒருவரும், காட்டில் கருங்குரங்கு ரத்தம் அருந்தி கிளுகிளுப்பாக இருக்கும் இன்னொருவர் என்று மூத்த பதிவர்களும் எட்டிப்பார்த்ததாக கவுண்டரும் முதலியாரும் சொல்கிறார்கள்...

கேள்வி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்கிவிடப்போகிறார்களாமே ? யாருக்கு லாபம், யாருக்கு நட்டம் ?

பதில் : லாபம் என்று பார்த்தால் பத்தாம் வகுப்பில் இங்கிலீசு படிக்கவேண்டும் என்பதற்காகவே பதினொன்னாம் வகுப்பில் அட்டு பிகர் அருக்காணியை தொடரமுடியாமல் போன என்னைப்போன்ற தக்குறிகள், இனி ப்ளஸ் டூ வரை வாத்தியார் வீட்டு பசுமாட்டில் பால் கறந்துகொடுத்தே பாஸ் ஆகிவிடலாம். நட்டம் என்றால், எதிர்த்த வீட்டு தொப்பை கணேசன் கணக்கு வாத்தியாருக்கு. பத்தாவது வரை மட்டுமே இருக்கும் பள்ளிக்கூடத்தில் வேலைபார்க்கும் இவர் பொண்டாட்டி, டியூசன் வரும் அலமேலுவை குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டில் கதை பேசும் காட்சி இனி காண கிடைக்காது. ஏற்கனவே எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்களை எலிப்புழுக்கைக்கு கூட மதிக்கமாட்டேங்கிறார் என்று சேகர் வாத்தியார் புலம்பிக்கொண்டிருக்கிறார். இனி எறும்பு புழுக்கைக்கு கூட மதிக்கமாட்டானுங்க...

கேள்வி : அப்படியென்றால் கல்வி முறையில் எதாவது மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

பதில் : ஆமாம். டிஸ்க்ரீட் மேத்ஸ் என்ற பாடத்தை இந்திய கல்வித்திட்டத்தில் இருந்து நீக்கவேண்டும். உப்பு சப்புக்கு உதவாத பார்முலா போன்ற விஷயங்கள், தனுஷ், வாத்தியாரிடம் டஸ்ட்டர் அடிவாங்கி, தூங்கி எந்திரித்து போர்டில் போட்டு பிகர்களை அசத்த மட்டுமே இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவைகளை கடம் அடித்து பரிட்சையில் பாஸ் ஆகவேண்டும் என்பது உலகமகா கொடுமை. மொத்தம் எட்டுமுறை பெயில் ஆன எனக்கல்லவா தெரியும் ? என்னைப்பொருத்தவரை, படிப்பது எதற்கு ?

வேலைக்கு போவதற்க்கு தானே ? அவரவர் புத்தகங்களை வாங்கி படித்துக்கொள்ளுங்கள். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தட்டும். அதில் வெறும் வயது வரம்பை மட்டும் கணக்கில் கொண்டு எலிஜிபிலிட்டியை வையுங்கள். தேர்வில் பாஸ் ஆனால் நேர்முக தேர்வு, அதில் பாஸ் ஆனால் ப்ரோபஷனரி பீரியட் என்று கொண்டு செல்லுங்கள்..
அட்லீஸ்ட் வேலைக்கு போகவேண்டும் என்று நினைப்பவன் உருப்படியாக படிப்பான் இல்லையா ?

பிஸினஸ் செய்யபோகிறவன் பிஸினஸ் ஸ்கூலில் படிச்சுக்கோ. கம்பூட்டர்ல வேலை செய்ய விரும்புபவன் மூனாம் வகுப்பில் இருந்து கம்பூட்டர் படி. அப்பாடா. ஒரு கருத்தை திணிச்சாச்சு.

கேள்வி : வால்பையன் பற்றி சொல்லுங்கள் ?

பதில் : எந்த திரட்டிக்கு யார் ஓனர் என்று விசாரித்து விசாரித்து வாய் வலி வந்து குப்புற படுத்திருப்பதாக கேள்வி. ஈரோட்டில் ஏதோ ஒரு டாஸ்மாக்கில் மூனு பேருடைய அவிச்ச முட்டையை திருடி தின்னுப்புட்டு வெறும் ஓட்டை மட்டும் வைத்தாராம். பாதிக்கப்பட்ட ஒரு குடிமகன் அந்த முட்டை ஓட்டை நரநரவென கடித்தபடி அவரை தேடிக்கொண்டுள்ளாராம். அதே சமயம் ஆர்க்குட்டில் ஆறாப்பு படித்தபோது லவ்வடித்த அட்டு பிகர் சிக்கிவிட்டதாகவும், இந்த நேரத்தில் பிள்ளை தமிழ், தமிழ்120 ஆகிய திரட்டிகளில் இருந்தாவது தன்னை இஸ்டார் ஆக்கும் மின்னஞ்சல் வராதா என்று மோட்டுவளையை பார்த்தபடி உட்கார்ந்திருப்பதாக கேள்வி..

கேள்வி : திமிங்கிலிஷ் திரட்டியில் குட்டிகலாட்டா நடக்குதாமே, அதைப்பற்றி ?

பதில் : எதையும் சரியாக தவறாகவே புரிந்துகொள்ளும் கரும்பு ஜெயம் ஒருத்தர், அங்கே குட்டிகலாட்டா செய்ய முயல்கிறாராம். ஆக்சுவலி கடுமையான வயிற்று வலியும் தான் காரணம் என்று சக மச்சிகளிடம் சொன்னாலும், இந்த வயிற்று வலியை "வவுத்தெரிச்சல்" என்று கலோக்கியல் கஸினாக நாம் சொல்வோம். புதிய திரட்டி ஒன்றை நிறுவி, கடுமையான மார்க்கெட்டிங் உத்தியில் இருக்கிறாராம். அவரை திமிங்கிலிஷ் கண்டுகொள்ளவில்லை என்பது இந்த வயிற்று வலியை இன்னும் அதிகப்படுத்துகிறதாம்...

கேள்வி : ஒரு உடன்பிறப்பு உங்களை தாக்கி பதிவிட்டுள்ளாராமே ? என்ன உமது எதிர்வினை ?

பதில் : உடன்பிறப்புகள் எப்போதும் உணர்ச்சிப்பிழம்புகளாக இருப்பது அறிந்தது தானே ? அதனால் உடன்பிறப்புகளின் எதிர்வினைகளை கண்டும் காணாமலும் இருந்தாலே, உடன்பிறப்புகள் அடுத்த பணியை பார்க்க சென்றுவிடுவார்கள். அது
நட்பையும் காத்துக்கொள்ள உதவும்...

----
---
--

Wednesday, June 24, 2009

கமலாவின் அடுப்பங்கரையில் வெங்காய தூள் பக்கோடா



தேவையானப்பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 1 கப்
சோளம் அல்லது அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

வெங்காயத்தைத் தோலுரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பைத்தூவி, விரல்களால் மெதுவாக பிரட்டி விட்டு, வெங்காயத்துண்டுகளைத் தனித்தனியாக பிரிக்கவும். அதை அப்படியே பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை ஒரு கையில் எடுத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சோளம் அல்லது அரிசி மாவைத் தூவி பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டுத் துண்டுகள், சோம்புத் தூள், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறவும். அதன் பின் கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிரட்டி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெங்காயதிலுள்ள நீரிலேயே மாவு ஒட்டிக் கொள்ளும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், அடுப்பை தணித்துக் கொள்ளவும். ஒரு கை மாவை எடுத்து இலேசாக விரல்களால் எண்ணையில் உதிர்த்து விடவும். பகோடா வெந்து சிவந்தவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாம்பார் சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

குறிப்பு: பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம்...

மற்ற குறிப்புகளை பார்க்க, கமலாவின் அடுப்பங்கரைக்கே போயிருங்களேன்...

18+ பதினாறு பேரையும் கட்டிக்கறேன்...ராக்கி ஷாவந்த்



என் டி டி வியின் ரியாலிட்டி ஷோ, 'ராக்கிய கட்டிக்கோங்கடா' வில் என்ன பரபரப்பு தெரியுமா ? அதுக்கு முன்னாடி, இந்த ஷோவை பற்றி கொஞ்சம் சொல்லிடறேன்...

பாடகியும் நடிகையுமான ராக்கி ஷாவந்த், சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வது, பின் அதில் தேர்வாகும் நபரை மணந்துகொள்வது, இதுதான் ஆட்டமாம்...ஏற்கனவே ராகுல் காந்தியை கட்டிக்க விருப்பம் என்று பீதியை கிளப்பி ராகுல் ராக்கி இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் தேர்தல் பிரச்சாரத்தை கூட வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது...

அதற்குமுன் ஒரு பர்த் டே பார்ட்டியில் ராக்கியின் கிளுகிளு உடையை பார்த்து டென்ஷன் ஆன நடிகர் மிக்கா ராக்கியை வலுக்கட்டாய லிப் லாக் செய்தது குறிப்பிடத்தக்கது...



அதற்கு முன் பப்ளிக் ப்ளேஸ் ஒன்றில் இன்னொரு விளம்பர விரும்பி நடிகையின் உதட்டையும் பதம் பார்த்தவர் ராக்கி என்பது ஊர் அறிந்த ரகசியம்...



நல்லா கெளப்புராய்ங்கடா பீதிய என்று நினைத்திருந்தவேளையில்...

விண்ணப்பித்த 12500த்து சொச்சம் பேரில் ஷார்ட் லிஸ்ட் ஆன பதினாறு பேரையும் கல்யாணம் பண்ணிக்கரேனே என்று தடாலடி ஆட்டம் ஆடியுள்ளார் ராக்கி...

உதய்ப்பூரில் நடந்த இந்த எக்ஸாமில் ஒவ்வொருவரை நேரிலும் ஸ்க்ரீனிங் செய்தாராம ராக்கி...எவன் அப்பமூட்டு காசு, எல்லாம் என் டி டி வி செலவு...

மற்றபடி, தான் உதய்ப்பூரின் ராணி போல பீல் ஆகியதாக கொடுத்த காசுக்கு மேல் கூவினார் ராக்கி..

பதிவை எழுத ஆரம்பித்தபோது, கஷ்டப்பட்டு ராக்கி ஷாவந்தின் டீசண்ட் போட்டோ ஒன்றை போட்டுவிட்டேன்..அப்புறம் இன்னும் சில படங்களை போட நேர்ந்தபோது, 18+ போடவேண்டிய கட்டாயம். வேற வழி, கடைசியாக நான் போட வைத்திருந்திருந்த போட்டோவையே போட்டு தொலைகிறேன்...



கதை எழுத நேரம் இல்லையே, ஒரு சின்ன பதிவு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம் என்றாலும், பத்து நிமிடம் விழுங்கிவிட்டது இந்த பதிவு. எங்கிருந்தாலும் வாழ்க. இந்த பதிவுக்கு முக்கியமான ஒரு விஷயம் இங்கே உள்ளது. இதை ராக்கிக்கு பார்சல் அனுப்பினால் மகிழ்வார்... என்னோட பதிவு லதானந்த் பதிவை விடவா மோசமா இருக்கு ? அப்படி இல்லைன்னா ஒரு ஓட்டு போடுங்க...இருந்தாலும் போடுங்க..

Tuesday, June 23, 2009

உரையாடல் கதை விமர்சன முயற்சி இடைநிறுத்தம்...!!!



அனுஷ்கா படம் நல்லா இருந்தா இப்பவே ஓட்டு போட்டுருங்க ஒக்கே...!!!

டிவிஆர் அய்யாவின் வேண்டுகோளை ஏற்று, உரையாடல் கதை விமர்சன முயற்சி, முடிவுகள் வெளியாகும்வரை இடை நிறுத்தப்படுகிறது...

நேரம் இருந்தால் அதன் பிறகு பொறுமையாக விமர்சனம் எழுத முயல்கிறேன்...

ஆனால் இந்த விமர்சன முயற்சியில், ஒரு பின்னூட்டத்தில் வசந்த் கொடுத்த திரட்சியான சிறுகதை எழுதுதலுக்கான உதவி சுட்டிகள் மிகவும் சிறப்பாக உள்ளன...

நானும் அந்த பின்னூட்டங்களில் சொல்லியுள்ள விஷயங்களை கருத்தில் கொண்டால் நல்ல ஒரு சிறுகதையை தரமுடியும் என்று நம்புகிறேன்...

மற்றபடி, இந்த முயற்சியால் யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை, அப்படி காயப்பட்டிருந்தால் பெருந்தன்மையாக என்னை மன்னிச்சுருவீங்க தானே ??

அதுவரைக்கும் நீ எங்க போறன்னு கேக்குறீங்களா ? நானும் ஒரு சிறுகதை எழுதப்போறேன்....இன்னும் ரெண்டொரு நாளில் பிரசுரம் செய்கிறேன்...அதுக்கு நீங்க எல்லாரும் மார்க் போடுங்க...வாங்க செத்து செத்து விளையாடலாம்...

Monday, June 22, 2009

ஆர்யா முன்னேற்றக்கழகம்..

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 4



நாற்பதில் இருந்து ஐம்பது கதைகள்

இஷா கோபிகர். எனக்கு பிடித்த நடிகை அல்ல..!! இருந்தாலும் வேண்டி விரும்பி கேட்ட வாசகருக்காக...!!!!

51. சரணாகதி : ‘உயிரோடை‘ எஸ்.லாவண்யா

சிறு கதைக்கான ஸ்கெலட்டன், கரு எல்லாம் நன்று. ஆனால் கதையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதை தவிர்த்திருக்கலாம்...எளிமையான கதை...கதை மாந்தரின் பெயர் அருமை...கதையில் திடீரென எட்டிப்பார்க்கும் திருப்பாவை கூட அழகு...

நல்ல முயற்சி. குழப்பம் இல்லாத தெளிவான நடை. சிற்சில எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் அந்த கடைசி வரியில்...
எனக்கு பிடித்திருக்கிறது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

52. ஆசை வந்தது போலவே : தவறு

கதைக்கான சரியான சுட்டியை கொடுக்க தவறியுள்ளார்...

தன் சிந்தனையோட்டத்தை எழுத்தில் வடித்துள்ளார்....கதை என்பதையும் தாண்டி, ஏதோ ஒரு கட்டுரையை வாசிப்பது போல இருக்கிறது....

என்னுடைய மதிப்பெண் 50 / 100

53. ஹெலிகாப்டர் : அற்புதன்

இந்த கதைக்களம் உணர்வுகளை சுண்டி இழுக்கக்கூடியது. இன்னும் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த வலியை அழுத்தமாக வாசகர்களின் மனதில் பதிய வைத்திருந்திருக்கவேண்டும். தவறிவிடுகிறது...

இன்னும் முயலவேண்டும் அற்புதன்...

என்னுடைய மதிப்பெண் 52 / 100

54. கொள்ளி.. கொள்ளி.. : சந்துரு

உண்மையில் நல்ல கதைக்கரு. அற்புதமான சிந்தனை. உங்கள் குற்ற உணர்ச்சியை கண்டிப்பாக தூண்டிவிடக்கூடும்..ஆனால் எழுதப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்யவில்லை...கொஞ்சம் வளவளாவாக உள்ளது..ஒரு பக்க கதையாக சுருக்கினால் அருமையாக வரக்கூடும்...

என்னுடைய மதிப்பெண் 51 / 100

55. கதையின் தலைப்பு ஒருவேளை உங்களிடமே இருக்ககூடும். : கும்க்கி

சரியான சுட்டி கொடுக்கப்படவில்லை. வலைப்பதிவில் இருந்து கதையை கண்டுபிடித்தேன்.....கும்க்கி மாற்றுவார் என்று நம்புவோம்...

கடைசி ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை...கதை அங்கே தான் கொண்டுசெல்கிறது என்று முன்பே தெரிந்தது...ஆனால் கடைசியில் சரசக்கா பேசுவதாக வரும் வசனம் தேவையற்றது..

இது நல்ல கதையா இல்லையா என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் உள்ளது. தலைப்பு எதுவும் வைக்கத்தோன்றவில்லை...

என்னுடைய மதிப்பெண் 62 / 100

56. &&& தாய்மை &&& : சுமஜ்லா

கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!

என்னுடைய மதிப்பெண் 70 / 100

57. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் : நிலாரசிகன்

நல்ல கதைசொல்லும் உத்தி. ஏற்கனவே சில கதைகளில் பார்த்திருந்தாலும், இந்த கதைக்கு தேவையான ஒன்று...

சமூகத்தின் நடபடிகளை கதையாக்கியிருக்கிறார் நிலா ரசிகன், நல்ல தலைப்பு, எளிமையான நடை. நான் ரசித்தேன்...

என்னுடைய மதிப்பெண் 70 / 100

58. சின்னு : நாடோடி இலக்கியன்

அற்புதமான மொழிநடை. வட்டார வழக்கு...கதையும் அதன் முடிவும் சூப்பர். ஆற அமற படித்து ரசிக்கவேண்டிய கதை...!!!! வேறென்ன சொல்ல, வெற்றிபெற வாழ்த்துக்கள் நாடோடியாரே...

என்னுடைய மதிப்பெண் 75 / 100

59. செல்லம்மாள்.. : ஆ.ஞானசேகரன்

வட்டார வழக்கில் முயன்றிருக்கிறார் ஆ.ஞானசேகரன். கதையின் உள்ளடக்கம் அவ்வளவாக கவரவில்லை. தினத்தந்தி செய்திக்கு ஒரு முடிவு கொடுத்து கதையாக்கியதுபோல இருக்கிறது...

என்னுடைய மதிப்பெண் 50 / 100

60. எதிர்பார்ப்பு : S.A. நவாஸுதீன்

ஷாக்கிங் இறுதி ட்விஸ்டுடன் கூடிய மிடில் ஈஸ்ட் கதை. எதிர்பாராத அந்த இறுதி முடிவில் ஸ்கோர் செய்கிறார் நவாஸ். அதற்காகவே கொஞ்சம் சுவாரய்ஸ்யமற்ற நடையை பற்றி கவலைப்படாமல் படிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

61. விலைமகளே பரவாயில்லை : SUREஷ்

கண்ட இடத்திலும் கலர் அடித்து கொஞ்சம் கலீஜாக இருந்தாலும், பதிவில் எடுத்துகொண்ட மேட்டர் அழுத்தமானது...

சுவாரயஸ்யமான நடை இல்லையென்றாலும் கூட, கொஞ்சம் ரசிக்கலாம்...தலைப்பிலேயே முழு கதையையும் சொல்வதையும், கதைக்கு நடுவே முடிவையும் சொல்வதையும் தவிர்த்திருந்தால், இறுதிவரை சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 60 / 100

62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்

அற்புதமான நடை..அருமையான கதைக்கரு...கலக்கலான முடிவு...

வேண்டாம்...வேண்டாம்...அட..இந்த கதையை படிக்காமல் இருக்கவேண்டாம்...

இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!

என்னுடைய மதிப்பெண் 80 / 100

63. கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி : சாம்ராஜ்ய ப்ரியன்

நல்ல கதை..இன்னும் எலாபரேட்டாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...கொஞ்சம் கொசுவத்தி சுத்தவைக்கும் நடை...

நன்று...!!!

என்னுடைய மதிப்பெண் 60 / 100

64. \"இது நியாயமா, கிருஷ்ணா????\"- : \'இனியவன்\' என். உலகநாதன்

இனியவன் எழுதிய இந்த கதையை விக்ரமன் பார்த்தால் ஒரு படம் எடுத்துடுவார். அந்த அளவுக்கு ஒரு முழுமையான கதை. வார்த்தைக்கோர்ப்புகளில் சில இடங்களில் சுவாரஸ்யம் குன்றும் வகையில் இருந்தாலும் ஒரு முழு அளவில் பார்க்கும்போது அவை பெரிதாக தெரியவில்லை...

சில இடங்களில் எடிட் செய்தால் இன்னும் அற்புதமான கதையாக மிளிரும்.

என்னுடைய மதிப்பெண் 65 / 100

65. அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....... : அன்புடன் அருணா

கொஞ்சம் வேறுபட்ட நடை இருந்திருக்கலாம்...இருந்தாலும் எடுத்த முயற்சியில் மனம் தளராமல் கதையை கொண்டு சென்றுள்ளார்கள்...

கொஞ்சம் பெரிய பாண்ட் கடுப்படித்தாலும், இந்த கதைச்சூழலும், அதன் இறுதியில் உள்ள மெசேஜும் நன்று...நல்ல முயற்சி..!!!

என்னுடைய மதிப்பெண் 60 / 100

நிகிதா ராவெல், ஜேகே ரித்திஷ், இளைய தளபதி விஜய்





தென்னிந்தியாவின் ஒபாமா விஜய், தன்னுடைய அரசியல் பாய்ச்சலை ஆரம்பித்துவிட்டார்..இளைய தளபதி விஜய் 2020ல் முதல்வர். இப்பத்திக்கு அமவுண்டு கொடுத்தாவது ஒரு கிளை செயலாளர் பதவியையாவது வாங்கிகோங்கடே...




செய்தி > தமிழுக்கு புதிதாக அறிமுகமாகவுள்ள நிகிதா ராவெல்.

விமர்சனம் > ரகசியா, முமைத்கான்...அடுத்த குத்தாட்ட ஆக்ட்ரஸ் ரெடிங்கோம்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



செய்தி > ஜே.கே ரித்திஷின் அடுத்த படம் வேட்டைப்புலி. இதுவரை ஜேகேஆரால் வாந்திபேதி பிரச்சினை தமிழகத்துக்கு மட்டும்தான், ஆனால் இந்த வேட்டைப்புலி, பாலிவுட்டையும் கடித்து குதற ரெடியாம். அட ஆமாங்க..இந்தியிலும் தயாராகிரதாம் இந்த கோராமை.

துஷ்மன் என்ற பெயரில் (ஜேகேஆருக்கே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா என்பது கேள்விக்குறி) பாலிவுட்டை தாக்கப்போகிறாராம் ஜே.கே.ஆர்...

பாலிவுட் கிளு கிளு ஹீரோயின்களோடு இந்தியில் குத்தாட்டம் போட அகிலாண்ட நாயகன் ரெடி. இனி டெல்லி பார்லிமெண்டில் மே பாலிவுட் ஹீரோ ஹே ஹே என்று ஹிந்தியில் பேசுவார் அகிலாண்டம்.

விமர்சனம் > டேய் உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா...

தமிழ்மணம் நெகட்டிவ் ஓட்டை எப்போது நீக்கும் ?



அப்பாடா...சாயா சிங் படத்தை போட இன்னொரு சான்ஸ் கெடைச்சிருச்சு..

அதாவது நான் சொல்ல வர்ரது என்னன்னா, முந்தா நாள் என்னுடைய பதிவு 4 ஓட்டு வாங்கி வாசகர் பரிந்துரையில் பார்த்தேன் (உரையாடல் கதை விமர்சன பதிவு)

ஆனா நேற்று திறந்து பார்த்தால் நெகட்டிவ் ஓட்டுகளில் வந்து நிற்கிறது. அதாவது வாசகர் பரிந்துரைக்கு என்ன அர்த்தம் ? நிறைய வாசகர்கள் பரிந்துரைத்தால் அது சூடான இடுகையில் வரவேண்டும் என்பது தானே ?

சொம்பு விஜய், சாக்ரீம் மகேஷ் மாதிரி கொலைவெறி குப்பன்கள் இருபத்தெட்டு ஐடி வைத்து, பத்து முறை ரைவுட்டரை சுவிட்ச் ஆப் செய்து டைனமிக் ஐப்பி மாற்றி, ப்ராக்ஸி தளங்களில் இருந்து ஓப்பன் ஐடி உள்ளே நுழைந்து மைனஸ் ஓட்டு குத்தினால் நாங்க என்ன செய்வது ?

ஓப்பன் ஐடி அன்ப்ரேக்கபுளா என்ன ? அது ஒன்று MAC அட்ரஸை எடுப்பதில்லையே ? அதே சமயம், பத்து சிஸ்டம் வைத்துள்ள புரவுசிங் செண்டர் ஓனர் பத்து மைனஸ் ஓட்டு குத்த முடியுமே ?

டிவிஆர் அய்யா பதிவில், நெகட்டிவ் மார்க் போட இது என்ன மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாமா என்று சொன்னது காமெடியாக இருந்தாலும் அது தானே உண்மை ? ஏன் கன்ஸிடர் செய்யக்கூடாது ???

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
க்வாட்டர் கோயிந்து

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 3




41. எழுத்துப் பிறவி : ஸ்வாமி ஓம்கார்

அதிகம் டென்ஷனாகவில்லை ஸ்வாமிஜி. தன்னுடைய ஸ்வாமிஜி லைப் சம்பந்தமானதொரு கதையை எழுத்தில் மென்மையாக கொண்டுவந்திருக்கிறார்.

கதையில் முழுவதும் தொட்டுத்தொடரும் இளமை, மறுபிறவி, தியானம், அதில் ஒரு குட்டிக்கதை என்று ஒரு குட்டி காக்டெயில். கதையின் முடிவில் பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாதது மைனஸ்.

என்னுடைய மதிப்பெண் 60 / 100.

42. பசி........ : அது சரி

வழக்கம்போல சிறுகதை அடிப்படையற்ற கதை...இருந்தாலும் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் நல்ல தேர்ந்த நீரோடை போன்ற நடைக்கும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்...

இலக்கில்லாமல் பயணித்து டொங் என முடிந்துவிடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட கேரக்டரை சுற்றியே முழு கதையும் பின்னப்பட்டிருப்பது இன்னொரு மைனஸ்...

இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால் அற்புதமான எழுத்தாளர் நமக்கு ரெடி...

என்னுடைய மதிப்பெண் 50 / 100.

43. பாஸ்கட் பால் : முரளிகண்ணன்

தேர்ந்த நடை. இரண்டு கேரக்டர்கள் பேசிக்கொள்வதை வாசிக்கும்போது ஏதோ நமக்குள் ஏற்கனவே பேசிக்கொண்டதை எழுத்தாக்கியது போல ஒரு பீலிங் எழுதவதை தவிர்க்க இயலவில்லை...

முடிவில் பெரிய ட்விஸ்ட் இல்லை என்றாலும், ஆக்கப்பட்ட விதம், எடுத்துக்கொண்ட கரு, அற்புதமான நடை ஆகியவை ஸ்கோர் செய்துவிடுகின்றன...

அடிப்படையில் பாஸ்கெட்பால் மற்றும் வாலிபால் ப்ளேயரான எனக்கு இந்த கதையை மறுபடி படித்து ரசிக்க முடிந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லைதானே ? வாழ்த்துக்கள்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100.

44. தொலைபேசி (சிறுகதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு) : சுழியன்

அரசியல் கதை. பொது தளத்தில் அப்படியே வெளியிட்டால் வம்பு வழக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் நிதர்சனம் முகத்தில் அறைவதை தடுக்கமுடிவதில்லையே...

100 சதம் உண்மைச்சம்பவம் போல தெரிந்தாலும், தன்னுடைய அழகான நடையில் ஸ்கோர் செய்கிறார் சுழியன். தேர்ந்த எழுத்து. படைப்பாளியின் நல்ல வாசிப்பனுபவம் நன்றாகவே தெரிகிறது...

என்னுடைய மதிப்பெண் 65 / 100.

45. செயற்கை மணம் ! (சிறுகதை போட்டிக்காக) : கோவி.கண்ணன்

கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கடைசி ட்விஸ்ட்டில் புரிந்தது...எளிமையான நடை...

கதை எழுதுவது, அது பத்திரிக்கையில் வெளிவருவது போன்ற தீம் இந்த கதைப்போட்டிக்கு நல்ல சூட்...

எளிமை. கரண்ட் அபையர்ஸ். உண்மையோ என்று நம்பும் கரு....நல்ல ட்விஸ்ட். ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 68 / 100.

46. அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக : ramachandranusha(உஷா)

அந்தகர் என்றால் குருடர் என்று அர்த்தம்...கதையை படிக்கும் முன் பின்னூட்டங்களை படிக்கவேண்டாம்...அப்படி படித்தால் க்ளைமாக்ஸ் ட்விஸ்டுடன் முழுமையாக கதையை ரசிக்கமுடியாமல் போகலாம்...

இதுவரை படித்த கதைகளில் வந்துள்ள முதல் வரலாற்றுக்கதை...நல்ல முயற்சி...நல்ல நடை...அழகு தமிழ்..நன்று...!!..வெற்றிக்கு வாழ்த்துக்கள்...!!!

என்னுடைய மதிப்பெண் 70 / 100.

47. மௌனம் சூழ்ந்த உறவு (போட்டிச்சிறுகதை) : தொடர்பவன்

எழுத்துப்பிழைகள். கதையில் வித்யாசம் காட்ட முயன்றிருக்கிறார் எழுத்தாளர். ஆனால் 'அந்த' குறிப்பிட்ட வித்யாசத்தின் ஆழமான பிரச்சினைகளை அலச முயலாமல் நுனிப்புல் மேய்ந்த்தால் கதையோடு ஒன்றிட தடையாகிறது...இன்னும் ஆழமாக எழுதியிருந்தால், அல்லது 'சமூகம்' தவறாக நினைக்குமோ என்று நாம் பேச துணிவதை, எழுத்தில் பேசியிருந்தால் ஒரு அற்புதமான கதை கிடைத்திருக்கும்தான்...

இருந்தாலும் 'வித்யாச' முயற்சி நன்று...!!! என்னுடைய மதிப்பெண் 55/100

48. கதை சொல்லும் கதை! : வால்பையன்

வித்யாசம் காட்ட முயன்றிருக்கிறார் வால்பையன். நல்ல சிந்தனை. போட்டி மற்றும் அதன் வெற்றியை நோக்கித்தான் பயணிக்கிறது இந்த கதை.

கதை நம்மோடு ஒன்றவோ, ஒரு சமூக பிரச்சினையை பேசவோ முயலாதது ஏமாற்றம்...இருந்தாலும் 'கிறுக்கு' புத்தியில் தோன்றிய 'நறுக்கு' சிந்தனை, வால்பையனின் இந்த மொக்கைக்கதை...

ரசிப்பதற்கேனும் கண்டிப்பாக ஒருமுறை படிக்கவேண்டும்...

என்னுடைய மதிப்பெண் 60/100

49. நாலணா : அமிர்தவர்ஷினி அம்மா

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பக்குவத்தோடும், வட்டார வழக்கியலின் அழகோடும் வெளிப்படும் இந்தச்சிறுகதை கண்டிப்பாக இன்னொரு நல்ல வாசகியை, நல்ல படைப்பாளியை எடுத்துக்காட்டுகிறது...

சமூகம் சார்ந்த பிரச்சினைகளை சிறுகதைகள் பேசவேண்டும், அவற்றின் மூலம் மாற்றம் வரவேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததுண்டு. அன்பார்ச்சுனேட்லி, அதுபோன்ற முயற்சிகளை விட நடிகையின் கதைகள் பரபரப்பாக ரசிக்கப்படுவதை கண்டு நொந்த காலம் கூட உண்டு.

ஆனால் இதுபோன்ற சிறுகதைகளை பதிவுசெய்வது காலத்தின் கட்டாயம். நிறைய சிந்தனைகளை கிளப்பிய அருமையான கதை.

என்னுடைய மதிப்பெண் 71 /100

50. தேவதைகளும், சாபங்களும் இன்னும் பிறவும்! : Jeeves

தனிப்பட்ட வகையில் கதையின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. சுகமாக வாழ்தல் - ஜாலி குட் என்பதை தவிர்த்து கொஞ்சம் இரக்கமில்லாத முடிவு.....ஆனால் இம்மியும் பிசகாத நடை, பர்பெக்ட் ஆன டயலாக்ஸ்.

ஒரு தரமான கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது. கடைசி ட்விஸ்ட் பத்தி இல்லாமல் இருந்திருந்தால்கூட கதை அதன் இலக்கை அடைந்திருக்கும். கடைசி கட்டத்தில் சில ஆங்கில செண்டன்ஸ்களை தவிர்த்திருந்திருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 70/100

முதல் இருபது கதைகளின் விமர்சனம் இங்கே
இருபதில் இருந்து நாற்பது கதைகளின் விமர்சனம் இங்கே

என்ன நடக்குது தமிழ்வெளியில் ?



ஷெரினை லைட்டாக டச் க்ளிக் செய்தால் விவரம் தெரியும் ஹி ஹி !!!

Friday, June 19, 2009

"உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 2

21. கில்லி..! (Gilly) : அபுஅஃப்ஸர்

சுட்டி வேலை செய்யவில்லை...எங்கே தேடியும் கதையை கண்டுபிடிக்க முடியவில்லை...கூகிளிட்டு பார்த்தால் கில்லி தளத்தின் பல சுட்டிகள் வருகின்றனவே தவிர இந்த கதையை கண்டுபிடிக்க முடியவில்லை..இதனை அபுஅப்ஸருக்கு தெரிவித்துள்ளேன்....

22. நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி

அழகான நடை, நல்ல மெசேஜ்...தேர்ந்த எழுத்தாளரைப்போல கதையினூடாக ஒன்றவைக்கும் வித்தை கைவந்திருக்கிறது இவருக்கு..

கண்டிப்பாக வாசிக்கவும், யோசிக்கவும் வைக்கப்போகும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 70/100

23. நூல் : Keith Kumarasamy

ஒரு உண்மைச்சம்பவத்தை எழுத்தில் வடித்திருக்கிறார்...நான் எப்போதும் ரசிக்கும் ஈழத்தமிழ் நடை...இயல்பானதும், அழகானதுமான அந்த நடை ஒன்றே போதும் தனிப்பட்ட அளவில் நான் இந்த கதையை ரசிக்க...

என் பரிந்துரை : ஒருமுறை கண்டிப்பாக வாசியுங்கோ...

என்னுடைய மதிப்பெண் 50/100


24. மன்மதனின் முடிவு : Covairafi

முதல்பார்வையில் கண்ணில் படுவது, கொஞ்சம் இடைவெளி விட்டு சிறிய பத்திகளாக எழுதியிருக்கலாம் என்பது...மேலும் படிக்கப்படிக்க, கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது...

தலைப்பிலேயே கதை முழுவதையும் யூகிக்க முடிவது இன்னொரு மைனஸ். கதையில் பாய், அய்யர், காதரின், பரணி என்று பல மதங்களை வலிந்து நுழைத்தது போன்ற தோற்றப்பாடு எழுவதை தவிர்க்க இயலவில்லை...

எடுத்துக்கொண்ட தீமுக்காக கண்டிப்பாக பாராட்டலாம்...

என்னுடைய மதிப்பெண் 50/100

25. காத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்

இயல்பான கதை. கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியும் எழுத்தாளரிடம் இருப்பதால் கதையை தொடர்ந்து படிக்க எந்த தடையுமில்லை...கணினி சம்பந்தமான சில விஷயங்களை அப்படியே பயன்படுத்தினால் மற்றவருக்கு புரிய வாய்ப்பில்லை. உதாரணம் KT. நாலேஜ் ட்ரான்ஸ்பர் என்று சொல்வது மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்குத்தானே புரியும்...

முடிவும் நன்றாகவே வந்து விழுந்துள்ளது...முதலுக்கு மோசமில்லை...

என்னுடைய மதிப்பெண் 55/100

26. அப்பா வீடு : கே.பாலமுருகன்

கொஞ்சம் நீளம்...எடுத்துக்கொண்ட உழைப்பிற்காக எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம்தான்...சில படங்கள் கதையோடு ஒட்டாமல் இருப்பது வேறுபாடாக தெரிகிறது...

நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 58/100

27. பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும்! (உரையாடல் சிறுகதை போட்டிக்கு) : அபி அப்பா


தட்டுவாணி, முண்டச்சி என்பது போன்ற வட்டார வழக்கு கொஞ்சம் பெரிதான (சிறு) கதைக்குள் நம்மை சிக்கவைத்து இழுத்துக்கொண்டு போகிறது...நகைச்சுவையான சம்பவங்கள் கொஞ்சம், சமூக பொருளாதார சூழ்நிலைகள் கொஞ்சம், சாதி பிரச்சினை கொஞ்சம் என்று இழுத்துச்சென்று முடிகிறது காதை...

குள்ள மாமா என்றே எழுதியிருக்கலாம்...ம் க்கு ப்ராக்கெட் போட்டு போட்டு எழுதியது தேவையற்றது என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் 65/100

28. இடைவெளியே ஓடிவிடு :

Nதமிழின் மால்வேர் இருப்பதாக கூகிள் க்ரோம் சொல்கிறது. கதையையும் படிக்கவில்லை, லிங்கையும் தரவில்லை...

29. தங்கையுடையான் : முரளி குமார் பத்மநாபன்

முதல் வரியே கவர்கிறது...தொண்ணூறுகளில் புரியாமல் படித்த பாலகுமாரன் நாவல் போல இருக்கிறதே என்று நினைத்தபோது, கொஞ்சம் எளிமையான நடைக்கு தாவிவிடுகிறது. அப்பாடா தப்பித்தோம் என்று நினைக்கையில்...உண்மையில் இது தரமான கதைதான் என்பதை அடுத்தடுத்த எழுத்துக்கோர்வைகள் சொல்கின்றன...

முடிவு அவ்வளவு ரசிக்கவைக்கவில்லை என்றாலும், நல்ல நடைக்காக கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு...

என்னுடைய மதிப்பெண் 65/100

30. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி

ஆங்காங்கே கலர் அடித்து எழுதியுள்ளார் கடைக்குட்டி. அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், எழுதவேண்டும் என்று முயல்வதை பாராட்டலாம்...

கதையில் ட்விஸ்ட் என்பதை வாசகர்கள் கண்டுபிடிக்கவேண்டும், அதை எழுத்தாளரே சொல்வது சரியல்ல..சிறுகதையின் அடிப்படையை படிப்பது நலம்...

என்னுடைய மதிப்பெண் 45/100

31. கனவு : ரத்னாபீட்டர்ஸ்

கோர்வையாக எழுதமுடிகிறது எழுத்தாளரால்...மறுபிறவி, கனவு, லண்டன் என்று கொஞ்சம் இலக்கில்லாமல் பயணிக்கும் கதை என்றாலும், முயற்சி நன்று. இன்னும் நிறைய வாசித்து எழுத பழகலாம்...எழுத்தி இருக்கும் நாடகத்தனம், அதனுடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது...

எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது சிறப்பு...

என்னுடைய மதிப்பெண் 30/100

32. “வலி” : ஜாக்கிசேகர்

கதையை பத்து வரிகளுக்கு முன்னாலேயே முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்...

எழுத்துப்பிழைகளை சரி செய்து, தேவை இல்லாத வசனங்களை எடிட் செய்திருந்தால், ஒரு பர்பெக்ட் சிறுகதை ரெடி...பாஸ்ட் புட் போல...

என்னுடைய மதிப்பெண் 60/100

33. குட்டிப் பாப்பா : வெட்டிப்பயல்

கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியாத கதைக்கரு...உணர்வு ரீதியில்...மற்றபடி நல்ல தரமான எழுத்து நடை முதல் பத்து வரியை படித்தவர்களை கடைசி வரி வரை கொண்டு செல்கிறது...

கொஞ்சம் இலக்கில்லாத பட்டம் போல பறந்து பிறகு சரியாக டார்கெட் ஆடியன்ஸை தாக்குகிறது...நேரடி அனுபவம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதே கதையின் முதல் வெற்றி...போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்....

என்னுடைய மதிப்பெண் 60/100

34. என் தோழியின் இருப்பு : பாலமுருகன் கேசவன்

கதைக்கு பொருத்தமான படத்தை தேர்வு செய்தது பாராட்டுக்குறியது..கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு கதை...நல்ல மஞ்சள் மாலைப்பொழுதில் சூடான தேநீருடன் வாசிக்கும்போது இன்னும் சுகமாக இருக்கக்கூடும்...

என்னுடைய மதிப்பெண் 70/100

35. வக்கிரம் : நர்சிம்

இந்த எழுத்தாளரை உச்சந்தலையில் நறுக்குன்னு கொட்டனும் போல வக்கிரமாக உள்ளது...கதையை ரெண்டு மூனு முறை படிச்சும் ஒன்னும் பிரியல...ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் ரேஞ்சுக்கு வாசகர்களை உயரத்தில் வைத்ததற்கு ஒரு ஷொட்டு..

வாசகர்களையே முடிவை கணித்துக்கொள்ளச்சொன்ன உத்தி என்னைப்பொறுத்தவரை புதிது. நன்று. பரிசை குறிவைத்து கோல்போட்ட கதை இது...எளிய நடை...மொத்தத்தில் நல்ல கதை...

என்னுடைய மதிப்பெண் 70/100

36. மனையியல். : இரா. வசந்த குமார்.

சிக் சிக் என ஆரம்பித்து நச் இச் என முடிந்த கதை. ரயிலில் பயணிக்கும் கதை மாந்தருடன், நாமும் அந்த மூட்டைப்பூச்சு வாசனை சீட்டில் அமர்ந்திருப்பதுபோல கதைக்குள் இழுத்துவிடுகிறார் எழுத்தாளர்..

மெல்லிய உணர்வுகளை மென்மையாகவே வார்த்தைகளில் சொல்லும் வரம் இவருக்கு வாய்த்திருக்கிறது...சொல்லி வைத்து அடிக்கிறார் கில்லி...கண்டிப்பாக வாசிக்கவேண்டிய கதை..

என்னுடைய மதிப்பெண் 70/100

37. பொட்டலம் [\'உரையாடல்\' சிறுகதை போட்டிக்கு] : ராமலக்ஷ்மி

சமூகம் சார்ந்த சிறுகதை. சற்று நீளமாக தோன்றினாலும், கதையோட்டத்தில் தெரியவில்லை. சுவாரஸ்யமான எழுத்து இயல்பிலேயே வந்திருக்கிறது எழுத்தாளருக்கு...எடுத்துக்கொண்ட கதைக்களம் எளிமையானதாக இருந்தாலும், அதில் வலிமையான மொழியை வாசகர்களுக்கு கம்யூனிகேட் செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் ராமலஷ்மி. பாஸ் மார்க்...

என்னுடைய மதிப்பெண் 60/100

38. தற்செயலாக பறிக்கப்பட்ட ஒரு மலர் : ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

இயல்பிலேயே வெளிப்படும் கவிதைபோன்ற வரிகளும், எங்கேயும் பார்த்திராத உவமைகளுமாக..இன்னும் எளிமையாக சொல்லனும்னா ச்சும்மா மஜாவா இருக்கு கதை...

அழுத்தமான சம்பவக்கோர்வைகளும் அதனை நுணுக்கமாக வெளிப்படுத்தும் விதமும்...

இதோ, இன்னொரு தேநீர்க்கதை..நான் ரசித்தேன்...

என்னுடைய மதிப்பெண் 65/100

39. வன்முறையின் தொடக்கம் : அரவிந்த்

நல்ல நடை. கரண்ட் அபையர்ஸ் பேசும் சின்னஞ்சிறு கதை...முடிவை சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குன்றிவிடும். இறுதியில் எழுதப்பட்ட ஒரு பத்தியை பின்னூட்டமாக சொல்லியிருந்திருக்கலாம். கதை என்பதை மறந்து பிரச்சினை என்று மனது திசைமாறிவிடுகிறது...

என்னுடைய மதிப்பெண் 50/100


40. தங்கையுடையான் : முரளிகுமார் பத்மநாபன்

ஏற்கனவே சேர்க்கப்பட்டு விமர்சனமும் செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், நல்ல கதை இது...படிக்க மறக்கவேண்டாம்..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, சிறுகதை, போட்டிக்கு எழுதுகிறோம் என்றதும் பதிவர்கள் முகத்தை ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல் வைத்துக்கொள்வார்கள் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,...அல்லது நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்...ஒன்றிரண்டு பேரைத்தவிர, முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறாங்க நம்ம மக்கள்...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க....

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள்...



அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...இருந்தாலும் சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100


கதையின் கேரக்டருக்கு எழிலரசி என்ற அழகு பெயர்...நன்று....கதை முழுதும் நல்ல தமிழ்...கொஞ்சம் அமெச்சூரான நடை...விறுவிறுப்பு குறைவு கதையில்...முடிவு அவ்வளவாக கவரவில்லை...

என்னுடைய மதிப்பெண் 35 / 100


நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100


கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்...கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்...அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை...கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை...எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


எளிமையான நகைச்சுவை நடையில் அதிரடியாக ஆரம்பித்துவிடுகிறது கதை...நாலு பாராவுக்கு ஒரு புன்னகை நிச்சயம்...கதையில் வரும் கேரக்டர்களின் பெயர்களுக்காகவே ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது...மெயின் கேரக்டர் மணிப்பயலின் தேர்தல் உரை வயிற்று வலியை வரவைக்கும்...சிரிச்சுதாங்க...கடைசி கட்ட க்ளிமாக்ஸும் கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்..கதையில் முடிவு என்று ஒன்றும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


கதையை படித்தவுடன் நீங்கள் எப்போதோ தின்ற நமுத்த முறுக்கு உங்கள் நியாபகத்துக்கு கண்டிப்பாக வரும்...வாத்தியாருக்கு குண்டுசவுரி சொன்ன பதில்கள் சூப்பர்...அடிக்கடி நமக்கு வெடிச்சிரிப்பு வருவதற்கான வானிலை தெரிகிறது கதையில்..முடிவு என்று பெரிதாக எதுவும் இல்லை...ஆனால் சிரிப்புக்கு க்யாரண்டி...

என்னுடைய மதிப்பெண் 68 / 100


கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100


முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100


எளிமையான வார்த்தைகளில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் கதை. அன்றாட வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை அற்புதமான நடையில் சொல்கிறது கதை...குறையொன்றும் இல்லை க்ருஷ்ணா...பரிசு கிடைக்கும் என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன ?

என்னுடைய மதிப்பெண் 70 / 100


கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...

கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதையும் தவிர்க்க இயலவில்லை...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?

என்னுடைய மதிப்பெண் 72 / 100


எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 55 / 100


புதிய உத்தி...தமிழுக்கு புதிது...ஆனால் புரிந்துகொண்டு ரசிக்கப்படுமா என்பது கேள்விக்குறி...கொஞ்சம் பின்னவீனத்துவம், கொஞ்சம் சர்ரியலிஸம்...பாரதி வரிகள்...ஆங்கில கலப்பு...

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

மற்றபடி கதை வாசிக்க நன்றாகத்தானிருக்கிறது...கொஞ்சம் குழப்பமான முடிவும்..

என்னுடைய மதிப்பெண் 60 / 100


எளிமையான நடை. இயல்பான கதை. கதை எதை நோக்கி போகிறது என்பது கொஞ்சம் யூகிக்க முடியும்படி இருந்தாலும், முடிவு நன்று....கொஞ்சம் அமெச்சூர்த்தனத்தை தவிர்க்கவேண்டும்...

லாஸ்ட் பஞ்ச் கூட நல்லாத்தான் இருந்தது...!!!

என்னுடைய மதிப்பெண் 50 / 100


எழுத்துப்பிழைகளை தவிர்க்கவேண்டும். கதையை முடித்தவுடன் ரிவ்யூ அவசியம்..ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நடையை செதுக்கியிருந்திருக்கலாம்..

ஆழமான சமூக பிரச்சினைதான், இருந்தாலும் எளிமையகவே முடிந்துவிட்டது...அவை எவையையும் அலசாமல்...கொஞ்சம் நான் கடவுள் சாயல்..முடிவு நன்று.

என்னுடைய மதிப்பெண் 50 / 100


முதல் வரியிலேயே எழுத்துபிழை 'பளீர்' என்று அடிக்கிறது..கடைசி வரியிலும் அதையே ஸ்வாசிக்க வேண்டியுள்ளது...

சின்ன சம்பவம், அதை டேக்கிள் செய்த விதம் கதையாகியுள்ளது...கொஞ்சம் சுவாரஸ்யமற்ற நடை. இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம்..

என்னுடைய மதிப்பெண் 45 / 100


எளிமையான அழகான நடை. அதற்காகவே எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம். லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம்..

கதையின் முடிவு எதிர்பாராதது, இரண்டொரு முறை படித்தால் புரிந்துவிடும்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100


அசோகமித்திரன் டைப் பார்ப்பன பாஷைக்கதை. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கதையில் எதோ சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது..

இயல்பாக அங்கே இங்கே பார்க்கக்கூடிய மனிதர்களை வைத்து பின்னப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை என்றாலும், கதையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு விவாதத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவுக்கு விஷயம் உண்டு..

என்னுடைய மதிப்பெண் 50 / 100


அற்புதமான நடை. எழுத்தாளரின் ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு அழகியலோடு வெளிப்படுகிறது..ஆங்காங்கே புன்முறுவலோடு இந்த கதையோடு நீங்கள் பயணிக்கலாம்...

'பசங்க' படத்துக்கு நான் விமர்சனம் எழுவும் எழுதவில்லை...அதற்கு காரணம் அது விமர்சனத்தை தவிர வேறு விதமான சிந்தனையை கிளப்பியது...அதே போல இந்த கதையும்..வாசியுங்க...அனுபவிங்க..

இறுதியில் வரும் கவிதையின் முரண் அழகியல் அற்புதமானது...மீள் வாசிப்பு செய்ய தூண்டும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 80 / 100


இதுபோன்ற கேவலமான கதைகளை எல்லாம் எப்படி போட்டிக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை...

மட்டரகமான வார்த்தைப்பிரயோகம்...விளிம்புநிலை பற்றி எழுதும்போது 'ங்கோத்தா' ' தெவிடியா' என்று எழுதினால் அது கதையோடு ஒன்றி வரும்..

ஆனால் தேவை இல்லாமல் இணைக்கப்பட்ட புணர்ச்சி சம்பந்தமான வார்த்தைப்பிரயோகங்கள் அருவருப்பை தருகிறது...

எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் -200 / 100 (மைனஸ் எரநூரு)


சாதீயம் குறித்த ஒரு ஸ்னாப்ஷாட் கதை. ஈகிள்ஸ் ஐ வியூ என்று கூட சொல்லலாம்...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பு செய்ய தூண்டிய கதை...இன்னும் கொஞ்சம் போல உற்சாக நடை இருந்திருக்கலாம்...

முடிவு கூட சிறப்பாகத்தான் இருக்கிறது...ஒரு நல்ல கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒன்று...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, சிறுகதை, போட்டிக்கு எழுதுகிறோம் என்றதும் பதிவர்கள் முகத்தை ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல் வைத்துக்கொள்வார்கள் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,...அல்லது நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்...ஒன்றிரண்டு பேரைத்தவிர, முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறாங்க நம்ம மக்கள்...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

வணங்காமண் பற்றி மேலதிக தகவல் : கலைஞர் கடிதம்


வணங்கமண் கப்பல் (கேப்டன் அலி)




தமிழக முதல்வர்



இப்போ நியூஸ்..

வணங்கா மண் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து திருப்பி அனுப்புவது தெரிந்தது...

இந்த கப்பல் இப்போது இந்திய கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கிறதாம்..

தமிழக முதல்வர், இதனை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும், இதில் உள்ள பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி...

அதை தமிழக அமைச்சர் பொன்முடியிடம் கொடுத்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்க சொல்லி கொடுத்தனுப்பியிருக்காராம்...

ஏற்கனவே எஸ்.எம்.கிருஷ்ணாவை மதிக்காம அறிக்கை விட்டது இலங்கை அரசு..

எதாவது ராஜதந்திர நடவடிக்கை மூலமாக அந்த பொருட்கள் மருந்துகள் தமிழர்களை சென்று அடைந்தால் நன்றாக இருக்கும்...நடக்குமா ?

கேப்டன் அலி என்பது கப்பலின் பெயர், அதனால் கேப்டன் விஜயகோந்தும் இது குறித்து பண்ரூட்டியாரிடம் விசாரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளாராம்...

நீங்க ஓட்டு போட்டுட்டு எடத்தை காலி பண்ணுங்க சாமீ..நம்மால முடிஞ்சது அது தான்..!!! பதிவு போடுவது, ஓட்டு போடுவது...பின்னூட்டம் போடுவது...ஹும்...

Thursday, June 18, 2009

தமிழ்வெளியில் கூகிள் ஆட்சென்ஸ் உரையாடல் பதிவாக


பார்மெட் செய்ய நேரம் இல்லை...அதனால் அப்படியே போட்டிருக்கேன்..முடிந்தவரை..!!


தமிழ்வெளி உரையாடி
ஒரு வார்த்தையும் இன்னொரு வார்த்தையும் சேர்த்து வெச்சு அதை போல கண்டண்ட் நெட்ல தேடி, அதே கண்டெண்ட் மாட்டினா அதை மேலும் ஸ்க்ரீன் செய்து, ப்ளாகை ஸ்பேம் செய்துவிடும் கூகிள் பாட்
உரையாடல் வெளிJohn Samuel
18/06/2009 05:03:34 ‹பார்வையாளர்› http://mobiletechiee.blogspot.com/ நேத்து , முந்தா நேற்று தான் ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க , அதுக்குள்ளே அதுல பத்து டாலர் பார்த்துடீங்களா ? தப்பா எடுத்துகாதீங்க , இத என்னால நம்ப முடியல .
18/06/2009 05:04:19 ‹செந்தழல் ரவி› ஓ
18/06/2009 05:04:52 ‹sasaran› போக மனசு வரல
18/06/2009 05:04:56 ‹செந்தழல் ரவி› ஏற்கனவே இருந்த சில அன்வாண்டட் பதிவுகள் டெலீட் செய்துட்டேன் நேத்தூஊஊஊஊ
18/06/2009 05:05:28 ‹செந்தழல் ரவி› பத்து டாலர் வந்ததும் பின் நம்பர் தனியா கேட்கனும், இந்த புது முகவரிக்கு. அதனால இர்ரிலவண்ட் பதிவுகளை அதாவது
18/06/2009 05:05:46 ‹செந்தழல் ரவி› வெறும் ட்ராபிக்கு மட்டும் போட்ட பதிவுகளை தூக்கிட்டேன்
18/06/2009 05:05:57 ‹செந்தழல் ரவி› பார்வையாளர் புரிஞ்சுதா
18/06/2009 05:06:09 ‹பார்வையாளர்› தகவலுக்கு நன்றி ravi
18/06/2009 05:06:25 ‹செந்தழல் ரவி› Google Trends போங்க
18/06/2009 05:06:27 * Yas quit
18/06/2009 05:06:33 ‹செந்தழல் ரவி› அதில எது டாப்ல இருக்குன்னு பாருங்க
18/06/2009 05:06:40 ‹செந்தழல் ரவி› அது சம்பந்தமா எழுதுங்க
18/06/2009 05:06:43 * Logu quit (timeout)
18/06/2009 05:06:44 ‹செந்தழல் ரவி› இப்ப புரியுதா ?
18/06/2009 05:07:36 * N.Naina quit (timeout)
18/06/2009 05:07:42 * thiratti venkat joins உரையாடல் வெளி
18/06/2009 05:07:46 ‹sasaran› ரவி, ஆனா அது தினமும் மாறிகிட்டே தான இருக்கும் ?
18/06/2009 05:08:03 * raja raja joins உரையாடல் வெளி
18/06/2009 05:08:24 ‹thiratti venkat› ரவி மிக அருமையான முயற்சி வாழ்த்துகள்!!
18/06/2009 05:08:57 ‹செந்தழல் ரவி› தினமும் நாமளும் போட்டுக்கிட்டே தான் இருக்கனும்...
18/06/2009 05:09:14 ‹dan› ரவி மிக அருமையான முயற்சி வாழ்த்துகள்!
18/06/2009 05:09:31 * Ram quit (timeout)
18/06/2009 05:09:39 ‹செந்தழல் ரவி› அதாவது கூகிள் ட்ரண்ட்ஸ்ல இருந்து எடுத்து பார்த்து பதிவுகளை போட்டுக்கிட்டே இருக்கனும்\
18/06/2009 05:09:44 ‹செந்தழல் ரவி› நன்றி dan.
18/06/2009 05:09:44 ‹sasaran› சரிங்க ரவி. உபயோகமான தகவல்கள்.
18/06/2009 05:09:49 * PM quit (timeout)
18/06/2009 05:10:10 ‹Albonse› நல்ல ஐடியா ரவி.. முயற்சி பண்ணுறேன்
18/06/2009 05:10:25 ‹செந்தழல் ரவி› அதே சமயம், ஜஸ்ட் கட் அண்டு பேஸ்டு போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா கூகிள் BOT கண்டுபிடிச்சுரும்
18/06/2009 05:10:42 ‹செந்தழல் ரவி› விஷ்யத்தை உள்வாங்கிட்டு உங்க ஸ்டைலில் போடுங்க
18/06/2009 05:10:43 ‹sasaran› புரியுது
18/06/2009 05:10:56 ‹பார்வையாளர்› ஹலோ
18/06/2009 05:10:56 ‹Albonse› நியூஸ் பேப்பர் பார்த்து டைப் பண்ணலாமா ?
18/06/2009 05:11:03 ‹செந்தழல் ரவி› இமேஜ் நெட்ல இருந்து காப்பி செய்து போடும்போது அந்த இமேஜை rename செய்து போடுங்க
18/06/2009 05:11:14 ‹செந்தழல் ரவி› செய்யலாம் அல்போன்ஸ்
18/06/2009 05:11:19 ‹sasaran› ஓகே
18/06/2009 05:11:23 ‹Albonse› நன்றி
18/06/2009 05:11:27 * jj joins உரையாடல் வெளி
18/06/2009 05:11:34 ‹செந்தழல் ரவி› உதாரணமா Air France க்ராஷ் ஆச்சில்ல
18/06/2009 05:11:43 ‹sasaran› ஆமா
18/06/2009 05:11:59 ‹செந்தழல் ரவி› அந்த வாரம் நெட்ல மக்கள் Air France அப்படீன்னு மில்லியன் தடவைக்கு மேல செர்ச் பண்ணாங்க
18/06/2009 05:12:00 ‹Albonse› ரவி நீங்கள் சொல்ல வருவது நாம் போடுகிற Content ஏற்க்கனவே நெட்ல இருக்க கூடாது? அப்படி தான
18/06/2009 05:12:01 * ஜோ quit (timeout)
18/06/2009 05:12:15 ‹பார்வையாளர்› நான் அனுப்புற மெசேஜ் தணிக்கை செய்யபடுகிறதா.......இது என்ன சட்டப்பேரவையா , அவைகுறிப்பிலிருந்து நீக்க ?
18/06/2009 05:12:24 ‹செந்தழல் ரவி› அது சம்பந்தமா நீங்க நினைச்சதை சொல்ல வர்ரதை படங்களோட ஒரு பதிவை போடனும்...
18/06/2009 05:12:34 ‹sasaran› சரி
18/06/2009 05:12:35 ‹Albonse› நல்ல தகவல்
18/06/2009 05:12:38 ‹செந்தழல் ரவி› பார்வையாளர்...சத்தியமா நான் எதுவும் செய்யல..
18/06/2009 05:12:53 ‹பார்வையாளர்› உங்கள சொல்லல
18/06/2009 05:12:57 ‹செந்தழல் ரவி› சரிதான்...அது சம்பந்தம்மா போடனும்...
18/06/2009 05:13:06 * N.Naina joins உரையாடல் வெளி
18/06/2009 05:13:26 ‹செந்தழல் ரவி› Content காப்பி அடிப்பதை தடுக்க CopyScape மாதிரி டூல்ஸ் இருக்கு
18/06/2009 05:14:14 ‹sasaran› பிளாக் - ல போடலாமா இல்ல என் வெப் சைட்லயே போடலாமா ?
18/06/2009 05:14:21 * John Samuel joins உரையாடல் வெளி
18/06/2009 05:14:24 ‹செந்தழல் ரவி› ஒரு வார்த்தையும் இன்னொரு வார்த்தையும் சேர்த்து வெச்சு அதை போல கண்டண்ட் நெட்ல தேடி, அதே கண்டெண்ட் மாட்டினா அதை மேலும் ஸ்க்ரீன் செய்து, ப்ளாகை ஸ்பேம் செய்துவிடும் கூகிள் பாட்
18/06/2009 05:14:34 ‹செந்தழல் ரவி› எதுல வேண்டுமானாலும் போடுங்க சாமீ
18/06/2009 05:14:43 ‹sasaran› சரிங்க
18/06/2009 05:14:46 ‹செந்தழல் ரவி› அல்போன்ஸ் இப்ப புரிஞ்சத
18/06/2009 05:14:52 ‹செந்தழல் ரவி› சரண்
18/06/2009 05:14:55 ‹செந்தழல் ரவி› ஓக்கே
18/06/2009 05:15:05 ‹sasaran› ஓகே ரவி
18/06/2009 05:15:11 * PM quit (timeout)
18/06/2009 05:15:12 ‹John Samuel› hi ravi
18/06/2009 05:15:13 ‹Albonse› ரவி சிலர் தளங்களை தயார் செய்து விற்று வருகிறார்கள். அவற்றை வாங்கலாமா? 40 தளங்கள் Content 100 டாலருக்கு தருகிறார்கள்
18/06/2009 05:15:33 ‹செந்தழல் ரவி› ம்ஹும்...
18/06/2009 05:15:35 ‹Albonse› புரியுது சார்
18/06/2009 05:15:37 ‹N.Naina› ok...
18/06/2009 05:15:43 ‹செந்தழல் ரவி› ஏன் நாம க்ரியேட் பண்ணிக்க மாட்டமா
18/06/2009 05:16:01 * ganesh.i joins உரையாடல் வெளி
18/06/2009 05:16:05 ‹செந்தழல் ரவி› குறுக்கு வழியில் ஈஸியா மாட்டிப்போம்
18/06/2009 05:16:06 ‹Albonse› பண்ணலாம் ... எல்லாம் ஒரு அலுப்புதான்
18/06/2009 05:16:09 * ravi joins உரையாடல் வெளி
18/06/2009 05:16:11 ‹sasaran› மனசில்லாம பிரியுறேன். வணக்கம்,
18/06/2009 05:16:24 ‹செந்தழல் ரவி› அவன் அதே கண்டண்ட் 100 பேருக்கு விப்பான் அல்போன்ஸ்
18/06/2009 05:16:26 ‹sasaran› Thanks Mr. Ravi
18/06/2009 05:16:29 ‹செந்தழல் ரவி› இன்னொரு நாள் பார்க்கலாம்
18/06/2009 05:16:30 ‹ganesh.i› hai ravi
18/06/2009 05:16:40 ‹செந்தழல் ரவி› வணக்கம் கனேஷ்
18/06/2009 05:16:56 ‹செந்தழல் ரவி› ஜான் சாமுவல்
18/06/2009 05:17:13 ‹Albonse› ரவி நீங்க புதுசா வரவங்களுக்கு பதில் சொல்லுங்க. ப்ரீயா இருந்தால் கேட்கிறேன்
18/06/2009 05:17:14 * sasaran quit (timeout)
18/06/2009 05:17:20 ‹செந்தழல் ரவி› ஓக்கே
18/06/2009 05:17:22 ‹N.Naina› vankkam saare...
18/06/2009 05:17:26 ‹John Samuel› ravi... i dont knw how to type in tamil
18/06/2009 05:17:32 ‹ganesh.i› ravi enna business pannalam
18/06/2009 05:17:37 ‹John Samuel› pls pardon me
18/06/2009 05:17:42 * sa joins உரையாடல் வெளி
18/06/2009 05:18:00 ‹N.Naina› aahaa makkal kumura aarambichittaangale....
18/06/2009 05:18:11 * ஜோ quit (timeout)
18/06/2009 05:18:12 ‹பார்வையாளர்› என் நண்பன் ஒருவன் yahoo geocities இலவச இணைய பக்கங்களில் காணப்படும் தொழில்நுட்ப பக்கங்களை அப்படியே சுட்டு தன்னுடைய வலைப்பதிவில் ஏற்றி விடுவான். geocities இலவச சேவையில் விளம்பரங்களை பயன்படுத்த முடியாது. அதனால் அனாதையாக கிடக்கும் இந்த content அவனுக்கு அட்சய பாத்திரமாக செயல்படுகிறது. படுபாவிபயல் , ஒரு சான்ட்ரோ கார் வாங்கி விட்டான் இந்த பணத்தை வைத்து.
18/06/2009 05:18:46 ‹செந்தழல் ரவி› அட நல்ல ஐடியா ஹி ஹி
18/06/2009 05:18:57 * jj quit (timeout)
18/06/2009 05:19:05 * SuperMan joins உரையாடல் வெளி
18/06/2009 05:19:07 ‹செந்தழல் ரவி› ஆக கண்டண்டுக்கு அலைய தேவையில்லைன்னு சொல்லுங்க ஹி ஹி
18/06/2009 05:19:20 ‹செந்தழல் ரவி› நானும் பல கண்டண்டுகளை பார்ப்பேன் நெட்டில்...
18/06/2009 05:19:21 ‹பார்வையாளர்› அதே அதே
18/06/2009 05:19:27 ‹N.Naina› mmm...mmm...
18/06/2009 05:19:34 ‹sa› hi. today i got a promo offer from google analytics - which they send me 50$ voucher for adwords
18/06/2009 05:19:34 ‹SuperMan› Thank you for your interest in Google AdSense. Unfortunately, after reviewing your application, we're unable to accept you into Google AdSense at this time. We did not approve your application for the reasons listed below. Issues: - Unsupported language
18/06/2009 05:19:35 ‹Albonse› ரவி, seo, digg, fark போன்றவை தவிர நமது ப்ளாக்கை promote செய்ய வேறேதும் வழி இருக்கா?
18/06/2009 05:19:37 * ravi quit (timeout)
18/06/2009 05:20:09 ‹SuperMan› There?
18/06/2009 05:20:18 * tamilan joins உரையாடல் வெளி
18/06/2009 05:20:32 ‹SuperMan› HI Tamilian
18/06/2009 05:20:35 ‹செந்தழல் ரவி› சூப்பர்மேன்
18/06/2009 05:20:44 ‹செந்தழல் ரவி› தமீழ் தளமா ஆங்கில தளமா
18/06/2009 05:20:46 ‹SuperMan› Hi Ravi..
18/06/2009 05:21:00 ‹tamilan› karuna and karunanithi
18/06/2009 05:21:01 ‹SuperMan› no tamil writer ravi..pardon me
18/06/2009 05:21:18 ‹வடிவேலன்› ரவி, seo, digg, fark தமிழர்களிடம் ரீச் ஆகறமாதிரி தானாகவே அப்டேட் செய்ற தளமாக சொல்லுங்க
18/06/2009 05:21:19 * PM quit (timeout)
18/06/2009 05:21:33 ‹SuperMan› tamil blog
18/06/2009 05:21:34 * ஜோ quit (timeout)
18/06/2009 05:21:35 ‹செந்தழல் ரவி› நீஙக உங்க தளத்தை Promote செய்ய அந்த 50 டாலர் உபயோகப்படுத்துங்க
18/06/2009 05:21:51 ‹செந்தழல் ரவி› மேற்கொண்டு காசு செலவு செய்ய வேண்டாம் என்றால் ஓக்கே
18/06/2009 05:22:11 ‹செந்தழல் ரவி› தனி தனியா கொடுக்கனும்...
18/06/2009 05:22:13 ‹sa› thanks ravi. today i applied for adwords - linked with my Credit card and gave that promo code. it is working.
18/06/2009 05:22:15 ‹வடிவேலன்› தமிழ் நெஞ்சம் ஏதாவது கேள்வி கேளுங்க நம்ம தலைவர்கிட்ட நாலும் தெரிஞ்சிக்கலாம்
18/06/2009 05:22:15 ‹SuperMan› Ravi have you ever got any cheque for Ad Sense?
18/06/2009 05:22:16 ‹John Samuel› ravi... pls give me step by step details about SEO
18/06/2009 05:22:22 ‹ganesh.i› ravi nan patethuvidu velai ounrum illai
18/06/2009 05:22:25 * Albonse quit (timeout)
18/06/2009 05:22:31 * tamilan quit (timeout)
18/06/2009 05:22:31 ‹N.Naina› சரி எங்க சிடு மூஞ்சி டேமேஜர் கூபிடுறார்... நான் அப்பாலிக்கா வாரேன்....
18/06/2009 05:22:46 ‹N.Naina› ( நாம ஆபீஸ்லே இருக்கணும், ஆனா டேமேஜர் கண்ணுக்கு படக்கூடாது... அதுக்கு ஏதாவது வழி யாராவது யோசிச்சு வைங்க )
18/06/2009 05:22:49 ‹பார்வையாளர்› பேபால் பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற எந்த சேவையை பயன்படுத்துகிறீர்கள் ரவி.
18/06/2009 05:22:52 * ram joins உரையாடல் வெளி
18/06/2009 05:23:00 * ganesh.i quit (timeout)
18/06/2009 05:23:01 ‹Albonse› நன்றி
18/06/2009 05:23:14 ‹செந்தழல் ரவி› நான் Citibank க்கு அனுப்புவேன்
18/06/2009 05:23:14 ‹John Samuel› செந்தழல் ரவி,
18/06/2009 05:23:17 ‹sa› paypal itself has the option - we can directly withdraw from paypal to credit card or bank account
18/06/2009 05:23:23 ‹SuperMan›
18/06/2009 05:23:30 ‹செந்தழல் ரவி› என்னுடைய paypal அக்கவுண்டை
18/06/2009 05:23:36 * N.Naina quit (timeout)
18/06/2009 05:23:40 ‹SuperMan› Ravi is not answering for my question
18/06/2009 05:23:54 ‹Albonse› நல்ல தகவல்கள் பெற்று கொண்டேன். முயற்சி செய்து பார்க்கிறேஅன். சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
18/06/2009 05:23:57 * ஜோ quit (timeout)
18/06/2009 05:24:04 ‹செந்தழல் ரவி› சூப்பர்மேன் நான் பெற்றுள்ளேன்
18/06/2009 05:24:09 * ram quit (timeout)
18/06/2009 05:24:19 ‹செந்தழல் ரவி› இணையத்தில் நிறைய பேர் பெற்றுள்ளார்கள்ள்
18/06/2009 05:24:22 ‹செந்தழல் ரவி› தமிழ்நெஞ்சம்
18/06/2009 05:24:25 ‹செந்தழல் ரவி› ஓசை செல்லா
18/06/2009 05:24:30 ‹John Samuel› ravi
18/06/2009 05:24:31 ‹sa› i want to know about CTR. hi Ravi this is TamilNenjam. what is the maximum CTR% is allowed in adsense?
18/06/2009 05:25:11 ‹Albonse› தமிழ்நெஞ்சம் தமிழ் என்னாச்சு ?
18/06/2009 05:25:24 * பார்வையாளர் quit (timeout)
18/06/2009 05:25:39 ‹John Samuel› ravi r u there
18/06/2009 05:25:42 ‹பார்வையாளர்› பொதுவாக அட்சென்ஸ் பற்றி சொல்லிகொடுக்கும் இந்திய கம்பனிகள் காட்டும் அட்சென்ஸ் செக்குகள் பொய்யானதா?
18/06/2009 05:25:46 * kuzhali joins உரையாடல் வெளி
18/06/2009 05:26:00 * SuperMan quit (timeout)
18/06/2009 05:26:07 ‹sa› no. please do not go for that kind of companies.
18/06/2009 05:26:29 ‹Albonse› உண்மை இருக்கலாம். எனக்கு தெரிந்து என் நண்பன் ஒரு மாதம் இரண்டு லட்சம் ருபாய் பெற்று உள்ளான்.
18/06/2009 05:26:39 ‹sa› just try your self. many companies are fraud
18/06/2009 05:27:30 ‹sa› karthikeyan is getting > 5K every month
18/06/2009 05:27:33 * kuzhali quit (timeout)
18/06/2009 05:27:50 ‹sa› I got 11K last month. this month till now 7.4K
18/06/2009 05:27:51 ‹Albonse› அமாம் சொல்லி கொடுக்க உங்களிடம் காசு கேட்பவனை ரவி சொன்னது போல் மூத்திர சத்தில் வைத்து அடிக்க வேண்டும்
18/06/2009 05:27:57 ‹John Samuel› ravi ..... could u please answer for my question
18/06/2009 05:28:01 * raja raja quit (timeout)
18/06/2009 05:28:20 * PM quit (timeout)
18/06/2009 05:28:21 ‹Albonse› தமிழ்நெஞ்சம் டாலர் அல்லது ரூபாயா?
18/06/2009 05:28:23 ‹sa› what is the maximum CTR% is allowed in adsense? -- please answer me - Ravi
18/06/2009 05:28:32 ‹sa› INR -
18/06/2009 05:28:48 ‹பார்வையாளர்› பொதுவாக ரிடைரான பெருசுகளுக்கும் , வீட்டில் சும்மா இருக்கும் பெண்களுக்கும் , வேலை இல்லாம அலையும் இளைஞர்களுக்கு மட்டும் தானே அட்சென்ஸ் பரிந்துரைக்கபடுகிறது ஏன்? இது நம்பகமான வருமானம் இல்லையா?
18/06/2009 05:28:55 * Bala joins உரையாடல் வெளி
18/06/2009 05:29:10 * venkat joins உரையாடல் வெளி
18/06/2009 05:29:13 * jj quit (timeout)
18/06/2009 05:29:27 ‹venkat› enna
18/06/2009 05:29:31 ‹sa› it is reliable boss. it is advicable for all. shankarganesh.com - he is getting good income he is doing +2
18/06/2009 05:30:07 ‹Albonse› என்னை பொறுத்தவரை திருட்டு வேலை செய்யாமல் இருந்தால் அட்சென்சில் அதிகம் சம்பாதிக்கலாம். பொறுமை தேவை. நாம் புத்திசாலி என்று திருட்டு வேலை செய்தால், கூகிள் அதிபுத்திசாலி
18/06/2009 05:30:08 ‹sa› he is from TamilNadu. he wrote many articles in popular technology oriented sites
18/06/2009 05:30:11 * Bala quit (timeout)
18/06/2009 05:30:27 ‹செந்தழல் ரவி› வந்துட்டேன்
18/06/2009 05:30:27 ‹sa› you are rite albonse
18/06/2009 05:30:32 ‹sa› vanga ravi
18/06/2009 05:31:05 ‹John Samuel› ravi... pls
18/06/2009 05:31:08 ‹வடிவேலன்› வாங்க என்னாச்சு எல்லோரும் தவிச்சிட்டாங்க
18/06/2009 05:31:10 ‹sa› many andhra guys - hyd based guys are doing fraud adsense. they are getting money for 4 to 5 months. then got banned
18/06/2009 05:31:18 ‹பார்வையாளர்› அட்சென்செக்கு நேரடி போட்டி என்று எந்த சேவையை சொல்வீர்கள்?
18/06/2009 05:31:24 ‹sa› i saw many people from andhra doing fraudsense
18/06/2009 05:31:28 ‹செந்தழல் ரவி› அனைத்தும் பொய் என்று சொல்ல முடியாது
18/06/2009 05:31:53 ‹செந்தழல் ரவி› நீங்களே கற்றுக்கொள்ளமுடியும்
18/06/2009 05:32:00 ‹sa› oh
18/06/2009 05:32:03 ‹செந்தழல் ரவி› adbrite
18/06/2009 05:32:22 ‹செந்தழல் ரவி› ஜான் சாமுவேல்
18/06/2009 05:32:27 ‹sa› I tried with komli for my tamil blog - very bad experience
18/06/2009 05:32:27 ‹செந்தழல் ரவி› சொல்லுங்க
18/06/2009 05:32:28 ‹Albonse› Yahoo Ads இந்தியா வந்தால் போட்டி இருக்கும்
18/06/2009 05:32:31 ‹வடிவேலன்› ஆட் ப்ரைட்டில் நல்லா காசு தேருமா
18/06/2009 05:32:43 ‹செந்தழல் ரவி› கண்டிப்பா
18/06/2009 05:32:51 ‹செந்தழல் ரவி› என் நன்பர் 500 டாலர் வாங்கினார்
18/06/2009 05:32:53 ‹செந்தழல் ரவி› போன மாதம்
18/06/2009 05:33:02 ‹செந்தழல் ரவி› அல்போன்ஸ் தெரியல
18/06/2009 05:33:03 ‹வடிவேலன்› அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆ
18/06/2009 05:33:05 ‹John Samuel› ravi ... please give me the information abt SEO
18/06/2009 05:33:10 ‹வடிவேலன்› வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கு
18/06/2009 05:33:19 ‹sa› adbrite, bidvertisers are showing - your ad here for PR3 based blogs too. they are not showing ads in many blogs. I am seeing Your ads here... only
18/06/2009 05:33:21 ‹Albonse› தமிழில் விளம்பரங்கள் வழங்கும் குருஜி, கொம்லி போன்றவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை நம்பாதீர்
18/06/2009 05:33:33 ‹செந்தழல் ரவி› எஸ்ஸிஓ பற்றி ஒரு வரியில் சொல்லிடமுடியாது ஜான்
18/06/2009 05:33:36 ‹பார்வையாளர்› komli அஹா பெயர் ரொம்ப ஹோம்லியா இருக்கு
18/06/2009 05:33:39 ‹John Samuel› i already host one site... but its not displayed in google search
18/06/2009 05:34:06 ‹sa› kricons.blogspot.com is using guruji ads - he got 0.50 paise for 10 clicks. gouthaminfotech.blogspot.com also using guruji ads - he got 3 Rs for 28 clicks.
18/06/2009 05:34:06 ‹செந்தழல் ரவி› மோஸில்லா டைரக்டரியில் சேத்தீங்களா ஜான் சாமுவல்
18/06/2009 05:34:10 ‹sa› enna kodumai sir idhu?
18/06/2009 05:34:15 * ஜோ quit
18/06/2009 05:34:20 ‹John Samuel› no ravi
18/06/2009 05:34:27 ‹John Samuel› i dont knw abt that
18/06/2009 05:34:31 ‹செந்தழல் ரவி› குருஜி ஆட்ஸ் வேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட்
18/06/2009 05:34:42 * ஜோ joins உரையாடல் வெளி
18/06/2009 05:35:01 ‹செந்தழல் ரவி› டீமோஸ் என்பது மோஸில்லா டைரக்டரி
18/06/2009 05:35:02 ‹செந்தழல் ரவி› http://www.dmoz.org/
18/06/2009 05:35:14 * jj quit (timeout)
18/06/2009 05:35:16 ‹செந்தழல் ரவி› அதில் சென்று உங்கள் தளத்தை சேருங்க
18/06/2009 05:35:26 ‹செந்தழல் ரவி› கூ்கிள் தேடலில் தன்னால வரும்
18/06/2009 05:35:37 * dan quit (timeout)
18/06/2009 05:35:46 ‹John Samuel› gr8
18/06/2009 05:36:16 ‹செந்தழல் ரவி› பத்து ஆண்டுகளுக்கு முன்
18/06/2009 05:36:40 * பாலு joins உரையாடல் வெளி
18/06/2009 05:36:43 ‹John Samuel› ravi if u had any simple document or any weblinks means please send me
18/06/2009 05:36:49 ‹செந்தழல் ரவி› Google was having manual directory
18/06/2009 05:36:53 ‹செந்தழல் ரவி› not bots.
18/06/2009 05:36:57 ‹பார்வையாளர்› எஸ் ஈ ஒ என்பது ஒரு தில்லாலங்கடி வேலை, பேஜ் ரேங்க் 5 வைத்திருக்கும் பக்கங்களில் இருந்து உங்கள் இணைய தளத்துக்கு லிங்க் கொடுத்தால் தானாக உங்கள் பக்கம் சர்ச்'ல முன்னுக்கு வந்துடும் . இதுக்கு நீங்க ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி வரும்
18/06/2009 05:37:02 ‹sa› hai Ravi - how about Lakeuincy.com - I heard it is good
18/06/2009 05:37:07 ‹செந்தழல் ரவி› so I remember i had added my geo site in google by myself )))
18/06/2009 05:37:15 ‹John Samuel› oh
18/06/2009 05:37:25 * பாலு quit (timeout)
18/06/2009 05:37:29 ‹செந்தழல் ரவி› நானும் கேள்விப்பட்டேன்.
18/06/2009 05:38:17 ‹செந்தழல் ரவி› ஸ்பெல்லிங் http://lakequincy.com/ thiratti