Thursday, October 18, 2007

சூடான இடுகையில் புனித பிம்பம்



என்னுடைய புனித பிம்பம் பதிவு சூடான இடுகையில் வந்திருக்கு...!!! ( பூங்காவில வந்திருக்கு, ஆனந்தவிகடனில் வந்திருக்கு அப்படீங்குற மாதிரி )

Wednesday, October 17, 2007

புனித பிம்பம் !!!!!



இப்பல்லாம் நல்லவங்க தொல்லை தாங்க முடியலடா சாமியோவ் !!!!!!!!!!

தமிழ்மணமா, கண்டிப்பு மாமியா, தடி ஊன்றும் தாத்தாவா ?

அதென்ன இப்படி ஒரு வம்படியான தலைப்புன்னு பாக்க்குறீங்களா ? சில சமயம் அப்படித்தோன்றும் எனக்கு..பதிவின் பெயரே இம்சைதானே...சும்மா இருந்தா எப்படி ? ஆங்...விஷயம் என்னன்னு கேட்குறீங்களா ?

சூடான இடுகைகளுக்கு சூடு வைத்த தமிழ்மணத்தின் பாஸிச நடவடிக்கையை எதிர்த்துத்தான் இந்த பதிவு...இதை ஏன் அப்பவே போடலைன்னு கேட்குறீங்களே ? எனக்கு எப்ப தோனுதோ அப்பத்தான் போடுவேன்....(என்ன திமிர் !!!)

எல்லாருக்கும் நூத்துக்கணக்கா பின்னூட்டம் வருது...பின்னூட்ட விளையாட்டு விளையாடுறாங்க..அதை தடு...அப்படீன்னு ரவிஷங்கர் புலம்பினாரு...உடனே புள்ளைங்க விளையாட்டை தடுக்க வந்த கண்டிப்பு மாமி மாதிரி, நாப்பது உயரெல்லை..ஷட்டப்...எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ளே விளையாடு...வெளிய போப்படாது...ஷனியனே...அப்படீன்னு மடக்கிப்போட்டுட்டாங்க...

நாங்களும் எவ்ளோ சொன்னோம்...பதிவெல்லாம் கூட போட்டோம்.."யோவ் அந்தாள் வயத்தெரிச்சல்ல சொல்றான்யா", அவனுக்கு எவனும் பின்னூட்டம் போடுறதில்லைன்னு புலம்புறான்யா...பின்னூட்டம் நூத்துக்கணக்கா போறது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லைய்யா, அது நாங்களே போடுறது தான்யா...அப்படீன்னெல்லாம் சொன்னோம்...கேக்குற வழியா தெரியல்லியே...இன்னைக்கும் அந்த பாஸிஸ நடவடிக்கை தொடந்துக்கிட்டுத்தான் இருக்கு...

அந்த ஆள் பதிவு போட்டதுக்கு பரிசீலிச்சு நடவடிக்கை எடுத்தீங்க இல்ல...ஏன் அதுக்கப்புறம் பதிவு போட்ட பயலுக பதிவை மறுபடி பரிசீலிக்கறது ? சுப்ரீம் கோர்ட்டே வழக்குகளை திரும்ப ஆராயும் போது, தமிழ்மணம் ஆராயக்கூடாதா ?

சரி அடுத்த மேட்டருக்கு போவோம்..(போயிட்டாண்டா...நாரதப்பய...கொளுத்திப்போடுறதுக்குன்னே கிளம்பிடுறாய்ங்கடா...)

அடுத்த விஷயத்துக்கு வரும்போது ஒரு டிஸ்கி போடுவோம்...இந்த பதிவு யாரையும் குறிப்பது அல்ல..(டேய் இப்பதானடா ரவிஷங்கர கலாய்ச்ச..)

அடுத்தது ஏன் தமிழ்மணம் எனக்கு தடி ஊன்றும் தாத்தாவா தோன்றுதுன்னா (நல்லா கிளப்புறானுங்கடா பீதிய...) யாரோ எவரோ, யாரு பெத்த புள்ளையோ, சூடான இடுகைகள் பற்றி டென்ஷனா ஒரு ஒப்பாரி வெச்சுதாம்...

ஓசை செல்லா பதிவு எப்ப பார்த்தாலும் ஜூடான இடுகையில வருது...மடிப்பாக்கம் சுனாமி எதைச்சொன்னாலும் அது சூடான இடுகையா, திராவிட திம்மிகள் போடும் இடுகைகள் மட்டும் ஏன் சூடான இடுகையில வருது, காண்ட்ரவர்ஸியா தலைப்பு வெச்சா சூடான இடுகையில வருதுன்னு எல்லாரும் காண்ட்ரவர்ஸியாவே தலைப்பு வெக்குறானுங்க ( லேய், அவன் எப்படி தலைப்பு வெச்சா உனக்கென்ன), அப்படின்னு ஒரே கொடுமைக்கூத்து புலம்பல்...

என்னடா இவனுங்க புலம்பல் ஓவராப்போச்சேன்னு தமிழ்மணமும் சூடான இடுகைக்கு ஜூடு வெச்சுருச்சு ( என்னோட கற்பனைதானுங்க இது)....அதனால தான் சொன்னேன்...தடி ஊன்றும் தாத்தா மாதிரி...லைட்டா தட்டினா டடங்கு புடங்குன்னு ஆடி உழுந்துடுறாரு...பாவம் தாத்தா..

நல்லா யோசிச்சு பாருங்க..படிக்கறவன் எதை வேனாலும் படிப்பான்...அது சூடான இடுகையா இருந்தா என்ன, ஆறிப்போன நாறிப்போன இடுகையா இருந்தா என்ன ? தமிழச்சி பெரியார் பற்றி போடும் எல்லா இடுகையும் நல்ல இடுகை என்னைப்பொறுத்தவரை...ஒரு நாளைக்கு பத்து போடுறாங்க..எல்லாம் சூடான இடுகையில வந்தா பரவால்லையா...

பரண் அப்படீன்னா என்ன ? பழசு...பழைய சாதம் வேண்டுமா இல்ல புதிய சாதம் வேண்டுமான்னா எதை எடுப்பாங்க மக்கள் ? ( நான் தனிப்பட்ட முறையில் பழைய சாதம் மற்றும் கெட்டித்தயிரை 'செல்வம்' எலுமிச்சை ஊறுகாயோடு வெட்டு வெட்டென்று ஒரு காலத்தில் வெட்டியவன்)...

பரணில் இருப்பவை பற்றி சொல்லும்போது, இந்திராகாந்தி செத்ததை பழையை பேப்பரை வைத்து டீக்கடையில் படிச்ச விவேக் ஜோக் நியாபகம் வருவதை தடுக்க முடியவில்லல..

பத்ரி எழுதிய பழைய இடுகை உண்மையில் நல்லாத்தான் இருக்கு...ஆனால் அதோட சேர்ந்து பழைய மொக்கைகளான ஆண் பெண் கற்பு நிலை (4), எனது ஒரிசா நினைவுகள் ( அப்போது பிஜு பாட்டீல் முதல்வர்), ஜெயலலிதா அரசு சாலைப்பணியாளர்களை ஏன் நீக்கியது (அவன் மறுபடி ஜாப்புக்கு வந்து ரிட்டேரே ஆயிட்டான்), போன்ற மொக்கை தூசு பிடித்த மேட்டர்களை படிக்கவேண்டி இருக்கு..

டோண்டு ராகவன் எப்பவாது நல்லதா ஒரு பதிவு போட்டா ஆட்டோமேட்டிக்கா அது சூடான இடுகையில வருது...அதை விட்டு, அவரோட ஐ.டி.பி.எல் நினைவுகளையா படிக்குறாங்க மக்கள் ? தீவு மற்றும் பெயரிலி கூட மொக்கைப்பதிவு போட ஆரம்பித்துவிட்ட இந்த காலத்தில் தமிழ்மணம் நிர்வாக குழு சிந்தித்து, முடிவெடுக்கவேண்டும்..

இந்த பதிவின் மூலமாக விடுக்கும் கோரிக்கை..

1.பின்னூட்ட உயரெல்லையை அகற்றுவது..
2.சூடான இடுகைகளை மீண்டும் முகப்பில் காட்டுவது..

என் மேல டென்ஷனாகாதீங்க...நான் அப்படித்தான்...இது சூடான இடுகையில் வந்துத்தொலையும்...வழக்கம் போல மேலும் ஒரு முறை சூடான இடுகை மேல் க்ளிக் செய்து பேண்ட் விட்த் வேஸ்ட் செய்து படிங்க...வணக்கம்..

Tuesday, October 16, 2007

நல்லவர்க்கெல்லாம்....!!!!!



என்ன உச்சரிப்பு...!!! என்ன முகபாவம்.....!!! என்ன பாடிலாங்வேஜ் !!!!

அய்யா நீர் கலைஞன் !!!!

யார் இந்த ABCD ?



நீ வெளங்குனாப்புலதான்...போயும்போயும் 'அங்கே' போய் மாட்டுனபாரு ?

Saturday, October 13, 2007

தமிழச்சிக்கு மீண்டும்...சாணக்கியரை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாமா பெரியார் இயக்கப்படி



////எம் இயக்கத்திற்கு பக்கபலமாக இருக்கும் தோழர் ப்ளான் போட்டு செயலாக்குவதில் சாணக்கியன். "தலீத்" பற்றிய நோட்டீஸ் அனுப்பியவர். எங்கள் இயக்கத்தை இயக்குபவர். எனக்கும் இயக்கத்தின் தோழர்களுக்கும் மூளையே அவர் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றோம்////

இப்படி சொல்லும் தோழர் தமிழச்சியை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...இந்த சாணக்கியரோட ஜாதியை கண்மூடித்தனமாக எதிர்க்கும்படி பெரியார் சொல்லியிருக்காரே ? படிச்சதில்லையோ ?

நோக்கு என்னத்தத்த சொல்லி நான் இனிமே புரியவைக்க ?

உங்கள் சாணக்கியர் இந்த 'விஷ'யம் எல்லாம் சொல்லிக்கொடுப்பதில்லையா ?

சூடாக காபி அருந்திவிட்டு பெரியார் கருத்துக்களை யோசிக்கவும்...!!!

Friday, October 12, 2007

பெங்களூர் தமிழச்சியின் காமெடி பதிவு...!!!!

பெங்களூர் தமிழச்சியின் இந்த பதிவை படித்துவிட்டு அடக்க மாட்டாமல் சிரித்து வயிறை புண்ணாக்கி கொண்டேன்...ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவான அந்த பதிவு, "சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில வரும்" என்று நன்றாக உணர்த்துகிறது...

பெங்களூர் தமிழ்ச்சங்கம், பெங்களூரின் தமிழர் எண்ணிக்கை, எத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள், தமிழர்கள் பெங்களூரில் செய்யும் தொழில்கள் என்ன என்பது குறித்து கிஞ்சித்தும் தெரியாமல், ஏதோ ஐ.டி கம்பெனிகள் வந்தவுடன் எம்.சி.யே படித்தவர்கள் வந்துதான் பெங்களூரில் குடியேறினார்கள் என்ற ரீதியில் அரைவேக்காட்டு பதிவொன்றை இட்டுள்ளார்...

தனித்தமிழ் சேனை என்று ரெண்டு மூனு இடத்தில் எழுதி இருக்காம்...அம்மாடி அது தமிழ்ல தான எழுதி இருக்கு ? அதை படிச்சுட்டு கன்னடாக்காரன் தமிழனை உதைப்பான் என்றால் அதைவிட அரைவேக்காட்டுத்தனம் என்ன இருக்கு ?

கன்னடமெல்லாம் தமிழில் இருந்து தான் வந்தது என்று கூறிக்கொண்டு அலைபவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்...அப்படி கூறியவரின் தமிழ் பற்றுக்கு தலைவணங்குகிறேன்...அதை கிண்டல் செய்யும் உங்களை பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு நாடு கடத்தலாம் என்று உள்ளேன்...

ஏதாவது ஹோட்டலுக்கு போனா சென்னையில் உள்ள சாப்பாடு மாதிரி வராது என்று கூறிக்கொண்டே சாப்பிடுவாங்களாம்...சரவணபவனில் சாப்பிடுவதற்கு சென்னை வரை போகும் எவ்ளோ பேர் இருக்காங்க தாயி...

இ-கலப்பையை வைத்து உழுது எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்...அந்த இ-கலப்பையை தமிழ் உலகுக்கு அளித்த முகுந்த் பெங்களூரில் இருக்கிறார்...தமிழின் முதல் மடலாடற்குழுக்களில் பங்குபெற்று - பாலாபிள்ளை போன்றவர்களுடன் பழகி - பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில் உள்ள அத்துனைபேரையும் அறிந்த அரவிந்தன் பெங்களூரில் இருக்கிறார்...அதெல்லாம் விட, அற்புதமான சிறுகதைகள் எழுதும், எழுத்தாளர் சுஜாதாவின் நன்பர் தேசிகன் பெங்களூரில் தான் இருக்கிறார்...

அவ்வளவு ஏன், வ.வா.சங்கத்தின் முக்கிய கைப்புவான இராம், விவசாயி இளா, ஜி.ரா, இம்சை அரசி போன்றவர்களும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள்...இவர்களுக்கு ஹிஸ்டரி, ஜியாகிரபி பற்றி தெரியுமான்னு தெரியல...சும்மா ஒரு பில்டப்புக்கு இந்த பேரா..

மியாவ் கண்ணை மூடிக்கொண்டால் வேர்ல்டு இருட்டிக்கும் என்பது போல இருக்கு இந்த அரைவேக்காட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு...ஆனால் மேட்டரை விளங்கிக்கொண்டு பதிவு எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

தமிழச்சிக்கு எனது சூடான பின்னூட்டம்

தோழர்..

என்ன இது...இவ்வளவு அசிங்க பின்னூட்டங்கள் அனுமதித்திருக்கீங்க !!!!

அன்றே சொன்னேன்...உங்கள் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்றால் அதர் அனானி ஆப்ஷன் அனுமதிக்காதீங்க என்று...

உங்களுக்கு பல தமிழ் லோக்கல் கலோக்கியல் வார்த்தைகள் விளங்கவில்லை...

இந்த நிலையில் நீங்கள் சபேசன்,இராயகரன்,வீரமணி அய்யா, கொளத்தூர் மணி அண்ணன், கவிஞர் கணிமொழி, நெடுமாறன் அய்யா, பெயரிலி இவர்களோடெல்லாம் புழங்கி, சண்டையிட்டு, விவாதம் செய்து...என்னத்த போங்க...

பெரியார் இருந்திருந்தால் இந்த கோணங்கித்தனத்தை எல்லாம் பொறுத்துக்கொள்ளமாட்டார் தோழர்...

உங்கள் பின்னால் இருக்கும் நன்பர்கள், கழக உறுப்பினர்கள் சற்றேனும் தங்களது லெமன் சைஸ் ப்ரைனை வைத்து யோசிக்கட்டும்..!!

Sunday, October 07, 2007

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்

மாபாரதத்தில் வரும் நகுசன் மகன் யயாதி சுக்கிராச்சாரியின்
மகள் தெய்வானையை மணக்கிறான். ஒரு பூசலின் விளைவாக அவளது வேலைக்காரியாக அசுர அரசன் விடபன்மன் மகளிடம் மூன்று மக்களைப் பெற்றான்.

இதையறிந்த சுக்கிரன் அவனை முதுமையடையச் செய்து பின்னர்
மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றான்.
தெய்வானையின் மக்கள் மறுக்க ஒப்புக்கொண்ட வேலைக்காரியின் மகன் பூரு
அவனுக்குப் பின் அரசனானான். மனைவியின் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களில் யது என்பவனது வழிவந்தவர்கள் யாதவர் எனப்படுவர். பூகு வழி
வந்தவர்கள் துரியோதனன் முதலியோர். யது வழி வந்தவர்களாக கண்ணனும் சேர,
சோழ, பாண்டியர்களும் கூறப்படுகின்றனர்.

கபாடபுரம் கழக தலைநகராக இருந்த போது துவரைக் கோமான் என்ற பெயரில் ஆண்டவன் இவர்களில் ஒருவனாய் இருக்கலாம். துவாரகை எனப்படும் துவரையையும் அதற்கு முன் வட மதுரையையும் ஆண்டவனாகக் கூறப்படும் கிருட்டினன் அதே குலத்தை
சேர்ந்தவனாக இருக்கலாம்.

யூதர்களின் பழைய ஏற்பாட்டின்படி ஆபிரகாம் என்பவனுக்கு குழந்தைகள் இல்லை
மனைவி சாராளின் வேண்டுகோள்படி வேலைக்காரியைக் கூடி ஒரு ஆண் பிள்ளை
பிறக்கிறது. பின்னர் அவனுக்கு 99ம் மனைவிக்கு 90ம் அகவை ஆனபோது
மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது. மூத்தவன் வெளியேறுகிறான்.

இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றும் மூத்தவன் வழி வந்தவர்கள்
அரேபியர்களென்றும் கூறப்படுகிறது.

மிசிரத்தானம் என்ற சொல்லுக்கு ஐரோப்பியரால் எகிப்து என்று அழைக்கப்படும்
நாடு என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூறுகிறது. யயாதியால்
தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச
தேசத்திற்சென்று அத்தேசத்தாராகி அந்த தேசத்துச் சனங்ககோடு கலந்தமையால்
இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.

மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு என்பது ஒரு பொருள்

இக்கதைகளிலுள்ள கருக்களின் ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இரு கதைகளிலும்
வேலைக்காரிக்குப் பிள்ளைகள் பிறப்பது, தந்தையரின் முதுமை ஆகியவை அவை
அத்துடன் யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர்
என்ற செய்தியை எரிக் வான் டெனிக்கன் போன்ற ஆய்வாளர்கள் ஏற்கின்ற போதும்
மோசே எகிப்திய இளவரசன் என்றும் அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட
அவன் எகிப்திய அடிமைகளைத் திரட்டி வெளியேறி புதிய ஒரு சமயத்தையும் அதைச்
சார்ந்து ஒரு புதிய மக்களினத்தையும் உருவாக்கினான் என்றும்
கருதுகிறார்கள்.

எகிப்திய அரண்மனை நூலகத்திலிருந்து தான் படித்த
வரலாறுகளை இணைத்து யூதர்களின் பழைய ஏற்பாட்டை எழுதினான் என்றும்
கருதுகின்றனர். மிசிரத்தானம் என்ற சொல்லின் பொருள் தெளிவாகவே இக்கதைக்கரு
குமரிக்கண்டத்திலிருந்து அங்கு சென்றதற்கு அசைக்க முடியாத சான்றாகும்.

மூவாரியின் புதிர்கள் என்ற நூல் எழுதிய உருசிய ஆய்வாளர் கோந்திரத்தோவ்,
பண்டை எகிப்திய நாகரிகம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து திடீரென்று ஒரு
புதிய உயரத்தை எட்டியுள்ளமை, நல்ல உயர்ந்த நாகரிக நிலையை எய்திய ஒரு
புதிய மக்கள் அங்கு குடியேறியுள்ளதற்குச் சான்று என்று கூறுகிறார்.

மிசிரத்தாநம் என்ற சொற்பொருள் அதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது.

மனித இன முன்னேற்றத்தில் மிக முகாமையான கட்டம் அவர்கள் நெருப்பைக் கையாளக் கற்றது. கொல் விலங்குகள் தங்களை நெருங்காமலிருக்க நெருப்பை அவர்கள் ஓம்பினர். நெருப்பு தெய்வமானது. நெருப்போம்புவோர் பூசகராயினர்.

தாம் நேசிக்கும், மதிக்கும் அல்லது அஞ்சும் மனிதர்களுக்குத் தாம் மிக விரும்பியுண்ணும் பொருட்களையும் வழக்கமாக உண்ணும் உணவுகளையும் அன்பளிப்பாக அளிப்பது மனித இயல்பு. அதுபோலவே அவற்றைத் தெய்வத்திற்குப் படையலாக்குவதும் வழக்கம். அவ்வாறே அண்டையிலுள்ள குழுக்களோடு நடைபெற்ற சண்டைகளில் செத்தோரையும் பிடிபட்டோரையும் உண்ணும் நரவுண்ணி வாழ்க்கைக் கட்டத்தில் மனிதர்களைக் காவு கொடுத்து நெருப்பிலிட்டு உண்டனர்.

இந்த வரலாற்றுக் கட்டத்தில் தமிழ் மக்கள் இருந்ததற்கு
ஐயத்திற்கிடமில்லாத சான்று உள்ளது. தென் மாவட்டங்களில் வழிபடப்படும்
சுடலை மாடன் கோயில் திருவிழாவில் (தென் மாவட்டங்களில் சிறு தெய்வக்
கோயில் திருவிழாவினை கொடை விழா என்பர்.) நடைபெறும் கணியாட்டில் (கணியான்
கூத்து) பெண் வேடமிட்டு ஆடும் கணியான் வகுப்பு ஆடவர்கள் தங்கள் கையை
அறுத்து வடிக்கும் குருதி கலந்த சோற்றையும் சுடுகாடு சென்று எரியும்
பிணத்தையும் தெய்வங்கொண்டாடுவோன் உண்ணும் நிகழ்ச்சி இன்றும்
நடைபெறுகிறது. *

குழந்தைகளை வருணனுக்குக் காவு கொடுப்பதாக நேர்ந்த செய்தி
மறைகளில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் தனக்குப் பிள்ளை பிறந்தால் அவனை
வேள்வியில் பலியிடுவதாக வேண்ட வருணன் அளித்த வரத்தால் பிறந்த பிள்ளை
அச்சத்தால் நாட்டைவிட்டோட அரிச்சந்திரனுக்கு வருணன் நோயை
உண்டாக்குகிறான். அறிந்த மகன் தன்னைக் காவு கொடுக்க புறப்பட்டுவரும்போது
இந்திரன் 6 ஆண்டுகள் அவனை தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். பின்னர்
சுனச்சேபன் என்பவனது தந்தைக்கு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கித்
தந்தை அரிச்சந்திரன் மூலம் அவனைக் காவு கொடுத்து வருணனிடமிருந்து
இருவரும் விடுதலை பெறுகின்றனர்.

தென்னிந்தியக் கடற்கரையில் இருந்து சென்று அசிரியாவில் குடியேறியவர்களாக
கூறப்படும் பினீசியர்கள் முதல் ஆண் மகவைக் காவு கொடுத்த செய்தியும்
உள்ளது. யூதர்களின் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் எனப்படுபவன் காவு
கொடுப்பதாகக் கடவுளுக்கு நேர்ந்து பெற்றப் பிள்ளையை காவு கொடுக்கச்
செல்லும்போது மகவுக்குப் பகரம் ஆட்டைக் காவு கேட்டு மகனை விடுவித்த கதை
உள்ளது. இக்கதை குரானிலும் இடம்பெற்றுள்ளது.

பிறந்தால் காவு கொடுப்பதாக வேண்டி ஆண்மகவைப் பெற்றுக்கொள்வது
விந்தையாகத் தோன்றுகிறது. ஒரு பெண்தலைமைக் குமுகத்தில் ஆண்களின்
எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியது என்ற அடிப்படையில் இது இருக்கலாம் அல்லது
பெண்தலைமை நீங்கி ஆண்தலைமைக் குமுகமாக

மலரும் சூழலில் மிகவும் வேண்டப்படும் ஆண் மகவைக் காவு கொடுப்பது
கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.

மேலேயுள்ள இரு கதைகளிலும் உள்ள இந்த பொதுக்கூறு தவிர இந்தியக்
கதையில் தன் மகனை மீட்க மாட்டைக் கொடுக்கிறான் அரிச்சந்திரன்.
சுனச்சேபனின் தந்தையோ மாட்டைப் பெற தன் மகனைக் கொடுக்கிறான். இரண்டு
நேர்வுகளிலும் மாட்டுக்காக மகன் மாற்றப்படுகிறான். ஒரு வகையில் காவு
கொடுப்பவன் வாக்குறுதியை நிறைவேற்றினாலும் இன்னொரு வகையில் தன் மகனை
காப்பாற்றியதன் மூலம் வாக்குத் தவறுகிறான் அரிச்சந்திரன். பழைய ஏற்பாடு
கதையில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன் வந்தமைக்காக தந்தையையும்,
மகனையும் கடவுள் பாராட்டுகிறார்.

இதே அரிச்சந்திரன் இராமாயணத்தில் இராமனின் முன்னோனாகக் காட்டப்பட்டு வாய்மைக்குத் தனக்கு வழிகாட்டியாக இருந்தவனாக மோகன்தாசு கரம் சந்து காந்தியால் பாராட்டப்பட்டவன். இந்தக் கதையிலும் ஆண் மகவு பாம்பால் சாகும் நிகழ்வு மூலம் குழந்தைச் சாவு எனும்
கதைக்கரு வருகிறது. மொத்தத்தில் மனிதக் காவு விலங்குக் காவாக மாறிய மனித
குல வரலாற்றுச் செய்தி வேத, யூத மரபுகளில் பதிவாகியுள்ளது. தமிழ் மண்ணில்
கோவில் சடங்காக குருதியும் சதையுமாக இன்றும் நிலவுகிறது. இது தமிழகத்தின்
தென்கோடியில் மட்டும் நிலவுகிறது என்ற உண்மை இது குமரிக்கண்டத்தில்
நிகழ்ந்தது என்பதற்கு ஆணித்தரமான சான்று. அத்துடன் பெண்வேடமிட்ட ஆடவர்
இதை நிகழ்த்துவது பெண் பூசாரியர் தலைமையில் இந்தக் காவுகள் நடைபெற்றன
என்பதைச் சுட்டி நிற்கிறது.****

உணவுப் பண்டங்களாக இருந்த காளையும் ஆவும் முறையே உழைப்புக்
கருவியாகவும், பால் முதலியவற்றின் விளைப்பு வகைதுறையாகவும் மாறிய பின்
மாடுகளைக் காவு கொடுத்து நெருப்பிலிடும் வேள்விகளுக்கு ஒட்டுமொத்த
குமுகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதிலும் பெண்களே
தலைமைதாங்கியுள்ளனர். தாடகை போன்ற பெண்கள் (அரக்கிகள்) வேள்விகளை
அழித்தனர் என்று பொதுவாகத் தொன்மங்கள் கூறினாலும் தக்கன் வேள்வியை அழித்த
காளியை மட்டும் தெய்வமாகக் கொண்டுள்ள உண்மை, மக்கள் இந்த வேள்வி
அழிப்புகளை வரவேற்றனர் என்பதற்கு தொன்ம பூசாரியரையும் மீறிப் படிந்து
விட்ட வரலாற்று எச்சமாகும்.

இங்கு பூசாரியருக்கும் அரசர்களுக்குமான போட்டி தொடங்குகிறது.
மாட்டு வேள்விகள் தகர்க்கப்பட்டதும் பின்னர் போர்க்கருவியான
தேர்க்குதிரைகளை (இரட்டையர்களான அசுவினி தேவர்களை)க் கொண்டு அவை
மீண்டதையும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார்
தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா தன் Lokayatha(லோகாயதா) நூலில். அது போல்
அழிந்துபட்ட வேள்வியை மீட்க அரசனும் பூசாரியும் முயன்றதில் அரசன் தோற்று
பூசாரியிடம் அடிபணிந்ததற்கு அவர் சான்று காட்டியுள்ளார்.

காமதேனு போன்ற கேட்டது அனைத்தையும் அளவின்றி வழங்கும் ஆவுக்காக
முனிவர்களுடன் அரசர்கள் போரிட்டு அழிந்த பல கதைகள் தொன்மங்களில் உள்ளன.
இவற்றுடன் பரசுராமன் 21 தலைமுறைகள் அரசர்களை அழித்ததைத் தொடர்ந்து
நாரிகவசன் என்பவன் பெண்களை அரணாகக் கொண்டு அரசாட்சியை மீட்டான். எனவே
அவனுக்கு மூலகன் என்ற பெயரும் உண்டு என்கிறது அபிதான சிந்தாமணி.

[7] இது பூசாரியர் - அரசர் போட்டியில் பூசாரியின் கட்டுக்கடங்கிய
அரசர்கள் என்ற இறுதி அமைப்பு உருவானதற்கான ஒரு தடயம். பரசுராமனே இன்றைய
சேரநாட்டை உருவாக்கினான் என்கிறது தொன்மக் கேரளத்தை கோடாரியை கடலில் வீசி
உருவாக்கினான் என்பதற்கு இரும்புக் கோடாரியை கண்டுபிடித்து அடர்ந்த
காட்டை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருந்தும். இரணியனைக் கொன்று
அவன் மகன் பிரகலாதனுக்கு பட்டஞ்சூட்டியது, அவனது பெயரனான மாவலியை
நிலத்தில் அழுத்தியது என்று மூன்று தலைமுறைகளுக்கு சேரநாட்டில்
பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான போட்டியில் பார்ப்பனர்கள்
வென்றது தொன்மத்தில் பதிவாகியுள்ளது. நாமறிந்த தமிழரசர் அனைவரும்
பூசாரியரின் இந்தக் கட்டுக்கு அடங்கியவர்களே என்பதற்குக் கழக
இலக்கியத்தில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.
உலக முழுவதும் அரசுக்கும் சமயத்துக்குமான இந்தப் போட்டி நடந்திருக்கிறது,
இன்றும் தொடர்கிறது. அதே வேளையில் பொதுமக்களை ஒடுக்குவதில் பொதுவில் அவை
இணைந்தே செயல்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் அவற்றுக்கிடையில்
நிகழ்ந்த பூசல்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். மார்ட்டின் லூதருக்கும்
வாட்டிக்கனுக்கும் நடந்த மோதலில் ஐரோப்பியச் சிற்றரசர் சிலர் லூதர்
பக்கம் நின்றனர். இங்கிலாந்தின் 4-ஆம் என்ரிக்கும் போப்புக்கும் உருவான
மோதலில் இங்கிலாந்தின் சமயத் தலைமையை அவனே மேற்கொண்டான். அவனுடன்
சேர்ந்து கோயில் சொத்துக்களைப் பங்கு போட்டுக்கொண்ட அவனது நண்பர்களே
அங்கு முதலாளியக் குமுகம் உருவாகக் காரணமாயினர். அதிலிருந்தே பாராளுமன்ற
மக்களாட்சி, மதச்சார்பற்ற அரசு போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில்
உருவாகியன. நம் நாட்டிலும் அதனுடைய வீச்சு இருப்பதாக நம்புகிறோம். ஆனால்
நிலக்கிழமைப் பொருளியல் அடித்தளத்தின் மீது பரவிய வல்லரசிய சுரண்டலில்
வளங்களனைத்தையும் இழந்து நிற்கும் நம் நாட்டில் ஆயுத பூசை என்ற பெயரில்
அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்துகள் நாம் சமயச் சார்பான
ஆட்சியிலிருந்து விடுபடவில்லை என்பதை விளக்குகின்றன.

இவ்வாறு அரசும் சமயமும் சேர்ந்து மக்களை ஒடுக்குவற்குத் தோதாக
மக்களுக்குப் புரியாத ஒரு மொழி தேவைப்பட்டது. அது ஒருவேளை ஐந்திர
இலக்கணப்படி அமைந்த ஒரு மொழியாக இருக்கலாம். அல்லது பூசகர்கள்
தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மறைமொழி போன்ற ஒரு குழுஉக்குறி மொழியை
முறைப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம். அரசன் என்ற பதவியின்
வளர்ச்சி பெற்ற ஒரு கட்டமாக இந்திரனைக் கொண்டால், இந்திரனால் அல்லது
இந்திரனின் முன்முயற்சியால் உருவானது என்று கூறலாம். அதிலேயே இன்றைய
தமிழ் இலக்கணம் உருவாகியிருக்கலாம். *****

ஐரோப்பாவில் உருவான இற்றைப் பல்துறை வளர்ச்சியில் புதிதாக உருவான கலைச்
சொற்களையும் புதிய பொருளில் கலைச்சொற்களாகக் கையாளப்பட்ட பழைய
சொற்களையும் கொண்ட துறை அகரமுதலிகளும் கலைக் களஞ்சியங்களும் உருவாயின.
அதே வேளையில் புதிய சூழலில் உருவான இலக்கியப் படைப்புகள் அறிவியல்
செய்திகளைக் கூறியதோடு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாகவும்
இருந்தன. எனவே பொது அகரமுதலிகளும் அனைத்து கலைச் சொற்களுடன் உருவாக
வேண்டி வந்தது.

[10] அதே நேரத்தல் கணினி போன்று எண்ணற்ற புதுத் துறைகளின் தோற்றம்
வளர்ச்சி ஆகியவற்றால் அவற்றுக்குரிய சிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் அவை
மீண்டும் பொது அகரமுதலிகளை வளப்படுத்துவதும் ஒன்று மாற்றி ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சி நிலைகள்.

இதே வளர்ச்சி நிலைகள் நாம் இங்கு அலசும் காலகட்டத்தில் இடம் பெற்றிருக்க
வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால்
தான் பூசாரியர் அரசன் என்ற ஒரு பதவியை உருவாக்க வேண்டி வந்தது. அவ்வாறு
அரச பதவி உருவான பின் புதிய வளர்ச்சி நிலைகள் வேகம் கொண்டிருக்கும்.
புதிய புதிய துறைகள் தோன்றி வளர்ந்திருக்கும். அப்போது உருவான
துறைநூற்களில் உள்ள சொற்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் இருந்ததால்
அவற்றை மறை நூல்கள் என்றனர். தொல்காப்பியரும் இசை நூலை நரம்பின் மறை[11]
என்றார்

அடிக்குறிப்பு

[1]அபிதான சிந்தாமணி யது, யாதவர் என்ற சொற்களைக் காண்க

[2முதற்கழகமிருந்த தென்மதுரையை கடல்கொள்ள கபாடபுரம் எனப்படும் துவரையை
(துவார் = கதவு; துவார் → துவாரகை → துவரை. கபாடம் = கதவு) அடைந்தனர்
குமரிக்கண்ட மக்கள். அங்கு இரண்டாம் கழகத்தை நிறுவினர். அங்கு அரசனாய்
இருந்த ஒருவன் பெயர் துவரைக் கோமான். மகாபாரதக் கண்ணன் வட மதுரையைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டபோது சராசந்தன் என்பவனுக்கு அஞ்சி குசராத்
பகுதியில் இருந்த துவரைக்கு ஓடி தலைநகர் அமைத்து ஆண்டான். மகாபாரதக் கதை,
குமரிக் கண்டத்தில் நடந்த பெரும் போரை, பின்னர் அங்கிருந்த மக்கள்
குடியேறிய வட இந்தியாவில் நடந்த ஒரு போருடன் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
குமரிக் கண்டத்து நகரங்கள், மலைகள், ஆறுகளின் பெயரைத் தாம் குடியேறிய
இடங்களிலும் இட்டுள்ளனர்

[3]சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் வாழ்ந்த ஆற்றல் மிக்க
பலதுறை அறிஞர்கள் அடிப்படை நூல்கள் பலவற்றைத் தொகுத்துள்ளார். அவற்றுள்
கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியும், சிங்காரவேலு முதலியரின்
அபிதான சிந்தாமணியும் சிறப்பானவை. அவற்றுள் காணக்கிடக்கும் அரிய
செய்திகளுக்குச் சான்றுகளும் தரப்பட்டிருந்தால் மிகப் பயனளித்திருக்கும்.
நம் முன் தலைமுறையினர் செய்த பணிகளை மேம்படுத்துவதும் பின் தலைமுறையினர்
கடமையாகும். செய்வீராக.

[4]வேலைக்காரியின் மகன் வழி வந்தவர்கள் பாண்டவர்களும் கவுரவர்கள் என்பதை
மறைப்பதற்காக, சுக்கிரனின் மகள் மனைவி என்றும் அசுர அரசனின் மகள்
வேலைக்காரி என்றும் கதையைத் திரித்திருக்கக்கூடும். அசுர ஆசிரியன்
சுக்கிரன், தேவர்கள் ஆசிரியன் வியாழன் ஆகியவை இரு கோள்கள். இருவகை
மக்களினங்கள் பின்பற்றிய வானியல் முறைகளை இவை குறிக்கின்றன எனலாம்.
அபிதான சிந்தாமணி சுக்கிரன் A 14 பார்க்க

[5]மாந்தவியலில் இது தாய்வழித் தலைமகனுரிமை (Male primeogeniture in the
matriliueal society) எனப்படும்

[6]இங்கு அரசனின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலப்பரப்புகளில் வரி போன்ற
வருமானங்களை ஆவாக உருவகப்படுத்தியுள்ளனர் என்று விளக்கம் காணலாம்

[7]நாரிகவசன், மூலகன் என்ற சொற்களைப் பார்க்க. இவனது வழி வந்தவன்தான்
இராமன்

[8]பிரகல் + ஆதன், ஆதன் என்பது சேர அரசர்களின் பெயரிலுள்ள
பின்னொட்டுகளில் ஒன்று. பிரகத் என்பதற்கு முதல் என்று பொருள்

[9]திருமாலின் பதின் தோற்றரவுக் கதைகளில் பரசுராமன், நரசிம்மம், வாமனம்
ஆகிய மூன்றும் சேரநாட்டுடனும் மீன் பாண்டிய நாட்டுடனும் பன்றி
சாளுக்கியர்களுடனும் (புலிக்கேசியின் கொடி பன்றி) கண்ணனும் பலதேவனும்
குமரிக்கண்டத்துடனும் தொடர்புடையவையாக இருப்பது தொன்மங்களுக்கும்
அவற்றைப் பதிந்து வைத்திருக்கும் சமற்கிருதத்திற்கும் தமிழர்களுக்கும்
அவர்களது பிறந்தகமான குமரிகண்டத்திற்கும் உள்ள உறவைக் காட்டவில்லையா?

[10]Chambers Twentieth Century Dictionary / New Edition 1972,
Publishers preface காண்க.

[11]தொல். எழுத்து 33.

ஆக்கம்: இரவா - vasudevan.dr@gmail.com

Friday, October 05, 2007

மணமகள்(ன்) தேவை - Puthoor.R.Kumaresan

மணமகள் தேவை:

வருகின்ற நவம்பருடன் அறுபது வயது முடிகின்ற (60 மட்டில்), நாகப்பதனி ஜாதியை சேர்ந்த மனமகனுக்கு தகுந்த இளசான சைசான மனமகள் தேவை...எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இந்த வரன் கஞ்சா (மட்டும்) சுவைப்பது (நீங்கள்) கண்டுக்கபடாது..விதவைகள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், புருஷனுடன் ஊடல் கொண்டு ஊடால வந்தவர்கள் கண்டிப்பாக அப்ளை செய்யக்கூடாது...சொந்தமாக வீடு, நிலம், வாஷிங் மெஷின், அண்டர்வேர் காயவைக்க கொடி எல்லாம் உள்ள இந்த வரன் சமூகத்தில் ஒரு ஹாட் கேக்...நாகப்பதனி ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்க...

மணமகன் தேவை:

57 வயது நிரம்பிய அரசு வேலை பார்க்கும் அழகான இளம்பெண்ணுக்கு உடனடியாக மனமகன் தேவை..தகுதியான வரன்களுக்கான இண்டர்வியூ, நேரடி நேர்முக தேர்வாக புத்தூர் கே.கே.கல்யாண மண்டபத்தில் நடைபெறும்...தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 9884629291

அய்யோ முடியல...!!! என்னால சிரிப்பு தாங்க முடியல....நீங்க அந்த பதிவை ஒருக்கா படிங்க...ஆப்பரேஷன் செய்த வலியை கூட தாங்கிக்கிட்டு சிரிச்சேன்...

என்ன கொடுமை சரவணன் !!!!

Tuesday, September 18, 2007

Saturday, September 15, 2007

உத்த்த்த்து பார்க்கவும்...

படத்தை மீது முதலில் க்ளிக் செய்யவும், நடுவில் இருக்கும் + குறியீட்டை உற்றுப்பார்க்கவும்...



பச்சை வட்டம் தவிர மற்றவட்டம் எல்லாம் காணாமே போகும் பாருங்க..அடுத்த பதிவு எழுத கொஞ்சம் நேரம் எடுக்கும், அதுவரைக்கும் இதை பார்த்துக்கிட்டு இருங்க...:))

Friday, September 14, 2007

முகமூதியும், சுய சொறிந்துகொள்ளலும்...

சர்வேசன் தேவையில்லாத ஒரு பதிவை செய்திருக்கிறார்..வலைப்பதிவர்கள் பதிவதும், நிறுத்துவதும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது...அதை சர்வே என்ற பொது இடத்தில் ஓட்டெடுப்புக்கு விடுவதற்கு முன், அந்த குறிப்பிட்ட பதிவர்களின் அனுமதியை கண்டிப்பாக கேட்டு பெற்று அதன் பிறகே செய்திருக்கவேண்டும்...

கிளம்பு, காத்துவரட்டும் என்ற ஆதிக்க சிந்தனையும், அழுக்கு வெறியும் தொனிக்கும் வகையில் இருக்கும் அந்த பதிவை உடனே நீக்கவேண்டும்...அவன் மூக்கின் மேல் கைவைக்க நீங்கள் யார் ? சுகுணாவோ, அரைபிளேடோ உங்களிடம் வந்துகேட்டார்களா ? உடனடியாக ஆவண செய்வீர்கள் என்பதால் பதிவாகவே இடுகிறேன்...ஜனநாயகத்திலும் அடுத்தவர் கருத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதால் தானே சர்வே போன்றதொரு அருமையான தளத்தை நடத்துகிறீர்கள்...புரிந்துணர்ச்சிக்காக காத்திருக்கிறேன் சர்வேசன் அவர்களே..

அதில் இன்னொரு விஷயம் சொல்லவேண்டும்...அந்த பதிவில் முதல் பின்னூட்டமாக வந்துள்ள முகமூதியின் கசட்டு எழுத்துக்கள், அவரது உள்ளம் எவ்வளவு அழுக்கானது என்று காட்டுகிறது..

"அப்படியே கீழ்க்கண்ட சர்வேக்களையும் எடுக்கவும்.
1) சுகுணா திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவிக்க எடுக்கும் காலம் ::
அ) 1 நாள்
ஆ) 2 நாள்
இ) 3 நாள்
2) சுகுணா திரும்பி வருவதற்கு கொடுக்கப்போகும் ஜல்லி
அ) ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்/பெண்/திருநங்கை தொலைபேசியில் திட்டி மீண்டும் வலைப்பதிய அழைத்தார்
ஆ) நண்பர்கள் (ஒருத்தரை பன்மையில் விளிக்கலாமா?) அழுதுகொண்டே அழைத்தனர்
இ) எனக்கு மப்பு கலைந்த பின்புதான் நான் போறேன் என்று என்னையறியாமலேயே அறிவித்ததன் அபத்தாம் புரிய வந்தது.
"

அவன் போறேன்னு சொன்னானே...வந்துருவான் போலிருக்கே...என்று பொறாமைத்தீயில் வெந்துவெளிவரும் இந்த பின்னூட்டம் சொல்லாத கதைகள் பலவுண்டு போலிருக்கே...

அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எழுதும் சுகுணா திவாகர் போன்றவர்கள் வலையில் இருக்கும் வரை தன்னுடைய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடமுடியாது என்பது போலவும், தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டி இண்டலிஜெண்டலி பட்டம் வாங்கமுடியாது போலவும் இருக்குங்கோவ்...

அதுதான் எங்களைபோன்றவர்கள் வந்து உமக்கு டோட்டலா வெச்சுட்டோமுல்ல ஆப்பு...அப்புறம் என்னவேண்டிக்கிடக்குது புண்ணூட்டம் ? இந்த மேதாவித்தனத்தை வேறெங்காவது சென்று காட்டவும்...

இதுபோன்ற கழிசடைகளின் கசடு எண்ணத்தை தூள்தூளாக்கவாவது மீண்டும் சுகுணா வரவேண்டும்...அப்போது இன்றைக்கு இந்த முகமூதிக்கு இருக்கும் அற்ப சந்தோஷம் காணாமே பூடும்...

Thursday, September 13, 2007

ஜாதிப்புத்தியை தேடி.....



இப்படி பைனாக்குலர்ல பார்த்தா ஜாதிப்புத்தி தெரியுமா தெரியலையே ? வளர்மதி எப்படி கண்டுபிடிச்சாரு ஜாதிப்புத்திய ? எனக்கு தெரிஞ்சு இந்த ஒருவருட பழக்கத்தில சுகுணா என்ன ஜாதின்னு எனக்கோ, நான் என்ன ஜாதின்னு அவருக்கோ தெரிஞ்சுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கல...அப்படியே தெரிஞ்சு என்ன ஆகப்போவுது ?

சுகுணாக்கிட்ட நாப்பதாயிரம் அமவுண்ட்ட வாங்கிக்கிட்டு ஏமாத்தினாரா வளர்மதி ? அதுக்கு ஏன் இன்னும் விளக்கம் சொல்லல ?

பென்சில் திருடிட்டான், பல்ப்பம் திருடிட்டான் அப்படின்னு சிறுபிள்ளைத்தனமா வளர்மதி எழுதியதை பார்த்தவுடன் சீரியஸா ஆவுறதுக்கு பதில் எனக்கு கடுமையா சிரிப்புத்தான் வந்தது...சுகுணா அடிக்கடி பயன்படுத்தும் பின்னவீனத்துவ வார்த்தைகள் தெருவுக்கு தெரு குழாயடியில் கிடைக்குமே ? அதுக்கெல்லாம் காப்பிரைட் வாங்கச்சொல்றாரா ?

ஆனா சுகுணாவும் இதுக்கு ரொம்ப டென்ஷனாகியது (சாவலாம்போல இருக்கு, இருபத்தெட்டு எனக்கு கொஞ்சம் ஓவரோன்னு தான் தோனுது...என்னுடைய குடும்பம் பற்றியும் என்னுடைய பிறப்பு பற்றியும் மூர்த்தி மலேசியாவில் இருந்து அசிங்கமா எழுதியபோது, அதை பற்றி தனக்கு ஒரு கருத்தும் இல்லை என்று கூலாக இருந்தவர், இப்போ தன்னைப்பற்றி ஒருத்தர் எழுதினவுடன் "ம்மாத்தேன் போ, உம்மாச்சி கண்ணைக்குத்தும்" ரேஞ்சுக்கு செய்வது சரியா ?

ஒருத்தன் அசிங்கமா திட்டினால், அது வெறும் கெட்ட வார்த்தை...சுகுணாவை பொறுத்தவரை...ஆனால் அவன் உன்னைத்திட்டினால், அது உன் மனதை புண்படுத்தும் வார்த்தை...அது இப்போ புரிஞ்சிருக்குமில்ல...எங்களை திட்டினப்ப, தோழர் டூண்டு...இப்ப அவன் இவன் வளர்மதியா ? இது என்னப்பா நியாயம் ?

இந்தவிஷயத்தில் தோழர் வரவணையான் என்ன சொல்கிறார் என்று தெரிந்தால் தான் மேல் விவரம் புரியவரும்...ஆனால் நடுவில் நான் தேவையில்லாம ஒரு பதிவு போட்டு அது சரியான நேரத்தில் அநாகரீக ஜாதிப்புத்தி பதிவுக்கு கீழே அமர்ந்ததால் என்னை ஒருவேளை சுகுணா தவறா நினைப்பாரோ என்று நினைத்தேன்...ஆனா அப்படி எல்லாம் இல்லையாம்...

தமிழச்சி இந்த விஷயத்தில் இம்மீடியட்டாக பதிவு போட்டு பட்டையை கிளப்பியது அருமை..!!

இந்த விஷயத்தில் எனக்கு கிடைத்த அட்வைஸ் என்னவென்றால், ஆராய்ச்சி செய்கிறேன் என்று வளர்மதி பதிவுப்பக்கம் போயிடாதே, உண்மையிலேயே டவுஸர் கிழிஞ்சு தாவு தீந்திரும் என்பது தான்...அதை மட்டும் இப்போதைக்கு ஸ்ரிக்ட்டா பாலோ செய்வது நலம்....

Wednesday, September 12, 2007

கொண்டை என்பது யாதெனில்

இப்போதெல்லாம் கொண்டை கூட ஹாட் டாப்பிக் வலையில்...நம்மூர் கொண்டையை பாத்திருப்பீங்க...பிரிட்டிஷ் கொண்டை பாருங்களேன் இந்த படத்தில்...



1890 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் பெண்களின் கொண்டை சாம்பிள்...!!!

Monday, September 10, 2007

வலையுலகைவிட்டு விலகவிரும்பும் நன்பருக்கு



இப்ப பிரிஞ்சிதா நன்பரே...

அனைத்துலக அல்லக்கைகள் மாநாடு


பங்கேற்பாளர்களின் படங்கள் மட்டும் இங்கே காட்சிக்கு...!!!

Tuesday, September 04, 2007

அப்பாவியின் பரிசுப்போட்டி

அப்பாவி தனது பிளாகில் "கமெண்ட் செய்யுங்கள், பரிசு வெல்லுங்கள்" என்ற போட்டியை ஆரம்பித்துள்ளார். இப்போட்டியில் பங்குபெற அவ்ரது இந்த பதிவுக்கு ஜஸ்ட் ஒரு மறுமொழி செய்தால் போதும்.

மேலும் விபரங்கள் அவரது பிளாகில்>>

http://appaavi.hikanyakumari.com/?p=77










#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, August 29, 2007

தேன்கூடு திரட்டியின் சவ அடக்கத்துக்கு வருகைதாருங்கள்...

சாகரன் என்ற லட்சிய மனிதரின் லட்சியக்கனவு இந்த தேன் கூடு திரட்டி....இன்றைக்கு வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிகிறது....

மலேசிய போலி டோண்டுவின் எல்லா கருமம் புடிச்ச பதிவுகளையும் திரட்டும் தேன்கூடை விட கேவலமான செயல்கள், நிர்வாகி என்று யாராவது இருக்கிறார்களா அல்லது செத்து சுண்ணாம்பாகிவிட்டார்களா என்று நினைக்கத்தோன்றுகிறது...



அதனால் தேன்கூட்டுக்கு நான் சவ அடக்க நிகழ்ச்சி வைத்திருக்கிறேன்...வாருங்கள் எல்லோரும்...

நிகழ்ச்சி நிரல் : தேன்கூடு சவ அடக்கம்
எத்தனை மணிக்கு : இன்று இரவு அமெரிக்க நேரம் 12:00 மணி
இடம் : இணையம்
பங்கேற்பாளர்கள் : தமிழ்வலைப்பதிவர்கள்..

சவ அடக்கத்தில் டான்ஸ் ஆட மலேசியா மற்றும் அமீரகத்தில் இருந்து போலி மற்றும் போலியின் அல்லக்கை ஒன்றும் வரவழைக்கபடுகிறது...சிங்கையில் இருந்து ஒரு மூத்த பதிவரும் வந்து டான்ஸ் ஆடலாம் என்று தெரிகிறது...வந்திருங்க...

Monday, August 20, 2007

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை..

அவர் போட்டிருக்க படம் தான் பிரச்சினை...

கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல...வேற ஒரு நல்ல போட்டோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பி.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை..

அவர் போட்டிருக்க படம் தான் பிரச்சினை...

கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல...வேற ஒரு நல்ல போட்டோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பி.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Saturday, August 11, 2007

மாலன் அவர்களுக்கு பகிரங்க கடிதம்...!!!!

இந்த கடிதம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாலன் அவர்களுக்கு எழுதப்பட்டது...நுண் அரசியல் என்ற வார்த்தையை முன் பின் கேள்விப்பட்டவன் இல்லை இந்த செந்தழல் ரவி...நீங்கள் பட்டறையில் பேசியதை கண்டு பொன்ஸ் எழுதியதை பார்த்தவுடன் தான் தமிழில் அப்படிப்பட்ட ஒரு வார்த்தை இருப்பதே தெரியும்..இருந்தாலும் இந்த பதிவில் நான் கும்மி அடிக்க எடுத்துக்கொண்ட விஷயம் இது தான்...!!!

எதுக்கெடுத்தாலும் பாலகுமாரனுக்கு பகிரங்க கடிதம், பாமரன் பாயா சாப்பிட்டது ஏன்,பத்ரி பக்கோடா சாப்பிட்டாரா, மாலன் மசிந்துகொடுப்பாரா, ஜெயமோகன் ஜம்ப் அடித்தாரா என்று பிரபலமானவர்களை பிடித்து வம்பிழுப்பது பதிவர்களுக்கு வழக்கமாக போய்விட்டது...

நாம அடிக்கிறது கும்மியும் போடுறது மொக்கையும்...இதுல மார்க்கிசியமும் இராம் பொண்ணு கே.எப்.சியில சிக்கன் துன்றதும் - தேவையா நமக்கு...

வெளியுலகில் பிரபலமானவர்கள் AACH என்று தும்மினால் அறுநூறு அர்த்தம் கண்டுபிடித்து குமுற குமுற கும்முவதும் புதிய ட்ரெண்டாக மாறி ஒரு மாதமாகிறது...

அதனால் இப்படி எல்லாரும் ஆளுக்கொரு கடிதம் எழுதும்போது நான் மட்டும் சும்மா இருந்தால் இந்த ஆண்டு இறுதியில் சர்வேசன் வைக்கப்போ"கும்" சிறந்த கும்மி பதிவர் யார் என்ற சர்வேயில் லக்கி, பொட்டீக்கடை,வரவணை,பாலபாரதி, அபி அப்பா, குசும்பன், லாஸ்ட் பட் நாட் லாஸ்ட் மிஸ்டர் ஓசை செல்லா போன்ற மெகா கும்மி பதிவர்களிடம் தோல்வியுற்று மண்ணை கவ்வவேண்டியிருக்கும்...ஐக்கான் கிடைக்காது...அதனை வலைப்பதிவிலும் போட்டுக்கொள்ள முடியாது...

அதனால் ப்ளீஸ்...நானும் மிஸ்டர் மாலனை வெச்சு ஒரு கும்மி அடிச்சிக்கிறேனே...

மிஸ்டர் மாலன்...நீங்க ஆயிரம் இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது...எப்படி ? நீங்க சமீபத்துல எழுதுன பதிவுல அங்க இங்க ஸ்பேஸ் வெக்காம நீளமா அடிச்சுட்டீங்க...அலைன்மெண்டும் சரியா இல்லை...அதனால அங்கே அங்கே கொஞ்சம் கேப் விட்டீங்கன்னா ரீடபிளிட்டி நல்லா இருக்கும்னேன்...!!!

காணாமே பூட்ட மொவமூதி எல்லாம் வந்து கொலைக்க ஆரம்பிச்ச பிறகு நமக்கு என்ன வேல இங்க..

வர்ட்டுங்களா...

பதிவர் பட்டறை பற்றி பதிவு போட தடை !!!

பதிவர் பட்டறை நடந்தாலும் நடந்தது...அதன் தாக்கம் பதிவர்களிடம் ஒரு வாரமாகியும் இன்னும் போகவில்லை போல தெரிகிறது...ஓசை செல்லா ஒரு நாளைக்கு நாலு பதிவு பதிவர் பட்டறையை பற்றி போட்டு தொலைக்கிறார்...



எல்லாமே ஜூடான இடுகையில் வருகிறது...



இன்று கூட புதிய பதிவர் பட்டறை பதிவுகளை காணமுடிகிறது...அதனால் அ.மு.க கொலைவெறி அணி சார்பாக - இனி பதிவர் பட்டறை சம்பந்தமாக பதிவிடுவதோ, அதில் மாலம் இப்படி இருமினார், அப்படி தும்மினார் என்று கும்முவதோ கட்டாயம் தடைசெய்யப்படுகிறது...



அப்படியே நீங்கள் பதிவர் பட்டறை பற்றி பதிவு போட்டேயாக வேண்டும் என்று கை விரல்களில் அரிப்பெடுத்தால்...



நமீதா, பாவனா, சினேகா என்று வெளியே கவர்ச்சியாக தலைப்பு வைத்துவிட்டு, உள்ளே பதிவர் பட்டறையில் பொன்ஸின் தொலைந்துபோன எலிக்குட்டியின் வால் என்னிடம் தான் இருக்கிறது, வினையூக்கி வலதுபுறம் உட்கார்ந்திருந்தபோது நான் இடதுபுறம் உட்கார்ந்திருந்த படம், தமிழியை உடற்பயிற்சி செய்யுமாறு கேட்டபோது வெள்ளந்தியாக சிரித்தார் என்று பதிவிட்டுக்கொள்ளுக்கள்...



சில நாட்களாக பதிவர் பட்டறை என்றாலே என்னுடைய முகம் பேஸ்த் அடித்தமாதிரி ஆகி, பாலபாரதி தயிர்சாதம் வழித்ததும், தீவிர திராவிட பதிவர்கள் ஊறுகாயை தொட்டுக்கொண்டு தயிற்சோற்றை விரல்நக்கி தின்றதும், வ.வா சங்கத்தினர் எனக்கு டி.ஷர்ட் வாங்கிவராத துரோகமும் நியாபகம் வந்து பி.பி ஏறி தொலைக்கிறது...



கண்ஸிடர் பண்ணுங்க ப்ளீஸ்........!!!!

Thursday, August 09, 2007

நான் உன்னை காதலிக்கிறேன்...

ஹோட்டலில் உணவு மேஜையில்...மெல்லிய விளக்கொளியில்...காதலன்...காதலியிடம்...



காதலன்..: அன்பே...நான் உன்னை காதலிக்கிறேன்...என் காதலை ஏற்றுக்கொள்வாயா ?



காதலி : ப்ளீஸ்...நான் உங்களை என்னோட நல்ல ப்ரெண்டாத்தான் நினைக்கிறேன்...நான் உங்களை காதலிக்க எல்லாம் முடியாது...



காதலன்: ப்ளீஸ்...உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன்...



காதலி: முடியாது...இல்லை...என்னால் முடியாது...



காதலன்: நாம் பழகிய நாட்களை நினைத்துப்பார்...நான் இல்லாமல் இருக்க முடியுமா உன்னால் ? என் காதலை ஏற்றுக்கொள்ளேன்..



காதலி: முடியாது முடியாது முடியாது...!!!!!!!



ஹோட்டல் வெயிட்டர்: சார் பில் போட்டுடலாமா ?



காதலன்: ரெண்டு தனி பில் போடுங்க...



காதலி: ஓக்கே உங்க காதலை ஏத்துக்கறேன்...!!! ஐ.லவ்.யு டூ...

Friday, July 27, 2007

ச்ச்ச்ச்சும்ம்மா ஒரு நினைவுகூறல்

நீங்க இதைப்பார்த்து சிரிக்கலைன்னு மட்டும் சொல்லுங்க :)))))))))))))



மிகவும் ரசிச்சது 1



மிகவும் ரசிச்சது 2



மிகவும் ரசிச்சது 3



மிகவும் ரசிச்சது 4



மிகவும் ரசிச்சது 5

ச்ச்ச்ச்சும்மா நியாபகப்படுத்தலாமேன்னு...!!!!

ஆயிரம் படங்களிட்டாலும் அஞ்சலைக்கு ஈடாகுமா

வீக் எண்ட் ஜொள்ளு என்ற தலைப்பில் மோகனா வெளியிட்டு இருக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள்...

ஆயிரம்தான் படங்கள் அவர் இட்டாலும், இந்த அஞ்சலைக்கு (அஞ்சலைன்னா ஜோலி - இதான இவளோட பேரு - கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணிட்டேன்) ஈடாகுமா ?

நீங்க சொல்லும் வே !!!!



ஒரு படத்தை போட்டே எப்படி ஜூடான இடுகையில இடம் புடிப்பது என்று இந்த படத்தை பார்த்து நம்ப நன்பர் தீவு தெரிஞ்சுக்கட்டும்...

ஜரி நான் வெரட்டா வே ~!!!

Wednesday, July 25, 2007

உங்களை கையெடுத்து கும்பிடுறேன், இந்த பதிவை மட்டும் திறக்காதீங்க

கர்ப்பிணிகள், பலகீனமான இதயம் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பதிவு...

உங்க வயித்து வலிக்கு நான் பொறுப்பில்லை....என்னால முடியல....சத்தியமா முடியல...தயவு செஞ்சு சொல்றேன்...இந்த டிஸ்கிரிப்ஷன் பார்த்தாவது பதிவை ஓப்பன் பன்ற முடிவை மாத்திக்கோங்க...ப்ளீஸ்....





நமது அடுக்குமொழி பூகம்பம் டி.ராஜேந்தர், தாடி இல்லாமல்...அழகாக...!!!! ( படம் பெரியதாக தெரிய படத்தின் மேல் கிளிக்கவும்...(தைரியம் இருந்தால்))

சிந்தாநதி போட்டிக்கு - செந்தழலின் பெயிண்ட் ப்ரஷ் படம்

சிந்தாநதியின் போட்டிக்கான பெயிண்ட் ப்ரஷ் படம் இங்கே இருக்கிறது...பார்த்துவிட்டு உங்கள் மார்க்குகளை அள்ளி தெளித்து இந்த முறையும் (?!) என்னையே வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொல்கிறேன்...


கொஞ்சம் கீழே வாங்க




கொஞ்சம் கீழே வாங்க




கொஞ்சம் கீழே...



ஆங்....இந்தா இருக்கு பாருங்க...














நன்றி !!!!!!!!!!! மறக்காம பின்னூட்டத்துல உங்க கருத்தை அள்ளி தெளிச்சுட்டு (???) போங்க...

Tuesday, July 24, 2007

கொரியாவில் குங்குமம் கிடைக்கல...

இப்போ எங்க பாத்தாலும் மதுரையில திருக்குறள் கிடடக்கல, கும்மிடிப்பூண்டியில் குங்குமம் கிடைக்கல, ஆடுதுறையில் ஆனந்த விகடன் கிடைக்கல என்று அளப்பறையா போச்சு...




அதனால இப்படி ஒரு படத்தை போட்டாலாவது இந்த பிரச்சினை ஓயுமா என்று இந்த படத்தை போஸ்ட் செய்கிறேன்...இவங்களோட இ-மெயில் முகவரி கேட்டு பொட்டீக்கடைக்கிட்ட இருந்து மின்னஞ்சல் வந்தா அதை அழிப்பேன்...

குரங்குகளுடன் கொலைவெறி அணி

சில மாதம் முன்பு பொட்டீக்கடைக்கு கூட சொல்லாமல் ஒரு கொலைவெறி அவுஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் மொக்கை போட்டபோது...!!!



படம் எடுத்த இடம் அவுஸ்திரேலிய சிட்னி டொரோங்கோ ஜூ...!!!



மேற்கொண்டு என்ன சொல்ல...!!! மொக்கை தான்......அதுல ஒரு மங்கியை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர்...

சொன்னா நம்ப மாட்டீங்க...

நம்ம தலை பாலபாரதி...!!!!

Saturday, July 21, 2007

கொரிய பெண்களை FTV பார்க்கச்சொல்லும் பிரதமர்

உண்மை உண்மை...!!!

கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதா...என்ன சொல்ல அது தான் உண்மை...கொரிய பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரிய பெண்கள் பாரம்பரியமான சமையல் கலையை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியதான ஒரு நிகழ்ச்சியில் பேசிய கொரிய பிரதமர்...

கொரிய பெண்கள் எப்.டி.வி பார்த்து தங்களுடைய சமையல் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்...தீபகற்ப நாடான கொரியாவில் மீன் சமையல் என்பது மிகவும் முக்கியமாக கருத்தப்படுகிறது...அந்த நிகழ்ச்சிகளை போடும் எப்.டி.வி (அட ஆமாங்க...F டிவி ன்னா FISH TV. மீன் புடிக்கறது எப்படி, அதை வறுப்பது எப்படி என்பதற்கு ஒரு தனி டி.வி சேனல் நடத்தி தொலையறானுங்க...)...



இந்த படம் நான் எடுக்கவில்லை...இவங்களும் எங்க அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை...அவர்கள் லேப்டாப் எல்.ஜி எக்ஸ்நோட் இல்லை...!!!

சரி இனிமே எல்லாரும் எப்.டி.வி பாருங்க..!!!

Friday, July 20, 2007

லக்கியின் கிழிந்த டவுஸரை ஒட்ட !!!

பின்னவீனத்துவ எதிர் அழகியல் பிராண்டல்களுக்கு எதிரான கூட்டணி கட்சிகளை தாண்டி காட்சிகளாகும் தருணம்...அய்யகோ எனக்கும் கவிதை வந்திட்டதே...!!!



பின்னவீனத்துவ படம்...பொட்டீக்கடைக்கு சமர்ப்பணம்...!!!

மெல்லுவதெல்லாம் வாயல்ல...
கில்லுவதெல்லாம் கொலையல்ல...

மியோத்ஸி புத்தோ மியோத்ஸி காஜி

விரைந்து எழுதும் விடைத்தாளும்
குரைத்து கடிக்கும் சொறிநாயும்

உருப்புட்டதாயில்ல ஒரு சரித்திரம்...வெறுப்புற்றதாயில்ல இது மாத்திரம்..

வேட்டையாடு விளையாடு விருப்பம் போல நடைபோடு வீரமாக உடையைப்போடு
நீ காசை பெற்று கிளம்பியோடு...

புதிய வானம் பழைய பூமி, இந்த மேகம் மட்டும் ஓய்ந்திருந்தா நீ காமி...

சுண்ணாம்பு வெள்ளை...சூரியன் மஞ்சள்...ஏங்கே எனது ஏஞ்சல் ?

டெலிபோன் மணி ட்ரிங் ட்ரிங்...டோர் பெல் ரிங் ரிங்...சத்தங்கள் நிசப்தங்கள்..சில சமயம் தொல்லை...பல சமயம் நாம் சொல்வது போய்த்தொலை...என்றாவது ஒருநாள் அந்த மணியும் உடைந்துபோகும்...பல கணவுகளும் நொறுங்கிபோகும்...(ஆங் இந்தா வரேன்...)

வாட்டர் பாட்டில் தீர்ந்து போகும்...
வானம் என்றாவது காய்ந்து போகுமா ?

சேனல் பிடிக்கவில்லையா சேனலை மாற்று...நொடிகளில்..
டிவி. பிடிக்கவில்லை என்றால் டி.வியை மாற்றமுடியுமா..நொடிகளில்...

காலங்கள்...!!!

காலங்களில் அவள் வசந்தம்...
காசிருந்தால் என்றுமே என் சொந்தம்...

ஒளியில் தெரிவது தேவதை மட்டுமா ?
சில தேனீக்களும் தான்...தேவதை என் சொந்தம்....தேனீக்கோ தேன் கூடுதானே சொந்தம்..
சில சர்க்கரை பருக்கைகளை விட்டுவைக்கிறேன்...தேனீயோ எறும்போ தின்றுவிட்டுபோகட்டும்..

அவுட் கொடுப்பது அம்பயரு..
அவரே அவுட்டாயிட்டாருன்னா ?

போதும் நிறுத்திக்கறேன்...(யோவ் இது கவிதை கிடையாது... இதுக்கெல்லாம் // போதும் நிறுத்திக்கறேன்....// அருமையான வரிகள் என்று பின்னூட்டம் போடக்கூடாது..)

மொக்கைப்போட்டிக்கு பதிவு போட்டாச்சா ?

ஆகா...இது போன்றதொரு அருமையான வாய்ப்பு கிடைக்குமா தமிழ் வலையுலக மொக்கை மன்னர்களுக்கு ?

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மொக்கை போட்டியைத்தான் சொல்கிறேன்...!!!

உடனடியாக இந்த லிங்கை கொலைவெறியோடு அமுக்கு போட்டிக்கான விபரங்களை தெரிந்துகொண்டு ஒரு மொக்கை பதிவு போடவும்...

புகைப்பட போட்டியில் பரிசு இல்லை...ஆனால் இந்த மொக்கை போட்டியில் பரிசு வேறு உண்டாம்...(ஏதாவது மொக்கையான பரிசா இருக்கும் !!!)

அதனால் கொலைவெறியோடு மொக்கையில் இறங்குங்கள்...ப்ளாஷ், போட்டோஷாப் போன்ற ஜல்லி சாப்ட்வேர்களை உபயோகப்படுத்தினால் பயன் உண்டு...!!!!

வாருங்கள்...மொக்கை போடுவோம்...!!!!

Thursday, July 19, 2007

சர்வேசன் மற்றும் சீ.வி.ஆர் செய்த வரலாற்று பிழை

என்ன கொடுமை சரவணன்...ஜூலை மாத புகைப்பட போட்டியில் என்னுடைய படம் ஆட்டத்துக்கே செலக்ட் ஆவல....இது வரலாற்று பிழை....இந்த பிழைக்காக நடுவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை வருந்த வேண்டியிருக்கும்...

கானா பிரபா லொட்டையா ஒரு சொறிநாயை எடுத்து வெச்சிருக்கார்...அதை ஆட்டத்துல சேர்த்திருக்காங்க...யாரோ ஒருத்தர் ஒரு கிழவன் கிழவியை எழுத்திருக்காங்க...அதையும் ஆட்டத்துல சேர்த்திருக்காங்க...மொபைல் கேமாராவில் எடுக்கப்பட்ட சிறுவன் ஆட்டத்தில் இருக்கான்...இதை எல்லாம் சேர்த்த நடுவர்கள் எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு எடுத்த இந்த படங்களை ஆட்டத்திலேயே சேர்க்காமல் விட்டது எந்த விதத்தில் நியாயம் ? இது அடுக்குமா ? இது நீதியா ?

நீதி கேட்டு நெடும் பயணம் புறப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பொடிநடையா நார்த் கொரியாவுக்கு போயிட்டேன்னா ? அங்க ஏற்கனவே நான் வேற முயற்சியில் இருக்கேன், அதனால உண்ணாவிரதம் இருக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன்...

சியோல் - கஸாந்தாங் எல்.ஜி ஹுவேஸா அருகில் உள்ள யாச்சே காகே ( ஆபீஸுக்கு அருகில் உள்ள வெஜிட்டபுள் ஷாப்) அருகில் சனிக்கிழமை காலை பதினோரு மணியில் இருந்து பணிரண்டு மணிவரை உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்துள்ளேன்...நா.கண்ணன் போன்ற கொரிய பதிவர்கள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு வந்து கலந்துகொள்ள வேண்டுமாய் வேண்டுகோளும் விடுக்கிறேன்...

என் புகைப்படத்தை சேர்க்கவில்லை என்றால் அதற்கு தக்க காரணத்தை நடுவர்கள் சொல்லியாக வேண்டும்...இல்லை என்றால் சர்வேசன் ஓட்டெடுப்பு நடத்தி என் பதிவை சேர்க்கலாமா இல்லையா என்று கேட்கவேண்டும்...ஏன்யா கிழவன், கிழவி, நாய், பூனை எல்லாம் ஆட்டத்தில் சேர்ப்பீங்க, நல்லதொரு பிகர் இருந்தால் சேர்க்க மாட்டீங்களா ? என்ன வயித்தெரிச்சல்பா ?

இது குறித்து - ஏற்கனவே ஸ்னாப்ஜட்ஜ் எனக்கு செய்த சிவப்பு துரோகம் குறித்து ( அதாவது என்னுடைய படத்தில் சிகப்பு கண்ணாடியில் இருந்து வரும் ஒளி முகத்தில் விழுமாறு செய்து எடுத்ததால் அது சிகப்பு துரோகம்) பதிவிட்டுள்ளேன்...கில்லியாவது பல்லிவிழாமல் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

சமீபத்தில் கிடைத்த மாபெரும் விருது கூட எனக்கு அவ்வளவு பொருட்டல்ல, காரணம் இந்த விருதை பலமுறை பதிவர்களை கையால் பெற்றுவிட்டேன்...



இருந்தாலும், இந்த போட்டோ மேட்டரில் மிகவும் சீரியஸாக உள்ளேன்...சர்வேசன், சி.வி.ஆர் போன்றவர்கள் எந்த பிகரையாவது இதுவரை போட்டோ எடுத்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை...அதனால் அவர்களுக்கு அந்த உழைப்பு புரியவில்லை என்று நினைக்கிறேன்...இதன் மூலம் நடுவர்களின் நடுநிலைமை கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி, பிராக்கெட் என்று எல்லாமும் ஆகிறது...

உடனே என்னுடைய படத்தை ஆட்டத்தில் சேர்க்கவேண்டும்...இல்லை என்றால் உண்ணா நோன்புதான்...என்று நடுவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன்...அதை இங்கே உச்சரிக்கிறேன்...

மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்

ஏற்கனவே இரண்டு உலகப்போர்தான் நடந்திருக்கு...அந்த வரைக்கும் எனக்கு நிச்சயமா தெரியும்...இப்போ விஷயத்துக்கு வரேன்...இந்த வார இறுதியில் கொரியாவின் டி.எம்.ஸி (DMZ) என்ற இடத்துக்கு போகிறேன்...டி.எம்.ஸி என்றால் டீ மிலிட்டரைஸுடு ஜோன்...(தமிழ்ல எப்படி சொல்றது, நன்பர்கள் உதவுங்க)..அதாவது போர் தடைசெய்யப்பட்ட இடம்...இது பற்றிய விக்கி தொகுப்பு...

கொரியா தென் கொரியா மற்றும் வட கொரியாவாக பிளவுபட்டுக்கிடப்பது அனைத்து பதிவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...

இங்கே இரண்டு நாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் கட்டைப்பஞ்சாயத்தில் உருவான இடம் தான் இந்த டீ.எம்.ஸீ..



இந்த இடத்தில் இரண்டு நாடுகளும் அரசுமுறையில் விடயங்களை பரிமாறிக்கொள்ளவும், கட்டைப்பஞ்சாயத்து ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் கட்டடங்களை கட்டிவைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு நிற்கிறார்கள்...நம்ம இந்தியா பாக்கிஸ்தான் பார்டர்ல பில்டிங்ல இல்லையா...அதுமாதிரி தான்...



இது வட கொரியாவில் இருந்து எடுக்கப்பட்டது...



இது தென் கொரியாவில் இருந்து எடுக்கப்பட்ட படம்...

இரண்டு பக்கமும் ஆப்பீஸர்கள் நிக்குறாங்க பாருங்க...

இந்த வடகொரிய மக்களும் தென்கொரிய மக்களும் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் எல்லா விடயங்களிலும் ஒன்றுதான்...இவர்களை இப்படி பிரித்துப்போட்டது மேற்கு உலக நாடுகளின் சுயநலமும், அமெரிக்கா மற்றும் ருஷ்யாவின் பனிப்போரும் தான்...விசு படம் சம்சாரம் அது மின்சாரத்தில், விசு கோடு போடுவார் - அதுவும் அவர் வீட்டுக்கு நடுவில் கோடு போடுவார்...அது வீட்டுக்குள் இருந்தவர்கள் எடுத்த முடிவு...ஆனா இங்க பக்கத்துவீட்டுக்காரன், அப்படி கூட சொல்லமுடியாது...அடுத்த தெருவுக்காரன் போட்டிருக்கான் கோடு...ஹும்...!!!

இப்போ இந்த இரண்டு நாடுகளும் அடித்துக்கொள்கின்றன...ஒருபக்கம் தென் கொரியாவில் அமெரிக்காவின் ஆதரவில் வந்து கொட்டும் வளமை...ஜப்பானை தட்டிவைக்க நினைக்கும் அமெரிக்கா, தென் கொரியாவை வளர்த்துவிட்டு குளிர்காய்கிறது...கம்யூனிசம் வீழ்ந்து, அமெரிக்காவுடனான பனிப்போரிலும் தோற்று, உள்ளாடை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் உள்ளாடையையே கொடுக்கும் நிலைக்கும், அழகிகளை உலகநாடெங்கும் அனுப்பி விபச்சாரம் செய்யவிட்டும் இன்று காலத்தை ஓட்டுகிறது ருஷ்யா...மனிதகுலத்தின் மாபெரும் ஆபத்து அணு உலைகள் டெக்னாலஜி தான் மிச்சம்...அதைக்கூட இன்று கல்பாக்கத்துக்கு கூட்டி கொடுத்து துட்டு சேர்த்து ப்ரட்டு வாங்கி தின்னுகிறார் புடின்..ச்சே அதை விடுங்க...

இந்த இரண்டு நாடுகளுக்கும் ( வடகொரியா மற்றும் தென்கொரியா) இடையேயான பனிபோர் சொல்லிமாளாது...இரண்டாயிரத்து நாலாம் ஆண்டுவரை இரண்டு பக்கமும் லவுட் ஸ்பீக்கர்ல கத்தி கத்தி திட்டிக்குவானுங்களாம்...2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அக்ரீமண்ட் படித்தான் இதை நிறுத்தி இருக்கானுங்க...கொடிமரத்துல கூட ஒரு சண்டை...தென் கொரியா 98 மீட்டர் உயரத்துல ஒரு கொடி மரம் வெச்சு அதுல கொடியேத்தி இருக்கானுங்க...அதை பார்த்து கடுப்பான வட கொரியா, 160 மீட்டர் உயரத்துல உலகத்திலேயே உயரமான கொடிமரம் கட்டி அதில் கொடியேற்றி தனது அரிப்பை தீர்த்துக்கொண்டது...



உலகத்திலேயே உயரமான கொடிமரம்...

இப்போ தலைப்பை ஒருமுறை படிங்க..."மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்"...வேற யாரு...இங்க ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் நான் தான்...வரும் சனிக்கிழமை இங்கே போகப்போகிறேன்...நிறுவனம் ஏற்பாடு செய்யும் டூர்...இங்க தான் மேட்டரே இருக்கு...வடகொரியாவிடம் அணுஆயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருப்பதாக என் மேனேஜர் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்...வடகொரியாவில் இருக்கும் அவரது ஒன்னுவிட்ட சித்தப்பா முந்தா நேத்து மூணு மணிக்கு போன்ல சொன்னாராம்....

நான் அங்கே போகப்போறேன் இல்லையா...அங்கே ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் தென் கொரிய ஆப்பீஸர் அசமஞ்சமா இருக்கும் நேரம் பார்த்து ஏதாவது அரை செங்கல்லை எடுத்து அவன் மண்டையை பேத்துடுறேன்...திரும்பி பார்த்தான்னா வட கொரியாக்காரன் தான் அடிச்சான் அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட் ஆகிடுறேன்...

அவன் இவனை சுட, இவன் அவனை சுட, ஓரே குஜாலா இருக்காது...அப்புறம் என்ன, அணு ஆயுத ஏவுகணையை அனுப்பி அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், நியூஆப்புலியன்ஸ் இந்தமாதிரி ஏதாவது ஒரு ஊர் செங்கல்லை பேர்த்துட்டான்னா கூட அமெரிக்கா குண்டு போட ஆரம்பிச்சிரும்...அப்படியே பிரச்சினை பெருசாகி உலகப்போராகிடுச்சின்னா...

ஹையா ஜாலி ஜாலி...

இம்சை அரசி கேட்ட பாய் பிரண்டு

திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் என்னோட ஜூனியராக படித்த இம்சை அரசி, பாய்பிரண்டு தேவையா என்று கேட்கிறார்...

எனக்கு தெரிந்த இந்த பாயை அவர் பிரண்டாக ஆக்கிக்கொள்கிறாரா என்பதை அவரே பார்த்து சொல்லட்டும்...




டிஸ்கி : வெறும் காமெடிக்காக மட்டுமே..சகோதரர்கள் கோபிக்கவேண்டாம்...

Wednesday, July 18, 2007

பாஸ்டன் பாலா செந்தழலுக்கு செய்த சிவப்பு துரோகம்

இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்...இது மாதிரி அநியாயம் நடந்தது உண்டா...என்ன கொடுமை இது...

அய்யா ஊரெல்லாம் புகைப்பட போட்டின்னு சூடு பறந்துக்கிட்டிருக்கு...பதினேழு வருஷத்துக்கு முந்தின படம், குஜராத்ல காக்கா கக்கா போன படம் ( கைப்புள்ள), பூவோட வண்டு சண்டைபோடும் படம், வீட்டுலேயே வளத்த சாமந்தி படம், வீட்டுக்கு வெளிய இருக்குற மரம் படம்னு எல்லாரும் இயற்கையை எடுத்து மொக்கை போட்டுக்கிட்டு இருக்காங்க...

நான் என்ன ஆசைப்பட்டேன்...போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கனும்னுதானே...ஆனா இவரு, என்னுடைய படத்தை தன்னுடைய ஸ்னாப்ஜட்ல கொசுறு வகையில வெளியிட்டு இருக்கார்...

நானும் சும்மாத்தான் கேட்குறேன்...கொசுறுன்னா இன்னா ? ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா, கொசுறுன்னு துக்ளியூண்டு காய் ஏதாவது இருந்தா போடுவான் கடைக்காரன்...அதிலயும் அழுவுனது, ஓஞ்சது, காய்ஞ்சது இந்தமாதிரி தான் போடுவான்...இதுல வேற இன்னொரு கேவலம் என்னான்னா, ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு கத்திரிக்கா கூட கொசுறா போடுவான்...

இந்த பாபா என்னன்னா, என்னுடைய இந்த படத்தை கொசுறுல போட்டிருக்கார்...நீங்களே போய் நியாயம் கேளுங்க..


தலைப்பு: மாலையை மயக்கும் மதிவதனி...!!! (இயற்கை வந்துட்டுதா உள்ளாற ?)



இந்த போட்டோவுக்காக காலையில இருந்து சாயங்காலம் வரை வெயிட் பண்ணி, ட்ரெஸ் எல்லாம் சேஞ்ச் செய்ய வெச்சு, சும்மா இருந்த லேடியை மாடலிங் எல்லாம் செய்ய வெச்சு...ஹும்...எவ்ளோ உழைப்பு இருக்கு இதுக்கு பின்னால ? எந்த தைரியத்துல பாபா இப்படி செய்தார்...!!! நீங்களே நியாயம் கேளுங்க...இல்லைன்னா கண்ணகி மதுரையை குடும்ப பிரச்சினைக்காக எரிச்சமாதிரி ( இதுக்கு அழகிரிக்கும் சம்பந்தம் இல்லை) நானும் கொரியாவில ஏதாவது செய்வேன்...!!!

துபாய் வலைப்பதிவர்களின் கவனத்துக்கு: கவிதை திறனாய்வு (அய்யனார்)

எனது சமீபத்திய பின்னவீனத்துவ கவிஞர்கள் பற்றிய பதிவில் துபாய் வலைப்பதிவாளர்களை தனது கொலைவெறி பின்னவீனத்துவ கவிதைகளால் டருஜு ஆக்கி வரும் அய்யனார் பற்றி ஏன் எழுதவில்லை என்று பல பதிவர்கள் கோபித்துக்கொண்டார்கள்...

அவர்களின் ஆதங்கத்தினை போக்கும் விதமாகவும், உண்மையான மொக்கைகளை அடையாளம் கண்டு மெச்சும் விதமாகவும், கொலைவெறியுடன் இருக்கும் துபாய் வலைப்பதிவர்களை தாகசாந்தி செய்வதற்காகவும் இந்த பதிவு...

என்னுடைய கல்லூரி காலத்து தோழன் ஒருவன் இதுமாதிரிதான்...புரியாத கவிதைகளை எழுதுவதில் வல்லவன்...கடைசிவரை அவனது கவிதை நோட்டுப்புத்தகம் எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்துவந்தது...

அய்யனார் கவிதைகளில் எனக்கு பிடித்த வரிகள்

"உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்
உன் பிரசன்னத்தில் ஓடிப் பதுங்குகிறது என் நிழல்
உன் கட்டுக்களற்ற சொற்கள் நிறைக்கிறதென் துவாரங்களை
முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன

நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"

என்ன ஒன்னு...ஒரு எழவும் புரியல...முதல் வரி உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்...குலைக்கிறதுன்னா நாய் தான...உன் பிரசன்னத்தில் ஓடி பதுங்குது நிழலா ? ஏது இந்த பிரகாஷ் ராஜ் படத்துல நடிப்பானே பிரசன்னா அவனை சொல்றீங்களா ? உன் கட்டுகளற்ற சொற்கள் ? சொல்லை எப்படி கட்டமுடியும் ? தாலி தான் கட்டமுடியும்...அடுத்த வீட்டுகாரன் பொண்டாட்டி நம்மளோட ஓடிவந்தத...அடுத்த நிமிடங்கள் தற்கொலை செய்துக்குதா ? கடிகாரத்தை தூக்கிபோட்டு உடைக்கனுமா ?

//நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"
//

பிகரை கூட தொரத்திட்டு கவுஜ எழுதறதுக்கு நீர் என்ன அருந்ததி ராயா இல்லை இல்ல உமா மகேஸ்வரியா ? ( யாருடா இந்த உமா மகேஸ்வரி ?)

இப்போ விஷயத்துக்கு வருவோம்...என்ன சொன்னாலும் கோச்சுக்க மாட்டேங்குறாரு நம்ம அய்யனார்...அவர் ஒரு பாசக்கார பருந்து...நேசக்கார நேரு...அதனால அவரை பின்னூட்டங்கள் வழி வாழ்த்துவோம்...எப்படி ? ஒரு கவிதையின் மூலமாகத்தான்...உங்களால் முடிந்த அளவு திட்டியோ கொட்டியோ பாசத்துடனோ ஒரு கவிதைப்பின்னூட்டம் போடனும்...(ரொம்ப முக்கியம், அது கவிதையா இருக்கனும்)...

வாங்க...வரிசையா ஒடிவாங்க...பினாத்தல் சுரேஷ், அபி அப்பா, குசும்பன், மின்னுது மின்னல், தம்பி, கோபி, சென்ஷி, சேகர், லியோ சுரேஷ், மகி எல்லாரும் வாங்க...அய்யனாரை வாழ்த்தி கவுஜையாக இடுங்க பின்னூட்டம்..

Tuesday, July 17, 2007

பினாத்தல் சுரேஷ் எனக்கு செய்த கொடுமை



பினாத்தல் சுரேஷ் சிறந்த மொக்கை பதிவர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...அவரது சமீபத்திய ப்ளாஷ் பதிவு எனக்கு தெரியாமல் இருக்கிறது...ஏதோ கட்டமும் புள்ளிகளுமாக வருகிறது...பல இடங்களில் அப்லோடிங் வசதிகள் இருக்க, எங்கள் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட மெகாஅப்லோடில் சென்று இந்த ப்ளாஷ் பதிவை வலையேற்றம் செய்த பினாத்தல் சுரேஷுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

அதே பதிவில் தலை பினாத்தல் சுரேஷ் அவர்கள் தெரிவித்திருந்த கருத்து என்னவென்றால் துபாய் கொலைவெறி கூட்டம் கிடேசன் பார்க்கில் நடத்திய கூட்டத்துக்கு அவருக்கு கட்டம் கட்டி அழைப்பு அனுப்பவில்லை என்பதுதான்..இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்...கிடேசன் பார்க் போட்டோவில் அபி அப்பா மீசை எல்லாம் எடுத்து கொடுமையாக இருப்பதை கண்டு எங்கள் அலுவலக கணினி எலி ஒன்று சோதனையின் போது செத்து விழுந்தது...இது போன்ற வரலாற்று கொடுமை மீண்டும் நடக்காமல் இருக்க, எலியையே உபயோகப்படுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்...

கம்மிங் பேக் டுத பாயிண்ட்...இந்த கொடுமையை எனக்கு செய்த பினாத்தல் சுரேஷ் உட்பட இன்னும் சில பதிவர்களை வைத்து சர்வேசன் சிறந்த மொக்கை பதிவர் யார் என்ற சர்வேயையும் நடத்தவேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக வேண்டுகிறேன்...

புகைப்பட போட்டிக்கு - தழலின் தாய்லாந்து போட்டோக்கள்

என்னைப்பொறுத்தவரை புகைப்படத்துக்கு சப்ஜெக்ட் ரொம்ப முக்கியம்...சப்ஜெக்ட் இல்லாத போட்டோ சக்கைக்கு சமம்...ஹி ஹி எதுகை மோனை...இந்த சப்ஜெக்ட் சப்ஜெக்ட் அப்படீன்னு சொல்றேனே என்னான்னு பாக்கறீங்களா ? அது என்னான்னு சொல்ல முடியாது...அதுக்கு நீங்க பெங்களூர் வலைப்பதிவர் மீட்டிங்கு வந்து ஓசை செல்லாக்கிட்ட வகுப்பு கேட்டிருந்திருக்கனும்...

சரி விடுங்க...புகைப்பட போட்டிக்கு நான் ஒரு மூனு படம் எடுத்திருக்கேன்...நிச்சயமா பரிசு எனக்குத்தான்...என்ன கேமராவுல எடுக்காம மொபைல் கேமராவிலேயே எடுத்தேன்...சரி நீங்க படத்தை பார்த்துட்டு ஒரு உதவி செய்யுங்களேன்...புகைப்பட போட்டி எங்கே நடக்குது என்று தெரியல...நீங்க அந்த இடத்தில் இந்த பதிவுக்கு ஒரு லிங்கை தட்டி விட்டுருங்களேன்...ப்ளீஸ்...

இனி படங்கள்...மாடலாக நின்றவர் ( அதாங்க சப்ஜெக்ட்) என்னுடைய குழு உறுப்பினர் போ (Miss.Bow)...அவருக்கு நன்றி...Ghu long khu me-ah...!!! (இந்த பதிவை அவரும் பார்ப்பார் இல்லையா அதான் 'தாய்' லாங்குவேஜுல போட்டிருக்கேன்...

படம் ஒன்று...!!!



படம் இரண்டு...!!!



படம் மூன்று...!!!



புகைப்பட போட்டி...மாடலா நில்லுங்க...வாங்க நாலு எடம் போலாம் என்றவுடன் நமது சப்ஜெக்ட் பயங்கர ஜாலியாகிட்டது...என்னமோ பேஷன் டி.வி புகைப்பட போட்டியில் கலந்துக்கற மாதிரி சப்ஜெக்ட் பயங்கர மேக்கப் எல்லாம் போட்டது...சரி விடுங்க...இதுக்கு மேல புள்ளைய தமிழ்ல கலாய்க்க வாணாம்...

நான் கெலிச்சதும் பரிசை சப்ஜெட்டுக்கு தான் கொடுக்கப்போறேன்...அதனால நடுவர்கள் கொஞ்சம் விட்டுக்குடுத்து பரிசை எனக்கே தரனும்...அப்பதான் இந்த சப்ஜெக்ட்டோட மெயில் ஐடி. சேட் ஐடி. எல்லாம் தருவேன்...இல்லைன்னா கிடையாது...(தம்பி ரவி, இதுக்கு மேல வேற என்ன வேனும், நீ ஜெயுச்சிட்டடா..)

ச்ச்ச்சும்மா அதிருதில்ல...

Monday, July 16, 2007

லயன் காமிக்ஸ் எஸ்.விஜயன் அவர்களுக்கு - பகிரங்க கடிதம்

சின்ன வயதில் - ஒரு அஞ்சாப்பு படிக்கும்போதுன்னு வைத்துக்கொள்ளுங்களேன்...என்னோட அப்பா தினமும் ரெண்டு ரூபாய் கொடுப்பார்...மற்ற பிள்ளைகள் எல்லாம் எதாவது வாங்கும்போது நான் மட்டும் சும்மா இருப்பேன்...எல்லாம் எதற்கு தெரியுமா...அந்த மாத இறுதியில் வரும் லயன் முத்து காமிக்ஸ் வாங்க உபயோகிப்பேன்...

ஒரு முறை திருச்சியில் பேருந்துக்காக காத்திருந்தபோது பாக்கெட்டில் இருந்தது 100 ரூபாய்...வீட்டுக்கு போவதற்காக காத்திருக்கிறேன்...அங்கே ஒரு கடையில் லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்தேன்...அத்துனை பணத்துக்கும் காமிக்ஸ் வாங்கிக்கொண்டு திரும்ப கல்லூரிக்கே நடந்து வந்தேன்...

இப்போது தகவல் தொழில்நுட்ப மென்பொருள் கூலியாக பெங்களூரில் பணியாற்றும்போதும் சரி...ஆர்வம் குறையவில்லை...ஒருமுறை சிவகாசிக்கு மணியார்டர் அனுப்பி புத்தகங்கள் வாங்கியுள்ளேன்...

என்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த இந்த பதிவு இடுகிறேன்...முதலில் இணைய தளம் மூலம் காமிக்ஸ் விற்பனை பற்றி...

பல இணைய தளங்களில் தமிழ் புத்தகங்களை விற்கிறார்கள்...( பார்க்க : வித்லோகாவின் காமதேனு) நமது லயன் இணைய தளத்திலும் புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் முறையை கொண்டு வந்தால் என்ன ?

அரதப்பழசு மணியார்டர் முறை போஸ்ட் கார்டில் ரிப்ளை செய்யும் முறையும் தேவையா ?

பெரும்பாலான நேரம் நமது லயன் காமிக்ஸ் இணைய தளமும் வேலை செய்யவில்லை...

எப்போதாவது இயங்கும்போது கூட நாம் அதில் போடும் பின்னூட்டங்கள் ஏறுமா என்பது தெரியாது...(ஏற்கனவே பல பின்னூட்டங்கள் அளித்து, தளம் வேலை செய்யாமல் எழுதியது வீண் ஆனது தான் மிச்சம்)

போகோவும், ஜெட்டிக்ஸும் சுட்டிகளின் வீட்டுக்கே சென்று அவர்களின் இதயங்களை ஆக்ரமித்து, வாசிக்கும் பழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் போலிருக்கிறது...

நமது வருங்கால தலைமுறைக்கு இந்த காமிக்ஸ்களை கொண்டு சேர்க்க வேண்டும், இல்லை என்றால் ஏற்கனவே காமிக்ஸ் ரசிகர்களாக இருக்கும் வளர்ந்த குழந்தைகளோடு இந்த காமிக்ஸ் உலகம் அழிந்துபோகும்...

வாசகர் ஹாட்லைனை இணையத்தில் எழுதுங்க...இணைய தளங்களில் விளம்பரம் செய்யுங்க...இணையத்தில் புத்தகங்கள் விற்பனையை சாத்தியமாக்குங்க...இவை எல்லாம் செய்யாமல் போனால்...நினைத்து பார்க்கவே பயமாயுள்ளது...

விழிமின், எழுமின் என்று கடைசி தடவையாக சொல்லிக்கொள்கிறேன்...

இப்படியெல்லாம் சொல்வதால் நான் வெறுப்பை உமிழ்கிறேன் என்று அர்த்தம் செய்துகொள்ளவேண்டாம் மற்ற வாசகர்கள்...நமது காமிக்ஸின் இன்றைய நிலைகண்டு சொல்லொனா துயர்கொண்டு வந்த வேதனையில் எழுதும் கடிதம்...

Wednesday, July 11, 2007

மோகன்தாஸ் செய்த மாபெரும் தவறு....

மோகன்தாஸ் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவில் மிகப்பெரும் தவறை செய்துவிட்டார்...ஆமாங்க...

///இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு. ///

இப்படி எழுதிய பத்தியில் "மாப்பு" என்ற பதத்தோடு நிறுத்திவிட்டார்...

"வெச்சிட்டான்யா ஆப்பு" என்றல்லவா முடித்திருக்கவேண்டும் ?

அதுவும் இல்லாமல் சமீபகாலமாக இந்த ஏரியாவில் திரிந்துகொண்டிருக்கும் ஆசிப் அண்ணாச்சியிடம் பெண் ஈயம் பித்தாளைக்கு எதிரான பரணி பாடும் கருத்தை சொல்லியிருக்கிறார்...

இதனை நமது அண்ணாச்சியே (அதை ஏஏன் வாயால எப்படி சொல்வேன், நீங்களே போயி பாருங்க அந்த கொடுமைய...) கேட்டிருக்கிறார் பின்னூட்டத்த...

http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_5847.html


அப்பாடா...எப்படியோ ஒரு ஜல்லி அடிச்சாச்சு...இது ஆறின இடுகையில் அழுகுமா இல்ல சூடான இடுகையில் ஜல்லுமா ( ஜல்லியடிக்கறது) என்பது லெப்டுல ஒதுங்க ஒதுங்கத்தான் தெரியும்...!!




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, July 09, 2007

போலீசை தாக்கிய குலுக்கு கவிர்ச்சி நடிகை பாபிலோனா தம்பிக்கு வலை

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சித்தியும், முன்னாள் கவர்ச்சி நடிகையுமான மாயாவின் மகன் விக்கி, குடி போதையில் ரகளை செய்தபோது அவரைத் தடுக்க முயன்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டுத் தப்பினார். அவரைப் பிடிக்க போலீஸார் வலைவிரித்துள்ளனர்.

முன்னாள் குலுக்கல் நடிகை மாயா. இவர் வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகன் விக்கி.

இவர்கள் இருவரும் குடியிருப்பில் அடிக்கடி ரகளை செய்வதும், பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடன் சண்டை போடுவதுமாக இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பெரும் தகராறு ஏற்பட்டு மாயாவும், விக்கியும் கைது செய்யப்பட்டனர்.

இதுெதாடர்பாக சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், விக்கி கே.கே.நகர் காமராஜர் சாலையில் உள்ள மதுக் கடை முன்பு குடிபோதையில், தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்டார். அப்பகுதி வழியாக போவோர் வருவோரிடம் சண்டையிலும் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக ஜீப்பில் சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி வந்தார். விக்கியும், அவரது நண்பர்களும் ரகளை செய்வதைப் பார்த்து அங்கு விரைந்தார்.

அப்போது விக்கியுடன், மகேஷ், ரகு ஆகியோரும் ரகளை செய்தது ெதரிய வந்தது. இதையடுத்து தெய்வநாயகியும், ஜீப் டிரைவரும் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ரகு தப்பி விட்டார். விக்கியும், மகேஷும் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

தப்பி ஓடிய ரகுவைப் பிடிக்க ஜீப் டிரைவர் பின்னாலேயே ஓடினார். இதைப் பயன்படுத்திக் கொண்டு தெய்வநாயகியின் மார்பில் தாக்கி விட்டு விக்கியும், மகேஷும் தப்பி ஓடினர்.

இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தெய்வநாயகி தகவல் கொடுத்தார். உதவி ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். தப்பி ஓடிய மகேஷைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆனால் விக்கி சிக்கவில்லை.

இதையடுத்து மாயாவின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு மாயாவும் இல்லை, விக்கியும் இல்லை. பின்னர் விக்கி தங்கியிருக்கும் நடிகை பாபிலோனாவின் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ஆனால் தனது தம்பி இங்கு இல்லை என்றும் செல்வாக்கு தெரியாமல் கைது செய்யும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்றும் மிரட்டலாக கூறியுள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத போலீஸார் விக்கி வந்ததும் உடனடியாக சரணடையுமாறு அறிவுறுத்துமாறு கூறி விட்டுச் சென்றனர்.

இதையடுத்து தனது பாட்டியுடன் (மாயாவின் அம்மா) பாபிலோனா முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்காத பாதுகாவலர்கள் அவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விட்டனர்.

விக்கியைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு செய்தது தொடர்பான வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயா ஆஜராகவில்லை.

இதையடுத்து விசாரணைக்கு தொடர்ந்து வராமல் இருக்கும் மாயாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாயா வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் அங்கிருந்த உறவினர்கள் மாயா வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர் திரும்பியவுடன் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Thanks, ThatsTamil

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

കുറച്ച് ദിവസമായിട്ടുള്ള എന്റെ മനസ്സിലെ ചിന്തയാണിത്.

"നമ്മുടെ പ്രൊഫൈലില് കഴിയുന്നത്ര കൂടുതല് വിവരങ്ങള് എന്തുകൊണ്ട് നല്കുന്നില്ല?"

കുറച്ച് ദിവസമായിട്ടുള്ള എന്റെ മനസ്സിലെ ചിന്തയാണിത്.

ഒരാളുടെ പോസ്റ്റുകള് വായിക്കുന്നതിന് മുമ്പ് ഒരു പ്രാവശ്യമെങ്കിലും ഞാനയാളുടെ പ്രൊഫൈല് നോക്കാറുണ്ട്. ഒരാളെ പരിചയപ്പെട്ടതിന് ശേഷമല്ലേ അയാളോടടുക്കേണ്ടത്. പ്രൊഫൈലല്ലേ അതിലേക്കുള്ള ഒരു വഴി.

നമ്മുടെ സീനിയേര്സില് പലരും അവരുടെ പൂര്ണ്ണ വിവരം നല്കിയിട്ടുള്ളതായി കാണുന്നു. ചിലര് അവരുടെയും കുടുമ്പാംഗങ്ങളുടേയും ഫോട്ടോ വരെ തന്നിരിക്കുന്നു. എന്നാല് നമ്മുടെ പുതിയ കൂട്ടുകാരില് ബഹുഭൂരിപക്ഷവും അനോണിയായിക്കഴിയാന് ആഗ്രഹിക്കുന്നവരാണ്. നിവൃത്തിയില്ലാത്തതുകൊണ്ട് ഒരു തൂലികാനാമമെങ്കിലും തരുന്നു. അതിനപ്പുറം അവരെപ്പറ്റി നമുക്ക് യാതൊന്നും അറിയില്ല. ഇതു മതിയോ ഒരു കൂട്ടായ്മക്ക്?

എന്റെ ചോദ്യം 'ബുലോഗ ക്ലബ്ബി' ലുള്ള മുതിര്ന്നവരേക്കാള് അതിലംഗമല്ലാത്ത ബഹുഭൂരിപക്ഷം പുതുമുഖങ്ങളോടാണ്. അതുകൊണ്ട് എന്റെയീ പോസ്റ്റ്, 'ക്ലബ്ബിന്റെ' സ്ഥലത്തല്ല എന്റെ സ്വന്തം സ്ഥലത്ത് തന്നെ പോസ്റ്റ് ചെയ്യുന്നു.

ഒരു ബ്ലോഗര് അവരെപ്പറ്റിയുള്ള കൂടുതല് വിവരങ്ങള് നല്കുവാനുള്ള പ്രയാസ്സം എന്തെല്ലാമെന്നറിയുവാന് അതിയായ തല്പര്യമുണ്ടെനിക്ക്. നാം ബൂലോഗത്തേക്ക് വരുന്നത് ആത്മാര്ത്ഥതയോടെയാണെന്ന് ബോധ്യപ്പെടുത്താനുള്ള ഒരു മാര്ഗ്ഗം കൂടിയല്ലേയീ പ്രൊഫൈലിലെ വിവരണം?.

അങ്ങനെ ചെയ്തുകഴിയുമ്പോള് നമ്മുടെ പോസ്റ്റിനോടും നാം ചെയ്യുന്ന കമന്റുകളോടും കൂടുതല് ഉത്തരവാദിത്വം പുലര്ത്താന് പ്രേരകമാവില്ലേ? അതല്ലേ വേണ്ടത്?

'
മറുമൊഴി' സംഘം അവരുടെ പുതിയ സംരംഭം തുടങ്ങിയപ്പോള്, ഏറ്റവും കുറഞ്ഞത്, ഇതിനുവേണ്ടിയൊരഭ്യര്ത്ഥനയെങ്കിലും (അനുഭവങ്ങളുടെ വെളിച്ചത്തില്) നടത്തുമെന്ന് ഞാന് പ്രതീക്ഷിച്ചു. പക്ഷേ അതുണ്ടായില്ല.

ദയവായി പ്രതികരിക്കൂ.

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################