Sunday, April 29, 2007

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

http://surveysan.blogspot.com/2007/04/blog-post_29.html


அடுத்ததா ஒரு புகைப்படப் போட்டி வெக்கரதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டிலிருக்கும் குட்டீஸ்க்கு ஒரு போட்டி வச்சா என்னான்னு தோணிச்சு.

( புகைப்படப் போட்டிக்கு, போன முறை த.வெ.உ'வ ரூல்ல கொண்டு வந்த மாதிரி, இந்த முறை என்ன கொண்டுவரலாம்னும் ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன. எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருளா இருக்கணும். நெட்ல சுட்டு குடுக்க முடியாத அளவுக்கு ஒரு ட்ரிக்கி படமா எடுக்கவும் சொல்லணும் :) ).

சரி, அத அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ஒரு போட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

http://surveysan.blogspot.com/2007/04/blog-post_29.html


No Aaaattam Here !!!


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, April 27, 2007

உங்கள் பதிவுக்கு வருபவர் பற்றிய தகவல் அறிய

உங்கள் பதிவுக்கு வரும் பயனாளர் பற்றிய தகவல்கள் ( எங்கே இருந்து வருகிறார், அவரது ஐ.பி முகவரி என்ன) என்பது போன்றா தகவல்களை அறிய ஒரு இலவச கவுண்டர் கிடைக்கிறது...அதுதான்

www.statcounter.com


இந்த கவுண்டரில் முதலில் நீங்கள் உங்கள் பற்றிய விவரங்களை தந்து கடவுச்சொல் பெறவேண்டும்...

பிறகு லாகின் செய்து அதில் உள்ள கோடிங்கை எடுத்து உங்கள் அடைப்பலகையில் ஒட்ட வேண்டும்..பிறகு அதில் உள்ள ஹெல்ப் போன்ற பகுதிகளை படித்து எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துகொள்ளவும்.


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 16 பல்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சுண்டவற்றல் - சிறிதளவு
கருப்பு வெல்லம் - சிறிதளவு
நல்ல எண்ணைய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு வற்றல் - 12
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு


செய்முறை:


மேற்கூறிய அனைத்தையும் வாணலியில் நல்லெண்ணைய் விட்டு நன்கு வறுத்து சிறிது பூண்டு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணைய் விட்டு வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டவற்றல் போட்டு வதக்க வேண்டும். பொன்நிறமானவுடன் புளிக்கரைச்சல்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சிறிது கெட்டியான பின் கருப்பு வெல்லம், நல்லெண்ணைய் சேர்க்க வேண்டும். நன்கு கெட்டியான பின் இறக்க வேண்டும்.

Thanks Keetru.

http://www.keetru.com/recipes/veg/vathakozhambu.html



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நண்டு மிளகு சூப்

நண்டு மிளகு சூப்

தேவையான பொருட்கள்:

தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாற வேண்டும்.


Thanks Keetru

http://www.keetru.com/recipes/non_veg/nandu_pepper_soup.html



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நெத்திலி கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

கருவாடு - ஒரு கோப்பை
கத்திரிக்காய் - 3
மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கருணைகிழங்கு – 250 கிராம்
சீரகத் தூள் - அரைத் தேக்கரண்டி
வறுத்த அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - அரைக் கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி – 1
துறுவிய தேங்காய் - அரைக் கோப்பை
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கடுகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்

செய்முறை:
கருவாடை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை, தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடு வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து 3 கோப்பை தண்ணில் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், வெங்காயத்தை அரைத்து, உப்பு, தக்காளியை சேர்த்து புளி தண்ணிரில் கலக்கி வைக்க வேண்டும். பூண்டை நசுக்கி கொள்ள வேண்டும். கத்திரிக்காயை நறுக்கி கொள்ள வேண்டும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு நன்கு வறுத்து கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும். கூடவே கருவாடையும் போட்டு சிறிது நேரம் வதக்கி எல்லாத் தூள்வகைகளையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு கலக்கி வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி, கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.



Thanks - Keetru http://www.keetru.com/recipes/non_veg/karuvattu_kuzhambu_1.html




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, April 25, 2007

சர்தார்ஜி ஜோக்ஸ்

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!

**************************************************

சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!

**************************************************

மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?

சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..

மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் ?

சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...

****************************************************

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

***************************************************

இண்டர்வியூவில்...

தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...

சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூருரு

தேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யா

சர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.

Monday, April 23, 2007

ஒரு வயதுவந்தோர்க்கான பதிவு : முத்தத்தின் வகைகள் (அ)

ஒரு வயது வந்தோர்க்கான பதிவு ஒன்றை எழுதும்போது சற்றே நெளிந்து தான் எழுதவேண்டும்...(சேர் சரியில்லைங்க...) இருந்தாலும் எழுதி விடுகிறேன்...இது முத்தத்தின் வகைகள் பற்றியதானது ஆகும்...மேலும் இது கொடுக்கப்படும் முத்தங்களை பற்றி பதிவு அல்ல...இது வாங்கப்படும் முத்தங்கள் பற்றியதானது...

ல்ல்ல்ல்ல்லூ லூ....புஜ்ஜிக்குட்டிங்களா...மீ மீ மீ மீ...பப்பாபபபா....நாப்கின்ல உச்சா போயிட்டியாடா செல்லம்...உங்க தாத்தா கோவனமா போட்டிருத்த தான் செல்லம் இப்போ நாப்கின்னு அப்படீன்னு நீ போடறே...மம்மு சாப்பிடறியாடா குட்டீ.....சமத்தா இருக்கனும்...எங்க அ ஆ சொல்லு...பூ பூ பூ....சாப்பிடலனா பாலபாரதி அங்கிள்ட புடிச்சு குத்துருவேன்...மீ மீ மீ..

என்னங்க வெளங்கலையா ?

விஷயம் இதுதான்...நான் தான் மொதல்லே சொல்லிட்டனே...இது (ஒரு) - 1 - One வயது வந்தவர்களுகான பதிவுன்னு.....அடிக்க வராதீங்க...விஷயத்தை சொல்லிடுறேன்...

குழந்தைகளுக்கான இந்த பதிவை அபி அப்பா - மை பிரண்ட் மற்றும் பாஸ்டன் பாலா / இலவச கொத்தனார்கள் (ஒரு வயது) குழந்தைகளுக்கு படிச்சு காமிச்சு அவங்க என்னா சொல்றாங்க என்பதை கமெண்டாக போடவும்.....(ஆமா கொழந்த என்ன சொல்லப்போவுது...யீ யீ யீ வ்வ்வ்வ்வ்வ்வா....(வாயில இருந்து கொஞ்சம் ஜொள்ளு) ஆஆஆஆ...மீ மீ மீ.....

குழந்தைக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னான்னா பாக்குறவங்க எல்லாம் தூக்கி, அட கொழந்த எவ்ளோ அழகா சிரிக்குது என்று குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக அதன் கன்னத்தில் ஒரு 'இச்' பதிப்பது...

ஏன்யா, கொழந்த உங்கிட்ட கிஸ் கேட்டுதா ? பிறகு ஏன் டார்ச்சன் பன்ற என்பது போல் பக்கத்து வீட்டு குழந்தை என்னை பார்த்த போது எல்லா குழந்தைகளின் மன நிலையும் எனக்கு புரிந்து, குழந்தைகளுக்கு ஆதரவான இந்த பதிவும் போடவைத்துவிட்டது...

குழந்தைகள் விருப்பத்துக்கு மாறாக கிடைக்கும் கொடுமையான முத்தங்களின் வகைகளை கீழே பாருங்கள்...

* பனியன் போட்ட சனியனின் பகட்டான முத்தம்...

* ஈட்டி வாயனின் இடியாட்டிக் முத்தம்...

* பான் பராக் வாயனின் கொடுமையான முத்தம்...

* பிஸ்கட் கூட வாங்கித்தராதவனின் பிக்காரி முத்தம்...

* நாற வாயனின் நாஸ்டி முத்தம்..

இது போன்ற முத்தங்களின் போது பெரும்பாலான வாய்கள் பல்லு விளக்கிய வாய்கள் (குறைந்த பட்சம் 3 நாட்கள்) இல்லை....இது குழந்தைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்...

குழந்தைகளுக்கான ஐடியாக்கள்:

எக்ஸ்கியூஸ் மீ குயந்தைகளே...இது போன்ற நேரங்களில் உங்கள் பால் பல்லை வைத்து நறுக்குனு கடித்துவிட வேண்டும்...இல்லையென்றால் முத்தம் அளிக்கும் அங்கிளின் மூஞ்சியை நோக்கி "உச்சா" அடித்துவிடவேண்டும்.....(வீட்டுக்கு யாராவது தெரியாத அங்கிள் வந்தால் வருகின்ற உச்சாவை அடக்கி வைத்து, இது போன்ற சந்தர்ப்பத்துக்கு காத்திருக்க வேண்டும்)....

இந்த செந்தழல் அங்கிள் மீது மட்டும் சற்று கருணை காட்டவேண்டும்...சரியா..உங்களுக்காக பதிவெல்லாம் போடுறேனே...

பாபா...பீ..பூ....ட்விங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...சிம்பு இல்ல சூப்பர் ஸ்டார்...சரியா ச்ச்சாப்புடல அவுஸ்திரேலியா பொட்டிக்கடை பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு குத்துருவேன்...மீ மீ மீ....அங்கிள் வர்ட்டா...

சீ யூ...ப்ப்ப்ப்ப்பூ....ப்ப்ப்ப்பூ.....வ்வ்விஷ் விஷ்....

Thursday, April 19, 2007

இராம் பெயரில் போலிப்பதிவு தயாரித்தவருக்கு

அன்புள்ள போலியே...போளி மாதிரி சுவையான நட்பைத்தரும் தம்பி இராம் பெயரில் போலிப்பதிவு கிரியேட் செய்த நீர் மிகவும் நல்லவர்...

ஆனா விஷயம் அது இல்ல...காலையில ஆபீஸ் வந்தவுடனே உனக்குத்தான் பரிசு என்று ஒரு பின்னூட்டத்தை பார்த்து குன்ஸாகி ஆகா கெலிச்சிட்டேன்...கெலிச்சிட்டேன்...என்றுகூவி...

எல்லாரும் விஷயம் என்னான்னு கேக்க...நான் ஆயிரம் பொற்காசு ஜெயிச்சிட்டேன்னு நான் சொல்ல....அப்ப ட்ரீட் வைய்யுன்னு எல்லோரும் கேட்க...இன்னைக்கு மத்தியானமே வையு என்று ஒரு கொடுக்கு சொல்ல...

ஆச்சு..பெங்களூர் கோரமங்களா ஏரியா டேமரிண்ட் (the Tamerind) ஹோட்டல்ல பில்லு 1117 ரூபா ( VAT டேக்ஸ் உட்பட...)

ஆப்புறம்தான் தெரிஞ்சது...பரிசு எனக்கு இல்ல..எனக்கு இல்ல...வாயில வாஸ்து மட்டும் தான் எனக்கு சரி இல்லன்னு...

ஆனா ஒன்னு...நீ அடிச்சது பயில்வான இல்ல...ஒரு பிள்ளப்பூச்சிய...உனக்கு கிடையாது கப்பு...




அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

சீரியஸா ஒரு மேட்டர் : பொறந்த நாளும் அதுவுமா புள்ளய இப்படியா கலாய்க்கிறது...உடனே மன்னிப்பு கேட்டு போஸ்ட் போடு...

Monday, April 16, 2007

அடிடாஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ( சச்சினுக்கு ஆப்புங்கோவ்)

படத்தை மட்டும் பார்ப்பீங்களாம்...ஏதாவது இருந்தா பின்னூட்டத்துல கொடுங்க...மீதியை நீங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும்போது வாங்கிக்கறேன்...( சின்ன குழந்தைகள் / பலகீன இதயம் கொண்டவர்கள் / கர்ப்பிணிகள் இந்த பதிவை ஓப்பன் செய்வதை தவிர்க்கவும்)

Monday, April 09, 2007

இந்த வார நட்சத்திரம் என்ன ஆச்சுங்கோவ்...

சும்மா பேச்சுக்கு தான் கேட்கிறேன்...நட்சத்திரம் அப்படீன்னா இன்னா ? இந்த திரட்டியில் மாதக்கணக்கில் குப்பை கொட்டி, சண்டை போட்டு, சமாதானமாகி, மண்டை காய்ந்து, காயவைத்து, நொந்து, சிரித்து இருப்பவர்கள் தானே...

இதுவரை வலையுலகில் (நான்) கேள்விப்படாதவர்களை எப்படி நட்சத்திரம் ஆக்குகிறீர்கள் ?

இந்த நட்சத்திரம் தேர்ந்தெடுக்கும் முறையை திரட்டி கொஞ்சம் Transperent ஆக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?

பதிவே எழுதாதவங்க ( அதாவது ஆணியே புடுங்காதவங்க) எல்லாரையும் புடிச்சு நட்சத்திரம் ஆக்கிடுறாங்க...

எனக்கு தெரிஞ்சு
ஒரு வருடமா வலையுலகில் இயங்குறவங்களுக்கு எல்லாம் தரமாட்டேங்கிறாங்க....நான் ஆணி புடுங்கலை என்னை விடுங்கப்பா என்று சொல்பவர்களை தேடிச்சென்று நட்சத்திரமாக போட்டு விடுகிறார்கள்...அவர்கள் பதிவும் போடுவதில்லை....அந்த வாரம் முழுவது டல்லடிக்குது திரட்டி...ஏன் இந்த ஒரு சார்புத்தன்மை ?

மொத்தமே இரண்டு பதிவு போட்டவங்களை திரட்டியிலேயே சேர்க்காமல் இருக்கலாம்...ஆனால் அவங்களை தேடிச்சென்று நட்சத்திரம் ஆக்கிய கூத்தும் நடந்தேறி உள்ளது...( சும்மா காமெடிக்கு )

பத்தவெச்சாச்சு...இனி புகையுதா இல்லை வெடிக்குதான்னு பார்ப்போம்...நாராயண...நாராயண....






இதுக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்னா...பின்னூட்டம் போட்டீங்கன்னா உடனே ரிலீஸ் ஆவாது...மன்னிக்கவும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, April 05, 2007

கோல்வால்கரா ? கோல்மால்கரா ?

ராஜாவனஜ் பதிவில் கோல்வால்கரை டார் டாராக கிழித்து வந்துள்ளது...



பதிவை படிக்க

http://vanajaraj.blogspot.com/2007/04/ms-exposed.html



வரலாற்றில் சூனியமான நான் இந்த பதிவை படித்துத்தான் பல விஷயங்களை தெரிவித்துக்கொண்டேன்...



ஆனால் ஜடாயு திடீரென குருஜி கோல்வால்கர் என்று ஒரு பதிவிட்டுள்ளார்..



மேல் விவரம் இருந்தால் தாருங்களேன்..



(அப்பாடா....பத்த வச்சாச்சு...)



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Tuesday, April 03, 2007

இம்சை அரசியுடன் - இம்சையின் சந்திப்பு..

இம்சை அரசியின் அலுவலகத்தில் அவரை சந்திப்பதாக முடிவானது...கருப்பு+கருப்பு ட்ரெஸ்ஸில் ஆறாவது கேட்டில் இருப்பதாக தெரிவித்தார்...ஆள் சிவப்பு..ட்ரெஸ் கருப்பு...கண்டறிந்த பின்னர் புன்னகையோடு வரவேற்றார்...அவரிடம் 50 நிமிடம் பேசியதில் (மொக்கையில்) தெரிந்துகொள்ட விஷயங்கள்..

http://imsaiarasi.blogspot.com


* இட ஒதுக்கீடு பற்றி கடுமையான அறிவு வைத்துள்ளார்...

* பல்வேறு கடி நகைச்சுவை துணுக்குகளை அவ்வப்போது அள்ளிவிட்டு சிரிக்க வைக்கிறார்..

* தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு கழுத்துப்பட்டி ஒரு நெறிக்கும் கயிறு என்று கம்முனிஸ்டு மாதிரி பேசுகிறார்...(தீவிர இடது சாரி போல...இடது பக்கமே நின்று பேசினார்)

* குடித்த ஜூசுக்கு தான் தான் காசு கொடுப்பேன் என்று விடாப்பிடியாக உமன் எம்பவர்மெண்ட் என்ற கருத்தை நிறைவேற்றினார்..

* தான் எழுதிய கதைகள் கண்மனி / தேவி ஆகிய புத்தகங்களில் வெளிவந்திருப்பதை தெரிவித்தவர், குமுதம், ஆனந்த விகடன், ரீடர்ஸ் டையஜீன் ஆகிய இடங்களில் வர இருப்பதாக நெற்றியடியாக கூறினார்...

* தனக்கு ஏரோப்பிளேன் முதல் எலிக்காப்டர் வரை ஓட்டத்தெரியும் என்றும் குழந்தையில் இதுபோன்ற பல வாகனங்களை ஓட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்...பெரிய டிரைவரா வரவேண்டியது...ஹும்..

* தான் படித்த அண்ணா யூனிவர்ஸிட்டியில் மடிக்கணினியில் கோலம்போட்டதை பற்றி தெரிவித்து இது போன்ற பல ஐடியாக்களை வைத்துள்ளதாக அடித்துவிட்டார்...


***

***

***

மேலும்

***

***

***

மன்னிக்கவும்...மேலே சொன்னது எல்லாம் கற்பனை...

இம்சை அரசியை சந்தித்தது என்னவோ உண்மை...ஆனால் வெறும் ஐம்பது நொடிகள் மட்டுமே. ஒரு ஹாய் பாயுடன் கிளம்பி விட்டேன்...சகோதரியும் ஆபீசுக்கு போற அவசரம், நானும்...ஆகவே இந்த சந்திப்பை இன்று சாயங்காலம் வைத்துக்கொள்ளலாமே...அதனால் இந்த முன்னோட்ட பதிவு...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

கதவை திற...!!!! காற்று வரட்டும்..!!!!

அனானி அதர் ஆப்ஷன் பற்றி கோவி.கண்ணன் எழுதி இருக்கிறார்...என்னுடைய நேரக்கொடுமைக்கு அதை வாசிக்க மட்டும்தான் முடியும்...பின்னூட்டி என்னுடைய மறுப்பை தெரிவிக்க முடியாது...

அதனால் தனிப்பதிவாக போடுகிறேன்...அனானி அதர் ஆப்ஷன் என்ன அவ்வளவு கொடுமையானதா ? அடுத்த வேளை சோற்றை தடுத்து வயிற்றை காய விட்டுவிடும் அளவுக்கு கடுமையானதா ?

பிலாகர் கணக்கு இல்லாத பலர் வலைத்திரட்டியீல் இப்போதெல்லாம் வரக்காண்கிறோம்...அவர்கள் எல்லாம் பின்னூட்டம் போடவேண்டும் என்றா என்ன செய்வார்கள்...

அட்லீஸ்ட் மின்னஞ்சலையாவது வெளிப்படையாக கொடுக்கவேண்டும்...அதுவும் கிடையாது...அனானி ஆப்ஷனும் இல்லை, மின்னஞ்சலும் வைப்பதில்லை, மொக்கையான பல கருத்துக்களை மட்டும் கொட்டிவிட்டு போவது...கருத்து கந்தசாமி போல...எப்படி எதிர்ப்பது...

அனானி அதர் ஆப்ஷன் என்னமோ அடுத்தவரின் குடியை கெடுக்க மட்டுமே பயன்படுவது போல கோவி.கண்ணன் அய்யா அவர்கள் பதிவு எழுதி இருப்பது உண்மைக்கு புறம்பானது...எத்தனை பதிவர்களின் குடி கெட்டது என்று கோவியார் கூற முடியுமா ?

அதர் ஆப்ஷனில் யாராவது கன்னாபின்னாவென்று எழுதினார் மட்டுறுத்தப்போகிறீர்...அதிலும் மட்டுறுத்த வாய்ப்பு இல்லாத நான் எல்லாம் - மட்டுறுத்தலை நீக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேனே ? இதை என்னவென்று சொல்வது ?

அதர் அனானிக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்ச்சி வரும் வேளையில் கோவியார் இப்படிப்பட்ட மொக்கையை எழுதி இருப்பது சமீபத்தில் 1900 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்வது போல் இருக்கிறது...

அனானி அதர் ஆப்ஷன் வைக்காமல் நான் பின்னூட்ட முடியாதவர்களின் லிஸ்ட் எடுத்தால் அதில் கோவியாரும் ஒருவர்...மேலும் பல சிறந்த பதிவர்கள்...அருமையான பதிவுகளை எழுதுபவர்கள்...

தங்களது வாசலை மூடி வைத்துள்ளார்கள்...

அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது இதுதான்...

கதவை திற...!!!! காற்று வரட்டும்..!!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################