Tuesday, July 17, 2007

பினாத்தல் சுரேஷ் எனக்கு செய்த கொடுமை



பினாத்தல் சுரேஷ் சிறந்த மொக்கை பதிவர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...அவரது சமீபத்திய ப்ளாஷ் பதிவு எனக்கு தெரியாமல் இருக்கிறது...ஏதோ கட்டமும் புள்ளிகளுமாக வருகிறது...பல இடங்களில் அப்லோடிங் வசதிகள் இருக்க, எங்கள் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட மெகாஅப்லோடில் சென்று இந்த ப்ளாஷ் பதிவை வலையேற்றம் செய்த பினாத்தல் சுரேஷுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

அதே பதிவில் தலை பினாத்தல் சுரேஷ் அவர்கள் தெரிவித்திருந்த கருத்து என்னவென்றால் துபாய் கொலைவெறி கூட்டம் கிடேசன் பார்க்கில் நடத்திய கூட்டத்துக்கு அவருக்கு கட்டம் கட்டி அழைப்பு அனுப்பவில்லை என்பதுதான்..இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்...கிடேசன் பார்க் போட்டோவில் அபி அப்பா மீசை எல்லாம் எடுத்து கொடுமையாக இருப்பதை கண்டு எங்கள் அலுவலக கணினி எலி ஒன்று சோதனையின் போது செத்து விழுந்தது...இது போன்ற வரலாற்று கொடுமை மீண்டும் நடக்காமல் இருக்க, எலியையே உபயோகப்படுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்...

கம்மிங் பேக் டுத பாயிண்ட்...இந்த கொடுமையை எனக்கு செய்த பினாத்தல் சுரேஷ் உட்பட இன்னும் சில பதிவர்களை வைத்து சர்வேசன் சிறந்த மொக்கை பதிவர் யார் என்ற சர்வேயையும் நடத்தவேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக வேண்டுகிறேன்...

1 comment:

அபி அப்பா said...

சும்மா கிடந்த என்ன"மீசையை எடுய்யா செந்தழல் ரவி மாதிரி இருக்கும்"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி இந்த கொடுமை நடந்து போச்சு ரவி! நான் இப்போ"என் மீசைக்கு பதில் சொல்லு மீனாட்சி"ன்னு பாடிகிட்டு திரியறேன்!