படம் உதவி : கூகிள் கொம்பனி
தமிழகத்தில் திரு ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்வது தெரிந்ததே. இளைஞர்களையும் விவசாயிகளையும் கட்சியில் சேர்ப்பதே திட்டமாம். அதுவும் இல்லாமல் முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அவரை சந்திக்க தடைவேறு.(அப்ப மாப்பி சஞ்சய் அவரை சந்திக்கமுடியுமா என்ற எடக்குமடக்கான கேள்வியை எழுப்பாதீர்)
ஆங்காங்கே மக்களை சந்தித்து குறை கேட்கிறாராம். மீனவர்களும் மக்களும் தங்களது சொல்லமுடியாத துன்பங்களை ராகுல்ஜியிடம் கொட்டி, வடிகால் தேடுகிறார்களாம்.
குறிப்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்த தமிழக மீனவர் சமுதாயத்தின் கண்ணீரை கர்ச்சீப் வைத்து துடைக்காத குறையாம். அம்புட்டுபேரும், ராகுல்ஜியின் பெருந்தன்மையையும், ஏழைப்பங்காள மனோபாவத்தையும் கண்டு கண்ணீர் உகுக்கிறார்களாம்.
தலைப்பு : திமுக ஆட்சி சரியில்லை
அதாவது, மக்களுக்கு குறையில்லாத ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் நடாத்தினால், ராகுல்ஜி ஏன் இங்கு வந்து மக்களின் குறையை கேட்கப்போகிறார் ?
பி.கு : முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் யாரும் சந்திக்கக்கூடாது என்றால் ராகுல்ஜி தேங்கா மட்டையையும், ஈயம் பித்தாளையையும் தான் சந்திக்கவேண்டும். பர்த்து சட்டிபிக்கேட்டோடு காவல்துறையிடம் ஒரு காங்கிரஸ்காரர் கெஞ்சும் காட்சியை காண சகியாமல் இந்த பதிவு. உங்களது ஆதரவை ஓட்டுகள், மற்றும் கள்ள ஓட்டுகள் குத்துவதன் மூலம் தெரிவிக்கவும்.