வினவு பக்கம் பக்கமாக நீட்டி முழக்கி, ஏன் அ.இ.அ.தி.மு.கவுக்கு வாய்ப்போ, வாக்கோ தரக்கூடாது என்று எழுதியுள்ளார்.
வழமைபோல திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் அதை மேற்கோள் காட்டி, அய்யோ போடாதீங்க, போடாதீங்க என்கிறார்கள்..அ.தி.முகவுக்கு வாக்குகளைத்தான்..
இப்போது தி.மு.கவின் நிலை பரிதாபம். தங்களுக்கு வாக்கு கேட்பதைவிடுத்து, அடுத்த கட்சிக்கு வாக்கு போடாதீங்க என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்..
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரை விலைக்கு வாங்க முயல்கிறார்கள்...தோல்வி பயம்...அட ஜே.கே ரித்திஷ்க்கு தேர்தல் சீட்டு கொடுக்கும்போதே தெரியவில்லையா ? திராவிட முன்னேற்க்கழகத்தின் தலைமையின் மதியற்ற நிலை ?
வினவுக்கு மிக எளிமையான கேள்வியை முன்வைக்கிறேன்...

நான் திருந்திவிட்டேன்...ஈழம் தான் தமிழகத்தின் தேர்தல் பிரச்சினை, என்று ஊர் ஊராக முழங்குகிறார் ஜெ.
சிட்டிகளில் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த ஈழப்பிரச்சினையை, இன்றைக்கு தமிழகத்தின் மூலை முடுக்குக்கு எல்லாம் எடுத்துச்சென்றுவிட்டார்...
முதல்வர் கலைஞர் அவர்களோ, ஈழப்பிரச்சினையை கிண்டலாக அணுக ஆரம்பித்துவிட்டார்.,,
அவரது பேட்டியில்
கேள்வி> அய்யா, நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபிறகும் குண்டுவிழுகிறதே ?
பதில்> மழைவிட்டாலும் தூவானம் விடலை போலிக்கு...
கேள்வி> ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சனையா ?
பதில்> வாங்க காப்பி சாப்பிட போலாம்.
இதனை அட்டகாசமாக சிரித்து சொன்னார்...
இது ஒரு பொறுப்பான முதல்வரின் பதிலா ? இவரை தமிழின தலைவர் என்று வணங்கிய, வாழ்த்திய, நம்பிய உணர்வாளர்களின் முகத்தில் இப்படியா உமிழ்வது ?
ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினையை தேர்தல் பிரச்சனையாக்கி டி.ஆர்.எஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களை ஏமாற்றிய பின், தோல்வி. இனி ஒவ்வொரு தேர்தலிலும் தெலுங்கானா பிரச்சினை இல்லாமல் ஆந்திர அரசியல் இல்லை.
ஆந்திராவில் தெலுங்கானா கண்டிப்பாக உருவாகும்...
அந்த நிலை தமிழகத்தில் வந்தால் மட்டுமே, தமிழ் ஈழம் உருவாகும், அந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று எவ்வளவு வருந்தியிருப்பேன்...
அந்த நிலை இன்று ஜெயலலிதாவால் உருவாகியுள்ளது.
தமிழ் ஈழப்பிரச்சினை, இன்று தேர்தல் பிரச்சினை...தமிழகத்தின் அனைத்து அரசியல் சக்கரங்களும் அதில் சுழலுது.
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...நடந்துவிட்டது...
அதனால், நீங்கள் போட்டும் பட்டியல் இனிமேல் உணர்வாளர்களிடம் எடுபடாது...
நடந்தது நடந்ததாக இருக்கட்டும்..இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்..!!!
நம்பிக்கையோடு !!!!
நம்பிக்கையோடு !!!!
நம்பிக்கையோடு !!!!