முரளிமனோஹர்* விஷயத்துக்கு பிறகு இருபது பதிவுகள் டோண்டு சாரை திட்டி கச்சை கட்டின. அவரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கவேண்டும், ஆட்டத்திலேயே சேர்க்கக்கூடாது என்று எல்லாம். அசரலையே மனுஷன்.
முரளி மனோஹர் என்று பின்னூட்டியதில் எதாவது ஆபாசம் இருக்கிறதா, இல்லையே ? கல்கி கூட புனை பெயரில் எழுதினாரே என்று எல்லார் வாயையும் அடைத்தார்.
முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.
இப்போது குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் அன்னை பார்வதி அம்மாவை பற்றி இப்படி வன்மத்துடன் கூடிய யூக பதிவு ஒன்றை எழுதியிருக்கிறாரே என்று பல பதிவர்கள் உணர்வோடு பொங்குகிறார்கள். அதில் விழும் வாக்குகளும் அமோகம்..பலே பலே. மஸோக்கிஸ்டு*** என்பவர்கள் தன்னை துன்புறுத்துவதில் சுகம் காண்பார்களாமே ?
இந்த பதிவில் சில கிசு கிசு மேட்டர்கள். யார் என்ன என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவேண்டாம்.
1. கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நன்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.
2. ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.
3. சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.
4. தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நன்பன்.
5. தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..
6. தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.
என்னமோப்பா. ஏதோ என்னால முடிஞ்சது..!!
ஆனால் இந்த மனிதாபிமான பிரச்சினையை வைத்து திரட்டிகள் இவரை நீக்கனும், கூகிள் இவர் ஐடியை முடக்கனும் என்றெல்லாம் எழுதி உங்கள் எனர்ஜியை வீணடிக்கவேண்டாம். போடா ஜாட்டான் என்று சொல்லிவிடும் இந்த கோட்டான். இவன் அசர மாட்டான். (எதுகை மோனைக்காக எழுதிட்டேன் டோண்டு சார்)
தனக்கு எல்லாம் வல்ல தகர நெடுங்குழைகாதன் அணுக்கிரகம் இருப்பதாக நம்புவன் எப்படியும் உடைய மாட்டான். இன்னும் சுப்ரமணிய சாமியும் சோவும் வாழும் தமிழ்நாட்டில் இவருக்கு என்ன குறைச்சல் ? ஆனால் இப்படி பெருவாரியான வாக்குகளும் எதிர்பதிவுகளும் நாமும் குறைந்தபட்ச மனிதாபிமானம் உள்ள நாட்டில்தான் வாழ்கிறோம் என்று காட்டுவது நிறைவு.
ஏன் பார்ப்பணீயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள், உயர் சாதீயம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்று ஜாதிப்பாசத்தோடு சொல்பவர். எந்த ஒரு பொருளும் அல்லது கண்டுபிடிப்பும் அதனை கண்டுபிடித்தவர் பெயரை வைத்து சொல்வது இயல்புதானே ? உதா (ராமன் விளைவு, டாப்ளர் எபெக்ட்). இந்த கேள்வியை கேட்டால் மழுப்புவார்.
ஆனால் இந்த பிரச்சினையை வைத்து பதிவு போட்டவர்கள் நாளைக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை என்று போங்கள். கறாறாக பேசி தொகையை வாங்கிக்கொண்டு வேலைக்கு எந்த குறையும் வைக்காமல் சிறப்பாக செய்து கொடுப்பார். அது தான் டோண்டு !!!
பி.கு :
இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்****.
..
..
..
* முரளிமனோஹர் என்ற புனைபெயரில் வன்மமான தாக்குதலை பதிவர்கள் சந்திக்க நேர்ந்தது.
** சமீபத்தில் - சமீபத்தில் என்பது டோண்டு ராகவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. உ.தா : சமீபத்தில் 1976 ல்
*** மசோகிஸ்டு - தன்னை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்
**** ரத்னா கபே சந்திப்புகளில் போண்டாவை ஆர்டர் செய்து தின்றதால். (பில் சம அளவில் பிரிக்கப்படும்.)
....
....