தாய்மை என்பது அற்புதமான உணர்வு. இதை நான் சொல்லி வாசகர்களுக்கு தெரியவேண்டியதில்லை...
சிடுமூஞ்சு ஆட்டோக்காரர்களில் இருந்து, எரிந்து விழும் பேருந்து நடத்துனர் வரை கர்ப்பிணிகளை மரியாதையுடன் நடந்ததுவதை தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன்...
ஆனால் மெத்தப்படித்த பொறியியலாளர்கள், மனிதவளத்துறையினர் நடந்துகொண்டுள்ள விதம் மிக அநாகரீகமானது..
இந்தியாவின் மிக சிறந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் இன்போசிஸ் நிறுவனம்தான் இந்த கொடுமையை செய்துள்ளது...
தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிகளை அழைத்து, தானாகவே நிறுவனத்தை விட்டு விலகிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது...
பொதுவாக இன்போசிஸ் நிறுவனம், நாயை விட கேவலமாக உழைக்கச்சொல்வதாக ஒரு பேச்சு உண்டு.
இந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி அந்த கூற்றுக்கு வலுசேர்க்கிறது...
இந்த பொருளாதார சூழ்நிலையில் கர்ப்பிணிகளால் முழுமையாக பணிபுரிய முடியாது என்று கருதுகிறதா இன்போஸிஸ் நிறுவனம் ??
விவரம் தெரிந்தவர்கள் தான் விளக்கவேண்டும்...