Monday, September 14, 2009

Force India F1 மற்றும் டென்னிஸ்



தமிழக ஊடகங்களில் காணகிடைக்கவில்லை. அதனால் நான் எழுதவேண்டியதா போச்சு. இரண்டு ஸ்போர்ட்ஸ் செய்திகள். 1. போர்ஸ் இண்டியா நேற்றைய இட்டாலியன் க்ரான்ப்ரிக்ஸில் நான்காவது இடத்தில் நிறைவு செய்துள்ளது. மொத்தம் பதிமூன்று புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் போர்ஸ் இண்டியா. ட்ரைவர் இருபத்தாறு வயது ஆட்ரியன் சுடில், ஜெர்மனிக்காரர். நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கிவருகிறது போர்ஸ் இண்டியா F1 டீம். நிறுவனர் விஜய் மல்லைய்யா மெருமைப்பட இன்னும் பல விஷயங்கள் நடதேறியிருக்கிறது. 2. யூ.எஸ் ஓப்பன் டென்னிஸில் ரபேல் நடாலை குமுறிவிட்டார் டெல்பெட்ரோ. 6- என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தினார். நடால் எப்பவும் கொஞ்சம் பெரிய டவுசராக போட்டு விளையாடுவார். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே என்னடா டவுசர் சின்னதாக இருக்கிறது, கிழிந்துவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் இப்படி கிழியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஆறுமுறை ரோஜரிடம் நேரடியாக தோற்றவர்தான் டெல் பெட்ரோ. ஆனால் மறுபடி ஒருவாய்ப்பு அவருக்கு, ரோஜருக்கோ, பதினைந்தாவது க்ரான்ஸ்லாம் வரலாற்று கனவு. பார்ப்போம் ஆட்டம் எப்படி அமைகிறது என்று. என்னைப்பொறுத்தவரை, நடாலை வீழ்த்த யாராலும் முடியாது என்று நினைப்பேன். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்பது டைம் டு டைம் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.




நடுவரை முறைத்துக்கொண்ட வில்லிய்ம்ஸும் குழந்தையோடும் பெண்கள் பிரிவிவின் கிம் க்ளிஸ்டர்ஸும் உபரி நியூஸ். பைனஸ்ஸில் கிம்முடன் மோதிய மேடம் Caroline Wozniacki படத்தை பதிவில் போடுகிறேன். நன்றி.முதல் முறையாக யூ எஸ் ஓப்பன் பைனல்ஸ் வந்தவருக்கு இம்சையின் பாராட்டு.

Thursday, September 10, 2009

லக்கிலூக் !!!



கேள்வி : லக்கிலுக் தான் போலி டோண்டா ? அல்லது அவருக்கும் போலி டோண்டுக்கும் கொண்டான் கொடுத்தான் உறவுண்டா ? லக்கிலுக் ஆபாச பதிவு எழுதினாரா ? புரியல தயவு செய்து விளக்கவும்.
பதில் : ஆரம்பத்தில் லக்கிலுக்கும் போலி டோண்டிடம் இருந்து ஆபாச பின்னூட்டங்கள் பெற்றவர்தான். அந்த வகையில் அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்.

அடியேன் போலி டோண்டு மீது புகார் தர காவல் நிலையம் சென்றபோது, முந்தின நாள் இரவு, கணிணி இணைய கடை ஒன்றில், உண்மையார் டைப் செய்த போலி டோண்டு மீதான புகார் ஆவணங்கள், போலி டோண்டு குரல் பதிவு சிடிக்கள் போன்றவற்றை ப்ரிண்ட் அவுட் எடுத்ததில் இருந்து, சிடிக்களை பல பதிவுகளாக பிரதி எடுத்தது வரை அவரே செய்தார். அடியேன் எதிரில் இருந்த முருகன் இட்டிலி கடையில் சென்று உணவருந்தியபோது, இணைய கடை மூடும் நேரம் வந்ததால் அவர் பசியோடு அமர்ந்து இந்த பணியை முடித்தார்.

இந்த விவகாரத்தில் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். !!!!
போலி பதிவு எழுதும் அளவுக்கு அந்த வெகுளியான மனது செல்லாது. அவருடன் ஒரே ஒரு நாள் பழகியவர் கூட இதை கண்டுகொள்வார்.

பி.கு : இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. உங்களுக்கு ஒரு ஜே.

Wednesday, September 09, 2009

திமுக ஆட்சி சரியில்லை - திரு.ராகுல் காந்தி


படம் உதவி : கூகிள் கொம்பனி

தமிழகத்தில் திரு ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்வது தெரிந்ததே. இளைஞர்களையும் விவசாயிகளையும் கட்சியில் சேர்ப்பதே திட்டமாம். அதுவும் இல்லாமல் முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அவரை சந்திக்க தடைவேறு.(அப்ப மாப்பி சஞ்சய் அவரை சந்திக்கமுடியுமா என்ற எடக்குமடக்கான கேள்வியை எழுப்பாதீர்)

ஆங்காங்கே மக்களை சந்தித்து குறை கேட்கிறாராம். மீனவர்களும் மக்களும் தங்களது சொல்லமுடியாத துன்பங்களை ராகுல்ஜியிடம் கொட்டி, வடிகால் தேடுகிறார்களாம்.

குறிப்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்த தமிழக மீனவர் சமுதாயத்தின் கண்ணீரை கர்ச்சீப் வைத்து துடைக்காத குறையாம். அம்புட்டுபேரும், ராகுல்ஜியின் பெருந்தன்மையையும், ஏழைப்பங்காள மனோபாவத்தையும் கண்டு கண்ணீர் உகுக்கிறார்களாம்.

தலைப்பு : திமுக ஆட்சி சரியில்லை

அதாவது, மக்களுக்கு குறையில்லாத ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் நடாத்தினால், ராகுல்ஜி ஏன் இங்கு வந்து மக்களின் குறையை கேட்கப்போகிறார் ?

பி.கு : முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் யாரும் சந்திக்கக்கூடாது என்றால் ராகுல்ஜி தேங்கா மட்டையையும், ஈயம் பித்தாளையையும் தான் சந்திக்கவேண்டும். பர்த்து சட்டிபிக்கேட்டோடு காவல்துறையிடம் ஒரு காங்கிரஸ்காரர் கெஞ்சும் காட்சியை காண சகியாமல் இந்த பதிவு. உங்களது ஆதரவை ஓட்டுகள், மற்றும் கள்ள ஓட்டுகள் குத்துவதன் மூலம் தெரிவிக்கவும்.

Monday, September 07, 2009

திபிசிதி வாக்குமூலம்...கூ..கூ...

உங்களுக்கு இந்த டாப்பிக் பிடிக்கவில்லையென்றால் CHO KA KA O என்று யூ டூபில் தேடி GummiBear என்ற ஆல்பத்தை சந்தோஷமாக பார்க்கவும். நல்லாருக்கு..

பாவம் திரு.திபிசிதி. (இதன் அர்த்தம் தமிழ்நாட்டில் பிறந்த குழம்பிய திராவிடன்)

ஒரு வாக்குமூலமே கொடுத்துவிட்டார். போலி யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. பதிவுலகில் மிக அநாகரீகமாக நடந்துகொண்டவர். (உங்களுக்கு இந்த அநாகரீகம் என்ற வார்த்தையின் உண்மையான வலி புரிய, நீங்கள் திரு.போலியாரிமிருந்து ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் பெற்றவறாயிருக்கவேண்டியது அவசியம்)

திரு.திபிசிதியின் பதிவில்

திபிசிதி:
கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால்,


கோவி.கண்ணன் said...
என்னுடன் நெருக்கமாக பழகிய காரணங்களுக்காக உங்கள் மீது

கூட்டுக்களவாணிகள் திரைப்படத்தில் ஒரு காட்சி கீழே.......



உங்கள் குடும்பத்தை பற்றி அசிங்கமான வார்த்தைகளில் தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்துக்கொண்டும், உங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து, செந்தழல் ரவி என்ற புனைப்பெயரில் எழுதுபவர், பார்ப்பணர்களை பற்றி அவதூறாக எழுதுகிறார், அவரை பணியில் இருந்து நீங்குங்கள் என்றும், தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும்படி உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட போலி வலைப்பதிவில் எழுதியும் வந்தவர்களுடன், நட்போடு இருக்கும் உங்களை குதறாமல் கொஞ்சவா செய்வார்கள் திபிசிதி ? உங்கள் அறிவுக்கு (??) இது எட்டாமல் போனது ஏனோ ?

சென்னை சைபர் க்ரைம் பிரிவில் இப்போதும் உங்கள் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு உங்கள் நன்பர்களும், நன்பர்களின் நன்பர்களும் ரொம்ப செய்துள்ளார்கள். கூட்டுக்களவாணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ இல்லையோ ??

இந்த பதிவு பிடித்திருந்தாலும் பிடிக்காமல் போனாலும் உங்கள் ஓட்டு மூலம் தெரிவிக்கவும்.


பிற்சேர்க்கைகள்

1. இந்த ட்விட்டர் குரூப் இமெயில் அனுப்பும்போது, சாக்கடைகளுக்கும் அனுப்பிவிடுகிறது. ட்விட்டரிடம் கம்ப்ளைண்ட் செய்யவேண்டும்.

2. களவாணிகளின் அலைபேசி எண் கண்டுபிடிப்பது , காவல்துறையினரிடம் கொடுக்கவே.

Sunday, September 06, 2009

YSR மரணம். அதிர்ச்சியில் ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் சாவு


மரணம் கொண்டாடப்படக்கூடியதல்ல. அதன் இழப்பு அதீதமானது. ஆனால் அதை வைத்து செய்தி நிறுவனங்கள் விளையாடும் விளையாட்டு எரிச்சல் தருகிறது.

Tuesday, August 25, 2009

நமது கணினியை உளவு பார்க்கிறதா இட்லிவடை வலைப்பதிவு ?

நான் இப்போதெல்லாம் கூகிள் க்ரோம் உபயோகப்படுத்துகிறேன். காரணம், கூகிள் க்ரோமின் செக்யூரிட்டி எனக்கு பிடித்திருக்கிறது.

இட்லிவடை பதிவை திறந்தால் இட்லிவடை பல குக்கிகளையும், அன்னியலோகம் டாட் காம் என்ற இணைய தளத்தில் இரண்டு குக்கிகளையும் என்னுடைய கணினியில் நிறுவுகின்றது.

குக்கிகள் என்றால் என்ன ? குக்கி என்பது ஒரு உளவாளி போன்றவர். நமது கணியில் அமர்ந்துகொண்டு தகவல்களை வெளி ஆட்களுக்கு தருபவர் இந்த குக்கி.

குக்கி பற்றி திண்ணையில் குமாரபாரதி அவர்கள் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் :

வலைப் பட்சணங்கள்

பிறிதொரு வகை ஊடுருவல், வலையில் உலவும் பொழுது நடைபெறுகிறது. பல வகை பட்சணங்களை - குக்கிகளை கணினியில் (C:WindowCookies) விதைக்கின்றன. பல குக்கிகள் வலைத்தொடரபுகளை விரைவில் ஏற்படுத்தத் துணைபுரிகின்றன. இன்னும் குறிப்பாகக் கூறினால் குக்கிகள் இல்லாமல் சில தளங்களுடன் ஊடாட முடியாது. குக்கிகளை ஏற்றுக் கொள்ளவும் என்ற கட்டளையை Tools>>Internet Options >>Advanced ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் சில வகைக் குக்கிகள் கணினியில் உட்கார்ந்து கொண்டு பல தகவல்களை வெளியேற்று கின்றன.எங்கள் வாழ்வு முறைகள் வாங்கும் பொருட்கள் போன்றவற்றை சந்தைப் படுத்துகை ஆராய்ச்சிகளுக்காக சேகரித்து அனுப்புகின்றன. இவை மிக நாசூக்காகவே இயங்குவன. உலக வலைத்தளத்தில் எனது நடவடிக்கைகளை ஆராய்ந்து இவர்கள் சந்தை கட்ட முனைந்தால் .. .


திண்ணை கட்டுரையின் முழு உரல் > http://www.thinnai.com/?module=displaystory&story_id=40106021&format=html

திண்ணை கட்டுரையின் சுட்டி

குக்கி பற்றிய விக்கி பக்கம். குக்கி விக்கி.



இட்லிவடை இன்ஸ்டால் செய்த இட்லிவடை தளத்தின் குக்கிகள்.




இட்லிவடை இன்ஸ்டால் செய்த அன்னியலோகம் தளத்தின் குக்கிகள்.


குக்கிகள் மூலமாக நாம் ப்ரவுஸ் செய்த தளங்கள், நமது புரொபைல், நமது தனிப்பட்ட தகவல்களை திருடமுடியும். நமது அலுவலகம் எது, நமது நாடு என்ன, நாம் ப்ரவுஸ் செய்யும் கணினி என்ன என்பது வரை திருட முடியும் என்று ஒரு தளத்தில் படித்தேன்.

இட்லிவரை தான் மட்டும் வரவில்லை, அன்னியலோகம் தளத்து நன்பரையும் என்னுடைய கணினி பெட்டிக்குள் நுழைத்துவிட்டார். ஒரு வீட்டுக்குள் சொல்லாமல் நுழைவது ட்ரெஸ்பாஸிங். நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் சொல்லாமல் ஏன் நுழைந்தீர்கள் ?

நான் தினமும் பார்வையிடும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் செய்யாத ஒரு வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் ? உங்களது உண்மையான நோக்கம் என்ன ?

அடியேன் கேட்பது இதுதான். தொழில் நுட்பம் அறியாத பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஏன் இப்படி உளவு பார்க்கிறீர்கள் ? நேர்மையான பதிலை இட்லிவடை குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

Sunday, August 09, 2009

இலங்கை பாஸ்போர்ட் ? விசா கிடையாது : இந்தியன் எம்பஸி


ஆகஸ்ட் 09 2009 : கடந்த ஏழு ஆண்டுகளாக நார்வேயில் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழர் செல்வராசா. இவர் நார்வேயில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆண்டும், நார்வேயின் குளிர்காலத்தில் தமிழகத்தில் பயணம் செய்து, திருத்தலங்களை தரிசனம் செய்வது வழக்கம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, சரவணா ஸ்டோர்ஸ், பழனி முருகன், திருப்பதி , திருவண்ணாமலை போன்ற தலங்களை தரிசிப்பதுடன், பெரிய அளவில் தன்னுடைய நிறுவனத்துக்கு தேவையான பொருட்களையும் கொள்முதல் செய்வார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக சுற்றுப்பயணத்துக்கான விசாவை வழங்கி வந்த இந்தியன் எம்பஸி, இந்தமுறை இந்திய விசா தர மறுத்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், இந்திய எம்பசி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சிகப்பு நிற பாஸ்போர்ட், அதாவது நார்வேஜியன் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே இந்திய விசா தரமுடியும், இலங்கை பாஸ்போட்டுக்கு இந்திய விசா தர முடியாது என்று மறுத்துள்ளனர்.

எந்தவிதமான குற்றப்பின்னணி அற்றவரான செல்வராசா, எழுபது வயதுக்கு மேல் கடந்தவர். தனக்கு ஒரு சீனியர் சிட்டிஸன் என்ற வகையிலாவது இந்தியா செல்ல விசா வழங்கவேண்டும் என்று கோரியபோது, ஓஸ்லோ இந்திய எம்பஸி அதிகாரிகள் எந்த விதத்திலும் மனமிரங்கவில்லையாம்...

தமிழர்கள் இந்தியாவுக்கு வரும்போது, இந்திய சுற்றுலாத்துறையில் இருந்து, விமான துறையில் இருந்து, அவர் தங்கும் ஹோட்டல், அவர் வழக்கமாக வாங்கும் பழனி பஞ்சாமிர்த கடைக்காரரில் இருந்து அனைவருக்கும் லாபமே, எந்த விதத்திலும் நட்டமில்லை.

இது நார்வே எம்பஸியில் மட்டுமா, அல்லது மற்ற அனைத்து எம்பஸிகளிலும் இதே நிலையா, இந்திய வெளியுறவுத்துறை ஏதேனும் குறிப்பிட்ட வகையிலான வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதா, இலங்கை கடவுச்சீட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ?

அப்படி வழிகாட்டும் நெறிமுறைகள் ஏற்கனவே இருந்தால் கடந்த ஐந்தாண்டுகளாக எப்படி அனுமதி வழங்கப்பட்டது ? இதுபோன்ற 'திடீர்' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியுறவுத்துறைக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெரிந்துதான் உருவாக்கப்படுகிறதா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன...

தகவல் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட இந்த நாட்களில், அரசு துறையிலும், அமைச்சகத்தில் இருந்தும் வலைப்பதிவுகளை பார்வையிடுவதாக செய்திகள் வந்துள்ளவேளையில் இதனை வலைப்பதிவு முலம் வெளியிடுகிறேன்..

இந்த பதிவை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆ.ராசா போன்ற வலைப்பதிவு செய்யும் தமிழக அரசுத்துறையினருக்கும் அனுப்புகிறேன், மேலும் ஆங்கிலத்தில் எழுதி, இந்திய எக்ஸ்டர்னல் அபையர்ஸ் மினிஸ்டரிக்கும் அனுப்புகிறேன்..அதனால் உங்கள் மறுமொழிகளில் வேறெதுவும் விவரங்கள் இருந்தால் தெரிவியுங்கள்...இணைத்துக்கொள்கிறேன்...

தமிழக புலனாய்வு பத்திரிகைகள் தொடர்புகொண்டால், மேல்விவரங்களையும் தெரிவிக்கிறேன்.

Monday, August 03, 2009

எங்கே தியாகி எங்கே தியாகி ? 5+

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்ககூடாத இடுகை

இந்த பதிவில் எங்கோ ஒளிந்திருக்கும் தியாகியை கண்டுபிடியுங்கள். அவரது அரும் சாதனைகளை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை. முந்தைய ராக்கி ஷாவந்த் இடுகைக்கு முக்காடு போட்டு வந்து பார்த்தவர்கள் (ஆயிரம் பேருக்கு மேல்) இந்த இடுகையையும் பார்த்து விட்டு, பின்னூட்டத்தில் ஏதாவது ஜொள்ளிவிட்டு மன்னிக்க சொல்லிவிட்டு போகவும்.



















ஆனா இந்த ஆட்டத்துல எதாவது மேட்ச் பிக்ஸிங் இருக்குமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது. ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல் (ரசிகையர் மன்றம்)

Monday, July 27, 2009

வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்...!!!!!!!!!!!!

ஓம். ரீம். ஐஸ் க்ரீம். !! இதுதான் அந்த இரண்டு மந்திரங்கள்.

இதனை தினமும் இரவு பதினோரு மணியில் இருந்து பண்ணிரண்டு மணிவரை இடைவிடாமல் ஜெபித்துவந்தால் வாழ்க்கை வளம்பெறும். இளமை திரும்பும். நீண்ட ஆயுள் கிடைக்கும்..!!!

என்ன நக்கலா !! அப்படீங்கறீங்களா ? அடப்போங்க சார்...!!! எத்தனை பதிவு எழுதினாலும் நாடு திருந்தமாட்டேங்குதே ? பாலியல் வன்முறை நடக்குது...கத்தரிக்காய் கிலோ இருவது ரூபாய் விக்குது. பஸ்ல நடத்துனர் டிக்கெட் சில்லறை தராம ஏமாத்துறார்...!!!

சரி நம்ம உண்மையிலேயே மேட்டருக்கு போவோம்..அங்க சுத்தி இங்க சுத்தி வந்துட்டாண்டா மேட்டருக்கு..!!! என்று டென்ஷன் ஆகவேண்டாம்...இந்தாருங்கள் மூன்று மந்திரங்கள்..!!

1. Take it Easy... !!!
2. One At a Time... !!!


தமிழ் பதிவில் ஆங்கிலத்தில் ஏன் மந்திரம் என்று குழம்பவேண்டாம். சோ எங் பக் என்ற என்னுடைய சவுத் கொரிய ரசிகைக்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்..!!!

முதல் மந்திரத்தை பார்ப்போம்..!!

Take It Easy !!



அடிக்கடி இதை சொல்லுங்கள்...நன்பரிடத்தில்...பணியிடத்தில்...

கடுமையான பணிச்சூழல் அதிகரித்து, மண்டை காய்ந்துகொண்டிருக்கும்போதுகூட.....உங்களுக்கு நீங்களே கூட சொல்லிக்கொள்ளலாம்..!! டேக் இட் ஈஸி...எவ்ளோ ஈஸியான மந்திரம் பாருங்க...

எப்போதெல்லாம் எதாவது ப்ரச்சனை உங்களை சூழ்கிறதோ, அப்போது எதிரில் இருப்பவரிடமும் சொல்லலாம்..மனைவியிடம் கூட அடிக்கடி சொல்லலாம்...உங்கள் பிள்ளையிடம் சொல்லலாம்..

இடுக்கண் வருங்கால் நகுக, என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னதும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்று. இப்போதெல்லாம் இடுக்கண் வந்தால் நகுத்தீர்கள் என்றால் சென்னையென்றால் கீழ்ப்பாக்கம், பெங்களூரென்றால் நிம்ஹான்ஸ். நகுத்தல் என்றால் கன்னட மொழியிலும் சிரித்தல். தெரியுமா ?

பிரச்சினைகள் உங்களை சூழும்போது மனதுக்குள் இதனை சொல்லுங்கள். டேக் இட் ஈஸி. எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் நம்மால். நமக்கு அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறது. டேக் இட் ஈஸி. டேக் இட் ஈஸி. எளிதாக எடுத்துக்கொள்வேன். கோபப்படமாட்டேன். வெற்றியாளன் நான். டேக் இட் ஈஸி...

எங்கே ஒருமுறை சொல்லுங்கள்...டேக் இட் ஈஸி...!!!

One At a Time !!



முதலில் பல பிரச்சினைகளைக்கு காரணம், நாம் பல விஷயங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு, எல்லாவறையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்கவேண்டும் என்று கொலைவெறியோடு அலைவது..ஒரு சிலர், இது போன்று பல செயல்களை, பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் அசகாய திறமையை வளர்த்துக்கொண்டு கலக்குவார்கள். ஆனால் அந்த திறமை குறைவாக கொண்டிருப்பவர்கள், அதையும் செய்யமுடியாமல், இதையும் செய்யமுடியாமல், குடும்ப வாழ்க்கையிலும் மொக்கை, பணியிலும் டொங்கு, பிஸினஸிலும் ஊற்றல் என்று மண்டையை பிய்த்துகொண்டு அலைவார்கள்...!!!

ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அய்யோ, இன்னொரு வேலை இருக்கிறதே, அதை செய்யவில்லையே என்று டென்ஷன் ஆவது...

ப்ரயாரட்டைஸ் செய்யுங்க...மனைவிக்கு ஒரு காபி தந்துவிட்டு, அப்புறம் வாஷிங் மெஷினில் துணி போடுங்க. காபி பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு வாஷிங் மெஷினுக்கு போனால் காபி கொதித்து கீழே கொட்டும். இந்த நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் இன்னும் டென்ஷன் ஆகும்...தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டே காபி பாத்திரத்தை எடுக்க போனீர்கள் என்றால் குழந்தை திடீரென அழும். பாத்ரூமில் லைட் எரிந்து கரண்ட் வேஸ்ட் ஆகும். யாராவது அந்த நேரத்தில் வீட்டு பெல் அடித்தால் டோட்டல் டேமேஜ். இது ஒரு உதாரணம். அடியேனின் சொந்த வாழ்க்கையை இதில் கோர்த்து பார்த்து குஜால் ஆகவேண்டாம்...

எது முதலில். எதற்கு ப்ரயாரிட்டி. அதை சரியாக கணித்து செயல்படுவதில் உங்களுக்கு வெற்றி...வாஷிங் மெஷின். தொலைபேசி அழைப்பு. அப்புறம் பார்க்கலாம். அழும் குழந்தையை எடுங்கள். கேஸ் ஸ்டவ்வை நிறுத்துங்கள். கதவை திறந்து பதில் சொல்லுங்கள். குழந்தையோடு காபியை மனைவிக்கு கொடுத்துவிட்டு, வாஷிங் மெஷின் போங்கள். இது எவ்வளவு எளிமையாக இருக்கிறது ?

எங்கே மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் ஓன் அட் எ டைம்...!!!

இதை கடைபிடித்தால் ஒரு மண்டலம் அதாவது 48 நாளில் கிடைக்காத வெளிநாட்டு பயண ஆசை பூர்த்தியாகும், தடைப்பட்டிருந்த செவ்வாய் தோஷ திருமணம் நடைபெறும், வெகுநாட்களாக வீட்டில் இருக்கும் மகனுக்கு வேலை கிடைக்கும்...!!!


மூன்றாவது மந்திரம் கூட ஒன்று உண்டு. அது எனக்கு பின்னூட்டம் அளித்தாலோ அல்லது ஓட்டு போட்டாலோ சொல்லப்படும்..!!!

Saturday, July 25, 2009

மனைவியின் எடை குறைய எளிய வழிகள்

இன்று வலைமேயும்போது ஈழநேசன் என்ற தளத்தில் எடை குறைய எளிய வழிகள் என்ற கட்டுரையை பார்த்தேன்...!!!



உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த லிங்கு...!!!

ஆமாம் பின்ன...மனைவியிடம் நேரடியாக இதை பகிர்ந்துகொண்டு எவன் உருட்டுகட்டை அடிவாங்குறது ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!!

அப்படி தப்பித்தவறி பகிர்ந்துகொண்டு உடல் நலம் குன்றியவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி : டாக்டர் புருனோ. சென்னை.

Friday, July 24, 2009

பவா செல்லத்துரை - யோகி ராம் சுரத்குமார் . கிழிந்து தொங்கும் பாலகுமாரன்



இன்றைக்கு காலவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்ட, தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமை என்று தன்னைத்தானே தற்பெருமைச்சேற்றில் மூழ்கடித்துக்கொண்ட பாலகுமாரனை பற்றிய பதிவு இது...


சிலசமயம் சில எழுத்துக்கள் என்னை ஆச்சர்யம், கோபம், அதிர்ச்சி என்று கலவையான உணர்வுகளை நோக்கி சுனாமிபோல இழுத்துக்கொண்டு சென்றுவிடும்...

அப்படிப்பட்ட பதிவு இந்த பதிவு..எனக்கென்னமோ இரண்டாம் பாகமான இதனை படித்துவிட்டு, முதல் பாகத்தை படிக்கலாம்போல உள்ளது...



பதிவை போட்டவுடனே...டேய் இவரை கூடவா இதுவரை நீ வாசிக்கவில்லை என்று யாராவது பின்னூட்டமிடும் அபாயத்தினூடே பயணித்தே இந்த சிறு அறிமுகத்தை (அட..எனக்கு நானே) எழுதிக்கொள்கிறேன்...!!!!

Tuesday, July 21, 2009

வரவனையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ?



போட்டோ கமெண்ட் : முஸ்தப்பா முஸ்தப்பா.....!!!!

இப்போ...!!!

வரவணையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ? பின்னூட்டத்தில் சொல்லவும்...இந்த பதிவுக்கு பின்னூட்டம் மறைக்கப்படும். சரியான பதில் சொல்பவருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்.

க்ளூ : அதெல்லாம் ஒன்னும் கொடுக்க முடியாது...!!

அன்புள்ள நர்சிம்...

கொஞ்ச நாளைக்கு முன்னாலயே உங்களுக்கு இந்த லெட்டர் எழுதனும்னு நெனைச்சேன்...ஆனா இப்ப தான் நேரம் கிடைச்சது...

வலையுலகில் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் அப்படீன்னு எடுத்துக்கிட்டா....தேசிகன், லக்கி, அடுத்தபடியா நீங்கதான்...

குழப்பமா எழுதுனா தான் அது எழுத்து, மீதி எல்லாம் ஊறுன உளுந்து அப்படீன்னு நினைக்கிற இந்த காலத்துல, தெளிவான நடையில, என்னை மாதிரி தற்குறிக்கும் புரியற மாதிரி நீங்க எழுதுறது தான் உங்களை ரொம்ப பிடிச்சதுக்கு காரணம்...



ஆமாம்...ஏதோ கேள்விப்பட்டேன்...உங்க பேருல எவனோ பின்னூட்டம் போட்டு உங்க பேரை 'கெடுத்துட்டான்' அப்படீன்னு திரட்டிகள்ல இனிமே இணைக்கமாட்டேன் அப்படீன்னு சொல்லிட்டீங்களாமே ?

ஏம்பா...

யாரோ செய்த அந்த செயல் எப்படி உங்களை, உங்கள் எழுத்தை, உங்கள் முடிவுகளை மாற்றலாம் ?

எழுத்துலகில் மட்டுமா, அல்லது இப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் இருக்கீங்களா ?

பார் எக்ஸாம்பிள்...

நீங்க 100 பேர் வேலை செய்யுற ஒரு கம்பெனியில மேனேஜரா இருக்கீங்க...நல்லா வேலை செய்யற ஒருத்தருக்கு பதவி உயர்வு தர்றீங்க...

ஆனா அது புடிக்காத பொறாமை புடிச்ச பயபுள்ளைக ரெண்டு பேர், உங்க காதுல விழற மாதிரி, பாருடா...அந்த பயல் ஆயில் அடிச்சதால அவனுக்கு மட்டும் பதவி உயர்வு என்று பேசுறாங்க...

இப்ப நீங்க என்ன செய்வீங்க...

1. அவங்களை உடனே கண்டிப்பீங்க...அவங்களோட எண்ணம் தவறுன்னு புரியவைப்பீங்க..
2. அய்யோ அப்படி பேசுறானுங்களே...அப்படீன்னு அந்த நல்லா வேலை செய்யற, நியாயமா பதவி உயர்வு கிடைக்கவேண்டிய நபரோட பதவி உயர்வை பறிச்சுடறீங்க...
3. இப்படி பேசிட்டாங்களே...கவரிமான் பரம்பரையாச்சே நான்..என்று வேலையை விட்டு நின்னுடறீங்க..

தல..மேனேஜ்மெண்ட் ராஜாவான நீங்க இதுல முதல் ஆப்ஷனை தானே நீங்க எடுப்பீங்க...

அதே நேரம் உங்களை பற்றி தெரிந்த, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றவர்கள், இந்த புறணியை கண்டுக்கிடுவாங்கன்னு நினைச்சீங்களா...அப்கோர்ஸ் நாட்...அவங்களுக்கு உங்களை நல்லா தெரியுமாதலால், இதனை புறந்தள்ளிடுவாங்கதானே ?

கார்க்கி தளத்தில், பரிசல் தளத்தில், உங்களை படிக்க லிங்க் தந்திருக்காங்க...எனக்கும் அப்படி லிங்க் தர தெரியும், அல்லது narsim.in அப்படீன்னு நேரடியா உங்க தளத்தின் முகவரியை போட்டு உங்க தளத்துக்கு வரவும் தெரியும்...

சாருவும், ஜெயமோகனும் என்ன திரட்டிகள்ல இணைச்சு வெச்சா எழுதறாங்க ? அவங்க வாசகர்கள் அவர்களை நேரடியா போய் படிக்கலையா ? அது மாதிரி உங்களை படிக்க தெரியும் தல எனக்கு...இருந்தாலும், திரட்டிகள் மூலமாத்தான் நீங்க அறிமுகம். அந்த திரட்டியை விட்டு போறேன் என்று நீங்கள் சொன்னதும் இந்த மடலை எழுத தோனுச்சு எனக்கு...

தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை, புறணி பேசுதலும், பொறாமையும், அடுத்துக்கெடுத்தலும் இருந்துக்கிட்டே தான் இருக்கும் நர்சிம். இதனை புறந்தள்ளி தொடர்ந்து நடைபோடுறதில் தானே உங்கள் நெஞ்சுரம் வெளிச்சமாகும் ?

வெகுஜன இதழ்களில் உங்கள் படைப்புகள் வரும்போதே தெரியலையா, உங்களால் ரசனையாக எழுத முடியுது என்று ? யாரோ எவரோ செய்யும் சிறிய அவதூறுகளை புறந்தள்ளி, மீண்டும் திரட்டிகளில் நீங்கள் நடைபோடுவதை காண ஆவலாயிருக்கும் நன்பனின் மடல்...!!!

Monday, July 20, 2009

யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தின் அறிவிப்பு !!!



இது நன்பர் ரமேஷ் அவர்களின் மின் அஞ்சலோட சிக்னேச்சருங்க...இவருக்கு எதையாவது இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யலைன்னா தூக்கம் வராது. எதையாவது யாருக்காவது செய்துக்கிட்டே இருக்கனும், நம்மால நாலு பேருக்காவது பயன் கிடைக்கனும் என்று எப்போதும் நினைப்பவர்..

அவர் இணைந்திருக்கும் யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தோட இணைய தளத்தை பற்றி வலையுலகில் அறிமுகப்படுத்தறது தான் இந்த பதிவின் நோக்கம்...!!!

யூ.ஏ.இ தமிழ்சங்கத்தின் இணையதளத்தின் சுட்டி http://www.uaetamilsangam.com/

யூ ஏ இ வேலைவாய்ப்புகள் http://www.uaetamilsangam.com/jobsinuaeweb.asp
குழந்தைகளுக்கான பக்கம் http://www.uaetamilsangam.com/utschilddict.asp
திருமண தகவல் மையம் : http://www.uaetamilsangam.com/utsmembersarea.asp

இவங்க ஆன்லைன் ஆக்டிவிட்டீஸ் சிலது

1) ஆன்லைன் க்விஸ் , மாசம் ரெண்டு பேருக்கு பரிசு
2) லைபரரி புக்ஸ்
3) தமிழ் படங்களுக்கான லைபரரி
4) தங்கம் விலை பற்றி தகவல்
5) தமிழக செய்திகள்

ரமேஷை தொடர்புகொள்ள ramesh@uaetamilsangam.com

இம்சையை கூட்டுபவைகளை அண் இன்ஸ்ட்டால் செய்ய..

சில ப்ரொக்ராம்கள் நிரந்தரமாக நமது கணினியில் உட்கார்ந்து மொக்கை போட்டுக்கொண்டிருக்கும். அண் இன்ஸ்ட்டால் செய்ய போனாலோ முடியவே முடியாது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுரு, நான் என் வேலையை பார்த்துக்கறேன் என்று விட்டுவிடுவீர்கள்..

அதுவும் உங்கள் கணிணியிலேயே தங்கிவிடும்...

அது ச்சும்மா இருந்தா பரவாயில்லை. வைரஸாக இருந்து தொலைந்தால் ? அவ்வப்போது கணிணி ரீபூட் ஆவது, ஆமையை விட மெதுவாக நகருவது, வாடிப்பட்டியில் இருப்பவருக்கு இமெயில் அனுப்பினால் பஸ்ஸ்டாண்டு வரைக்கும் கூட போகாமல் திரும்பி வந்துவிடுவது என்று ஆயிரத்தெட்டு தொல்லை கொடுக்கும்...

இதுக்கெல்லாம் சூனியம் வைப்பதுபோல நம்ம பில்பூனைகள் அய்யா (பில்கேட்ஸ்ங்க) ஒரு தீர்வை தந்துள்ளார்...



http://support.microsoft.com/default.aspx?scid=kb;[LN];290301

மேற்கானும் இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்யும் இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி, அதனை திறந்து, தேவை இல்லாத ஐட்டங்களை எல்லாம் டெட்டால், ப்ராஸோ ஊற்றி கழுவி, உங்க கணினியை பளபளப்பாக மாற்றவும்...

உங்கள் நீண்டகால தொல்லைகளை க்ளிக் செய்து, ரிமூவ் என்ற பட்டனை மட்டும் அமுக்கவும். க்ளியர் ஆல் என்ற பட்டனை அமுக்கினால் எல்லாமே பூடும். ஜாக்கிரதை...!!!!

Thursday, July 16, 2009

கூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்



பிரபல வறுவல்..மன்னிக்க..பதிவர் சக்திவேல் குறித்து அனைவரும் அறிவோம். இப்போதெல்லாம் எந்த திரட்டியை திறந்தாலும் அந்த திரட்டியில் முதன்மையான பதிவராக முன்னனியில் நிற்கும் திரு சக்திபேல் இன்றைக்கு கூகிள் நிறுவனத்தை நோக்கி தன்னுடைய அறச்சீற்றமானதொரு கேள்விக்கணையை தொடுத்துள்ளார்.

இதுக்கு மேல புண்ணூட்டத்தில் மட்டுமே பேசப்படும். வயிறு குலுங்கவைக்கும் ஒரு புண்ணூட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்...

Monday, July 13, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!

சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல...

சுவாரஸ்ய விருதுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இது ஒரு தொடர் விருது வழங்கும் விழா...

நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..

நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்...

கடைசியா எனக்கும் இதே விருது உங்கள் யார் கையாலயாவது கெடைக்கும் என்ற நம்பிக்கையில்..

இந்தாங்க...!!

எவ்ளோ அழகா எழுதறார். கூகிள் விளம்பரங்களை பற்றி இவர் எளிமையா போட்ட ரெண்டு பதிவே போதும்...இவரை பற்றி சொல்ல..தமிழில் தொழில்நுட்பம் இவருடைய நெஞ்சத்தில் இருந்து இன்னும் இன்னும் வரவேண்டும்...
பயபுள்ள பெட்னாவை கவர் செய்த விதம் என்ன, அங்கே நடந்த நிகழ்வை கொச்சைப்படுத்த ஒரு பத்திரிக்கையாளை நோக்கி அறச்சீற்றம் கொண்டதென்ன, ஆஹா. எழிலாய் பழமைபேசும் இவருக்கு கண்டிப்பாக ஒரு விருது...
பொதுவாக எழுத்தில் அரிதாக கைவருவது நகைச்சுவை உணர்ச்சி. அது குடுகுடுப்பையாரிடம் இயல்பாகவே வந்து அமர்ந்துவிட்டது. மொக்கையான மாலைப்பொழுதுகளில் குடுகுடுப்பையாரின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தால் வெடிச்சிரிப்பு க்யாரண்டி. இந்தாய்யா விருது...
அமித்து குட்டிப்பொண்ணோட லூட்டிகளும், அவர்களோட அனுபவங்களும், நாமே அமித்து குட்டி கூட விளையாடுவதை போன்று தோன்றும்...வாழ்க்கையை அமித்து பாப்பாவின் ஊடாக கற்று, விளையாடி, வாழ்ந்துவரும் அவர்களுக்கு இந்தாங்க விருது...
ஜாலியாக பொழுதுபோகும் இன்னொரு வலைப்பக்கம் இது. இந்த ஆளும் காமெடியில் பின்னுவான். சடை இல்லை. காமெடி. சில சமயம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட நம்மை சிரிக்கவைக்கும்...இந்தா புடி விருது...
ஒருமுறை சந்தித்தபோது சொன்னார். ஒரு அம்பது பதிவு ரெடி பண்ணிட்டு அப்புறம் ஒவ்வொன்னா போட்டு எப்படி கலக்கறேன் பாரு, என்று. சகோதரி பட்டாம்பூச்சி, இன்னும் 50 பதிவை தொடவில்லை என்றாலும், ஒபாமா பதிவு, 32 கேள்விபதில் என்று தொடர்ந்து எழுதுகிறார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த விருது...!!!
இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...அவர்களை உற்சாகப்படுத்த இது ஒரு நல்ல டானிக்.






விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!!




அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



எப்படி இருந்த நான்...
(போஸ் :கல்கி விஜயகுமார்...)















இப்படி
ஆய்ட்டேன்...
(போஸ் : மம்மி பகவான்...)



அம்மா பகவான் படத்துல தேன் வழியுதாம்...!!! அட பதர்களே ? படத்தில் எப்படிடா தேன் வழியும் ? எல்லாம் இந்த அல்லேலூயா கும்பல் கத்துக்கொடுத்தது...

இயேசு சிலையில் இருந்து கண்ணீர் வழியுதுன்னு சொன்ன வெளிநாட்டு சரக்கை, உள்நாட்டு டாஸ்மாக்ல கொண்டுவந்துட்டது எதோ ஒரு வீணாப்போனது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................




..............................



பொன்னர் சங்கர் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில், பொன்னராகவும், சங்கராகவும் நடிக்கிறார்.

கிரகலட்சுமியிடம் இருந்து தப்பிச்ச உனக்கு இப்படி ஒரு கெரகமா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

..............................

விடுதலை சிறுத்தைகள் ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்...!!! திருமா...





















வடிவேலு : இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது ?
பூச்சுபாண்டி : அது அவனுங்களோட தல விதி...